Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அபிவிருத்திப் பணிகளுக்கு பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும்: பிரிட்டன் உயர்ஸ்தானிகர் [saturday, 2011-03-26 05:20:08] இலங்கையில் அதிகளவான முதலீடுகள் செய்யப்படும் என பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரொன்கீன் தெரிவித்துள்ளார். அதிகளவான பிரிட்டன் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையில் பல்வேறு துறைகளின் கீழ் முதலீடு செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். seit…

  2. ஓபாமாவின் கொடும்பாவி எரிப்பு -கொழும்பில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்! வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 11:34 லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து இன்று நண்பகல் கொழும்பில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினர். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை யும்மா தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து காலி வீதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். ஊர்வலமாக சென்றவர்களை காவல்துறையினர் அமெரிக்க தூதரகத்திற்கு சற்று தூரம் தள்ளி நிறுத்தியதுடன் அமெரிக்க தூதரகப்பகுதியில் யாரும் நெருங்காதவாறு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். அமெரிக்க தூதரகத்திற்க…

  3. Friday, March 25th, 2011 | Posted by thaynilam 27ஆம் திகதி முதல் கொழும்பு – சென்னை ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கும் சென்னைக்கும் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தை மேற்கோள்காட்டி இந்திய இணையத்தமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொழும்பு – சென்னைக்கு இடையிலான ஏர் இந்தியா விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஏர் பஸ் ஏ-321 விமானமே இந்த சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது. ஏர் இந்தியா விமான சேவையானது ஒவ்வொரு புதன்கிழமையையும் தவ…

  4. பிரிட்டன் வாழ் தமிழர்களின் பிரதினிதிகளான உலக தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் சோனியா தனது கருத்தை கூறியுள்ளார். தாம் எப்போதும் தமிழர்பக்கம் என்றும் கூறியுள்ளார். தான் சிறிலங்காவில் நடந்த கொடுமைகளை வீடியோவில் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். சோனியாவின் இந்த கருத்தை உலக தமிழர் பேரவையினர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் பிரிட்டன் தமிழர்களை சோனியா வென்றுள்ளதாகவும் கூறியுள்ளது இந்திய ஊடகங்களான இந்து போன்ற பத்திரிகைகள்.. உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இது பற்றி கூறுகையில் தமது பிடியில் இருந்து சோனியா தப்பிக்க முடியவில்லையெனவும் தமது விருந்தினராக அவர் ஆக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. தேர்தல் நேரம் நெருங்குகின்றது. இந்த நேரத்தில் …

    • 33 replies
    • 4k views
  5. வீரகேசரி இணையம் 3/24/2011 12:28:30 PM லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில், லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆனது உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாத…

    • 2 replies
    • 1.2k views
  6. வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்களும் வன்னியின் விடுதலைக்கான வாய்ப்புகளும். பேராசிரியர் இரா.சிவசந்திரன் சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், திரு சி.ரகுலேந்திரன், திரு கமலேஸ்வரன், திரு டேவிட் நாகநாதன் ஆகியோர் 11.03.2011 முதல் 14.03.2011 வரை வன்னிப் பயணத்தை மேற்கொண்டு வன்னியின் இன்றைய நிலை, மக்களின் அவல நிலை, பிரதேசத்திற்கான அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றி ஒரு மேலோட்டமான ஆய்வை மேற்கொண்டோம். அதன் ஆரம்ப அறிக்கையை சிந்தனைக்கூடத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்திருந்தோம்;. அவற்றில் சில முக்கியமான விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவிப்பது பொருத்தமென கருதுகின்றோம். …

    • 0 replies
    • 3.5k views
  7. வவுனியா சர்வதேச செஞ்சிலுவை சங்க வளாகம் இன்று மூடப்பட்டது. வட தமிழீழத்தில் இறுதியாக இருந்த ஒரேயொரு செஞ்சிலுவை சங்க பணிமனை இதுவாகும். இனிமேல் கொழும்பு கிளை மட்டும்தான் இயங்குமாம். இதுவும் எப்போ மூடப்படுமோ தெரியாது. வடக்கு கிழக்கு பகுதியில் படிப்படியாக செஞ்சிலுவை சங்கம் தனது பணிமனைகளை முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் மூடி வந்துள்ளது. உண்மையில் முள்ளிவாய்க்காலிற்கு பின்னரே தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள், காணாமல் போதல் அதிகரித்து வந்துள்ளன. சிறைகளில் போர்க்கைதிகள் இன்னமும் ஆயிரக்கணக்கானோர் சிங்கள சிறைகளில் உள்ளனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 1990 ஆம் ஆண்டு பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் ஓர் ஒப்பந்தம் ஒன்றினை விடுதலைப்புலிகளுடனும் சிங்கள அரசுடனும் செய்து கொண்டது. அதில் ப…

    • 0 replies
    • 1.1k views
  8. Friday, 25 March 2011 00:46 புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியீடு? ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வேறு வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில், இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய…

  9. லண்டனில் இருந்து இலங்கை சென்ற இளைஞர் யாழ் நகரப் பகுதியில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் 22 மார்ச் 2011 லண்டனில் இருந்து இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் யாழ் நகரப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். யாழ் நகரின் ஸ்ரான்லி வீதியையும் மின்சார வீதியையும் இணைக்கும் இணைப்பு வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே வெள்ளை வானில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு அஜந்தன் என்பவரே கடத்தப்பட்டவராவார். இவர் இலங்கையின் முன்னணி காப்புறுதி நிலையமான சிலிங்கோ நிறுவனத்தில் கடந்த 5 வருடத்திற…

    • 3 replies
    • 1.5k views
  10. போர்குற்றத்தின் விளைவு.. அமெரிக்கா இலங்கை இடையேயான முதலீடுகளில் விரிசல்!: பொருமி வெடிக்கிறது சிறீலங்கா அரசு. [Friday, 2011-03-25 04:37:01] அமெரிக்காவின் உரிமைகள் சட்டமும், போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களும் சிறிலங்காவில் அமெரிக்க முதலீடுகளைக் கொண்டு வரும் முயற்சிகளைப் பெரிதும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளன. இதனால் சிறிலங்கா அரசாங்கம் வெறுப்படைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறிலங்காவில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் முதலீட்டை அதிகரிப்பதற்கு அரசாங்கம் பெரும்பாடு பட்டு வருகிறது. இந்தநிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தங்களாலும்,…

  11. கொழும்பிலிருந்து யாழ்சென்ற பஸ்வண்டி முறிகண்டியில் தடம்புரண்டது: பத்துக்கும் அதிகமான பயணிகள் காயம். [Friday, 2011-03-25 05:17:52] இன்று காலை முறிகண்டிக்கு அண்மையில் பஸ் வண்டி ஒன்று தடம் புரண்டதில் அதில் பயணித்த பத்துக்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் சொகுசு பஸ் வண்டியே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்திருந்த கடும் மழையினால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. seithy.com

  12. இந்தியக் கடற்படையினர் நேற்று வடமராட்சிக் கடலில் நடமாட்டம் வடமராட்சிக் கடற்பரப்பில் நேற்று இந்தியக் கடற்படையினரின் நடமாட்டம் அதிகமாக இருந்தது என்று வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை உதயனுக்குத் தெரிவித்தார். வழமைக்கு மாறாக நேற்றுக் காலை முதல் மாலை வரை வடமராட்சிக் கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்தியக் கடற்படையினரின் அதிவேகப் படகுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இதேவேளை, நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கடலில் தொழிலுக்குச் சென்ற வல்வெட்டித் துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்றுஅதிகாலை 2 மணியளவில் கடலில் வைத்து இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்…

  13. தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் போது தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென இன்டபோல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளயிருந்த இடங்களை கடந்த வாரம் தாம் அடையாளம் கண்டதாக பிரான்ஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச பொலிஸ் முகவர் நிலையத்தின் பிரதான அதிகாரியான ரோனால்ட் கே நோபில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் - கராச்சி நகரிலிருந்து மாலைத்தீவு நோக்கி பயணமாக இருந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B…

    • 0 replies
    • 1.4k views
  14. முல்லை - கிளினொச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட தேறாங்கண்டல், ஐயங்கன்குளம், மருதங்குளம், புத்துவெட்டுவான், பழைய முறிகண்டி உள்ளிட்ட கிராமங்களில் மீளக் குடியமர்ந் துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் என்றுமில்லாதவாறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு துணுக்காய் உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட மேற்படி கிராமங்களில் சுமார் ஐநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் மீளக்குடி யமர்ந்துள்ள நிலையில் இக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் எவையும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. குறிப்பாக இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் இவர்கள் தறப்பாள் குடிசை களிலும் பன்னிரெண்டு தகரங் களைக்கொண்டு அமைக்கப்பட்ட குடிச…

    • 0 replies
    • 731 views
  15. சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு இலங்கை அரசும் அதன் தலைவர்களும் எப்போதும் முழு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டிருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார் சீனாவுக்கான தூதர் கருணாதிலக அமுனுகம. சீன வெளிவிகார அமைச்சில் துணை வெளிவிவகார அமைச்சர் சங் சியூங்கை நேற்றுச் சந்தித்துப் பேசிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார் என்று சீன அறிவித்துள்ளது. தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அமுனுகம, சீன இலங்கை உறவுகள் வலுப்படுவதற்கு பெரும் பங்காற்றியவர் என்று சீனத் துணை அமைச்சர் தெரிவித்தார். http://www.eelanatham.net

    • 0 replies
    • 818 views
  16. இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருப்பதாக தென் ஆபிரிக்கா அறிவிப்பு:- 25 மார்ச் 2011 இலங்கை குறித்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படும் வரையில் காத்திருப்பதாக தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விசாரணைகளில் பங்கேற்குமாறு தென் ஆபிரக்காவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்நாட்டு பிரதி ஜனாதிபதி கெக்லமா மோல்தனே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவில்லை எனக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என விசாரணை நடத்தி தமக்கு ஆலோசனை வழங்கும் நோக…

  17. காலிமுகத்திடல் தொடக்கம் வெள்ளவத்தை வரையான கரையோர நிலவிஸ்தரிப்பு வெள்ளி, 25 மார்ச் 2011 08:53 காலிமுகத்திடல் தொடக்கம் வெள்ளவத்தை வரையான கரையோர நிலப்பரப்பு 300 தொடக்கம் 400 ஏக்கர் வரை விஸ்தரிப்பதற்கான செயல்திட்டம் ஒன்று நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளர். துறைமுக அபிவிருத்தி பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இச்செயல்திட்டம் ஐந்நூறு மீற்றர் வரையான கடலை உள்வாங்கும் விதத்தில் விஸ்தரிக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் இதனைப் பூர்த்தி செய்ய 3 தொடக்கம் 5 ஆண்டுகள் வரையான காலம் செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வள ஆய்வுகளை தற்போது துறைமுக அதிகார சபை ம…

  18. தமிழரின் நண்பரென கூறும் சோனியாகாந்தி சிவசங்கர் மேனனை பதவி நீக்கவேண்டும் - அமெரிக்க தமிழர் அமைப்பு கோரிக்கை! இலங்கைத் தமிழரின் நண்பரென தன்னைக் கூறிய சோனியா காந்தி உண்மையைக் கூறியுள்ளதாக நாங்கள் நம்புகின்றோம். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் தமிழ்ப் மக்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டது அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சராக சிவசங்கர் மேனன் இருந்தார். இவ்விடயம் தமிழர்களின் நண்பராக அவர் இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளது. எனவே சிவசங்கர் மேனனுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்புத் தெரிவித்திருக்கிறது. இவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதா…

    • 0 replies
    • 337 views
  19. முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன? - திவியரஞ்சினியன்:- சிசுக்கொலைகள், சிசுக்களை அனாதரவாக விடுதல் பற்றிய செய்திகள் போருக்குப் பிந்தைய வடக்கு கிழக்கில் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான ஒரு கலந்துரையாடலை எமது வானொலியில் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்நிலைமைகள் குறித்த ஒரு விவாதத்திற்காக இக்கட்டுரையை இங்கு தருகிறோம். ஆக்கபூர்வமான விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன? சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. ஏனெனில் இப்ப…

    • 0 replies
    • 557 views
  20. பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும் போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமை கொண்டவங்க விடுதலைப் புலிகள் [Thursday, 2011-03-24 04:10:56] இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனா​லும், அங்குள்ள தமிழர்களின் இன்னல்கள் இன்னும் ஓயவில்லை. அதன் பிரதிபலிப்பு, இந்த ஆண்டு நடந்த கச்சத் தீவுத் திருவிழாவிலும் எதிரொலித்ததுதான் கொடுமை! இந்தியா வசம் இருந்த கச்சத் தீவு, 1974-ல் இலங்​கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும், அங்கு உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில், இரு நாட்டு பக்தர்களும் தடைகள் இன்றிப் பங்கேற்றனர். 83-ல் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில், இந்த விழா தடைப்பட்டது. அத…

  21. இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது:- 24 மார்ச் 2011 வன்னியில் இடம்பெற்றஇறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில போர்நிறுத்தம் ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் தனவல்களை வெளியிட்டுள்ளது. அப்போது இலங்கையின் அமெரிக்கத் தூதராலயத்தில் உயர் நிலை அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது குறுந் தகவல் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு இது குறித்த செய்திகளைப் பரிமாறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பட்டுள்ளது. உக்கிரமான இறுதிப் போரின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன…

    • 5 replies
    • 1.9k views
  22. கடாபிக்கு எதிரான போர் வியூகம் எப்படி நகர்கிறது.. கடாபிக்கு எதிரான போர் ஈழத் தமிழ் தலைவர்களின் கடந்தகால மதி நுட்பங்களிலும் கேள்வி எழுப்பப் போகிறது. கடாபிக்கு எதிரான போர் சர்வதேச கூட்டுப்படையினருக்கு புதியதோர் அனுபவமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளாக நயவஞ்சகமும், சர்வாதிகாரமும் நிறைந்த ஒருவராக வாழ்ந்தவர் கடாபி. தனது அதிகாரத்தை தக்கவைப்பதைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாத ஒருவராகவும் இருந்தவர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வந்ததும் தனது நண்பரான சாதாம் உசேனை அப்படியே கைவிட்டு பிரிட்டனோடு உறவாடி தனது அதிகாரத்தை காப்பாற்றியவர். எனவே உலகம் முன்னேறிய வேகம் போலவே தனது அதிகாரத்தை காப்பாற்றும் வேகத்திலும் அவர் முன்னேறியிருக்கிறார். அவருடைய போர் …

    • 10 replies
    • 1.8k views
  23. Mar 23, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / புலிகளைத்தேடி, தமிழகம் நோக்கி சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணி இந்தியாவின் தமிழகம் நோக்கி சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணி ஒன்று நகர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் சிறீலங்காவின் பிரதமர் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயங்கிவருவதாக தெரிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளினை கண்காணிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் விபரங்களை திரட்டி அவர்களது ஜரோப்பிய மற்றும் பிரித்தானிய உறவுகளின் நடவடிக்கைகளினை முடக்கும் முகமாகவும், தமிழகத்திற்கான சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணியினர் நகர்த்தப்படவு…

    • 2 replies
    • 1.4k views
  24. Thursday, March 24th, 2011 | Posted by thaynilam தலைநகர் கொழும்பை நவீனமயப்படுத்த புதிய நிறுவனம் இலங்கையின் தலைநகர் கொழும்பு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக விசேட நிறுவனம் ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்த்து கிடைத்துள்ளது.இதன்படி, கொழும்பு, தெஹிவலை, கல்கிஸ்ஸை மற்றும் ஸ்ரீஜெயவர்தன புர கோட்டை ஆகிய மாநகரசபைகளும், கொலன்னாவை நகரசபையும், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைகளும் இதன்கீழ் கொண்டுவரப்படவுள்ளன. எனினும் இந்த உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் தற்போது போலவே தொடர்ந்தும் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.அவற்றின் அபிவிருத்தி நோக்கில், இந்த உள்ளுராட்சி மன்றங்களை இணைந்து இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கு உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்களுக்…

  25. இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். 22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவரங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.