ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
தொழிற்நுட்பத்தாக்குதலால் முடங்கிய புலிகளின் குரல் வானொலி மீண்டும் இணையத்தில்! [Friday, 2010-12-24 06:56:27] தமிழ்மக்கள் மீது இனப்படுகொலையினை நடத்தி தமிழ்மக்களின் அனைத்து நிர்வாக அலகுகளையும் அழித்தசிறீலங்கா அரசு தாயத்தில் தமிழ்மக்களை துன்பத்திற்கு ஆழ்த்திக்கொண்டிருக்கும் வேளைகளில் பன்னாட்டு தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் செய்தியினை சொல்லிக்கொண்டிருக்கும் ஊடகங்களாக இணையத்தள தமிழ் ஊடகங்கள் காணப்படுகின்றன அதிலும் விடுதலைப்புலிகளின் அன்றைய குரல்களுடன் இன்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஊடகமாகவும் எதுவித பக்கசார்புகளுகம் இன்றி தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் ஊடகமாக புலிகளின் குரல் வானொலி காணப்படுகின்றது. புலிகளின் குரல் வானொலியின் பக்கப…
-
- 0 replies
- 628 views
-
-
2004 ம் ஆண்டு மிகக் கொடூரமாக இலங்கையைத் தாக்கி ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொண்ட 'சுனாமி' தாக்குதல் நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் பெரும் எடுப்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் முழு வீச்சில் முத்தவெளி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. யாழ் மாவட்ட படை அதிகாரிகளின் வழி நடத்தலில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையேற்று இந்த ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதாக தெரியவருகின்றது. பாடசாலை மாணவர்கள், மற்றும் கலாச்சார கலைஞர்கள் போன்றோர் ஆயிரக்கணக்கில் இந்த ஆயத்தப் பணிக்கான செயல்முறை நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை காண்பித்தார்கள். thx http://www.newjaffna.com/
-
- 1 reply
- 465 views
-
-
பொட்டு அம்மான் உயிருடன்:இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதி! [ பிரசுரித்த திகதி : 2010-12-23 05:31:46 PM GMT ] விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்…
-
- 4 replies
- 2k views
-
-
Friday, December 24th, 2010 | Posted by admin விடுதலைப்புலிகளின் 19 கப்பல்களும், 600 மில்லியன் டொலர் பணமும் எங்கே? விடுதலைப்புலிகள் வசம் இருந்ததாக சிறீலங்கா அரசால் முன்னர் தெரிவிக்கப்பட்ட 19 கப்பல்களும், 600 மில்லியன் டொலர் பணமும் எங்கே என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற விழா ஒன்றில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாது: விடுதலைப்புலிகள் வசம் 19 கப்பல்கள் உள்ளதாகவும், அவர்களிடம் 600 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், சுவிற்சலாந்தில் உள்ள வங்கியில் தங்கம் இருப்பதாகவும் சிறீலங்கா அரசு முன்னர் தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில் 160 வர்த்தக நிறுவனங்களும் விடுத…
-
- 0 replies
- 805 views
-
-
யாழ்ப்பாணத்தில் நத்தார் தினக் கொண்டாட்டங்களை மக்கள் பெரும் ஆர்வத்தோடு முன்னெடுத்து வருகின்றனர். புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதிலிருந்து வீடு வீடாக கரோல் வருவது வரை நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. thx http://www.newjaffna.com/ யாழ் நகரிலுள்ள புடைவைக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தாடைகளைக் கொள்வனவு செய்து கொண்டு செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. அத்துடன் புடைவைக் கடைகளும் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு நத்தார் மரம் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். கூட்டம் கூட்டமாக கார்களில் மோட்டார் சைக்கிள்களில் ரம்போக்களில் வந்து அதிகளவு பொருட்களை, தமது கையிலுள்ள பணத்தை கரைத்து கொள்வனவு செய்…
-
- 0 replies
- 566 views
-
-
ஒருவருட மணவாழ்வோடு இந்தத் தங்கையின் வாழ்வு முடிந்து போனது. தன் காதல் கணவனுடன் வாழ்ந்த வாழ்வின் நாட்களை நினைத்து நினைத்து அழுகின்ற இவளுக்குள் நிறைந்துள்ள துயரங்கள் எங்களுக்குள்ளும் கண்ணீரை வர வைத்துவிட்டுள்ளது. காடுகளோடும் மரங்களோடும் களங்களில் நின்ற காதல் கணவனோடு கடைசி வரையும் நின்றவள். கையில் ஆயுதம் ஏந்தாததைத் தவிர கடினம் நிறைந்த காட்டு வாழ்வையெல்லாம் அனுபவித்தவள். காதலின் பரிசாய் கருவுற்ற குழந்தையும் பாதியில் கரைந்து போக களத்தில் கணவனையும் இழந்து வயிற்றில் வளர்ந்த கருவையும் இழந்து கண்ணீரோடு வாழ்கிறாள். நேசிப்புக்குரியவனை இழந்த துயரம் வறுமை துரத்தப் பட்டினியுடன் வாழும் குடும்பம் வசதிகள் எல்லாம் இவளை அழுத்துகிறது. தனது தங்கைகள் இருவரையும் படிப்பித்து விட வேண்டுமென…
-
- 2 replies
- 1.7k views
-
-
வந்த ஆமிக்காரர்கள் அங்கேயிருந்த ஒவ்வொரு ஓலை வீடுகளையும் எரித்துக் கொண்டு வந்தார்கள். ஓலை வீடுகள் எரிந்த வெளிச்சத்தில் எல்லா இடமும் வடிவாகத் தெரிந்தது. அந்த தீச் சுவாலைகளைப் பார்த்த நான், வீரச்சாவடைந்த எங்கட நான்கு வீரர்களுக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு இருப்பது போல உணர்ந்தேன். அப்போது மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன். எப்படியாவது போய்ச் சேர்ந்து நடந்தவற்றை தலைமைக்குச் சொல்ல வேண்டுமென்று. அப்படியே படுத்துக்கிடந்தபடி பார்த்துக் கொண்டேயே இருந்தேன். அவன் சகல வீடுகளையும் எரித்துவிட்டு சற்று நேரத்தில் அவ்விடத்தை விட்டுப்போய்விட்டான். என்னை நுளம்புகள் தின்று கொண்டிருந்தன. இங்கே அழுத்தி மீதியை வாசிக்கவும் - நன்றி: நெருடல்
-
- 0 replies
- 712 views
-
-
வியாழக்கிழமை, 23, டிசம்பர் 2010 (22:38 IST) ராஜபக்சே மீது அதிருப்தி: 20 எம்.பி.க்கள் ரணிலுடன் ரகசிய பேச்சுவார்த்தை இலங்கை அதிபர் ராஜபக்ச மீது அதிருப்தி அடைந்திருக்கும் சில அமைச்சர்கள் உட்பட சுமார் 20 ஆளும்கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இத்தகவலை ரணிலின் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொ்னாண்டோ தெரிவித்த்துள்ளார். அத்துடன் வரும் ஜனவரி 26 ஆம் தேதியன்று நாட்டின் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் உதயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அதிகாரம் ஒரு சிலரது கைகளுக்குள்ளே வைக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரண…
-
- 0 replies
- 479 views
-
-
தமிழினியை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு [ பிரசுரித்த திகதி : 2010-12-23 05:35:05 PM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் உறுப்பினரான சிவகாமி எனப்படும் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி அரசியல் பொறுப்பாளராக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உறுப்பினர்களை சேர்த்தமை மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் 17ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மா இறுதியில் தமிழினி கைது செய்யப்பட்டிருந்…
-
- 0 replies
- 396 views
-
-
எள் என்றால் எண்ணெய் என்று மாற்றமடையும் வேகத்தில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழரின் மூளை இப்போது இரு சக்கர உழவு இயந்திரத்தை எள்ளில் இருந்து எண்ணெய்யாய் மாற்றுவதற்கு செய்துள்ள சிறந்த தொழில்நுட்பம் தற்போது உங்கள் முன். இதனால் எருதுகளுக்கும் ஓய்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல் குறுக்கு வழியில் சிந்தித்து உங்களுக்காக உழைத்த எருதுகளை கசாப்புக் கடைக்கு விற்காமல் விட்டால் கோடி புண்ணியம். thx http://www.newjaffna.com/fullview.php?id=MTI4OQ==
-
- 9 replies
- 1.9k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் இலங்கைக்கான விஜயத்தின் உண்மைத் தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள ஜே.வி.பி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கப்பாட்டுடனேயே மேற்படி நிபுணர் குழுவை பான் கீ மூன் அமைத்தார். இதனால் தற்போது நாட்டின் கௌரவத்திற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று புதன் கிழமை தெளிவுபடுத்துகையில், ஐக்கிய நாடுகள் சபை மாத்திரமல்ல எந்தவொரு சர்வதேச நாடும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. ஐ.நா.வின் நிபுணர் குழுவை பொறுத்தவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பான் கீ மூனுக்கும் இடையில் …
-
- 0 replies
- 345 views
-
-
Thursday, December 23rd, 2010 | Posted by admin இலங்கை அரசுக்கு தலையிடி கொடுக்க தயராகும் மற்றுமொர் ஊடகம் : LankaLeaks இலங்கை அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களை வெளிகொணரும் நோக்கில், லங்கா லீக்ஸ் என்ற பெயரில் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறியுள்ள இந்த இலங்கையர்கள் லண்டனை தலைமையாக கொண்டு, லங்காலீக்ஸ் என்ற இந்த இணையத்தளத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இந்த இணையத்தளம் அடுத்த சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம், தரகு பணம், கொள்வனவு செய…
-
- 2 replies
- 2.1k views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த மூவரடங்கிய நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையிலான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்காக இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூக்கி தருஸ்மான் தலைமையிலான அந்த ஐ.நா. நி…
-
- 0 replies
- 605 views
-
-
யாழ் அபிவிருத்தியை கட்டுப்படுத்தும் கோத்தாபய வியாழக்கிழமை, 23 டிசம்பர் 2010 13:01 யாழ்ப்பாண மாநகரசபை சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபைப் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வசம் கொண்ட வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உறுதி செய்துள்ளார். மாநகரசபைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தி வேலையாயினும் அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அத்துடன் காணிகளை விற்பனை செய்தல், உரிமை மாற்றம் செய்த…
-
- 1 reply
- 839 views
-
-
விவசாய நிலம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதாக கனடாவில் ஈழத் தமிழ்ப் பெண் * Thursday, December 23, 2010, 12:24 தமது விவசாய நிலத்துக்கு அருகாமையில் இராணுவ முகாம் காணப்பட்டதால் அரசாங்கத்தினால் விவசாய நிலம் சுவீகரிக்கப்பட்டதாக எம்.வி.சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த ஈழத் தமிழப்பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தாய்லாந்திலிருந்து கனடாவிற்கான கப்பல் பயணங்களின்போது தனது குழந்தைகளுடன் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகளுடன் கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கனடாவிற்கான கப்பல் விஜயம் தொடர்பில் கருத்து …
-
- 1 reply
- 813 views
-
-
தகப்பனை இழந்த 6 வயதுச் சிறுமி மீது வல்லுறவு! யாழில் சம்பவம் வியாழன், 23 டிசம்பர் 2010 16:03 தகப்பனை இழந்த 6 வயதுச் சிறுமி மீது வல்லுறவு! யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் தகப்பனை இழந்த 6 வயதேயான சிறுமி மீது 45 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடுள்ளார். குறித்த சிறுமியின் தகப்பன் வன்னி யுத்தத்தில் இறந்து போய் விட்டதால் சிறுமி தாயாருடன் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று அச் சிறுமியின் தாயார் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி குறித்த நபர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார். …
-
- 0 replies
- 819 views
-
-
காரைநகரில் புதிதாக இராணுவ முகாம்: பொதுமக்கள் பெரும் அச்சம் Thursday, December 23, 2010, 12:16 யாழ். காரைநகரில் புதிதாக இராணுவ முகாமொன்றை அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளார்கள். சுமார் 20 வருடங்களாக காரைநகர் பிரதேசம் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. 1991 ம் ஆண்டு பொதுமக்கள் இடம்பெயர்வின் பின்னர் தற்போதைக்கு வரை கடற்படையினரே அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அப்பிரதேசத்தில் இராணுவத்தினர் புதிய முகாமொன்றை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காரைநகர் மேற்கு பிரதான வீதியில் ஆலடிச் சந்திக்கும், வேம்படிக்கும் இடையில் உள்ள தனியார் வீடு ஒன்றில் இந்த முகாம…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ். மாவட்ட வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னா கம் பொலிஸ் பிரிவுகளில் துப் பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் இடம் பெறுகின்றமையால் இப் பகுதி மக்கள் இரவில் நிம்மதியா கத் தூங்க முடியாமலும், பகலில் பெண்கள் தயக்கமின்றி நட மாடமுடியாமலும் திண்டாடு கின்றனர். இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப் பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடு வில் தெற்கு, மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பய முறுத்தி பதிவுத் திருமணம…
-
- 4 replies
- 840 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துமுகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளதாகவும், நிர்மாணப் பணிகள் வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படு மென்றும் ஆணையாளர் நாயகம் கூறினார். யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிறைச்சாலை 1985 ஆம் ஆண்டு சேதமானது. பின்னர் 1996 இல் இரண்டு தனியார் வீடுகளில் தொழிற்பட்டது. தற்போது சொந்தக் காணியில் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவ…
-
- 1 reply
- 697 views
-
-
வடக்கு கிழக்கில் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள்! வியாழன், 23 டிசம்பர் 2010 13:51 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக 136 வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. தற்போது இந்த இரு மாகாணங்களிலும் 59 வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. இதனை விட கிழக்கு மாகாணத்தில் 64 கிளைகளையும் வடக்கில் 72 வங்கிக் கிளைகளையும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு மாகாணங்களிலும் வெளிநாட்டு வங்கிகளும் தமது கிளைகளைத் திறப்பதற்காக மத்திய வங்கியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன. tamilcnn.com
-
- 1 reply
- 824 views
-
-
30 வருடமாக பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அபிவிருத்தி செய்ய முடியாது - மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விளக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-23 07:55:26| யாழ்ப்பாணம்] 30 வருடமாக அபிவிருத்திகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலை யில் பல அழிவுகளை எதிர்கொண்ட பகுதிகளை ஒருவருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள் ளோ அபிவிருத்தி செய்ய முடியாது. குறைந்தது பத்து வருடமாவது தேவைப்படும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வடக்கில் மீள்குடியேற்றப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச் சினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று யாழ்.பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட் டது. இதில் கலந்துகொண்டு உரை யாற்…
-
- 3 replies
- 559 views
-
-
நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதாரப் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்துவதால், மோதலுக்கு முரண்பாட் டுக்கு விரோத்தை முறுகலை தீர்க்க முடியாது. பல வருடங்களாக வருந்தத்தக்க இழப்புக்களைச் சந்தித்த ஒரு நாட்டினை ஆளும் அரசாங்கம் அதனைக் கட்டி எழுப்பு வதற்குப் பொருளாதார விடயங்களில் மட்டும் கவனம் செலுத்து வது பெரும் தவறான காரியமாகும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் புரூஸ் லெவி. பவ்ரல் அமைப்பின் ஆதரவில் கொழும்பில் இந்த மாத முற்பகுதியில் நடை பெற்ற மனித உரிமைகள் தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்ட கருத்தை வெளியிட்டார். மனித உரிமை தின விழாவில் கனேடியத் தூதுவர் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதி கள் வருமாறு : பல வருடங்களாக வருந்தத் தக்க …
-
- 0 replies
- 543 views
-
-
உரிமம் இன்றி சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட அச்சகம் ஒன்றினை வவுனியா பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், 6 சந்தேகநபர்ளையும் கைதுசெய்துள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது போலியான முறையில் தயாரிக்கப்பட்ட, முகாம்களில் தங்கியிருப்பதற்கான விண்ணப்பப் படிவம், இறப்பர் முத்திரைகள், அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு தொடக்கம் இந்த சட்டவிரோத அச்சகம் நடத்திச் செல்லப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யுத்தம் இடம்பெற்றபோது குறித்த அச்சகத்தில் பல ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வவ…
-
- 0 replies
- 603 views
-
-
Wednesday, December 22nd, 2010 | Posted by admin சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன? விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்தவொரு கட்டத்திலும் புத்துயிர் கொடுக்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாது- இது தான் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது. கடந்த காலங்களில் சிறிலங்கா இரண்டு முறை ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்கடித்த பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்தது. எச்சமாக விடப்பட்ட ஜேவிபியினரால் அரசாங்கங்களுக்குத் தலைவலியே மிஞ்சியது. எனவே அது போன்றதொரு நெருடிக்கடி புலிகளால் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருந்தது. இராணுவ ரீதியாகப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒட்டுகுழு அமைச்சர் கருணா யாழ் வருகையடுத்து : பாதுகாப்புகள் அதிகரிப்பு * Wednesday, December 22, 2010, 16:26 ஒட்டுகுழு அமைச்சர் கருணா வருகையடுத்து பண்ணை வீதி தொடக்கம் வங்களாவடிச் சந்தி வரை பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த சனிக்கிழமை தொடக்கமே இவரின் வருகைக்காக ஆங்காங்கே மக்களின் அடையாள அட்டைகள் மற்றும் உடற் பரிசோதனைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. .tamilthai.com
-
- 0 replies
- 584 views
-