ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
எயிட்ஸ் தமிழரை, வன்னியை , யாழ்மண்ணை அழிக்குமா….? எங்கள் இன்றைய கனவு போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மீளவும் அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் வாழ ஒரு வழி. இதைத்தான் மே2009இன் பின்னர் அதிகம் சிந்திக்கின்றோம். எம்மை வந்தடைகிற செய்திகள் தொடர்புகள் யாவும் வறுமை நசுக்கும் எமது மக்களின் துயரம் நிறைந்த கதைகளையே கொண்டு வருகிறது. ஆயினும் அண்மையில் சில பரபரப்பான செய்திகள் எம்மை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒருதரம் எரிச்சல்பட அல்லது இப்படியுமா என யோசிக்கவும் வைத்தது. போர் நடந்து முடிந்த ஊர்களில் விபச்சாரம் , பதின்மவயதினரின் பாலியல் நடத்தைப் பிறள்வு , மாணவர்கள் போதைப்போருள் பாவனை, 76பேருடன் பாலியல் உறவுகொண்ட 17வயதுப்பள்ளி மாணவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய வெளிவிவகார செயலர் நிருபாமா ராவ் இலங்கை செல்வது ஓர் கந்துடைப்பு நாடகம் என இந்திய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் இப்போ தேர்தல் நெருங்குகின்ற வேளை மீனவர் விடயத்தில் அக்கரை காட்டுமால் போல் செயற்படுவது தேர்தலிற்கான கந்துடைப்பு நாடகம் என கூரியுள்ளார் கட்சியின் செயலர் காட்காரி. இதே வேளை பாரதிய ஜனதா கட்சி மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பும் எனவும் கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E…
-
- 2 replies
- 510 views
-
-
நிரந்தர பிரதி ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரமிங்காம் என்னும் இடத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் தன்;மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சவேந்திர சில்வா தேவாலயத்திற்கு செல்லும்போது, சிலர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சவேந்திர சில்வா கூட்டத்தில் உரையாற்றியபோது, யுத்தத்தின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழ் மக்களை இராணுவம் கொன்றதாக கூறப்படுவதையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். புலிகள் தான் தமது பாதுகாப்புக்காக அப்பாவி தமிழ் மக்களை கவசமாக பயன்படுத்தினரெனவும் அவர் கூறினார். அரசாங்கம், அப்பாவித் தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றியது. தமிழர்க…
-
- 3 replies
- 584 views
-
-
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது 2011-02-03 23:04:04 மதவாச்சிக்கும் அநுராதபுரத்துக்கும் இடையே றம்பவ என்ற இடத்தில் உள்ள கனந்தலாவ குளத்தின் அணைக்கட்டு நேற்றுப் பிற்பகல் உடைந்தது. இதனால் குளத்து நீர் ஏ9 வீதியைக் குறுக்கறுத்துப்பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து நேற்று பிற்பகலில் இருந்து முற்றாகத் தடைப்பட்டு கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த அணைக்கட்டு நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் உடைந்தது. இதனால் ஏ9 வீதியை மேவி சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளநீர் பாய்ந்தது. வெள்ளத்தில் சில வாகனங்கள் சிக்கித் தடம்புரண்டன. எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து இப்பகுதி ஊடான போக்குவரத்து நேற்றுப் பிற்பகலில…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியாவே எமது பாதுகாவலன்; அதை சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் நாம் பார்க்கவேண்டும்: பீலிக்ஸ் வீரகேசரி இணையம் 2/1/2011 8:21:59 AM புலிகள் பலமடைவதற்கு 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜூலை சம்பவமே பிரதான காரணமாகும். கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் நாங்கள் வருத்தம் தெரிவித்தாக வேண்டும். மேலும், இந்தியாவை நாம் எமது சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று சமூக சேவை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அமைச் சர் பீலி…
-
- 3 replies
- 831 views
-
-
செவ்வாய், 01 பெப்ரவரி 2011 10:29 .விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் பாணியில் புலனாய்வு செய்து செய்திகளைப் பிரசுரிக்கின்றமையில் புதிய பரிணாமத்தைக் கண்டு இருக்கின்றது தமிழ் சி.என்.என். யாழ். மாவட்டத்தில் அரச சேவையில் நிலவி வருகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக அரச அதிபர் இமேல்டா சுகுமாரால் அரச உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்று எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. 31/10/2010 வரை யாழ். மாவட்டத்தில் அரச சேவையில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை 5,074 என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரச உயர் அதிகாரிகள் 1304 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் வெறும் 660 பேரும், முகாமைத்துவ உதவியாளர்கள் 4941 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் வெறும…
-
- 7 replies
- 1.4k views
-
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் சிறையில் 13 கைதிகள் விடுதலை... வெள்ளிக்கிழமை, 04 பிப்ரவரி 2011 06:32 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த 13பேர் (10ஆண்கள் 3பெண்கள்) சற்றுமுன்பு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின சிறப்பு நிகழ்வின் போதே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்விலே சிறைச்சாலை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் கைதிகள் கலந்துகொண்டிருந்தனர். sangamam
-
- 0 replies
- 324 views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடிய 4,160 பேர் கைது: மேலும் 45,000 பேரைக் கைது செய்ய நடவடிக்கை வெள்ளிக்கிழமை, 04 பிப்ரவரி 2011 06:39 இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 4,160 பேர் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவ தரப்பு ஊடகப் பேச்சாளரான மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பத்துப் பேர் அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனையோர் சாதாரண படை வீரர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 45,000 பேரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 347 views
-
-
அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு:- 04 பெப்ரவரி 2011 அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன. தம்மிக சமித் குணவர்தன என்ற மாணவர் அவரது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, நேற்றிரவு (03) 11 மணியளவில் சினிமோதர பிரதேசத்தில் வைத்து கந்தர காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் இரண்டு மாணவர்கள் வெள்ளை வானில் சென்ற மாத்தறை காவற்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டு, இரண்டு மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறான அநீதியான முறையில் மாணவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு எதிராக ருஹூணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நேற்று எதிர்ப்பு பேரணி…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை! - எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உறுதி தமிழக சட்டமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் தமிழக மீனவர் பிரச்சினையும் முக்கியமாக பிரதிபலிக்கும் என இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இல்லத்துக்கு சென்ற மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக மீனவர்கள் பிரச்சினை உட்பட ஐந்து பிரச்சினைகள் மீது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலா ளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஊடகவியலாளர்களிடம்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் கடந்த கால அவலங்களுக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பு! முன்னாள் எம்.பி தம்பிமுத்துவின் புதல்வர் தெரிவிப்பு வியாழன், 03 பெப்ரவரி 2011 01:05 .தமிழ் மக்களின் கடந்த கால பேரவலங்களுக்கு அன்றைய தமிழ் தலைமைகளே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் எம்.பி சாம் தம்பிமுத்துவின் புதல்வரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர்களில் ஒருவருமான அருண் தம்பிமுத்து. மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் இடம்பெற்று வருகின்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து நிரந்தர பாதுகாப்பை பெறுகின்றமைக்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இவரின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதி…
-
- 0 replies
- 990 views
-
-
தமிழர்களே, பிப்ரவரி 4 (நாளை) இலங்கையில் சுதந்திர தினம்... தமிழர்களுக்கு....?...இன்றைய தமிழர்களின் நிலை முள்வேலி முகாமில்... போர் முடிந்து இரண்டு வருடம் நிறைவுபெற இருக்கிறது. அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெரும் கேள்விகுறியோடு அவர்கள் வாழ்வு கடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கை சென்று வந்த வழக்குரைஞர் கயல் (எ) அங்கயற்கன்னி கூறியது. மீதமுள்ள மக்களை நாம் காப்பாற்றவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடத்தில் தமிழினம் இலங்கையிலிருந்து அழிக்கப்பட்டிருக்கும். இதே கருத்தைதான் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்களும் கூறியது...என்ன செய்யபோகிறோம் நாம்...? வரும் வெள்ளி இலங்கையில் சுதந்திர தினம் அன…
-
- 0 replies
- 853 views
-
-
சீமான் ‘உருவாக்கும்’ புதிய வரலாறு எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள். - சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010,சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான். எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தந்தை பெரியார் அவர்களோ 1973 ஆம் ஆண்டு இறுதியில் இறந்து போய் விட்டார். தான் முதல்வர் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய்விட்ட பெரியாரைச் சக்கர நாற்காலியில் வைத்து எம்.ஜி.ஆர் எப்படி மேடைக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்பது நமக்குப் புரிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். தார்மீகப் பொறுப்பெடுத்தல் சாத்தியப்படுவதற்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் பங்கெடுத்த சர்வதேசச் சக்திகள் முதலில் தங்களது தார்மீகப் பொறுப்பை ஒப்புக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வெளியிடப்படும் - - கூட்டமைப்புடனான சந்திப்பில் அரசு உறுதி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-04 07:08:22| யாழ்ப்பாணம்] சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வவுனியாவில் வெளியிடப்படும் எனவும் பின்னர் அந்தத் தரவுகள் ஏனைய பிரதேசங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசாங்…
-
- 0 replies
- 864 views
-
-
by Subramaniam Masilamany Suffering produces endurance Endurance produces stamina Stamina produces Courage Courage produces Character Character produces Faith Faith produces Hope Hope produces believe Believe produces Excellence. (February 03, Colombo, Sri Lanka Guardian) We understand that Mahinda rajapaksa has cancer. We don’t know. When there is no other way to find justice for his atrocities an incurable disease is the right punishment. He may cure him self but that fear of cancer remerging is sufficient punishment for him. We wondered how to find justice for this national pestilence and his disease; we didn’t have any difficulty to find him gu…
-
- 1 reply
- 895 views
-
-
Let’s not watch the largest detention camps become disappearance camps. Join in the large scale signature campaign on 4th February 2011 from 3pm till 7pm near Oxford Circus tube station. Urging Sri Lankan to release the names and details of detainees. Contact – BTF 07404759029 Sri Lankan High Commission has invited the Sri Lankan community to the embassy at Hyde Park Gardens tomorrow 4t of February for a reception to celebrating their independence. We will assemble outside the Embassy at 11am on Friday 4/2/11, to condemn the Sri Lankans celebrating while denying the Tamils their right to independence. பெப்ரவரி 4 -சும்மா கிடைத்த சுதந்திரம் …
-
- 0 replies
- 642 views
-
-
இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கதிர்காமத்தில் நடைபெறுகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவினால் நடத்தப்பட்ட கம் உதாவ (கிராம எழுச்சி) நிகழ்வு இடம்பெற்ற கந்துசிறிந்துபுர என்ற இடத்திலேயே இம்முறை சுதந்திரதின விழா நடைபெறுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கதிர்காமம், சூரன்கோட்டை ரஜமஹா விகாரையில் பிரித் ஓதும் வைபவம் இடம்பெறவுள்ள நிலையில் காலை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த இலங்கைத் திருநாடு, பின்னர் சுமார் மூன்று தசாப்த காலங்களாக பயங்கரவா…
-
- 1 reply
- 647 views
-
-
குளம் ஒன்று இருந்தது. போய்ப்பார்ப்போம் என்று போனேன். தண்ணீர் இடுப்புக்குக் கீழேதான் இருந்தது. அப்படியே குளக்கட்டுக்கு மேலே ஏறிவிட்டேன். ஒரு சத்தம் கூட இல்லை. எல்லா இடமும் பார்த்தேன். குளக்கட்டுக்கு மேலே பழைய கால்த் தடங்கள் இருந்தது. அப்படியே அந்த வழியால் போய்க்கொண்டிருந்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. உடனே காட்டுக்குள் இறங்கினேன்; பாதைபோல் இருந்தது. அந்தவழியால் அவதானித்துக் கொண்டு போனேன். பழைய லைனுகள் இருந்தது. ஒரு பெரிய அருவி இருந்தது. அதைக் கடந்துதான் போகவேண்டும். மழை பெய்ததால் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு தடியைக் கையிலெடுத்து ஊன்றி ஊன்றிப் போனேன். ஒரு மாதிரி கரைக்குப் போய்விட்டேன். அது ஒரு பெரிய பாதை. ஆந்தப் பாதையால் போக கிரவ…
-
- 0 replies
- 758 views
-
-
யாழ் மணிக்கூட்டுக் கோபுரம் கடந்த சில வாரங்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகி்ன்றது. இது தொடர்பாக எவரும் இதுவரை அக்கறை செலுத்தாத நிலையில் இருப்பது மணிக்கூட்டுக் கோபுரத்தில் மணி பார்க்கும் மனிதர்களது மனங்களை நோகடித்துள்ளது. thx http://www.newjaffna.com
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்ஸ் தப்ப முயன்ற ஈரான் பிரஜை இலங்கையில் கைது [ Thurs, Feb 03, 2011, 04:50 pm ] கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிரான்சிற்குச் செல்ல முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் இன்று காலை 9.50 அளவில் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். thaalam.com
-
- 0 replies
- 574 views
-
-
60,000 இராணுவப் படை வீரர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. * Thursday, February 3, 2011, 18:58 ஓய்வூதியம் வழங்காது 60,000 இராணுவப் படை வீரர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மரக்கறி விற்பனை செய்தல், கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலைமை அரசாங்கத்தினால் படையினருக்கு ஏற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு …
-
- 0 replies
- 819 views
-
-
கொழும்பு டொக்யார்டில் வெடிப்பு சம்பவம்: 10 பேர் காயம் _ வீரகேசரி இணையம் 2/3/2011 2:04:51 PM Share கொழும்பு டொக்யார்ட் பகுதில் சற்றுமுன்னர் இடம்பெற்ற தவறுதலான வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார். __
-
- 1 reply
- 940 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 05-02-2011 சனிக்கிழமை மின்சார விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. இந்த தகவலை இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக புன்னாலைக்கட்டுவான், அச்செழு, புத்தூர், ஆவரங்கால், இடைக்காடு, வடமராட்சி பிரதேசம் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. உயரழுத்த மின்மார்க்கங்களின் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார விநியோக தடை காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழிலிருந்து வெட்டிப்பயல் thx http://www.newjaffna.com
-
- 0 replies
- 522 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற தலைப்பில் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி இதற்கு தலைமையேற்கிறார். தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார். இந்நிகழ்வானது நம் மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. http://www.meenagam.org/ & http://meenakam.com/
-
- 1 reply
- 754 views
-