ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
கண்ணிரண்டையும் 1995 இல் இழந்த ஒரு முன்னாள் போராளி இவன். 3பிள்ளைகளின் தந்தை. முள்ளிவாய்க்கால் முனைவரையும் சென்று முகாமில் ஒதுங்கியவர்கள். அகதி வாழ்வு அலைக்கழிக்கும் துயரம் அனைத்துக்கு நடுவிலும் மீள எழத்துடிக்கும் துணிவோடு சொந்த ஊருக்குப் போயிருக்கிறான். வறுமை இவனையும் இவனது குடும்பத்தையும் விரட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் உதவிகள் வேண்டி ஏறாத இடமில்லை உதவி கேட்காத நிறுவனங்களுமில்லை. நம்பிக்கை கொடுத்து உதவிகள் தருவதாய் புகைப்படம் குடும்ப விபரங்கள் பெற்றவர்களும் அமைதியாகிப்போனார்கள். விபரங்கள் பெற்றவர்களைத் தேடி தொடர்பு கொண்டு உதவி கிடைக்குமா கிடைக்குமா என வேண்டியதன் பின்னால் விபரம் பெற்ற தொடர்பிலக்கங்கள் தொடர்பறுந்து போயிற்று. கண்கள் இல்லாத தன்னை தனது பிள்ளை…
-
- 12 replies
- 1.4k views
-
-
மஹிந்தவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோ செல்போன்களில் நவ 23, 2010 மஹிந்தவிற்கு அவதூறு விளைவிக்கும் காணொளியினை கையடக்கதொலைபேசியினில் வைத்து அனுப்பப்பட்டு வருகின்றது. இதனை அனுப்பிஅதாகவும் வீடியோ காட்சியை வைத்திருந்த குற்றத்திற்காக மாத்தளை களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ரத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றைய தினம் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். sangathie
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை ஆரம்பிக்கவுள்ள அதேசமயம் இந்தப் பயணத்தின் போது யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு விடயம் குறித்து கொழும்புடன் கலந்தாராயவிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அத்துடன் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களை கிருஷ்ணா திறந்துவைக்கவுள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் கடந்த வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமென இந்தியா கூறிவருகிறது. தனது விஜயத்தின் போது இரு தரப்பு விவகாரங்களுடன் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கிருஷ்ணா கொழும்புடன் பேச்சுவார்த்தை…
-
- 1 reply
- 520 views
-
-
யாழில் ஆரம்பித்துள்ள படையினரின் தேடுதல் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2010 05:16 கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள புகையிரத நிலைய வீதியல் இன்று காலை பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கோண்டு வருகிறனர். இன்று காலை 9.30 மணியளவில் வாகனங்களில் வந்திறங்கிய இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவனர் நந்தாவில் அம்மன் அலயத்திற்கு முன்பாக உள்ள புகையிரத வீதியில் தெற்குப் பக்கமாக தமது தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளினால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் இக்காலப்பகுதியில் படையினர் இத் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்மை அப்பகுதியில் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இப்பகுதிய…
-
- 1 reply
- 804 views
-
-
நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த பதிவாளர் பிரச்சினைக்கு நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் முடிவு காணப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். இந்தப்பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கடமைகளைப் பொறுப் பேற்கவுள்ளதாகவும் தெரிகிறது. இவர் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளராக நீண்டகாலம் பணியாற்றியதுடன் தற்கோது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில், பதிவாளர் நிய…
-
- 1 reply
- 756 views
-
-
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைப்பு திங்கள், 22 நவம்பர், 2010 கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.கார்த்திகேசு திருலோகச்சந்தர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்செய்தி குறித்து மேலும் தெரியவருவதாவது; கடுமையாக சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்வையிடுவதற்கு சென்ற பிரித்தானியா குடியுரிமை பெற்ற தமிழ் ஊடகவியலாளர் திரு கார்த்திகேசு திருலோகச்சந்தர் (37) கொழும்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரால் கடந்த புதன்கிழமை 17.11.2010 அன்று கைது செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன…
-
- 5 replies
- 1.3k views
-
-
15ம் நூற்றாண்டில் சிறிலங்காவினை ஐக்கியப் படுத்துவதற்கு சீனர்கள் உதவியது எவ்வாறு? [ திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010, 13:47 GMT புதினப்பலகை] [ தி.வண்ணமதி ] சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் அனுராதபுரக் காலதிலிருந்து இருக்கும் ஒன்று. அனுரதபுரம் மற்றும் சிகிரியா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சீன 'அட்மிறல் செங் கீ'யினது [Admiral Zang He] சிறிலங்காவிற்கான பயணம் தவிர்ந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தீவினது அரசியலில் சீனா தலையீட்டினை மேற்கொள்ளவில்லை. Sri Lanka Guardian என்னும் இணையத்தளத்தில் Dr. Janaka Goonetilleke என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றுக் கட்டுரையை புதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்துக்களின் புனித நாளான நேற்று இரவு கார்த்திகைத் தீபம் ஏற்றிய பலர் இரா ணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதுடன் அவர்களின் கார்த்திகை தீபத்தினை அகற்றுமாறும் அவர்கள் பணித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் குடாநாடு முழுவதி லும் பரவலாக இடம்பெற்றுள்ளன. நேற் றிரவு கார்த்திகை தீபம் ஏற்றிய பிரபல சட்டத் தரணி ஒருவரும் இராணுவத்தினரின் மிரட்ட லுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வசிக்கும் அவர் ; தனது வீட்டுக்கு முன்னால் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டிருந்து போது அங்கு விரைந்து சென்ற இராணுவத்தினர் கார்த்திகை தீபத்தை அகற்றுமாறு கூறியுள்ளனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த சட்டத்தரணி இது குறித்து, இந்துக்களின் புனித நாள். அதன் போது நாங்கள் தீபம் ஏற்றுவோம் எனக்…
-
- 5 replies
- 1k views
-
-
சிறிலங்கா இப்போது ஒரு நாடு, முழு தேசத்திற்கும் அனைத்து நன்மைகளையும் கிடைக்கச் செய்வேன்: சிறிலங்கா அதிபர் [ செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2010, 10:33 GMT புதினப்பலகை ] [ தி.வண்ணமதி ] எத்தகைய அரசியல் தீர்வினை முன்வைக்கவேண்டும் என்றதொரு எண்ணம் என்னிடமுள்ளது. நாட்டினது அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்புடையதாக அந்தத் தீர்வு அமையவேண்டும். தனிநாட்டுக் கோரிக்கையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டிருப்பது சிறந்ததொரு அம்சம். தமிழ் மக்கள் தமக்கானதொரு புதிய தலைமைத்துவத்தினை விரும்புகிறார்கள். அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும். தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது. இவ்வாறு இந்…
-
- 1 reply
- 465 views
-
-
தனிச் சிங்கள அரசுக்கு எதிரான அனைவரும் படுகொலை செய்யப்படுவர்! சட்டத்தரணிகளுக்கு கொழும்பில் அச்சுறுத்தல் செவ்வாய், 23 நவம்பர் 2010 10:26 தனிச் சிங்கள அரசின் உருவாக்கத்துக்கு எதிரான அனைவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டி கொழும்பு நீதிமன்றங்கள் கடமையாற்றும் சட்டத்தரணிகள் பலருக்கு சிங்கள மொழியில் அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துரோகிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் அக்கடிதங்களில் தெரிவிக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளது. Dutugemunu balakaya என்கிற குழுவின் பெயரில் இக்கடிதங்கள் கடந்த 21 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கடிதங்களால் சட்டத்தரணிகள் மத்தியில் மிகுந்த பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. http://tami…
-
- 1 reply
- 895 views
-
-
தரம் ஐந்தில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தொண்டராசிரியர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டராசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோட்டன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் தொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தத் தொண்டராசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொட…
-
- 3 replies
- 1.2k views
-
-
இனப்பிரச்சினைக்குத் தம்மிடம் தீர்வுண்டு என்கிறார் ஜனாதிபதி; கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஏற்க வேண்டுமாம் [23 நவம்பர் 2010, செவ்வாய்க்கிழமை 12:38 பி.ப இலங்கை] கொழும்பு, நவம்பர் 23 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு என் மனதில் தீர்வு உண்டு. அதனை அரசியல் கட்சிகள் மட்டும் ஏற்றால் போதாது; மக்களும் ஏற்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த முதலாவது பேட்டியில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்தப் பேட்டியில் ஜனா திபதி மஹிந்த மேலும் தெரி வித்தவை வருமாறு: 13+ திருத்தச் சட்டத்தை ந…
-
- 0 replies
- 474 views
-
-
உள்ளூராட்சி திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் ரூபா 14 கோடி வரித்தொகையாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறுப்பதிகாரி க.இராசையா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு இந்த ஆண்டுக்கான வியாபார புரள்வு வரி ,வருமான வரி ஆகியவற்றின்மூலமே இந்தத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.15 கோடி ரூபா பணத்தை இந்த வருடம் முழுவதுமாக சேகரிக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தவருடம் சேகரிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் வரியிறுப்பாளர்கள் தாமாக முன்வைத்து செலுத்தியவை ஆகும். பிரச்சார மூலமும் கருத்தரங்குகள்,வெளிக்கள நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.அதன் விளைவாகவ…
-
- 1 reply
- 790 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பற்றி ஊட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுபற்றி ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள்ளும் என்ன தீர்வு வழங்கப்படவேண்டும் என நாந்தான் முடிவு எடுக்க வேண்டும். வடக்கு மாகாண தேர்தல் முடிந்தவுடன் இதுபற்றி நான் முடிவு எடுப்பேன். விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுக்க மறுத்ததை வேறு யாருக்கும் நான் கொடுக்க போவதில்லை என கூறியுள்ளார் மஹிந்த. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய இளையோர்களின் உலகுக்கு எடுத்துகாட்டும் விதமான மாவீரர் நாள் செயற்பாடும் வீர வணக்கங்களும் ....
-
- 0 replies
- 887 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனிய பாரதிக்கு இன்று வழங்கப்பட்டிருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி ஆகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தமிழ் சி.என்.என் இற்கு தெரிவித்தார். முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனை அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து 2007.06.07 ஆம் திகதி தரக் குறைவான வார்த்தைகளால் பேசி படுகொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என்கிற வழக்கிலேயே இனியபாரதிக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக் குறித்து கருத்துக் கூறியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் குறித்து மேல…
-
- 0 replies
- 946 views
-
-
நாமல் ராஜபக்ஷ, ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையடுத்து நாளை 10 மணியவில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளது. இதன் போது கடந்த நடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார.ஆகியோர்க்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. மூத்த அமைச்சர்களின் மனக்கசப்பு, மற்றும் எதிரணிகளில் இருந்து பிரிந்து மஹிந்தவிடன் இணைந்தவர்கள் ஆகிய…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழர் தேசிய மாவீரர் நாள் 2010 இன்று ஆரம்பம்: [sunday, 2010-11-21 11:01:51] கார்த்திகை 27 கல்லறைத்திரு நாள் இன்று ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஆரம்ப நாள் இன்று உலகெங்கும் தமிழர்களால் ஆரம்பிக்கப்படுகிறது. இல்லத்தை சுத்தம் செய்து மலர்தூவி மனம் விட்டு நெகிழ அவர் உறங்கும் கல்லயைகள் இன்று எம்முன் இல்லையே என்ற குமுறல் இருந்தாலும்.. எனினும் கனவுகள்தாங்கி வீர மண்ணில் வீழ்ந்தவர் எண்ணத்தை சுமக்க இடம் தேவை இல்லையே எமக்கு எம் இதயம் போதுமே. கல்லறையிட்டு காலம் பூராவும் அவா்களை போற்ற. அவர்கள் உடலையா நாம் விதைத்தோம் இல்லையே அவர்களின் உயரிலும் மேலான கனவையும் அல்லவா விதைத்தோம். செய்தி.கொம்
-
- 13 replies
- 1.4k views
-
-
கார்த்திகை 27 கல்லறைத்திரு நாள் ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் மூன்றாம் நாள் இன்று. உதிர்ந்துபோன உதிரப்பூக்களிடம் மன்றாட நிரை நிரையாக சென்று, நெக்குருக நின்று, வழிபாடு செய்ய ஆயத்தம் செய்வோம். மடியிருத்தி நாம் வளர்த்த மைனாக்களை நினைந்துருக அவர் நினைவிடம் தேடி செல்ல ஆயத்தம் ஆவோம். மாவீரர் தின உறுதிமொழியாக தமிழக மக்களே ! ஓவியன் கரூர் மாண்ட வீரர்களின் கனவு பலிக்கும் , நாளை நமது ஈழம் பிறக்கும் ! நம்பிக்கை மிகுந்த இந்த வரிகள் நமக்கு உணர்த்துவதென்ன? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாக்கப்பட்ட தமிழினம் இன்று வரை அடிமையாக வாழ்ந்து வருகின்றது , தனக்கேற்பட்ட இன்னல்களுக்கு காரணம் தேடி அலைகிறார்கள் நம்மில் பலர் . ஏதேதோ பிதற்றல்களை காரணமா…
-
- 1 reply
- 628 views
-
-
களினி பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதியமைச்சராக பதவி வகித்த மேர்வின் சில்வாவிற்கு பரிசாக ஒரு கோடியே 87 லட்சத்து 969 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிநவீன ஜங்குவர்ரக வாகனமொன்று வழங்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளிவந்திருந்தன. தற்போது இதற்கு மேலதிகமாக இன்றைய தினம் அவருக்கு அமைச்சரவை அந்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‘வின் பூரண ஆசீர்வாதம் இருப்பதைப் புலப்படுத்துவதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். அண்மையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்துத் தாக்கியதால் பலத்த விமர்சனங்களைச் சந்தித்த நிலையிலும் இவருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கெத…
-
- 0 replies
- 533 views
-
-
இக்களம் ஊடாக பலருக்கான உதவிகளை கருத்தாள நண்பர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் ஒரு தாய் மற்றும் கண்ணிரண்டையும் இழந்த ஒரு முன்னாள் போராளி ஆகியோரின் சுயதொழில் முயற்சிக்கு உதவிய நல்லிதயங்களுக்கு உதவிகளைப் பெற்ற உறவுகள் தெரிவித்த நன்றிக் குரல்கள் இது. ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.
-
- 2 replies
- 897 views
-
-
கடந்த அமைச்சரவை சத்தியபிரமாணத்தின் போது அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட மூவருக்கு இம்முறை அமைச்சரவையில் எதுவித பதவிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக மீள்குடியேற்ற அமைச்சராக செயற்பட்ட மில்ரோய் பெனாண்டோவிற்கும், பிரதி அமைச்சர்களாக செயற்பட்ட சரத் குணரட்ன, நியோமல் பெரேரா ஆகியோருக்கு இம்முறை அமைச்சுப் பதவிகளோ, பிரதி அமைச்சுப் பொறுப்புக்களோ வழங்கப்படவில்லை. குறிப்பாக அமைச்சரவை அந்தஸ்து தகுதியில் மீழ் குடியேற்ற அமைச்சராக இருந்த மிரோய் பெனாண்டோவிற்கு இம்முறை அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை கூடவே எந்த பதவியும் வழங்கப்படவில்லை. பெளத்த பீடங்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமைய மற்றும் படைய புலனாய்வாளர்களின் அழுத்தமே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. வடபகுதியில…
-
- 0 replies
- 973 views
-
-
சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன் தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு தனி மனிதனதும் படுக்கையறைவரை நுளைந்து தனிமனித விவகாரங்கள் வரை விபரம் திரட்டுகின்ற இந்த நூற்றாண்டில் ஒரு பிரதேசத்து மக்களையே சாட்சியின்றிக் கொன்றொழித்த கோரம் இலங்கையில் நடந்தேறியிருப்பதை மறுபடி மறுபடி தமிழ்ப்பேசும் மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆயிரமாயிரமாய்ச் செத்துப்போன அப்பாவிகளின் குருதியுறைந்து போகும் முன்னமே எஞ்சியவர்களை சிறுகச் சிறுகக் கொலைசெய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச குடும்ப ஆட்சி. சாட்சியின்றி இலங்கையின் இதயப் பகுதியில் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி பாசிசத்தின் வேர்களை மனிதகுலத்தின் வாழ்விடங்களிலெல்லாம் படரவிடுகிறது …
-
- 50 replies
- 4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கான நியமனக் கடிதம் நாடாளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதியினால் பாதுகாப்பு செயலாளருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பை அடுத்து அமைச்சரவையில் சில மாற்றங்கள் எற்படத்தப்பட்டதுடன் அமைச்சர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. இதனையடுத்தே பாதுகாப்பு செயலாளருக்கான நியமனக் கடிதமும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/11640-2010-11-22-12-14-56.html
-
- 0 replies
- 752 views
-