Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு அமெரிக்கா நிதி உதவி நவ 24, 2010 Font size: Decrease font Enlarge font சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவியாக சிறீலங்கா இராணுவத்திற்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான உபகரணங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த உதவிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவிடம் வழங்கியுள்ளனர். நான்கு ரக் வண்டிகள், டாட்டா ரக துருப்புக்காவி பாரஊர்தி வாகனங்கள் – 07, லான்கூறூசர் வாகனங்கள் – 05 என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உதவியாக ஒரு மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் சபை ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அமெரிக்க தூதரக வட்டார…

  2. விடுதலைப் புலி ஆதரவு கூட்டமொன்றில் கலந்து கொண்ட இந்திய ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளார் ‐ சர்வதேச ஊடகங்கள் 21 November 10 12:18 pm (BST) தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்ட அமெரிக்க ‐ இந்திய ஊடகவியலாளர் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜேர்சி நகரில் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் முன்னதாக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய ஊடகவியலாளரான டொக்டர் பிரகாஷ் எம். சுவாமி என்பவரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இந்திய இலங்கை அரசாங்கத்தின் முகவர் என தம்மை அடையாள…

  3. தமிழீழ விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌‌மீதான தடையை ‌நீ‌க்க‌க் கோ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ற்கு 3 வார‌த்‌தி‌ல் ப‌தி‌‌ல் அ‌ளி‌க்குபடி ம‌த்‌‌திய அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் கடிதம் அனு‌ப்‌பியு‌ள்ளது. தமிழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீதான தடையை மேலு‌ம் 2 ஆ‌ண்டு ‌நீ‌ட்டி‌‌த்து ம‌த்‌திய அரசு கட‌ந்த மே மாத‌ம் ‌ஆணை ‌பிற‌ப்‌பி‌த்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல் தமிழீழ விடுதலைப் பு‌லிக‌ள் ‌‌மீதான தடை ‌‌‌நீ‌ட்டி‌ப்பு ச‌ரிதா‌ன் எ‌ன்று ம‌த்‌திய அரசா‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்‌ப்பாயமு‌ம் அ‌ண்மை‌யி‌ல் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இத‌னிடையே தீ‌ர்‌ப்பாய முடிவு‌க்கு தடைகோ‌ரி வழ‌க்க‌றிஞ‌ர் புகழே‌ந்‌தி எ‌ன்பவ‌ர் ச‌ெ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர். ‌இ‌ந்த மன…

  4. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை தான் மனதில் உத்தேசித்து வைத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இத்தீர்வு யோசனை அரசியல் கட்சிகளும், மக்களும் ஏற்று அங்கிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், தனது மனதில் உள்ள அரசியில் தீர்வு அவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்காமல் இருக்கலாம் அதனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல. பொதுமக்கள் கூட மறுக்கலாம். மக்களின் மனதினுள் உள்ளவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு என்ன தேவை என்பதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதனால் ஒரு குழுவினை நியமித்து இருசாரர் தரப்பிலும் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததுடன் 2011 ஆம் ஆண்டில் வடக…

    • 4 replies
    • 1.5k views
  5. போரின்போது அரச படைகளினால் காணாமல் போன, கொல்லப்பட்ட எம் கத்தோலிக்க பங்கு தந்தைகளுக்கும் நீதி வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டால் இறப்பு பத்திரத்தை கொடுங்கள். இல்லையேல் கண்டு பிடித்து தாருங்கள். இவ்வாறு கூறியுள்ளார். சிங்கள கத்தோலிக்க இளைஞர் சபை தலைவர் அருட்திரு ரெட் செல்டன் பெனாண்டோ அவர்க|ள். மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். 1984 ஆம் ஆண்டில் இருந்து கீழ் வரும் பங்கு தந்தைகள் காணாமல் போயும் கொல்லபட்டும் உள்ளார்கள். அருட்திரு ம.ஜெயராஜசிங்கம் மெதடிஸ்ற் மிசன் 1984 இல் கொல்லப்பட்டார். அருட்திரு மேரி பஸ்ரியன் 1985 இல் கொல்லப்பட்டார். அருட்திரு ஈகன் ஜோன் ஹேபேட் 1990 இல் காணாமல் போனார். அருட்திரு செல்வராஜா 1997 இல் …

  6. Nov 23, 2010 / பகுதி: செய்தி / 10 கோடி தமிழர்களுக்கு தனி தமிழ் தேசம் வேண்டும்- தொல்.திருமாவளவன் உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கக் கூட்டம் சேலத்தில் நடந்தது. அதில் பேசிய திருமாவளவன், தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும். அதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் 1…

  7. அமெரிக்காவின் பயங்கரவாத சட்டங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளை பாதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க அரசின் பயங்கர வாத சட்டங்கள் அரசு சாரா ஆயுதக்குழுக்களுடனான மனிதாபிமான மனித உரிமை தொடர்புகளை ஏற்படுத்துவதனை மட்டுப்படுத்தியுள்ளன என கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வலேரி ஆமோஸ். ஐக்கிய நாடுகளின் கூட்டம் ஒன்ரில் பேசிய இவர் அமெரிக்காவின் உலகலாவிய பயங்கரவாத சட்டங்கள் ஆயுதக்குழுக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்து மனிதாபிமான , மனித உரிமை நடவடிக்கைகளை செய்வதில் தடையாக இருந்ததாகவும் எடுத்துக்காட்டாக இலங்கை உட்பட பல நாடுகளில் அந்த நாடுகளில் மோதல்களில் ஈடுபட்ட போராட்ட அமைப்புக்களுடன் வேலை செய்வதனை மட்டுப்படுத்தியது என குற்றம் சாட்டியுள்ளார். போரில் சிக்கி…

  8. ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத பல நாட்களுள் நவம்பர் 27 உம் ஒன்று. அன்றுதான் தமிழீழத் தேசிய விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூரும் நாள். விடுதலைப் புலிகளின் களப்பலியான முதற் போராளியின் நினைவாக அனுட்டிக்கப்படும் இந்த நாள் களத்தில் புலிகள் மிகப் பலமாக இருந்த நாட்களில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூரப்படுவது வழக்கம். வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் கல்லறைகளில் மலர் வணக்கம் செய்து அவர்களின் தியாகங்களை நினைவு கூர்வது மட்டுமன்றி மாவீரர்களை இந்த உலகுக்கு வழங்கிய அவர்தம் பெற்றோரையும் கௌரவிப்பது வழக்கமாக இருந்தது. 2009 மே இல், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற நிலையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை…

  9. இலங்கை அரசு அறிவித்த சீர் திருத்தங்களை நிறைவேற்றும்வரை முதலீட்டாளர்கள் காத்திருப்பார்களென வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஏடு தெரிவிக்கிறது இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சீர் திருத்தங்களும் நடவடிக்கைகளும், நிறைவேற்றப்படும்வரை முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளப்போவதில்லையென வோல் ஸ்ரீட் ஜேர்னல் (Wall Street Journal) ஏடு தெரிவிக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள் ஓரளவு நம்பிக்கை தருவதாக அந்த ஏடு தெரிவிக்கிறது. ஆனால், அண்மைக்காலத்தில் இலங்கை அரசு செயற்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இலங்கை அரசு அறிவித்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்வரை முதலீட்டாளர்கள் காத்திருப்பார்களென்று வோல் ஸ்ர…

    • 2 replies
    • 597 views
  10. புதன்கிழமை, நவம்பர் 24, 2010 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் கூறப்பட்ட வெள்ளக்கொடி விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் 5ஆவது சாட்சியமாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் இணையத்தள பத்திரிகை மூலம், தான் அறிந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் வெளிவந்ததன் பின்னர், ஐக்கிய நாடுகள் அமையத்தின், சட்டவிரோத மனிதப் படுகொலைகள் தொடர்பில் ஆராயும் பிரதிநிதி, பேராசிரியர் பிலிப் எல்ஸ்டன், சரத் பொன்சேகாவின் கருத்…

    • 0 replies
    • 1.4k views
  11. இலங்கையில் உடல் ஊனம் காரணமாக 8088 படைவீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் திகதி:24.11.2010 இலங்கையில் போரின்போது ஏற்பட்ட உடல் ஊனம் காரணமாக 8088 படைவீரர்கள் ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உடல் ஊனத்தை காரணம் காட்டி ஓய்வு பெற்றுக் கொண்டவர்களில் காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த 7337 பேரும், கடற்படையைச் சேர்ந்த 450 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 113 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 188 பேரும் இவ்வாறு ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு ஓய்வு பெற்றவர்களினால் செய்யக் கூடிய வகையிலான புனர்வாழ்வு அளிக்கும்பொருட்டு தொழிற்பயிற்சிகள…

  12. நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரை ஆசியாவின் சீரழிவாகவே இலங்கை இருக்கும் அப்பட்டமான இனவாத பட்ஜெட்; சாடுகிறார் சுரேஷ் என்ன காரணங்களுக்காக தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்களோ அந்தக்காரணிகள் வலிமை பெற்று வருவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கில் இடம்பெறும் சிங்களத் திணிப்புகள், கலாசார அழிப்புகளினால் தமிழ் மக்களின் இருப்புக்கு அபாயவிளக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் கூறியதுடன் தமிழினத்தை அழிக்கும் நோக்கம் கொண்டதே இந்த வரவு செலவுத் திட்டம் என்றும் குற்றம் சாட்டினார். கே.பி.யை வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழ்மக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஆனால் கே.பி.யையோ …

    • 0 replies
    • 615 views
  13. தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் Asinநடித்த காவலன் படத்தை புறக்கணிக்கும்படி அதில் கேட்டுக் கொண்டிருப்பதால் உலகம் முழுக்க இப்படம் குறித்த சலசலப்பு எழுந்துள்ளது. இது விஜய் நடித்த படம் என்பதையும் தாண்டி அசின் முன்னிலைப்படுத்தப்படுவதால் எழுந்துள்ள இந்த வினைக்கு எதிர் வினை என்பது ரிலீஸ் நேரத்தில் தெரியும். இப்போதைக்கு அந்த அறிக்கை அப்படியே உங்கள் பார்வைக்கு- அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களேஞ் வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம். முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின…

    • 3 replies
    • 1.3k views
  14. தூக்கில் போடு... அல்லது விடுதலை செய்! சிறை வாழ்க்கை பற்றி சினிமாவில் பார்த்து இருக்கிறோம். சிறை பற்றிய கற்பனைகள் நிறைய நமக்கு உண்டு. ஆனால், உண்மையான சிறை வாழ்க்கைக்கும் நம் கற்பனைக்கும் வெகுதூரம்! சுற்றி வளைக்கப்பட்ட மதில் சுவர்களின் உள்ளே துளித்துளியாகக் கழியும் வாழ்க்கை, பெரிய ரணம். வேலூர் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்கு உள்ளாகக் கிட்டத்தட்ட இருபது வருடங்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர், ராஜீவ் கொலை வழக்கின் கைதிகள். சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி என அனைவரும் சிறைக்குச் சென்று 19 வருடங்கள் முடிந்துவிட்டன. இதில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிக…

    • 0 replies
    • 588 views
  15. ஈழத்தமிழர்களின் வரலாற்றை சொல்லும் படம் ''வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி'' -ஆவணப்படம் வெளியிடப்பட்டது தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து, சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் 20 ஆம் திகதி சென்னையில் வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் ஈழத்தின் , தமிழ் ஈழரின் வரலாற்றைப் பேசுவதில் இருந்து துவங்கி மே மாதம் 2009 ஒரு இனப்படுகொலையின் மூலம் அம்மக்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கபட்டது வரை அரசியல் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு இறுதியில் அம்மக்கள் தமக்கான ஒரு நாடு தம் தாய் நிலத்தில் கிடைக்கும் என்ற வேட்கையுடன் நடைபோடுகின்றனர் என்று முடிகிறது. முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சு…

    • 0 replies
    • 749 views
  16. பகிடிவதையால் மாணவன் தற்கொலை முயற்சி : யாழில் சம்பவம் _ வீரகேசரி இணையம் 11/23/2010 10:58:05 AM Share யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர் ஒருவர் பலகலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வைத்து சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியில் வைத்து அதிக தூக்க மாத்திரகளை உட்கொண்டுள்ளார். இதனையடுத்து விடுதியில் இருந்த ஏனைய மாணவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கிளிநொச்சியை சேர்ந்த 23 வயதுடைய மாணவனே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். _

  17. 2011 வரவு செலவு திட்டம் மீதான உரை சுரேஷ்.க.பிறேமசந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் - யாழ்மாவட்டம் கௌரவ சபாநாயகர் அவர்களே! கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் நடாத்தப்பட்ட தமிழினத்திற்கு எதிரான தாக்குதல்கள் மூலம் உயிரழிப்புக்கள், சொத்தழிப்புக்கள், சொத்துக்களை சூறையாடல் தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள், கொலைகள், உயர் கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோக பறிப்பு என உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அடிப்படை தேவைகள் மறுப்பு ரீதியாகவும் பல முனைகளில் தமிழ் இன ஒழிப்பை நிகழ்த்தி வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தமிழ் இனவொழிப்பை வேகப்படுத்தும…

    • 0 replies
    • 706 views
  18. கண்ணிரண்டையும் 1995 இல் இழந்த ஒரு முன்னாள் போராளி இவன். 3பிள்ளைகளின் தந்தை. முள்ளிவாய்க்கால் முனைவரையும் சென்று முகாமில் ஒதுங்கியவர்கள். அகதி வாழ்வு அலைக்கழிக்கும் துயரம் அனைத்துக்கு நடுவிலும் மீள எழத்துடிக்கும் துணிவோடு சொந்த ஊருக்குப் போயிருக்கிறான். வறுமை இவனையும் இவனது குடும்பத்தையும் விரட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் உதவிகள் வேண்டி ஏறாத இடமில்லை உதவி கேட்காத நிறுவனங்களுமில்லை. நம்பிக்கை கொடுத்து உதவிகள் தருவதாய் புகைப்படம் குடும்ப விபரங்கள் பெற்றவர்களும் அமைதியாகிப்போனார்கள். விபரங்கள் பெற்றவர்களைத் தேடி தொடர்பு கொண்டு உதவி கிடைக்குமா கிடைக்குமா என வேண்டியதன் பின்னால் விபரம் பெற்ற தொடர்பிலக்கங்கள் தொடர்பறுந்து போயிற்று. கண்கள் இல்லாத தன்னை தனது பிள்ளை…

    • 12 replies
    • 1.4k views
  19. மஹிந்தவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோ செல்போன்களில் நவ 23, 2010 மஹிந்தவிற்கு அவதூறு விளைவிக்கும் காணொளியினை கையடக்கதொலைபேசியினில் வைத்து அனுப்பப்பட்டு வருகின்றது. இதனை அனுப்பிஅதாகவும் வீடியோ காட்சியை வைத்திருந்த குற்றத்திற்காக மாத்தளை களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ரத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றைய தினம் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். sangathie

  20. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை ஆரம்பிக்கவுள்ள அதேசமயம் இந்தப் பயணத்தின் போது யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு விடயம் குறித்து கொழும்புடன் கலந்தாராயவிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அத்துடன் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களை கிருஷ்ணா திறந்துவைக்கவுள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் கடந்த வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமென இந்தியா கூறிவருகிறது. தனது விஜயத்தின் போது இரு தரப்பு விவகாரங்களுடன் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கிருஷ்ணா கொழும்புடன் பேச்சுவார்த்தை…

  21. யாழில் ஆரம்பித்துள்ள படையினரின் தேடுதல் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2010 05:16 கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள புகையிரத நிலைய வீதியல் இன்று காலை பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கோண்டு வருகிறனர். இன்று காலை 9.30 மணியளவில் வாகனங்களில் வந்திறங்கிய இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவனர் நந்தாவில் அம்மன் அலயத்திற்கு முன்பாக உள்ள புகையிரத வீதியில் தெற்குப் பக்கமாக தமது தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளினால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் இக்காலப்பகுதியில் படையினர் இத் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்மை அப்பகுதியில் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இப்பகுதிய…

  22. நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த பதிவாளர் பிரச்சினைக்கு நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் முடிவு காணப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். இந்தப்பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கடமைகளைப் பொறுப் பேற்கவுள்ளதாகவும் தெரிகிறது. இவர் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளராக நீண்டகாலம் பணியாற்றியதுடன் தற்கோது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில், பதிவாளர் நிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.