Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கெப் வாகனம் மரத்தில் மோதி அமைச்சர் மேர்வின் தப்பினார் May 11th, 2011 nila அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதுகாப்பு வாகனம் மரத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் படுகாயமமைந்துள்ளனர். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்து இன்று பகல் சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதுகாப்பு வாகனத்தின் சாரதி, பாதுகாப்புப் பிரிவைச் சார்ந்த ஒருவர் மற்றும் இரு பொது மக்கள் ஆகியோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் தாய்நிலம்

  2. May 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / எத்தனை பேர் வருவீர்கள் இந்த கொலைகளைக் கண்டிக்க? உலகில் எட்டுக்கோடி தமிழர்களாம் ! எத்தனை பேர் வருவீர்கள் இந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த ! எத்தனை பேர் வருவீர்கள் இந்த கொலைகளைக்கண்டிக்க ? எங்களுடைய எதிர்காலம் என்ன ? எங்களையும் இப்படிச் சிதைந்து போக விடுவீர்களா ? அல்லது ஒன்று கூடி வருவீர்களா? கட்டாயம் எல்லோரும் வாங்கோ! இது படம் அல்ல நிஐம், இது விளம்பரம் அல்ல எம் குழந்தைகளின் விசும்பல், சென்ற எம் சந்ததியிடம் அடுத்த சந்ததி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் நின்றார்கள், எமது அடுத்த சந்ததி எம்மிடம் அந்த கேள்வியை கேட்பதற்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம். தேசியத்தலைவனின் சுட்டுவிரல் திசையை நோக்கி …

  3. புதன்கிழமை, 11 மே 2011, 07:57.34 AM GMT ] 2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடிய போது அதில் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு, இலங்கையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதாக இதன்போது உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிச்செயலாளர் வெலரி எமோஸ் ( Valerie Amos) குறிப்பிட்டார். இந்தப்போரின் போது இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் நிபுணர் குழு க…

    • 2 replies
    • 1.4k views
  4. பான் கீ மூனைக் கொல்ல 25 தற்கொலை குண்டுதாரிகள் - களனியில் காத்திருப்பு -மேர்வின் சில்வா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-11 07:05:23| யாழ்ப்பாணம்] பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களை கொலை செய்ய இருபத்தைந்து தற்கொலை குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையயாப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை நேற்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற் கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் உள் நாட்டு விடயங…

  5. மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வுப்பிரிவினருடன் சேர்ந்து செயற்பட்ட மதி என்று அழைக்கப்படும் இராசமாணிக்கம் மதியழகன் என்ற நபர் இன்று நண்பகல் இலங்கை நேரப்படி 2மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலதிக விபரங்களுக்கு www.thinakkathir.com

  6. மட்டக்களப்பில் கோவில் பரிபாலன சபைத் தலைவர் சுட்டுக்கொலை : 11 மே 2011 மட்டக்களப்பில் இன்று பகல் கோவில் பரிபாலன சபைத் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆணைப்பந்தி பிள்ளையார் கோலில் பரிபாலன சபைத் தலைவரான 38 வயதான இராசமாணிக்கம் மதியழகன் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்;. மட்டக்களப்பு, கல்லடித் தெரு வாவிக்கரை இரண்டு என்ற முகவரில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மதியழகன் மூன்று வருடங்களுக்கு முன்னர், இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ப…

  7. அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் பின்லேடனை பிரபாகரனோடு ஒப்பிட்டுப் பேசியது தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருநாள் பயணமாக இலங்கை சென்றிருந்த அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னர் பத் திரிகையாளர்களைச் சந்தித்தார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ் மக்களின் அனைத்து முக்கிய பிரச்னைகளையும் உள்ளடக்கியதான ஒரு உறுதியான அறிக்கை வெளிவர வேண்டும்’’ எனப் பேசினார். இதைத் தாங்கமுடியாத சிங்கள ஊடகவியலாளர்கள் அவரைப் பேசவிடாது தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘‘ஒசாமா ப…

  8. முல்லேரியா பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸார் காயம், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது [Wednesday, 2011-05-11 05:13:51] முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கு தாக்குதலை மேற்கொண்டனர் எனத் தெரிய வருகிறது.நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தால் பொலிஸ் நிலையத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லேரிய பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் தகாத முறையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து நுகேகொடை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸர் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவிக்கையில் மதுபோதையில் வந்த சிலர் இவ்வாறு நடந்து கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார். சம்ப…

  9. மரணித்த எம் தோழமைகளின் சார்பில் தண்டனை கோருகிறோம்!! தமிழக படைப்பாளிகள், ஊடகத்துறையினர் ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவு தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகத்துறையி்னரை உள்ளடக்கிய கூட்டு அமைப்பினர் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசு, போராளிகள் என இரு தரப்பினரதும் மனித உரிமை மீறல்கள் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசு பாரிய மனித உரிமை மீறல்களையும்இ போர்க் குற்றங்களையும்,மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருக்கின்றது என…

  10. ஒற்றை ஆட்சியின் கீழ் இரு தேசங்கள் Wednesday, May 11, 2011, 9:38 சிறீலங்கா வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் நுளைவு அனுமதி (Visa) பெறவேண்டும் என சிறீலங்கா அரசு புதிதாக கொண்டுவந்துள்ள சட்டம் சிறீலங்காவில் ஒற்றை ஆட்சியின் கீழ் இரு தேசங்கள் உள்ளதையே புலப்படுத்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு இணைந்து தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்கள் சிறீலங்காவில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை கொண்டவை. சிறீலங்காவின் மொத்த தமிழ் மக்களின் தொகையில் 50 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் சிறீலங்கா அரசு வடக்கு – கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தை பிறிதொரு தேசத்தின் நிர்வாகம் போலவே செயற்படுத்தி வருகின்றது. போரின் போதும் வடக்க…

  11. இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதியும் இல்லை 09 மே 2011 - டொலர்களுக்காக, இலங்கையை காட்டிக் கொடுக்கக் கூடாது – பசில் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதியும் இல்லை வடக்காயினும் சரி தெற்காயினும் சரி மேற்காயினும ;சரி கிழக்காயினும் சரி இப்போது பாதுகாப்பு வலயங்களாக சமாதான வலயங்களே இலங்கை முழுவதும் உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்தார். குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற மீள் குடியமர்வு அமர்விற்காக இதில் திடீர் விருந்தாளியாக பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்ச கலந்துகொண்டார். மாவட்டபுரம் கந்தசாமி கோவிலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீள் குடியேற்ற நடவடி…

    • 2 replies
    • 1k views
  12. ஓய்வுபெறும் வயது 57ஆக அதிகரிப்பு news அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 55இலிருந்து 57ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று திறைசேரியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அறிவித்துள்ளார். இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான சுற்றறிக்கைகள் அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பபப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் புதிய சுற்றறிக்கையை அடுத்து, பழைய சுற்றறிக்கை வலுவிழந்துள்ளது. புதிய கொள்கையின்படி எந்த ஒரு அரச ஊழியரும் சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்காமலேயே 57 வயது வரை சேவையாற்றலாம். ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்ட அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கே இந…

  13. இறுதிக்கட்டப் போரில் மேற்குலகின் பங்கு! விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்கள் புதன், 11 மே 2011 09:31 இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் எவ்வாறு முனைப்புடன் செயற்பட்டனர் என்பது தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் கசிந்த விடயங்களை விக்கலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் இட்டுச் செல்லுமென றொபர்ட் ஓ பிளேக் இலங்கையின் அன்றைய வெள…

  14. கோகோஸ் தீவுக்குள் நுழைந்த 82 பேரும் இலங்கைத் தமிழர்களே! – ஆஸி. தெரிவிப்பு! Posted by uknews On May 11th, 2011 at 2:49 am சட்டவிரோதமான முறையில் கோகோஸ் தீவுக்குள் நுழைந்த 82 பேரும் இலங்கைத் தமிழர்களே என ஆஸி. அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டு குடிவரவுத்துறை அதனை அங்குள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி சட்டவிரோத குடியேற்றவாசிகள் 82 பேர் மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்தனர். ஆஸி. கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆஸ்திரேலிய அரசு தற்போது சட்டவிரோதக் குடியேற்றிகள…

  15. எழுதுமட்டுவாழ் மக்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் உத்தரவு Wednesday, May 11, 2011, 4:10 சிறீலங்கா சொந்த வசிப்பிடங்களைப் பார்வையிட்ட எழுதுமட்டுவாழ் பிரதேச மக்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர்கள் வளவுகளைத் துப்புரவு செய்து கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த படையினர் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட னர். அங்கு நின்ற கிராம அலுவலர்கள் படையினருடன் கலந்துரையாடியபோது மீளக்குடியமர்த்துவது தொடர்பான அறிவித்தல் மேலிடத்திலிருந்து கிடைக்காததால் இந்தப் பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்க முடியாது எனவும் மேலிட அனுமதி கிடைக்கும் வரை எவரும் உள்ளே வரக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து அங்கு நின்ற 150 இற்கு மேற்பட்ட அந்தப் …

  16. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைய முன் வந்த போதும், சிறிலங்கா அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. நடுநிலையாளர்களின் துணையுடன் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்க மறுத்து விட்டார் என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. அத்துடன் போர் வலயத்தில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து விட்டதாகவும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. நோர்வேயின் அப்ரென்போஸ்ரன் நாளிதழ், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பரிமாறப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் அனுமதியுடன் வெளியிட்டுள்ளத…

    • 0 replies
    • 1.2k views
  17. “பொலீஸ் பாதுகாப்புத்தானே… தருகிறோம். அதற்குமுன் ஆட்களைக் காட்டுங்கள்” ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 16:16 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கொழும்பு, ஸ்ரீலங்கா: “ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ண, தான் கூறியதுபோல கிரிக்கெட் சூதாட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டால், அவருக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” இவ்வாறு அறிவித்தி…

  18. வன்னிப்போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கின் இராஜதந்திரிகள் செய்த நகர்வுகள் எவை? நோர்வே நாளிதழ் கட்டுரை மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத்தீவின் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான – வீக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் (Aftenposten) நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்தன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம்: 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படுமென எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொட…

    • 2 replies
    • 1.5k views
  19. வெளிநாடுகள் திணிக்கும் சமாதானத்தை வழங்க முடியாது - உயர் பாதுகாப்பு வலயம் எதுவும் தமிழ் மக்களுக்கு இப்போது இல்லை - வலி. வடக்கு மீள் குடியமர்வில் அமைச்சர் பசில் உரை இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றும் இல்லை. வடக்காயினும் சரி, தெற்காயினும் சரி, கிழக்காயினும் சரி இப்போது சமாதான வலயங்களே இருக்கின்றன.இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். வெளிநாடுகளால் எம்மீது திணிக்கப்படும் சமாதானத்தை வழங்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். வலி. வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று நடைபெற்ற மீள் குடியமர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவட்டபுரம் முருகன் ஆலய வளாகத்தில் நடந்த இந் நிகழ்வில் அமைச…

    • 1 reply
    • 831 views
  20. இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணங்கிச் செயற்பட வேண்டும் - பிரான்ஸ் இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணங்கிச் செயற்பட வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதான ஏதுக்களில் ஒன்றாக குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் நிலைமை கருதப்படுவதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமான தொடர்புகளை அரசாங்கம் பேண வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குளோபல்தமிழ்செய்திகள்

    • 0 replies
    • 560 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.