ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
பிரிகேடியர்களான தீபன், விதுசா, துர்க்கா, மணிவண்ணன் ஆகியோர்களுக்கான வீர வணக்கங்கள் http://jaffnaunite.com/?p=3644
-
- 27 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஒரே நோக்கத்துக்காக இலங்கை வரும் சொல்ஹெய்ம், பிளேக்! செவ்வாய், 05 ஏப்ரல் 2011 19:55 நோர்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் மத்திய தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சின் துணைச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களது இலங்கைக்கான விஜயம் ஒரே நோக்கைக் கொண்டதாக அமையவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. உலகத்தமிழ் பேரவையினர் இவர்கள் இருவருடனான சந்திப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது இலங்கை அரசிற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் அனுசரணையாளராக இருந்து செயற்படத் தயாராக இருப்பதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்.மாநகர சபையில் கூச்சல் குழப்பம்! முதல்வர் சபையில் இருந்து வெளியேறினார்! Posted by uknews On April 5th, 2011 at 1:42 pm யாழ்.மாநகரசபையின் கூட்டத் தொடரில் இன்று பாரிய குழம்பம் நிகழ்ந்திருக்கின்றது. இன்றைய உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் யாழ்.மாநகரசபையின் ஊழல் காரணமாக ஆளுக்கட்சி பிளவுபடுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கூட்டத் தொடர் ஆரம்பித்ததை அடுத்து உரை நிகழ்த்திய மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா குறித்த ஊடங்களின் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் பொய்யான செய்திகளையே குறித்த ஊடகங்கள் வெளியிட்டுவருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றார். இதனை அடுத்து உண்மையில் மாநகரசபையில் ஊழல் தான் நடக்கிறது என்று சபை உறுப்பினர்கள் கூச்சலிட…
-
- 1 reply
- 685 views
-
-
மன்னாரில் கைத்தொழில் பேட்டை என்ற பெயரில் மக்களின் காணிகள் அபகரிப்பு! றிஸாட் பதியுதினின் கைங்கரியம் செவ்வாய், 05 ஏப்ரல் 2011 21:29 மன்னார் மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் கணக்கான காணிகள் 'கைத்தொழில் பேட்டை' என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்நடவடிக்கைகளால் காணிகளை இழந்து பாதிக்கப்படும் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மகஜர் ஒன்றினை செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரிடம் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவத…
-
- 0 replies
- 667 views
-
-
யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:- யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர். சுமார் 6 லட்சத்து, 70 ஆயிரம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ப…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழக மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்: சோனியா உறுதி- சாத்தான் ஓதும் வேதம். இதற்கு மேல் சிறிலங்க கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். சென்னை தீவுத் திடலில் இன்று மாலை நடைபெற்ற தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சோனியா இவ்வாறு கூறினார். “துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் சிலர் கொல்லப்பட்டது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அப்பாவி மீனவர்கள் உயிர் பறிபோய்விட்டது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்கு மேல் தமிழக மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்” என்று சோனியா கூறினார். சோனியா பேசுவதற்கு முன்னார் பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக…
-
- 1 reply
- 926 views
-
-
பொலிஸ், அதிரடிப்படை, விமானப்படை வீரர்களுக்கிடையில் மோதல் 11 பேர் காயம், 45 பேர் கைது [Tuesday, 2011-04-05 03:06:54] களுத்துறையில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு மிடையில் இடம்பெற்ற மோதல் நிலை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ப்பட்ட தையடுத்து பதற்றம் தணிந்துள்ளது. இம்மோதலினால் 11 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப் படையினர் உள்ளடங்கலாக 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தினகரனுக்குத் தெரிவித்தார். ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணிய ளவில் ஆரம்ப மான இம்மோதல் நேற்று நண்பகல்…
-
- 4 replies
- 1.8k views
-
-
“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்கள், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மானிலத்தின் வரகுலில் சாவடைந்துள்ளார். என்பதனை அனைவரும் அறிவோம். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாவடைந்த அன்னையாரின் இறுதி நிகழ்வுகள், அவரது சொந்த இடமான Warragul எனும் இடத்திலுள்ள தேவாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 07 – 04 – 2011 அன்று நடைபெறவுள்ளது. இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் இடம் Victoria Chapel Cnr of Victoria & Albert Street Warragul VIC 3820 இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் நேரம் எதிர்வரும் 07 – 04 – 2011 வியாழக்கிழமை கால…
-
- 5 replies
- 1.4k views
-
-
காணாமல் போன கடற்படையினர் தொடர்பில் உள்ளுர் மீனவர்கள் சந்தேகம் வன்னிப் பகுதியில் தொடரும் புதைபொருள் ஆய்வுகள் அங்குள்ள படையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வன்னி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற பணம் மற்றும் தங்கங்களை வேட்டையாடுவதில் படைத்தரப்பினர் தனித்தனியாகவே ஈடுபட்டுள்ளனர். அரச உயர் மட்டத்திலிருந்து ராணுவத்தின் உயர் மட்டம் வரை பல்வேறு தரப்புகளும் கணக்கு வழக்கில்லாமல் ஈடுபட்டுள்ள நிலையில் அண்மையில் 4 கடற்படையினர் காணாமல் போனமை தொடர்பாகவும் இவ்hறு உள்ளுர் மீனவரிடையே சந்தேகங்கள் வெளியாகியிருக்கின்றன. அப்பகுதியில் தேடுதல் வேட்டையின் போது புதைக்கப்பட்டிருந்த தங்கம் பணம் என்பவற்றை கைப்பற்றிக் கொண்டிருக்கும் தரப்…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு? மாநகர சபையின் அமர்வுகள் முற்றாக குழப்பம்: யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் நவீன சந்தையில் இடம்பெறுவதாக கூறப்படும் சுமார் 40 கோடி ரூபா மோசடி தொடர்பில் இன்று மாநகர சபையின் அமர்வுகள் முற்றாக குழப்பமடைந்தது. மாநகர சபையின் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை அடுத்தே மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் முதல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதன் பின்னர் எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்களும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டத்த…
-
- 0 replies
- 736 views
-
-
இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கண்டித்துள்ளார். மல்லாகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என யுத்த வெ…
-
- 17 replies
- 1.6k views
-
-
2007ல் வெளியிடப்பட்ட காணொளி தற்பொழுது 2011க்கும் பொருந்தும்.
-
- 28 replies
- 2.9k views
-
-
மீள்குடியேறியோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் இலங்கை அரசு! [ பிரசுரித்த திகதி : 2011-04-05 06:07:28 AM GMT ] யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் கடன் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ. சமரசிங்க தெரிவித்தார். வட மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 10,000 குடும்பங்களுக்கே சுயதொழில் முயற்சிகளுக்காக கடன் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர், வட மாகாணத்தில் இடம்பெயர்ந்து மீள்க…
-
- 0 replies
- 864 views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மீண்டும் கடனுதவி! [ பிரசுரித்த திகதி : 2011-04-05 06:50:36 AM GMT ] இலங்கைக்கு ஆறாவது பகுதிக் கடனை வழங்குவதற்குச் சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தது. இதனடிப்படையில் 218.3 அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த கடனுதவி வழங்கப்படுகின்றது. tamilulakam.com
-
- 0 replies
- 739 views
-
-
மலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள் - காத்தமுத்து:- 05 ஏப்ரல் 2011 புதுகை பூபாளம் கலைக்குழுவின் தோழர் பிரகதீஸ்வரன் 'இலங்கைத் தோழர் ஒருவரை கட்டாயம் சந்திக்க வேண்டும், முடிந்தால் ஒரு நேர்காணல் எடுங்கள்' என்று கூறி, அறிமுகப்படுத்தினார். அவருடனான உரையாடலில், ஏற்கனவே இங்கு கூறப்பட்டிருந்த செய்திகளுக்கு மாறாக, பல புதிய தகவல்களைக் கூறினார். அந்த உரையாடல் கீற்று வாசகர்களுக்காக இங்கு தரப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக தோழரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. - கீற்று நந்தன் கேள்வி: இலங்கை மலையக மக்களின் நிலைமை போருக்கு முன் எப்படி இருந்தது? மற்றும் போருக்குப் பின் எவ்வாறு உள்ளது? பதில்: போருக்கு முன் அல்லது பின் என மலையக மக்களின் நிலைமையை ஒப்பிடும் அளவுக்கு பாரிய அளவு …
-
- 0 replies
- 908 views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தை விரிவாக்க நடவடிக்கை April 5th, 2011 nila கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இரட்டை ஓடுபாதைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்படுவதற் கென அதனையண்டிய நூறு யஹக் ரெயர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் கடைசியாக கடந்த 1986ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. அதன்பின் விமான நிலையத்தைச் சுற்றிலும் வெற்றுக்காணிகள் இன்மை காரணமாக பல தடவைகள் முன் னெடுக்கப்பட்ட விரிவாக்கல் நடவடிக்கைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தன. தற்போதைய நிலையில் கட்டு நாயக்க விமானத்தளத்தில் ஒரேஒரு ஓடுபாதை மட்டுமே இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி மணித்தியால மொன்றுக்கு சுமார் 25 விமானப் பறப்புக் களை மேற்கொள்ள முடியும் என்று கூறப் படுகின்றது. கட்டுநாயக…
-
- 0 replies
- 758 views
-
-
Apr 4, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / “நடுகல் வணக்க நாள் ஏப்ரல் 05” - தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 05.04.2011 “நடுகல் வணக்க நாள் ஏப்ரல் 05” உலக வல்லாதிக்க சக்திகளின் உறுதுணையுடனும் ஆசீர்வாதத்துடனும் பெருமெடுப்பில் படைக்கலப் பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ தாயகம் மீது சிங்களம் தொடுத்த கொடிய நில ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டு களமாடி வீரகாவியமாகிய வீரமறவர்களின் நினைவு நாள் இன்று. முல்லைத்தீவு மாவட்டத்தின் இதயமாக விளங்கும் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், முள்ளிவாய்கால் பகுதிகளில், 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ அன்னையின் மானம்காக்க நெருப்பு மழையில் களமாடி, எமது வீரத்தளபதிகளும், வீரவேங்கைகளும் விதையாக வீழ்ந்தார்கள். பல்குழல் பீரங்கிக் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீண்டும் யுத்தத்தை கட்டவிழ்த்துவிட சில விஷமிகள் முயற்சி: ஹத்துருசிங்க நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலரும் சிற்சில இடங்களில் உள்ளனர். விஷேடமாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியனவே இவ்வாறான எதிர்ப்பார்ப்புக்களுடன் செயற்பட்டு வருகின்றனஎன்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியின் முழு விபரம் பின்வருமாறு:- கேள்வி :- யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளும் அதில் இராணுவத்தினரின் பங்களிப்பும் எந்தளவுக்கு முன்னேற்றம் கண…
-
- 0 replies
- 1k views
-
-
சகோதரி ஒருவர் தமிழ் நாட்டில் இருந்து.. http://www.youtube.com/watch?v=ENOdVjzRCmk&feature=feedu
-
- 1 reply
- 2k views
-
-
இந்திய இராணுவத்தின் மீது போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தை அடைந்திருக்க முடியும். -முன்னாள் யாழ். இராணுவ தளபதி [saturday, 2011-04-02 04:59:43] பிரிகேடியர் எச்.எவ்.ரூபசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆளணி நிர்வாகப் பணிப்பாளர், இராணுவ செயலர், சட்டப்பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத் தலைமையகப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். யாழ்ப்பாணம் மற்றும மன்னார் மாவட்டங்களுக்கான இணைப்பதிகாரியாகவும், கூட்டுப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் ஆலோசகராகவும், இந்திய அமைதிகாக்கும் படைக்கான இணைப்பதிகாரியாகவும் இருந்தவர். சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த அவர் கொழும்பு ஆங்கில ந…
-
- 17 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சவாரிக்குப் பயன்படுத்திய குதிரை முல்லைத்தீவு வனப்பகுதியில் காணப்படுகிறதாம்! [Monday, 2011-04-04 14:26:31] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கருங்குதிரையொன்று முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்குதிரை தன்னந் தனியாக வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி வருவதைப் பலரும் கண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் மொபைல் போன் ஊடாக குதிரையைப் படம் பிடித்துள்ளார்.ஆயினும் குதிரையை நெருங்கிப் போய் தெளிவாகப் படமெடுக்க முனைந்த போது அது மிரண்டு ஓடியுள்ளது. இதற்கிடையே முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்பட்ட பிரஸ்தாப குதிரை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலை…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐவரிக்கோஸ்ட் இன்னொரு சிறீலங்கா – மேலைத்தேய ஊடகங்கள் தற்போது மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரிக்கோஸ்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கடும் மோதல்கள் நடைபெறுகின்றன. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவரை பதவி ஏற விடாமல் பழைய அதிபர் மறுப்பதால் இந்த மோதல் நடைபெறுவதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இதற்குள் மேலும் பல சூட்சுமங்கள் இருப்பதாக மேலைத்தேய ஊடகங்கள் மாலை நேரச் செய்திகள் எழுதியுள்ளன. பிரச்சனை ஒன்று : மேற்கு ஆபிரிக்க நாடுகளில் வருமானம் கூடிய வளமான நாடாக ஐவரிக்கோஸ்ட் இருக்கிறது. இந்த நாட்டை நோக்கி அயல் நாடுகளான மாலி, பேர்கினாபாசோ போன்ற இடங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் உள்நாட்டு மக்கள் – வந்தேறு குடிகள் என்ற கோணத்தில் பிரச்சனை ஏற்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் அதிக வெப்பநிலை! Posted by uknews On April 4th, 2011 at 11:41 pm இலங்கையில் இந்த மாதம் முழுவதும் பகல் இரவு நேரங்களில் வெப்பகாலநிலையை எதிர்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன் நாளை முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதே இதற்கான காரணம் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவநிலை மாற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் முன்கூட்டிய காலநிலை தற்போது அதிக வெப்பமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் வடக்கு வடமத்திய மற்றும் வடமேற்று மாகாணங்களில் இந்த வருடத்தில் உயர்வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. saritham
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்! உருத்திரகுமாரன் தெரிவிப்பு திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 18:29 இலங்கை அரசு வன்னிப் போரில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாரிய நெருக்கடியை கொடுக்கப் போகிறது என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். லிபியாவில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக மனிதாபிமானப் போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கையில் 60 ஆயிரத்திற்கு…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவினால், அரியாலையில் நாட்டப்பட்ட, 50 ஆயிரம் வீட்டுக்கான அடிக்கல் பிரதேசம் நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கால் நடைகளின் ஓய்விடமாகியுள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட தினத்தன்று வழங்கப்பட்ட வீடுகளுக்கான மாதிரி வரைபடங்களை அப்பகுதி மக்கள் வீடுகளில் பேணிப்பாதுகாத்தே வருகின்றனர். இதே போன்று போருக்குப் பின்னான வடக்குகிழக்கின் அபிவிருத்தி குறித்து இந்தியா இலங்கைகக்கு வழங்கிய உறுதி மொழிகள் எதுவும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளன. வடக்கு கிழக்கிற்கான புகையிரதப் பாதை மறுசீரமைப்பு, காங்சேகன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, யாழ்.மாநகர சபை அபிவிருத்தி, யாழ்பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடத்தை அமைப்பத…
-
- 2 replies
- 1.5k views
-