Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளைத் தடைசெய்யுமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-12 08:30:03| யாழ்ப்பாணம்] அவுஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யுமாறு கோரும் சிபா ர்சு ஒன்றை அந் நாட்டின் பயங்கரவாதத் தடுப்பு துறைசார் நிபுணர் ஒருவர் அரசாங்கத் திடம் முன்வைத்துள்ளார். கிளைவ் வில்லியம்ஸ் என்னும் அவுஸ் திரேலியாவின் பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணரே விடுதலைப்புலிகள் அமைப்பை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள இரகசிய அறிக்கையயான்றின் மூலம் கோரியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையை அதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தனது அறிக்கையின் மூல…

    • 3 replies
    • 963 views
  2. சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 பிரித்தானியாவிற்கான பதில் இலங்கை உயர்ஸ்தானிகராக பீ. எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் உயர்ஸ்தானி கராகக் கடமையாற்றிய கலாநிதி நிஹால் ஜயசிங்க ஓய்வு பெற்றதையடுத்து பிரதி உயர் ஸ்தானிகரான அம்ஸா பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் கொன்சியுலராகக் கடமையாற்றிய கே.பத்மநாதன் பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பத்மநாதனை பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக அரசாங்கம் நியமிதுள்ளதென்று சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈழhttp://www.…

    • 0 replies
    • 1.2k views
  3. சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்க தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்ப…

  4. பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்றுஇந்திய, பாக். சபாநாயகர்கள் கொழும்பு வருகை [ தினகரன் (சிறிலங்கா) ] - [ ஆசிரியர்: எம். எஸ். பாஹிம் பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள், பாராளுமன்ற செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இன்று முதல் 15 ஆம் திகதி வரை ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் நேற்று இலங்கையை வந்தடைந்ததாக பாராளுமன்ற உயரதிகாரி ஒருவர் கூறினார். மாநாட்டையொட்டி நேற்று பாராளுமன்ற செயலாளர்களின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது இன்…

  5. முதன்மையானது என்றால் என்ன? கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான். சோபாக்க எனும் பிக்குவிடம் ஒரு முறை 'முதன்மையானது என்றால் என்ன?' எனப் புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் 'எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும் என்றாராம். இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்து கொள்ளாதோர் இருந்தனரெனின் அவர்கள் தீவிர இனவாதிகளும் தற்சார்புவாதிகளும் மட்டும் தான். பண்டாரநா…

    • 0 replies
    • 1.9k views
  6. மகிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை: அதிர்ச்சித் தகவல்! [ பிரசுரித்த திகதி : 2011-02-11 06:00:01 PM GMT ] இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க் குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்கா வாழ் ஈழத் தமிழர்கள் மூவர் தொடுத்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதுடன், இந்த வழக்கை விசாரித்த நீதிபதியினால் மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல வழக்கறிஞர் புரூஸ் ஃபெயின் என்பவரின் மூலம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவினால் சித்திரவத…

  7. யாழ்ப்பாணத்திற்கு இனி ஞானோதயம் வருமா?? யாழ்ப்பாண மக்கள் இதைப் பார்த்து ஞானம் பெற்றால் சரி...... புத்த பெருமான் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம்......... இத்தனை காலத்தின் பின் யாழ்ப்பாணம் வருவதேனோ பித்தான உங்கள் தலையில் ஞானம் வரவோ புத்தரும் வந்துவிட்டார் உங்களைத் திருத்துவதற்கு? thx thx http://newjaffna.com

  8. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் ஆஜர்: பிடியாணை ரத்து _ வீரகேசரி நாளேடு 2/12/2011 9:59:20 AM பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த…

  9. காரைநகர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்வதற்கு அனுமதி கடந்த 20 வருடங்களின் பின்னர் காரைநகரில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த கிராமங்களில் பொதுமக்கள் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காரைநகர் தெற்கு ஜே/44, காரைநகர் தென்மேற்கு ஜே/45 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள பலகாடு, தோப்புக்காடு, மடத்துவளவு, சாந்திபுரம் ஆகிய கிராமங்களிலேயே மக்கள் மீளக்குடியமரப் பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்கள் மக்கள் மீள்குடியமர்வுக்காக அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமெனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் சென்று மீளக்குடியமர விரும்புவோர் தத்தமது கிராம சேவையாளர்…

  10. வெள்ளவத்தையில் தமிழர் தொடர்மாடியில் திடீர் தீ! சனி, 12 பெப்ரவரி 2011 01:50 தலைநகர் கொழும்பில் வெள்ளவத்தையில் உள்ள மயூரா பலஸ் தொடர்மாடியில் இன்று மாலை திடீரென தீ பற்றியது. இத்தொடர்மாடியில் உள்ள வீடுகளில் மூன்று எரிந்தன. வேறு ஆறு வீடுகளில் தீ மூண்டு இருந்தது. ஆயினும் அயலவர்கள் தீயை அணைத்தனர். தொடர்மாடியில் தங்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். எவருக்கும் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்பட்டு இருக்கவில்லை. தீயணைப்புப் படையினரும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்திருந்தனர். தீ எப்படி பற்றிக் கொண்டது? என்பது இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்கள்.

  11. அமெரிக்க முன்னாள் தூதுவர் ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் கூறியுள்ள கருத்துக்களில் புலப்படுவது என்ன? மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரான ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் (Teresita Schaffer) எச்சரிக்கை செய்திருக்கின்றார். தெற்காசிய கொள்கைகளுக்கான திட்டமிடல் மையமும், அனைத்துலக கற்கையும் (South Asia Programme at the Center for Strategic and International Studies) என்ற அமைப்பின் இயக்குனராக தற்பொழுது திகழும் இவர், தெற்காசியாவின், குறிப்பாக நேபாளம், இலங்கை உட்பட பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் பார்வை (US perspective on security in South A…

  12. Started by வீணா,

    Egyptian President Mubarak Resigns! http://www.bbc.co.uk/news/world-middle-east-12433045 http://edition.cnn.com/2011/WORLD/africa/02/11/egypt.protests/index.html?hpt=T1

    • 3 replies
    • 912 views
  13. தமது தலைவர் கோத்தபாய எனக் கூறி இராணுவக் கொமாண்டோ படையினர் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! 17 பேர் வைத்தியசாலையில்!! Friday, February 11, 2011, 16:36 தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று (10) நடைபெற்ற இசை நிகழச்சியின் போது, விசேட அதிரடிப்படையினருக்கும், இராணுவ கொமாண்டோ படையிருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் இவர் களில் 3 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிவில் உடையில் இருந்த கொமாண்டோ சிப்பாய்க்கும், சிவில் உடையில் இருந்து அதிரடிப்படை சிப்பாய்க்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வெடித்துள்ளது. இந்த …

  14. யாழில் மீண்டும் பௌத்த தர்மப் பாடசாலைகள்! வெள்ளி, 11 பெப்ரவரி 2011 21:23 யாழ். மாவட்ட மாணவர்களுக்கு பௌத்த தர்மத்தை போதிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வலிகாமத்தில் நான்கு இடங்களில் பௌத்த தர்ம பாடசாலைகள் அமைக்கப்பட உள்ளன. மானிப்பாய், கைதடி, அச்சுவேலி, புத்தூர் ஆகிய இடங்களில் இப்பாடசாலைகள் நிறுவப்பட இருக்கின்றன. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஊடாக அரசினால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ். நாக விகாரையில் இந்நடவடிக்கைகள் சம்பந்தமான மந்திராலோசனைக் கூட்டம் ஒன்று பௌத்த காங்கிரஸ் தலைவர் எகத் சுமதிபால தலைமையில் இடம்பெற்று உள்ளது. இத்தகவல்களை யாழ். மாவட்ட தமிழ் - பௌத்த சங்க தலைவர் அ.ரவிக்குமார் வழங்கினார். tamilcnn

  15. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 11 பெப்ரவரி 2011 Bookmark and Share 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்…

  16. சுன்னாகத்தில் வெள்ளை வான் பீதி: மக்கள் பதற்றம் வீரகேசரி இணையம் 2/11/2011 3:36:48 PM சுன்னாகத்தில் மீண்டும் வெள்ளை வான் பீதி ஆரம்பமாகியுள்ளதால் மக்கள் பதற்ற நிலையில் காணப்படுகின்றனர். நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள ஒழுங்கையில் வெள்ளை வானில் சந்த சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி கதவுகளை திறக்கும் படி சத்தமிட்டுள்ளார்கள். சாரம் மற்று காற்சட்டை அணிந்த ஐந்து நபர்கள் நடமாடியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இதனால் பதற்றமடைந்த பிரதேச மக்கள் தமது வீடுகளின் கதவுகளை திறக்காது இருந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்த போதும், பொலிஸார் குறிப்பிட்ட இடத்துக்கு வரவில்லை என ம…

  17. இலங்கைக் கடல் படையின் பிடியில் தென்கொரிய கப்பல்! வெள்ளி, 11 பெப்ரவரி 2011 22:06 தென்கொரிய நாட்டு வர்த்தக கப்பல் ஒன்றை இலங்கைக் கடல் படையினர் இடைமறித்துப் பிடித்து தடுத்து வைத்துள்ளார்கள். கப்பலின் இரண்டாவது பொறியியலாளரான தென்கொரியர் ஒருவர் நேற்று தவறி கடலுக்குள் விழுந்து இருக்கின்றார். ஆனால் இவரை காப்பாற்றாமல் நழுவப் பார்த்து இருக்கின்றது இக்கப்பல். எனினும் இவர் வேறு ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேற்படி தென்கொரிய கப்பல் கோவாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இருப்பினும் இலங்கைக் கடல் படையினர் இக்கப்பலை இடைமறித்துப் பிடித்து தடுத்து வைத்திருக்கின்றார்கள். tamilcnn

  18. யாழ் நகரில் கவனிக்காமல் விட்ட சிலவற்றின் கதறல்கள்.....வேதனைப் படாமல் கட்டாயம் பாருங்கோ....

  19. ஒரு இலட்சம் சிங்கள குடும்பங்களை வவுனியாவிலும், பொலநறுவையிலும் குடியேற்றத் திட்டம் தென்னிலங்கையைச் சேர்ந்த ஓரு இலட்சம் சிங்களக் குடும்பங்கள் வவுனியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் குடியேற்றம் செய்யப்பட இருப்பதாக, தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. மஹாவலி வலயப் பணிப்பாளர் டி.எம்.சி.திஸாநாயக்கவை ஆதாரம்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், மஹாவலித் திட்டத்தின் கீழ் சிங்கள மக்களைக் குடியேற்ற காணிகள் அற்ற நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் பறிபோய் அவை சிங்கள மயமாக இருப்பதுடன், தமிழ் மக்களின் தாயகத்தை சிங்கள ம…

  20. வைகோவின் மனு ஏற்பு தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பு சரிதான் என மத்திய தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அத்துடன் தன்னையும் விடுதலைப்புலிகள் தரப்பாக வாதாட அனுமதிக்குமாறு இம் மனுவில் வைகோ கேட்டுக் கொண்டிருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைகோ வழக்குக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. http://www.valampurii.com/online/v…

  21. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், தொடர் மழை ஆகியவற்றின் காரணமாக கடந்த மூன்று தினங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நேற்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருந்த போதிலும் 53 பாடசாலைகள் இயங்கவில்லை என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள 1020 பாடசாலைகளுள் 967 பாடசாலைகளில் மட்டுமே நேற்று கல்வி நடவடிக்கை இடம்பெற்றது. நலன்புரி நிலையங்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கும் படி கோரியிருந்த போதிலும், 24 பாடசாலைகளில் இன்னும் மக்கள் தங்க வைக்கப்பட்டு நலன்புரி நிலையங்களாகவே செயற்பட்டு வருன்றன. திருகோணமலை மாவட்டத்தில் 21 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்தில் ஒ…

  22. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 11, 2011 நயினாதீவு விகாரையில் 3,157,000 ரூபா செலவில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளதாக வடபிராந்திய தளபதி ரியர் அட்மிரல் சுசித வீரசேகர தெரிவித்துள்ளார். தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத் தலமாக நயினாதீவு விகாரை மற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்ட றியர் அட்மிரல் சுசித வீரசேகர, நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் கடற்படை இறங்கியுள்ளது. கடற்படையின் உதவியுடன் தேசிய கட்டட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் இந்த விகாரை விரிவாக்கப்படவுள்ளது என்றார். அத்துடன் விகாரையின் முகப்பும் அதற்கான நடைபாதையும், இறங்குதுறை மற்றும் அதற்காக நடைபாதை ஆகியனவும் புத…

  23. இன்று தென் சூடான், நாளை தமிழீழ விடுதலை February 11, 2011 இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது. இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடாத்திக்கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள். இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியந…

  24. யாழ்மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் உள்ள வீதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெள்ளம் ஓடும் மதகு தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதன் காணொளி thx www.newjaffna.com

  25. சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதரவளிக்கத் தயார் - ஜே.வி.பி வெள்ளிக்கிழமை, 11 பிப்ரவரி 2011 01:01 நாடு பிரிவுபடாத வகையிலான சமஷ்டி ஆட்சி முறைக்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று திடீர் அறிவிப்புச் செய்துள்ளது. ஜே.வி.பியின் ஆறாவது வருடாந்த மகாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றபோது கட்சியின் தலைவரான சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சமஷ்டி என்பதற்கு இந்த நாட்டில் இரண்டு கருத்துகள் உள்ளன. பிரிவினையுடனான சமஷ்டி, ஒன்றுபட்ட சமஷ்டி என்பனவையே அவை. இவற்றில் இரண்டாவது முறையை நாம் ஆதரிப்போம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சிமுறை ஒன்று உருவாக்கப்படுமாயின் அதனை நாம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.