ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது.சாத்வீக வழியிலான எமது முயற்சிகள் தோல்வியடையுமானால், நாமும் மாற்று வழியைத்தான் கடைப்பிடிக்க நேரிடும். இதனை எவராலும் தடுக்கமுடியாது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வடக்கு கிழக்கின் உள்ளூராட்சிச் சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்றுக்காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எம்மக்கள் அளித்துள்ள ஆணைக்கு மதிப்பளித்துத் தமிழ் மக…
-
- 12 replies
- 2.3k views
- 1 follower
-
-
சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை ஒன்றுதிரண்ட தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் , இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் உபதலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோரை அப்பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர். சங்கக்காரவின் ஆதரவாளர்களால் பேஸ்புக் இணையத்தளம் மூலம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்கு 6512 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் 17 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. இன்று மாலை மூன்று மணியளவில் கொழும்பு -07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள பிரஸ்தாப ஆர்ப்பாட்டமானது இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார மற்றும் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன ஆக…
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்தின் தெற்குப் பக்க எல்லைப் பகுதியில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் பெரும்பான்மை இன மக்கள் மிக வேகமாகக் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களால் கூடத்தட்டிக் கேட்க முடியாத நிலையில் மரமுந்திரிச் செய்கைக்குப் பெயர்பெற்ற கொண்டச்சிப் பகுதி உட்பட வளம் நிறைந்த பிரதேசங்கள் படைத்தரப்பினரின் உதவி ஒத்தாசையுடன் அபகரிக்கப்படுகின்றன. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். தென் எல்லையில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தில் அப்பிரதேச மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாமல், கடற் படைத் தளமாக மாற்றி அமைக்கப் படுவதாகவும் அவர் விடுத்…
-
- 0 replies
- 812 views
-
-
அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளதென ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க பீபீசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து உலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிப்பதாகவும் ஆனாலும் பாதிப்புக்குள்ளாகியோரென வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் அதிகம் சிங்களவர்களின் பெயர்களே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிக்கையை அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையாகவே காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒருசில மனித உரிமைகளும் நாட்டின் தெற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு _ வீரகேசரி இணையம் 4/11/2011 8:47:18 AM Share 1974ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லையில் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுடன் கரையோர காவல் படையினரும் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு நஷ்ட ஈடு பெறுவதற்காக சர…
-
- 1 reply
- 883 views
-
-
பான்-கீ-மூன் நியமித்த நிபுணர்கள் குழு இந்த வாரம் தனது அறிக்கையை வெளியிட உள்ளது? 11 ஏப்ரல் 2011 இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது, மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, தனக்கு ஆலோசனை வழங்க, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நியமித்த நிபுணர்கள் குழு இந்த வாரம் தனது அறிக்கையை வெளியிட உள்ளதாக தூதகர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கை முதலில் ஐ.நா செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும், கையளிக்கப்பட்ட பின்னர், அதனை பகிரங்கப்படுத்துவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நிபுணர்கள் குழு, கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில், இந்தோனேச…
-
- 0 replies
- 767 views
-
-
யாழில் தனியார் காணிகளிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர் – இராணுவத்தளபதி April 11th, 2011 nila யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத் துருப்பினர் விரைவில் அரசாங்கக் காணிகளுக்கு மாற்றப்படுவர் எனவும் இதன் மூலம் இராணுவத்தினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான வீடுகள் விடுவிக்கப்பட முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். புதுவருட காலத்தில் தமது குடும்பங்களிடமிருந்து பிரிந்திருக்கும் படைச் சிப்பாய்களுக்கு தனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதற்காக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு பலாலியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவா…
-
- 0 replies
- 798 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏப்ரல் 10ம் திகதியை மாவீரர் தினமாக அறிவிப்பு 11 ஏப்ரல் 2011 கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏப்ரல் மாதம் 10ம் திகதியை மாவீரர் தினமாக அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முதலாம் மாவீரர் நாள் நேற்றைய தினம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த தமது உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமது அமைப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
Sunday, 10 April 2011 05:49 பண்டிகைக்காலத்தில் சிறிலங்கா மீது ‘பதுங்கித் தாக்குதல்‘ - தயாராகிறதாம் ஐ.நா சிங்கள-தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சிறிலங்கா மீது ‘பதுங்கித் தாக்குதல்‘ நடத்த ஐ.நா திட்டமிட்டிருப்பதாகக் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களில் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை வெளியாகவுள்ள சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் கொழும்பு வரவுள்ளமை சிறிலங்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓ! ஈழத்தின் தமிழ் இளைஞர்களே! உங்களை சோக்கிரட்டீஸ் அழைக்கிறார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-11 01:23:52| யாழ்ப்பாணம்] கிரேக்க நாட்டு தத்துவஞானியே சோக்கிரட்டீஸ்! உன் வரவுக்காக ஈழத்தமிழ் இனம் காத்திருக்கின்றது. எங்களின் காத்திருப்பு உன் அறிவுக்கு பொன்னாடை போர்க்கவல்ல, உனது காலத்து கிரேக்க சமூகம் போல ஈழத்தமிழ் இனம் இப்போது உள்ளது. அது அறியாமைக்காலம். அதனால் நீ அறிவுரைத்தாய். ஆனால் நாமோ அப்படியல்ல. அறிவிலிருந்து அறியாமைக்கு வந்தவர்கள். செல்வத்திலிருந்து வறுமைக்கு வந்தோம். உயர் கலாசார பண்பாட்டு விழுமியத்திலிருந்து சாக்கடை கலாசாரக் குழியில் விழுந்தோம் - விழுத்தப்பட்டோம். தாமே அறிவுரைப்பதாக நினைக்கும் ஒரு அறியாமை அரசியல் தலைமையில் சிக்குண்டு சின்னாபி…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல் _ வீரகேசரி இணையம் 3/31/2011 10:40:21 AM Share அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயில் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவுபர்ன் மாகாணத்தில் ஸ்ரீ மந்திர் எனும் கோயில் அமைந்துள்ளது. மேற்படி கோயிலுக்கள் நுழைந்த முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலத்த காயமடையவில்லை. கோயில் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துக் கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் மட்டும் உள்ளன. இதே கோயிலை கடந்த 200…
-
- 22 replies
- 2.6k views
-
-
கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்! வெள்ளி, 08 ஏப்ரல் 2011 09:02 தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என அழைக்கப்படும் தம்பிராசா துரைசிங்கம் என்பவரை இராணுவத்தினர் விசாரணை செய்கின்ற காணொளி மனித உரிமை கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரேட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரால் தடுத்து வைத்திருக்கப்பட்டது தொடர்பான காணொளி 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக…
-
- 26 replies
- 3.8k views
-
-
அண்மைக்காலமாக அமெக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் ஒருவித முறுகல் நிலை இப்போதைக்குத் தீர்வதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.ஏனென்றால், இந்த முறுகல்நிலை தீவிர மாகும் அறிகுறிகளே இப்போது அதிகமாகத் தென்படுகின்றன. இதன் அடிப்படைக் காரணம், இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரமே என்பதில் சந்தேகம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமாக மனிதஉமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் அமெரிக்கா, மனிதஉமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறத…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் பள்ளிமுனையில் காவலரன் அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்! Posted by uknews On April 10th, 2011 at 10:53 pm / மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்படவிருந்த காலரன் ஒன்று ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து குறித்த காவலரன் அமைக்கும் வேளைத் திட்டத்தினை இராணுவத்தினர் கைவிட்டு அவ்விடத்திலிருந்து சென்று விட்டனர். மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கிற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய இராணுவத்தினர் மேற்படி இடத்தில் காவலரனை அமைக்க இராணுவத்தினர் திடீர் என நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனை அவதானித்த ஊர் மக்கள் தோவாலையத்தில் மணி எழுப்பிய பின் ஊர் மக்கள் அவ்விடத்தில் ஒன்று திரண்டு காவலரன் அமைக்க கடமையில் …
-
- 0 replies
- 775 views
-
-
இந்த சூழ்ச்சித் திட்டங்களுடன் வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளுக்கு தொடர்பு .. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்கா, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்தக் குற்ச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்கா இவ்வா…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்க பேச்சுவார்த்தைகள் பலகட்டங்களாக நடைபெறுகின்றன. மேற்படி பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப நிலைமைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களைத் தருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரியதையடுத்து, மேற்படி விபரங்கள் தரப்படும் என அரசதரப்பு வாக்குறுதி வழங்கியிருந்தது. இந்த விபரங்களை பாதுகாப்புச் செயலகம், பிரதேச இராணுவத் தளபதிகளிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இவர்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அணுகியபோது அவர்கள் கைவித்துள்ளனர். அத்தகைய விபரப்பட்டியல் தம்மிடம் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இது பெரும் பிரச்சினையாக இன்று காணப்படுகிறது. தம்மிடம் எவ்வளவு தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பதை வெளியிட மறுக்கும் அரசாங்கம், சர்வதே…
-
- 1 reply
- 1.1k views
-
-
டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருப்பதில் பயன் ஏற்படப்போவதில்லை என கூறியுள்ளார் நல்லிணக்க ஆணைக்குழுவை சேர்ந்தவரும் முன் நாள் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார. மனித உரிமைமீறல்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இலங்கையுடன் பன் நாட்டு உறவுகளின் அடைப்படையில் தொடர்புகளை பேன முனையும் சில நாடுகளே மனித உரிமை பற்றி பேசுகின்றனர். இவர்களுடன் அரசாங்கம் எதிர்ப்பதனை விடுத்து இராஜதந்திர முறைகளை கையாண்டு அவர்களை உள்வாங்கவேண்டும். இலங்கையின் அர…
-
- 5 replies
- 1.8k views
-
-
இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். தமிழக தோ்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை: எமது பேரன்புக்கும் பாசத்துக்;குமுரிய தமிழக மக்களே! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எமது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண வெள்ளநிவாரண பணத்தை கொள்ளையடித்த இராணுவ தளபதி April 9th, 2011 nila கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவென கையளிக்கப்பட்ட பத்து மில்லியன் ரூபாவை கிழக்கு மாகாண இராணுவக்கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா நிவாரணத்தை வழங்காது முழுமையாக கையாடி உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்துமில்லியன் ரூபாவையும் தேசிய சேமிப்பு வங்கி ஊடாக திறைசேரியின் பணமுறிகளை வாங்கி உள்ளார் என்றும் அதற்கான மாதாந்த வட்டியை அவர் தற்போது பெற்று வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவென மக்கள் வங்கியின் மூலமாக பத்துமில்லியன் (ஒரு கோடி ரூபா) நி…
-
- 1 reply
- 895 views
-
-
பேச்சுவார்த்தையின் போது அரசிடம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு 46 அதிகாரங்களை TNA முன்வைத்துள்ளது: யோசனைகள் தொடர்பான அரசின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவிப்பு. [sunday, 2011-04-10 02:53:34] வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரம், வெளிநாட்டு நிதியுவதிகளை நேரடியாக பெறுவதற்கு அனுமதி, துறைமுகம், வடிகாலமைப்பு, பெற்றோலிய வளம், மீன்பிடி, வானொலி,தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட 46 அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என கூட்டமைப்பு, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் யோசனை முன்வைத்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், உயர்க்கல்வி, நீரியல்வளம், கடலோர பாதுகாப்பு, மின்சக்தி, போக்குவரத்து, பெரு…
-
- 2 replies
- 566 views
-
-
"அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. அது தான் விரும்பி இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இது நடைபெறுகிறது. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையில் அரச தரப்பு எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும். எவ்வளவு தூரம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவல் கொள்ளும் என்பது கேள்விக்குரியதே.' இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது,. இதுவரை நாங்கள் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருக்கின்றோம். பேச்சுவார்த…
-
- 1 reply
- 548 views
-
-
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பினர் [saturday, 2011-04-09 05:35:31] வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பியிருப்பதாகவும், பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமானவர்கள் அவ்வாறு நாடு திரும்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கான இலங்கைப் பிரதிநிதி மைக்கல் ஸ்வெக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் முடி…
-
- 2 replies
- 1.3k views
-
-
கேபியையும் விசாரியுங்கள்: தடுப்புக் காவல் கைதிகள் கோரிக்கை சனி, 09 ஏப்ரல் 2011 08:51 இலங்கை இராணுவத்திற்கு எதிராக நாங்கள் போராடினோம் என எங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றோம். உண்மையில் நாங்கள் எதிராகப் போராடுவதற்குத் தேவையான ஆயுதங்களை கடத்திப் பெற்றுத் தந்தவர் கேபிதான். அவரையும் நீங்கள் விசாரிக்க வேண்டும் என தடுத்து வைக்கப்பட்டு வரும் தடுப்புக் காவல் கைதிகள் கோரிக்கை விடுக்கின்றனர். பூசா முகாமில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் கைதிகளிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போதே தடுப்புக் காவல் கைதிகள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர். …
-
- 1 reply
- 739 views
-
-
தமிழ் தேசியத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசையும் உடைப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை சதி…( யா)..? நாடு கடந்த தமிழீழ அரசை உடைப்பதற்காக விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றியும் மாயைக்குள்ளும் வைத்திருந்தவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசு வலுப்பெற்று வருவதை தடுக்க முடியாததால் , இன்று நாடு கடந்த தமிழீழ அரசு வலு பெற்று வரும் நிலையில் 3 ஆம் தரப்புக்கள் ஊடாக தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இல்லை என்ற செய்தியை மெல்ல மெல்ல கசிய விடத் தொடங்கியுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசை முற்றாக வீ ழ்த்துவதற்கான இவர்களது முக்கோண திட்டம். முதற் கட்டம் : தலைவர் பற்றி கடந்த 2 வருட காலமும் தாம் மறைத்து வைத்த உண்மையை மெதுவாக மக்கள் மத்தியில் கொண்டு வருவது. …
-
- 3 replies
- 2.1k views
-