ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
யாழில் குளுக்கோஸ் ஏற்றுமருந்தில் பூஞ்சணம் டிசம்பர் 31ம் திகதி காலாவதியகும் ஒக்சின் திணிப்பு திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 12:40 யாழில் உள்ள பிரபல வைத்தியசாலையில் குளுக்கோஸ் ஏற்று மருந்தில்ந்துகள் பூஞ்சணம் காணப்பட்டதை தொடர்நுது அத்தொகுதி மருந்துகள் யாவும் பாவனையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது . இது போல முன்பு வடக்கு கிழக்கில் டெங்குகாய்சல் தீவிரமாக காணப்பட்ட காலமாக சுமார் ஒரு வருடங்களின் முன் அண்டை நாட்டு தயாரிப்பான காட்மன் ஏற்று மருந்திலும் கரும் பூங்சணம் இனம்கானப்பட்டது. எச்வன் என்வன் வக்சின் இவ்வருட டிசம்பர் 31ம் திகதி காலாவதியாகின்றது இதை கட்டாயமாக திணிக்கின்ற சுற்றுநிருபம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது இந்த எச்வன் எனவன் வக்சின் பக்கவிளைவுக…
-
- 1 reply
- 842 views
-
-
தேசிய தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடிதம் - விக்கிலீக்ஸ் திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 03:21 வெளிவிவகார அமைச்சு, ஒஸ்லோ 16 ஓகஸ்ட் 2005 திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன், தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள். அன்புடன் பிரபாகரனுக்கு, 'அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது. விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன…
-
- 2 replies
- 857 views
-
-
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் கலந்து கொள்ளாத அதேநேரம் இங்கு சிங்களத்திலேயே தேசிய கீதமும் பாடப்பட்டது. 2004 ஆம் ஆண்டு கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்ட நாளை தேசிய பாதுகாப்பு தினமாக நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது. முதன் முறையாக நேற்று யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் அரச தரப்பு எம்.பிக்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கூட்டமைப்பு…
-
- 2 replies
- 1.1k views
-
-
அண்மையில் இலங்கையின் தேசியகீதத்தை தமிழில் பாடுவது தொடர்பாக விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. ஆனால் இது என்னவோ அந்நாட்டுத் தேசிய கீதத்தின் மீது முதற்தடவையாக ஏற்பட்ட பிரச்சனை அல்ல. தற்போது பாடப்பெறும் தேசிய கீதமும் சுதந்திர இலங்கையில் முதலாவதாகப் பாடப்பெற்ற தேசியகீதம் அல்ல. இலங்கைத் தேசியகீதத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் அந்த உண்மை புரிவதுடன் இது தொடர்பான குழப்பங்களுக்கான தீர்வொன்றினை நோக்கிச் சிந்திக்கவும் முயலும் வகையில் இச் செய்திப்பார்வை அமைகிறது. இலங்கை தேசியகீதத்தின் தோற்றமும் வரலாறும் ஆங்கிலேயரின் 133 ஆண்டு ஆட்சிக்குப்பின் 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் பெற்ற போது இலங்கையின் இறையாண்மையை வலியுறுத்துமுகமாக தேசியகொடி மற்றும் தேசியகீதத்தையும் உருவாக்க…
-
- 1 reply
- 634 views
-
-
திங்கட்கிழமை, டிசம்பர் 27, 2010 இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது தற்கால அரசியல் நிலைமைகள் குறித்தும், இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. Add new comment ஈழ நாதம்http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%…
-
- 0 replies
- 627 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு அதன் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு அதற்கான வெற்றிவிழாவையும்கொண்டாடிய பின்னர், சர்வதேசப் பங்கரவாதமும், அதனை வைத்துத் தங்கள் சொந்த வளர்ச்சியில் மேலும் வளர்த்துக்கொள்ளவும், தங்கள் அரசியல் இருக்கைகளையும், இருப்புக்களையும் தக்க வைத்துக்கொள்ளுவதற்குமான செயற்திட்டங்களைச் சர்;வதேச அரசியற்பட்சிகளும், அரச பயங்கரவாதங்களும் செயற்பட்டுக்கொண்டிருப்பதானது, சர்வதேசத் தமிழினத்தை மேலும் விசனத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருப்பது ஈழத்திழர்களின் இன்றைய துர்ப்பாக்கிய நிலையே. இன்று பயங்கரவாதச் செயல்கள் சர்வதேசம் முழுவதும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில், தங்…
-
- 0 replies
- 630 views
-
-
பலாலி வானூர்தி நிலையத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் முயற்சியில் வானூர்தி சேவைகள் அமைச்சு திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 12:20 பலாலி வானூர்தி நிலையத்தை தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு சிறிலங்காவின் வானூர்தி சேவைகள் அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சிறிலங்காவின் வானூர்தி சேவைகள் அமைச்சர் பிரியங்கார ஜெயரட்ண தகவல் வெளியிடுகையில், “ பலாலி வானூர்தி நிலையத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளும் வானூர்தி சேவைகள் அமைச்சின் அதிகாரிகளும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். பலாலி வானூர்தி நிலையத்தை எமது அமைச்சே நிர்வகிக்கவுள்ளது. அதேவேளை அங்கு சிறிலங்கா விமானப்படைக்குத…
-
- 0 replies
- 378 views
-
-
இந்தியாவின் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்றான அலைக்கற்றை மோசடியின் பிரதான சூத்திரதாரி முத்துவேல் கருணாநிதியும் அவரின் குடும்ப அரசியல் வியாபாரிகளும் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வியாபார அரசியல் அமைப்பின் தலைவருமான மு.கருணாநிதி வன்னிப் படுகொலைகளின் போது இந்திய மத்திய அரசு மற்றும் இலங்கை அரசுகளுடனான வியாபார அரசியல் ஒப்பந்தங்களுக்காக தமிழ் நாட்டில் அரசியல் எழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நாடகமாடியவர். 39 பில்லியன் டாலர் பெறுமானம் மிக்க அதிர்ச்சி தரும் இந்த ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் பல உள்ளூர் பிரமுகர்களிலிருந்து வெளிநாட்டுத் தலைகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்திய அரசியல் வியாபரமும் …
-
- 3 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது குற்றம் என்றால் அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வோம்… – பெரியார் திக தலைவர் என்.எஸ்.ஏ.வில் விடுதலையான புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பனின் வாக்குமூலம்! இது. ‘இவர் இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்காகவும் சொற்பொழிவு செய்து, பொதுமக்களின் ஆதரவைப் பெறும் திறம்கொண்டவர். தனி ஈழம் தேவை என்ற எண்ணம்கொண்ட பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்.’ - இது ஒருவரைப்பற்றிய அறிமுகம் அல்ல. புதுச்சேரி போலீஸாரால் கூறப்படும் குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில்தான் பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப…
-
- 0 replies
- 585 views
-
-
இன்று, எமது நாட்டில் எமது மொழி, கலாச்சாரத்திற்கு நெருக்கடியான ஒரு சூழல் நிலவுவதால், அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே வேளை, கனடாவில் தமிழ் எமது அடுத்த தலைமுறைக்கு தொடருமா என்று ஐயப்பாடும் உண்டு. புலம் பெயர்ந்து வந்த முதல் தலைமுறையினராகிய நாமாவது தமிழை சுத்தமாக பேசுவதன் மூலம் கனடாவில் தமிழை நிலை பெறச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கச் செய்யலாம் அல்லவா?. ஆகவே, 2011 புது வருடத்தில், கனடா வாழ் தமிழர் அனைவரும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வோம்: இன்று தொடக்கம், 1. சக தமிழருடன் தமிழில் மட்டும் பேசுவோம்; 2. பேசும் தமிழை, அவசியமற்ற ஆங்கிலச் சொற்கள் தவிர்த்து, சுத்தமாகப் பேசுவோம். இந்தப்…
-
- 0 replies
- 620 views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் தலைமை அதிகாரி அடுத்த வாரம் இலங்கை வருகிறார் வீரகேசரி நாளேடு 12/27/2010 9:00:52 AM இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான ஐ.நா. சபையின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் இன்னும் முடிவாகவில்லை. எனினும், குறித்த நிபுணர் குழுவின் தலைமையதிகாரியான ரிச்சட் பென்னட் அடுத்த வாரத்தில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று "சண்டே டைம்ஸ்'செய்தித் தாள் தெரிவித்துள்ளது. போர்க் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்தே பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை நியமித்தார். இந்தக் குழு கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தமது பணிகளை …
-
- 0 replies
- 681 views
-
-
அன்பார்ந்த இளைஞர்களே! உங்கள் சிந்தனை எங்கே? வீர இளைஞர்களுக்கு! இவ்வாறுதான் சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மீகப் பிரசாரத்தை தொடங்கினார்.எழுமின்! விழிமின்! எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின்! என்று அவர் அறிவுரை பகர்ந்தார்.இந்த உலகை நல்வழிப்படுத்த முற்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது இலக்கை அடைய இளைஞர்களைத் தெரிவு செய்கின்றார். இளைஞர்கள் மெய்யறிவும் ஆன்மீகத் தெளிவும் சமூக சிந்தனையும் கொண்டவர்களாக இருந்தால் அதுவே இந்த நாட்டை - உலகை சொர்க்க லோகமாக மாற்ற முடியும் எனக் கருதினார். அவரின் அறிவுரைகள் அத்தனையும் இளைஞர்களை நோக்கிய அறைகூவலாக அமைந்திருந்தன.அந்த மகான் எங்கள் மண்ணுக்கும் வருகை தந்தார். அவரின் திருவடி பட்ட இந்த மண் புனித மானது. அந்தப் புனிதத்தைப் பேணுவதும் அதை அறுத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
Sunday, December 26th, 2010 | Posted by admin வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களுக்கு புலி முத்திரை குத்தி கைது செய்ய அரசு திட்டம் வடக்கு மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள்மீது போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு அரசு முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும், வர்த்தகப் பிரமுகர்களும் இலங…
-
- 0 replies
- 956 views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010 போர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் எவ்வாறு பொருட்களின் விலை இருந்ததோ அதே போலவே இப்போ நாடு பூராகவும் அத்தியவசியப்பொருட்களின் விலை இருப்பதாக சிங்கள மக்கள் சினம் கொண்டுவருகின்றனர். அரசாங்கம் போர் முடிந்த பின்னர் எல்லாம் சுபம் என்பது போல கூறியது ஆனால் சாதாரண சிங்கள மக்கள் வாழ்வோ நாள்தோறும் இளவுதான். அரிசி கிலோ 120 ரூபா மரக்கறி கிலோ 160 ரூபா வெங்காயம் கிலோ 260 ரூபா மீன் கிலோ 1000 ரூபா கோழி கிலோ 400 ரூபா தேங்காய் ஒன்று 75 ரூபா வாழைப்பழம் கிலோ 120 ரூபா நாட்டில் முதன் முறையாக தேங்காய், முட்டை உட்பட பல பொருட்கள் பெருமளவு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. இதனைவிட தொற்று நோய்கள் ஒ…
-
- 3 replies
- 652 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசுடன் பேசித் தீர்வு காண்பது தொடர் பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குறுதிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. யாழ்ப்பாணம் வந்திருந்த அவர் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய விசேட பேட்டியில் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் எழுத்து மூலக் கேள்விகள் வழங் கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். அது எந்த எல்லைவரை என்று கூற முடியுமா? வடக்குகிழக்கில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எதிர்ப்பதில்லை என்ற கொள் கையை நீங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறீர் கள். இதன் பி…
-
- 0 replies
- 532 views
-
-
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பயணிகளை மன்னார் அரச பேருந்து சேவையின் நடத்துனரும், சாரதியும் இன்று அதிகாலை முதல் நடு வீதியில் நிற்க வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்க கொண்டு வந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பயணிகள் கொழும்பு, அனுராதபுரம், கெக்கராவ ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டு தனியார் பேருந்து மூலம் நேற்று இரவு பத்து மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தனர். பின் இவர்கள் பேசாலை மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களுக்குச் செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்தனர். இதன் போத…
-
- 0 replies
- 859 views
-
-
இலங்கை அரசு மீது இந்தியக் கூட்டரசு பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தீர்மானம் காஞ்சிவரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரில் 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு எழுச்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றதமிழர் இறையாண்மை மாநாட்டில் 30 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. 1.வீரவணக்கம் அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும், முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938 இலிருந்து இதுவரையிலும் தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங்கிலும் அரசியல், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கு…
-
- 2 replies
- 793 views
-
-
சீமான் உரை – தந்தைப்பெரியார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, செல்வபாரதி,கோட்டை குமார் , இயக்குநர் வேலு பிரபாகரன்,வழக்கறிஞர் கயல்விழி, ரேவதி நாகராசன்,பேராசிரியர் ராமசாமி,தலைமை நிலைய செயலாளர் தடா,ராசா,வழக்கறிஞர் ராசீவ் காந்தி,அன்புத்தென்னரசு,அதியமான்,அமுதாநம்பி,தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 5 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்திய உளவு நிறுவனமான ’றோ’ ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாக பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி அண்மையில் எழுதியுள்ள நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் இரகசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம், RAW ஆற்றியதாக «The Tiger Vanquished – LTTE’s story» என்ற இவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1998 – 99 ம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமே, சிறிலங்கா விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிவை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாத…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்துசமுத்திரப் பிராந்திய கடற்படையை உருவாக்கத் திட்டம் டிச 25, 2010 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இணைந்து இந்துசமுத்திரப் பிராந்திய கடற்படைப் பிரிவை உருவாக்கவேண்டும் எனவும், கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸாரா சமரசிங்கா நேற்று (24) தெரிவித்துள்ளார். இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதையும், மக்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும். எனவே இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இணைந்து ஒரு இணைந்த கடற்படைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். sangathie
-
- 1 reply
- 809 views
-
-
ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா? – இதயச்சந்திரன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ. நா. நிபுணர் குழுவிடம் போதிய சாட்சியங்கள் இருப்பதாக தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கவலைப்படுகிறார். அமைச்சரின் கூற்று ஊகத்தின் அடிப்படையில் எழுந்தாலும், மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்கிற முதுமொழியே இதற்குப் பொருத்தமாகவிருக்கும். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினர், பான் கீ மூனின் ஐ.நா. நிபுணர் குழுவைச் சந்திப்பதன் ஊடாக, எமது இராணுவத்தை சிக்க வைக்கக் கூடாதெனவும் கழுத்தை வெட்ட வருபவனிடம் வாளை யாராவது தீட்டிக் கொடுப்பார்க…
-
- 2 replies
- 727 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு நாள்) நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமே. குறிப்பாக ஒட்டுகுழு அமைச்சர் துரோகி கருணாவே தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு ம…
-
- 4 replies
- 594 views
-
-
Dec 25, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா தேசியகீதம் - வேம்படியில் இரகசிய பயிற்சி சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்வு மிகவும் இரகசியமான முறையில் நேற்று முன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளை வரவழைக்குமாறு அதிபர் பணிக்கப்பட்டுள்ளார். இவ்வாறே யாழ்.மாவட்டத்தில் உள்ள எல்லாப் பாடசாலைகளிலும் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளனவாம். இதற்கான தலைமைப் பொறுப்பை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார். pathivu
-
- 5 replies
- 715 views
-
-
ஆபாச வீடியோக்கலில் தோன்றியுள்ள சிறீலங்கா இளைஞர், யுவதிகள் 110 பேரின் புகைப்படங்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா மகளிர் காவல்துறை மற்றும் சிறுவர் பிரிவு தெரிவிக்கின்றது. சுமார் 75 ஆபாச வீடியோக்கலில் தோன்றியுள்ள இளைஞர் யுவதிகளின் புகைப்படங்கள் நாட்டில் பல பகுதி பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக அந்தப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதன்படி அடுத்த வாரம் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா மகளிர் காவல்துறை மற்றும் சிறுவர் பிரிவு தெரிவிக்கின்றது. காலி, மாத்தறை, அப்பாறை, இரத்தினபுரி, அநுராதபுரம், நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய காவல் நிலையங்களுக்கு இந்தப் நிழற்படங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ். பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் கூல் நியமனம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையி;ல் இன்றைய தினம் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. http://inioru.com/?p=18789
-
- 26 replies
- 3.3k views
-