ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தத்தில் அந்நாட்டுப் படைகள் யுத்தக் குற்றம் செய்துள்ளன என ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், ஈழத் தமிழினத்தை ஈவு இரக்கமின்றி இனப் படுகொலை செய்த இலங்கை அரசிற்கு எல்லா விதத்திலும் ஆதரவாக நின்ற குற்றத்திற்காக இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். ஐ.நா. நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து இன்று அறிக்கை விடுத்துள்ள நெடுமாறன் இவ்வாறு கூறியுள்ளார். �இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழு, ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இனி ஒரு தமிழ் மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்ற சோனியாவின் வாக்குறுதி என்னவானது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2 ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற எம் தாய்த்தமிழ் உறவுகள் விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் இன்று நம்மிடம் இல்லை. இதுவரை 3 மீனவர்களின் உடல்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் நமக்கு கிடைத்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கடலு…
-
- 0 replies
- 1.3k views
-
-
அடுத்த மூன்று வார காலத்தில் இலங்கையில் மீன் மற்றும் ஐஸ்கட்டி மழை [Monday, 2011-04-18 04:22:08] இலங்கையில் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழையுடன் மீன்கள் வந்து விழுவதைப் பார்த்து இதுவொரு இயற்கை அழிவு அல்லது துர்தேவதைகளின் வெறியாட்டம் என்று எவரும் அஞ்சிவிடலாகாது. பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேலாக சூரியன் சஞ்சரிப்பதனால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலைக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திலும் திடீரென்று மின்னல் வெட்டுடன் மாலை வேளையில் பெருமழை பெய்வதுண்டு. இதுபற்றி பல முக்கிய தகவல்களை சிரேஷ்ட காலநிலை ஆய்வாளரு…
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்கா மற்றும் மேற்குலகுகள் த மது நலன்களை பாதுகாப்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்டு வருவது போன்று அல்லாமல் இலங்கை மனிதாபிமான நடவடிக்கையினையே செய்தது. நாட்டின் பிரஜைகளை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையையே இலங்கை மேற்கொண்டதாகவும் அந்நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான அதி வண. உடகம புத்தரகித்த தேரர் கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களை படுகொலைசெய்யும்போது பொறுப்புள்ள அரசாங்கம் செயற்படமலிருக்க முடியாது. இவ்வன்முறைச் சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு ஏனைய அரசாங்கங்களைப் போலவே இலங்கை அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொண்டது என அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் …
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது - சீமான் கண்டணம் [Monday, 2011-04-18 04:14:47] ஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்க அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேளி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் சிறிலங்க அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்து பரிந்துரை நியாயமற்றத…
-
- 3 replies
- 865 views
- 1 follower
-
-
சர்வதேசப் பொறிமுறையொன்றை உருவாக்குவாரா பான் கீ முன் – இதயச்சந்திரன் சர்வதேசப் பொறிமுறையா? அல்லது உள்நாட்டுப் பொறிமுறையா? இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் வெளிக்கொண்டு வரும் பொறுப்புடைமையை உள்ளடக்கி இருக்குமென்கிற விவாதம் தோன்ற ஆரம்பித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையினையடுத்து, நவம்பர் 2009 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. 21.02.2002 இலிருந்து 19 மே 2009 வரையான காலப் பகுதியில் நடைபெற்ற விடயங்கள் குறித்து, அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் முதன்மையான பணி. குறிப்பாக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததற்கான காரணிகளை ஆராய்ந்து, ம…
-
- 1 reply
- 574 views
-
-
புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட வேண்டும்: இராணுவப் பேச்சாளர் புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் உபய மெதவல வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான நபர்கள் இலங்கை தொடர்பிலான தப்பபிப்பிராயத்தை தாம் வாழும் நாடுகளில் உருவாக்க முனைவதன் மூலம் தொடர்ந்தும் அந்த நாடுகளில் வசதியாக வாழ முயற்சிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் முரண்பாடுகளும் மோதல் நிலைகளும் தொடர்வதாக போலிப் பிரச்சாரமொன்றை மேற்கொள்வதுடன், அவ்வாறான போலி சாட்சியங்களை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்…
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-
-
Sunday, April 17th, 2011 | Posted by ethiri ஐநாவின் போர் விசாரணையை அடுத்து -அவசரகால சட்டத்தை நீக்கி -முக்கிய பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்க மகிந்த முடிவாம் ..! இலங்கையில் ஆளும் அரசு மீது ஐநா பதித்துள்ள இருநூற்று பத்து பக்க அறிக்கையினை அடுத்து தமிழர்களை அடக்கி ஆளும் அபத்தமான அவசரகால சட்டத்தினை நீக்க மகிந்த உள்ளக வட்டாரங்கள் வழி தகவல்கள் கசிந்துள்ளன . அத்துடம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி சில அரசியல் தீர்மானங்களை நிறை வேற்ற உள்ளதாக வும் தெரிவிக்க படுகின்றது . மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து படைகளை விலக்கி கொள்ளவும் சில இராணுவ முகாம்களை அந்த பகுதிகளில் இருந்து விலக்கவும் அந்த பகுதியில் மக்களை துரித வேகத்தில் அமர்த்து…
-
- 2 replies
- 877 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுமியை காட்டில்வைத்து சிப்பாய் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் சிறுமி கற்பமானார்: அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு. [Monday, 2011-04-18 04:24:12] மட்டக்களப்பில் காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறிலங்கா படைச்சிப்பாயை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வாகரை தன்னாமுனைக் காட்டில் விறகு சேகரிக்கச் சென்றபோது 16 வயது சிறுமியை சிறிலங்காப் படைச்சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இச் சம்பவம் பற்றி அந்தச் சிறுமி மறைத்து விட்டதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரவில்லை. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்துள்ளதை அடுத்து இதுபற்றி வாழைச்ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்: ஐ.நா. நிபுணர் அறிக்கை.. ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 17ம் நாள், 2011. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் அதிகார சமப்பகிர்வின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அதனை எதிர்காலத்திலும் தொடரவிடாமல் தடுக்கும் வகையில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
பரபரப்பு ரிசி -இலங்கையில் -புதிய பத்திரிகை தொடங்கள் ..!தமிழக தலைவர்கள் .நா ,க ,த, அரசினை உடைக்க சதி ..! கனடாவில் இருந்து பரபரப்பு என்ற பத்திரிகையினை ஆரம்பித்து பரப்பாக தலைப்புக்களை இட்டு பரபரப்பு செய்திகளை வெளியிட்ட ரிசி அந்த கால பகுதியில் ஆண்ட இலங்கை ஆளும் அரசுகளை கடுமையாக சாடியவர் . அத்துடன் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தின் களத்தில் நின்ற அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மெய் பாதுகாவலரும் அவரின் முக்கிய செயல் பட்டாலருமான ஒருவர் ஊடாக வரும் தாய்மண்ணின் கள சமர் .மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் செய்திகளையும் நேரடியாக தாங்கி வெளிவந்த பத்திரிகையாக தன்னை புடம் இட்டி காட்டியவர் . தற்போது புலிகளின் பலம் சிதைக்க பட்ட ந…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
ஜாதிக ஹெல உறுமையவிற்கும் சிறிலங்கா பிரதமர் ஜயரட்னாவிற்கும் பிரச்சினை உருவாகியுள்ளது. இதனால் பிரதமர் டி.எம்.ஜயரட்ன பதவி விலகவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு பிரதமரால் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை. ஓய்வு பெறும் வயதில் பதவிகளை வகிப்பதால் எவருக்கும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லையொன்று காணப்படுகிறது.எனினும், அரசியல்வாதிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இவ்வாறு ஓய்வூ பெறும் வயதெல்லை கிடையாது.விளையாட்டு வீரர்கள் சுயமாகவே ஓர் குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்றுக் கொள்கின்ற போதிலும், அரசியல்வாதிகள் அவ்வாறு ஓய…
-
- 0 replies
- 949 views
-
-
தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு, படுகொலை: இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்; ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு ! [ பிரசுரித்த திகதி : 2011-04-18 05:22:00 AM GMT ] இலங்கை இறுதி போரில் போர் குற்றம் நடந்ததா? என கண்டறிய ஐ.நா.சபை 7 பேர் குழுவை அமைத்தது. இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டருஷ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பு பிரதிநிதி யாஸ்மின் சோஜா, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ரட்னா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விரிவாக விசாரணை நடத்தினார்கள். 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டன. அவர்கள் விசாரணையை முடி…
-
- 0 replies
- 2.1k views
-
-
இலங்கை மீனவர்கள் 10 பேர் ஆந்திராவில் கைது _ வீரகேசரி இணையம் 4/18/2011 8:45:18 AM Share இந்தியாவின் ஆந்திர பிரதேச கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகரிகள் நேற்று தெரிவித்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நரசபூர் கரையோத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இரு படகுகளில் இவர்கள் மீன்பிடித்தாக இந்திய கரையோர காவல் படை அதிகாரியொருவர் தெரிவத்துள்ளார். இம்மீனவர்கள் 20-40 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். விசாரணைகளின் பின்னர் விசாகப்பட்டிணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். _
-
- 0 replies
- 503 views
-
-
Monday, 18 April 2011 00:11 ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த வல்லுநர் குழுவின் அறிக்கை: பகுதி-01 போரின் இறுதி நாட்களில் நடந்தது இதுதான் என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருவது எதுவோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதையே வல்லுநர்கள் குழுவிற்குக் கிடைக்கப் பெற்ற நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. ‘பொதுமக்கள் எவரும் கொல்லப்படாத, ‘மனிதாபிமான மீட்பு நடவடிக்கை’ ஒன்றையே தான் மேற்கொண்டதாகச் சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இதற்கு முற்றிலும் முரணமான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் வல்லுநர்கள் குழுவிற்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்…
-
- 0 replies
- 731 views
-
-
புன்னாலைக்கட்டுவனில் எரிந்தநிலையில் சடலம் மீட்பு. Posted by uknews On April 18th, 2011 at 12:35 am / No Comments புன்னாலைகட்டுவன் தெற்கில் இன்று எரிந்தநிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. சடலத்திற்கு அருகிலிருந்து எடுக்கப்பட அடையாள அட்டை மூலம் அந்நபர் வைத்திலிங்கம் செல்வகணேஷ் -வயது 42 என அடையாளம் காணப்பட்டது. மேலதிக தகவல் சற்றுநேரத்தில்……… saritham.com
-
- 1 reply
- 730 views
-
-
மகிந்தாவை கூட்டில் ஏற்ற நாடளாவிய ரீதியில் மக்கள் வீதி இறங்கி போராட நாடு கடந்த அரசு ஏற்பாடு -புதிய திருப்பம் ..! இறுதி யுத்தத்தில் ஈவ் இரக்கம் இன்றி மனித தார்மீகத்தை மீறி சிறுபான்மை தமிழர்களை அழித்த சிங்கள ஆளும் அரசினை சர்வேதேச நீதி மன்றில் ஏற்றி தண்டனை வழங்க ஐநா சபை தற்போது விடுத்துள்ள போர் குற்ற அறிக்கையினை அடுத்து மீண்டும் தமிழர்கள் வீதி இறங்கி போராடும் நிலை தோம்பல் ஏற்பட்டுள்ள நிலையில் நாடுகள் தழுவிய ரீதியில் மகிந்தாவை தூக்கில் ஏற்றும் நிகழ்வுகள் சுழற்சி முறையில் நடை பெறவுள்ளன . இந்த மக்கள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள நாடு கடந்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது . அதற்கான தேதிகள் நாடுகள் தொடர்பில் விரிவான அறிக்கை இன்னும் சில மண…
-
- 1 reply
- 709 views
-
-
Sunday, April 17th, 2011 | Posted by ethiri மகிந்தாவுக்கு விழுந்த அடுத்த பேரிடி – மே தினத்தில் ஐநா போர்குற்ற ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கு -தொழில் சங்கங்கள் மறுப்பு ..! இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே சனிக்கிழமையன்று அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஊடகங்களில் கசிந்த ஐநாவின் அந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. தமது அரசாங்கத்துக்கும், ச…
-
- 0 replies
- 628 views
-
-
தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்கத் தயார் – ஜனாதிபதி 17 ஏப்ரல் 2011 தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கப் படையினர் யுத்தம் மேற்கொள்ளவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பேச்சு சுதந்திரம் கிடையாது எனவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் எப்படியாக யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் வந்த பல வெளிநாட்டு சக்திகள் விமான நிலையத்திலேயே திரு…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா போர்க்குற்றம் இழைத்திருப்பதாக ஜ.நா அறிக்கை வெளிவந்துள்ளது யாவரும் அறிந்தது. ஆனால் யாரும் அறியாத விடயம் போர்க்குற்றத்திற்கு பலியிட சிலரை சிறீலங்கா தயார்படுத்தப்போகின்றது. அதாவது இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை என்பதே சிறீலங்காவின் வாதம். ஆனால் ஜ.நா ஆதாரங்களுடன் உள்ளது. எனவே திட்டத்தை மாற்றத் தொடங்கியுள்ளது சிறீலங்கா. அதாவது இராணுவத்தையும் தன்னடைய சகோதரர்கள் மற்றும் ஆட்சி இவைகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் வராமல் போர்க்குற்றம் புரிந்தவர்கள் என சிலரை அடையாளம் காட்ட சிறீலங்கா தயாராகின்றது. இதைத் தொடர்ந்து முக்கியமான சிலர் கொழும்பிலும் மற்ற இடங்களிலும் கைதாகலாம். அவர்கள் யார்? விரைவில் அவர்கள் யார் யார் என தெரியவரும் பொறுத்திருங்கள் http://rst…
-
- 1 reply
- 759 views
-
-
ஐ. நா. அறிக்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை: அயல் நாடுகளுக்கு பறக்கும் சிறப்பு தூதுவர்கள் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 மஹிந்த இராஜபக்ஷ, கோத்தபாய இராஜபக்ஷ, பேராசிரியர் பீரிஸ் உட்பட பல முக்கிய புள்ளிகள் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மிகப்பெரும் முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன் படி முதலாவது சீனா, இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியினை நேரடியாக உத்தியோக பூர்வமாக கேட்பது. அடுத்ததாக நடு நிலை நாடுகளுக்கு விசேட சிறப்பு தூதுவர்களை உடனடியாக அனுப்புவது. மூன்றாவதாக அணி சேரா நாடுகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்களை அனுப்பி ஐக்கிய நாடுகளுக்கு கண்டன கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்வது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான், இந்தோனே…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
புலம் பெயர்ந்த சமூகம் பாரியளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் அன்று சொன்னான் திலீபன் இன்றும் நாம் என்ன செய்கிறோம் ? நாங்கள் போராடுவோம் என்று நம்பிதானே தன்னுயிரையே தந்தான் ஐ நா எடுக்கும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் வகையிலும் அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இது. நாடுகடந்த அரசும், தமிழர் பேரவை , தமிழர் ஒருங்கிணைப்பு குழு இப்படி பெயருகளை அடுக்கி கொண்டு தங்களை முன்னிலைப்படுத்த துடிப்பதிலுள்ள அக்கறையை எங்களுக்காகவே போராடி வீரகாவியமான போராளிகள் மற்றும் இறுதிப்போரில் பலியான மக்களின் ஆத்மா சாந்திக்காகவும் தங்கள் உழைப்பை அர்ப்பணிக்க தயாராக வேண்டும். எல்லோரும் ஒன்று சேர்ந்து உலகமே வியக்கத்தக்க வகையில் பாரிய போராட்டத்துக்கு அ…
-
- 17 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்தள்ளது. நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் மே தினம், போர்க் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்த வேண்டுமென்ற சர்வதேச கோரிக்கைகளுக்கு எதிராக எமது வலிமையை வெளிப்படுத்துவதற்கான தினமாக அமைய வேண்டுமென கூறியுள்ளார். இவ்வளவு நாள் எமது வலிமையை நாம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் மே தினத்தில் நாம் எமது வலிமையை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கையி…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
"மாடே மனிசனைக் கேவலமாகப் பார்க்கிறது" - சீமான் தடாலடி பேட்டி ‘‘காங்கிரஸை கருவறுப்போம்’’ என்ற ஒற்றை முழக்கத்துடன் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்து திரும்பியிருக்கிறார் சீமான். “ராமேஸ்வரத்தில் காணாமல் போன நான்கு மீனவர்களில் இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. ‘இனிமேல் தமிழக மீனவர்களை சுடமாட்டோம்’ என்ற வாக்கு றுதியை ராஜபக்ஷே காப்பாற்றி விட்டார். இந்தமுறை நம் மீனவர்களை சுடாமல் அடித்தே கொன்றிருக்கிறான். இறந்த மீனவர்களுக்காக சீமான் நியாயம் கேட்டால் தேசத் துரோகி என்பார்கள்’’ என்று கொதித்தவரை ஆசுவாசப்படுத்தி சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பயணம் பற்றிக் கேட்டோம். “காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களின் கோரமுகத்தை அம்பலப்படுத்த…
-
- 0 replies
- 853 views
-
-
புலம்பெயர் நாட்டில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படுபவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை 17 ஏப்ரல் 2011 புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை:- புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழச் செய்தியாளர்; தெரிவித்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு உயர் பாதுகாப்பு வலைய எல்லைப் பகுதியில் புகையிலைத் தோட்டம் ஒன்றில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை நேரம் இன்று இரவு 8 மணியளவில் (17.04.11) அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகில் காணப்பட்ட கடவுச் சீட்டின்மூலம் கொல்லப்…
-
- 0 replies
- 1.1k views
-