ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
மஹிந்த தொடர்பில் தகவல் சேகரித்த நபர் ஐரோப்பில் கைது! April 3rd, 2011 admin kaithu ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் விமானப்பயணங்கள் தொடர்பில் தகவல் சேகரித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன் அவர் 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமான நிலையம் மீது மேற்கொண்ட தாக்குதலிலும் பங்கேற்றவர் என்று தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் ஐரோப்பிய நாடொன்றுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாக வாழ்ந்துள்ளார். கமல் என்ற பெயர் கொண்ட பிரஸ்தாப நபர் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார்.அவரைப்பற்றிய தகவல்கள் ஐரோப்பிய நா…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களைப் பொறுத்து 2011ம் ஆண்டு திருப்புமுனைகளை ஏற்படுத்தும்! ருத்ரகுமாரன் நம்பிக்கை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆண்டாக அமையும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலண்டனில் இன்று நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலில் இணையத்தினூடாக உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்கா அரசு வன்னிப்போரில் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கப்போகிறது என்றும் 5000 பொது மக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
கனடாவின் தேர்தலும், தமிழ் மக்களின் பங்களிப்பும் கனடாவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஈழத்தமிழர்களையும் கணக்கிலெடுக்காது கொண்டு செல்லமுடியாது. ஆனாலும் தமிழர்கள்மீது அவதூறு விளைவித்து தமிழர்களைப்புறந்தள்ளுவது என்பதும் நடைமுறைச்சாத்தியமாக இருக்கமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் இடையில் தமிழர் வாக்குகள் என்பது கணிசமாக கணிக்கப்பட வேண்டிய தொன்றாகின்றது. தமிழர்கள் தங்கள் வாக்குப்பலம் பெறவேண்டுமாயின், எமது இனம் பலமுள்ள இனம் என்று சுட்டிக்காட்டப்படவேண்டுமாயின் உலகத்திலேயே விவேகமும், பலமும் மிக்க ஈழத்தமிழினம் தங்கள் பலத்தை ஒற்றுமையாக ஒருங்கிணைக்கும்போது அதற்குரிய வெகுமானம் சொல்ல முடியாத தொன்றாக இருக்கும். அந்த விவேகமும் பலமும் தேர்தலில் ஒரு பலத்த தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அதற்குத்தானா…
-
- 10 replies
- 911 views
-
-
அகதிகளை திருப்பி அனுப்பாதீர் - சுவிஸில் ஆர்ப்பாட்டம். சுவிஸ் நாட்டில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் பேர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகவுள்ளதால் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டர்களை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரினர் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் தஞ்சம் கோருவோர் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு திரும்பிச் செல்லலாம் என சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி குடிவரவு அலுவலகம் இவ்வருட முற்பகுதியில் தெரிவித்தது. எனினும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என தமிழர்கள் கூறுகின்றனர்.…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, ஏப்ரல் 4, 2011 இந்த வருடம் முதல் காலாண்டில் மட்டும் 727 மில்லியன் டொலர் வெளினாட்டு வருமானமாக கிடைத்துள்ளது என சிங்கள அரசாங்கம் கூறியுள்ளது. பல்வேறு நாடுகளில் பிரச்சினை ஏற்பட்டாலும், உலக அலவில் பொருளாதார தளம்பல்கள் ஏற்பட்டாலும் தமக்கு இந்த வெளினாட்டு வருமானம் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சிங்கள அரசு கூறுகின்றது. வெளினாடுகளில் பணி புரிவோர் மற்றும் வெளினாட்டில் இருக்கும் இலங்கையர்கள் தமது உறவுகளுக்கு அனுப்பிய தொகையே இந்த 727 மில்லியன் டொலர் வருமானம் என அரசின் மத்தியவங்கி ஆழுனர் உறுதிப்படுத்தியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA…
-
- 0 replies
- 997 views
-
-
யாழ்ப்பாணம் இளவாலையிலிருந்து, இன்று கொழும்பு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் அவரது தாயார் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் யூனியன்ஸ் இன்சூரன்சில் கள அலுவலராக கடமையாற்றும் இராஜேந்திரமோகன் (வயது 34) என்பவரே காணாமல் போனவர் ஆவார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் வேளையில் தனது வீட்டாருடன் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மேற்படி குடும்பஸ்தர், தான் ரயிலில் கொழும்புக்கு பயணித்துக்கொண்டிருப்பதாகவும் பின்னர் தொடர்புகொள்வதாகவும் அறிவித்துள்ளார். பின்னர் அவர் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லையென்பதுடன், உறவினர்களுடைய வீடுகளுக்கும் அவர்; செல்லவில்லையென்று உறவினர்கள் கூறியுள்ளதாக அந்த முற…
-
- 0 replies
- 971 views
-
-
திங்கட்கிழமை, ஏப்ரல் 4, 2011 கூட்டமைப்பின் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கேகலிய ரம்புக்வெல மீண்டும் கூறியுள்ளார். கூட்டமைப்பு அரசுடன் பேசி வருகின்றது. அவர்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை 13 வது சீர்திருத்த சட்டத்திற்கு உட்பட்டு கேட்டார்கள். ஆனால் அரசாங்கம் அதற்கு மறுத்துள்ளது என்றார் ரம்புக்வெல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் கூறினார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடை யில் பல சுற்றுப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற்றுள்ளன. 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாகவுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அடிப்படையாகக் கொ…
-
- 0 replies
- 602 views
-
-
திங்கட்கிழமை, ஏப்ரல் 4, 2011 கடந்த 29 அம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன நான்கு கடற்படை சிப்பாய்களின் நிலைமை என்ன என்பது தொடர்பாக இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.இவ்வாறு சிங்கள கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசலவர்ண குலசூரிய கூறியுள்ளார். கடற்படைச் சிப்பாய்கள் காணாமற் போய் நேற்றுடன் ஆறு நாள்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் காணாமற் போனது இன்னும் மர்மமாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கடற்படைச் சிப்பாய்கள் டிங்கிப் படகு ஒன்றுடன் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமற் போயிருந்தனர்.இதனையடுத்து, கரையோர பிரதேசங்களில் முப்படையினரும் கூட்டாக இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈட…
-
- 0 replies
- 2.3k views
-
-
இளவாலையில் மர்மப் பொருள் வெடிப்பு:காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி [Monday, 2011-04-04 04:28:06] இளவாலையில் சொந்த வீட்டில் மீள்குடியமர்வதற்காக வீட்டுக் காணியைத் துப்பரவு செய்து குப்பைகளை எரித்த போது அதற்குள்ளிருந்த மர்மப் பொருள் வெடித்ததில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்தச் சம்பவம் இளவாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த ந.அருந்தவராசா (வயது 62) என்பவரே படுகாயமடைந்தார். தொடைப்பகுதியில் பலத்த காயமும் ஏனைய இடங்களில் சிறுகாயங்களும் இவருக்கு ஏற்பட்டன.தொடைப் பகுதியில் சத்திர ச…
-
- 0 replies
- 712 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான இந்திய இராணுவத்தின் அட்டுழியங்கள்: அம்பலப்படுத்தும் நூல் வெளியீடு [Monday, 2011-04-04 04:37:27] 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை இந்திய இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை படமாக்கி ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதோடு, பல பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்திய இராணுவத்தால் பல அட்டூழியங்கள் செய்யப்பட்டாலும், குறிப்பிடத்தக்க 12 அட்டூழியங்களை இந்த நூல் அம்பலப்படுத்தியுள்ளது வடகிழக்கு மனித உரிமைக் கழகம் இப் புத்தகத்தை வெளியிட பெரிதும் உதவியதோடு, ஆவணத் தொகுப்புக்கும் உதவியதா…
-
- 0 replies
- 1k views
-
-
64 நாடுகளில் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர்: ஐ. நா அகதிகள் தூதுவராலயம்துவராலயம் தெரிவிப்பு திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 00:24 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து 2 வருடங்களான நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேறுவதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து 2 வருடங்களான நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேறுவதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இந்த வருட முதல் மாத காலப்பகுதியினுள் 597 பேர் அகதிகள் தூதுவராலயத்தின் உதவியுடன் தமது முன்னைய இருப்பிடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோ…
-
- 1 reply
- 621 views
-
-
மது போதையில் மணைவியை பெற்றோல் ஊற்றிக் கொழுத்திய கணவன் – யாழில் சம்பவம்! April 3rd, 2011 admin மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனால் பெண்ணொருவர் பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 2 பிள்ளைகளின் தாயான 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை குருநகர் பொலிஸார் தேடி வருகின்றனர். http://thaynilam.com/?p=42
-
- 0 replies
- 1.6k views
-
-
புத்தளம் கடற்பிரதேசத்தில் கரையொதுங்கும் மீன்கள்! கடலின் எண்ணெய்வள ஆய்வின் விளைவு என சந்தேகம் திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 07:11 புத்தளம் ஆலங்குடா பிரதேசத்தில் திடீரென பெருந்தொகையான மீன்கள் செத்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தொகையான மீன்கள் கரை ஒதுங்குவது அப்பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் கடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்ணெய்வள ஆராய்ச்சியின் காரணமாக இந்த மீன்கள் செத்து கரை ஒதுங்குவதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்திய மீனவர்கள் டைனமெற் வெடி வைத்து மீன்களை பிடிப்பதாகவும் அதில் உயிரிழந்த மீன்களே கரை ஒதுங்குவதாகவும் ஒருசாரார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட கடற்தொழில் திணைக்கள…
-
- 0 replies
- 824 views
-
-
இன நெருக்கடிக்கு தீர்வுகாண்பதை அரசு இனிமேலும் இழுத்தடிக்கக்கூடாது ரணில் வலியுறுத்தல் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றிற்கு வரவேண்டுமென வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இதனை மேலும் இழுத்தடிக்க முடியாதெனக் கூறியுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் பசறை பிரதேச சபையை ஐ.தே.க. கைப்பற்றியுள்ளது. அச்சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண, பதவியேற்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை பசறையில் இடம்பெற்றபோதே அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். மக்கள் கஷ்டத்தை உணர்ந்து அரசை நிராகரித்ததால் ஐ.தே.க. பசறைப் பிரதேசசபையில் வெற்றிபெற்றுள்ளது. இதற்…
-
- 0 replies
- 508 views
-
-
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான தமது யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கப்போகின்றது. இம்மாத இறுதியில் அரசுடன் இடம்பெறும் பேச்சுக்களின் போது கூட்டமைப்பின் யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். கூட்டமைப்பின் யோசனைகள் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமா அல்லது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு திட்டமாக அமைந்திருக்குமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவர்கள் மாறிமாறி தெரிவித்துவரும் கருத்துக்களும், எச்சரிக்கைவிடும் பாணியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் அறிவிப்பும்தான் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இவை இரண்டுக்கும் இடையேயுள்ள இந்…
-
- 0 replies
- 585 views
-
-
-
இலங்கை கிரிக்கட் அணி தோல்வியின் எதிரொலி: தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்: பலர் வைத்தியசாலையில் அனுமதி [sunday, 2011-04-03 11:22:06] உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததனையடுத்து இலங்கையின் யாழ்.குடா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தம…
-
- 5 replies
- 2.3k views
-
-
உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவ்வெற்றி யுத்தத்தில் பெற்ற வெற்றியை போன்றதாகும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்திலும் இலங்கை அணியினர் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம் என பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஐ.தேக.வின் சார்பில் எதிர்க்கட்சி கொறடா ஜோன் அமரதுங்க இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 1996 …
-
- 82 replies
- 5.6k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நியமனக் கடிதம் இன்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்யாததினால் தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலங்கன் பணியாற்றினார். துணைவேந்தர் தெரிவில் தொடர்ச்சியாக இழுபறிநிலை நடந்தது. இதனிடையில் தன்னை துணைவேந்தராக ஜனாதிபதி நியமித்தாக போராசியர் இரட்ணஜீவன்ஹீல் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தில் உண்மையில்லை என்றும் தொடர்ந்தும் என். சண்முகலிங்கனே துணைவேந்தர் என்றும் உத்தியோக பூர்வ தகவல்கள் …
-
- 15 replies
- 2.3k views
-
-
Tuesday, March 29th, 2011 | Posted by thaynilam முரளியுடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் வடக்கிற்கு விஜயம் பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப்பணியின் ஒருகட்டமாக, முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோருடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்கு சென்றிருந்தனர். வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித…
-
- 40 replies
- 2.1k views
-
-
ஈழத்தமிழர் மத்தியில் பல அமைப்புகள் ஆயுதப்போராட்டம் ஆரம்பமான காலத்துடன் தோன்றிவி;ட்டன. மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் எந்தவிதமான கருத்து இருக்கிறது என்று மக்கள் பொதுவாகவும், இந்த அமைப்புகள் தம்மைத்தாமே அறிந்து கொள்ளவும் இந்த கருத்துக்கணிப்பு உதவலாம். ஆகவே தயவுசெய்து வாக்களியுங்கள். நன்றி
-
- 54 replies
- 4.4k views
-
-
புலிகளை காட்டிக்கொடுத்து கோடிக்கண்ணகான பவுன்சுகளை தம்வசப்படுத்திய பிரித்தானிய புலிகளின் செயற்பாட்டாரளர்களான பீரிஎப் புலிகளால் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தயின் துணைவியை சந்தித்து பேசியுள்ளனராம். புலிகளின் அழிவிற்கு காரணமாயிருந்த வெளிநாட்டு சக்தி யார் என்பது இன்று சந்தேகத்தற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. "தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது" காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக இலண்டனில் அவரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கை அரசு ஒரு கருவியே! அதை ஏவிய இந்தியாவே புலிகளின் அழிவிற்கு காரணமாயிருந்தவர்கள் என்பதை விக்கி லீக்…
-
- 13 replies
- 2.3k views
-
-
சர்வமத குழுவிற்கு கருத்துத் தெரிவித்த மதகுரு மீது கழிவுநீரால் தாக்குதல்! தீவகத்தில் சம்பவம்! Posted by admin On April 3rd, 2011 at 4:17 pm / யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் சர்வமதகுழுவிடம் தெரிவித்த மதகுரு ஒருவருக்கு அடையாளம் தெரியாதோரால் கழிவு நீரை ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரது உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. கடந்த 30-03-2011 அன்று சர்வமத குரு மார் ஒன்றியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். அதன் போது தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறைகள் தொடர்பிலும் மதகுருக்களால் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் தொட…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கை வெளிவிகார அமைச்சர் பீரிஸை சந்திக்க பிரித்தானிய அமைச்சர் மறுப்பு [sunday, 2011-04-03 06:14:02] பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி சந்திக்க மறுத்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் .ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்க முன்னர், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தார். சந்திப்பக்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையிலும், அவரைச் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லண்டன் சென்றிருந்தார். ஆயினும், அவரை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 3, 2011 பத்தாவது உலக கோப்பையினை வெல்வோம் என சூழுரைத்து சென்ற இலங்கை அணி கிண்ணத்தை வெல்லாது திரும்பி வந்துள்ளது. இந்த கிண்ணத்தை வைத்து மஹிந்த ஒரு அரசியல் செய்திருப்பார் என எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர். . மஹிந்த குடும்பமும் இலங்கை கிரிக்கெட் அணியும் . 10 வது கிரிக்கெட் உலக கோப்பை நேற்று மும்பையில் நடந்தது. அதனை முன்னிட்டு மஹிந்த இந்தியாவிற்கு சென்றார். பிரதமர் மன்மோகன் சிங்கை பார்க்க வருமாறு மஹிந்த இரகசிய தகவல் அனுப்பியும் மன்மோகன் செல்லவில்லை என கூறப்படுகின்றது. மாறாக இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் சென்றார். போட்டியை சுவாரசியமாக கண்டு கழித்த மஹிந்த குடும்பத்தினர் அணி வெல்லும் என்பதில் திடமாகவே இருந்துள்ளனர். ஆனால்…
-
- 2 replies
- 2k views
-