ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 ஈழநாதம் கார்த்திகை 27 கல்லறைத் திருநாள் ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஆரம்பம் இன்று. இல்லத்தை சுத்தம் செய்ய அவர் உறங்கும் இடம் இல்லையே எனினும் வீழ்ந்தவர் எண்ணத்தை சுமக்க இடம் தேவை இல்லையே எம் இதயம் போதுமே மக்களே. அவர்கள் உடலையா நாம் விதைத்தோம் இல்லையே அவர்களின் உயிரிலும் மேலான கனவையும் அல்லவா விதைத்தோம். கண்ணீராலும் செந்நீராலும் விதையிட்டு உரமிட்டோம். ஆண்டிற்கொருமுறைி இந் நாளில் இருந்து 27 வரை அவர்கள் நினைவுடன் கடமைகளைச்செய்வோம். கார்திகை 27: கல்லறைத் திருநாள், கண்மணிகள் பெருநாள் உதிர்ந்து போன உ…
-
- 1 reply
- 791 views
-
-
ஐ. நா. சபையினால் நியமிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீதான போர்குற்ற விசாரணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சாட்சியங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கும்படி கோரியிருந்த நிலையில், தமிழர்கள் வாழும் பல நாடுகளில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வேளையில் சுவிசில் உள்ள ஒரு மனிதநேய நிறுவனமான GfbV எனப்படும் Gesellschaft für bedrohte Völker அதாவது அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் நிறுவனம் தமிழர்களின் சாட்சியங்களை பதிவு செய்து உதவ முன்வந்துள்ளது. (http://www.gfbv.de/ ) பல நாடுகளில் தமிழ் அமைப்புக்களாலும் தனி நபர்களாலும் சாட்சிப்பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், சாட்சியங்கள் பக்கச்சார்பில்லாமல் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்…
-
- 0 replies
- 724 views
-
-
சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான…
-
- 2 replies
- 939 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… சி. கா. செந்திவேல் 18 November 10 05:28 am (BST) சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன.. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன. ந…
-
- 24 replies
- 2.9k views
-
-
நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு சி.சந்திரமௌலிசன் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும் நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. “கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர். இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால் இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில…
-
- 7 replies
- 1.5k views
-
-
இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும். இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல் தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப் பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம். தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே தவிர ந்ம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவ…
-
- 0 replies
- 601 views
-
-
உண்ணாவிரதத்தை முடித்தார் மகசின் சிறைச்சாலை கைதி தேவதாசன் : குமரகுருபரன் வீரகேசரி இணையம் 11/20/2010 2:24:31 PM வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி, கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த, கொழும்பு மகசின் சிறைச்சாலைக் கைதியான கனகசபை தேவதாசன் (வயது 53), இன்று பிற்பகல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார். இதனை, ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் சற்றுமுன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கை மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறும் வழக்கை துரிதப்படுத்துமாறும் கோரி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமாகி வந்ததைத் த…
-
- 0 replies
- 435 views
-
-
Nov 20, 2010 / பகுதி: செய்தி / கல்குடாவில் சிங்களக் குடும்பங்களை குடியேற்ற திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா பிரதேசத்தில் 73 சிங்கள குடும்பங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு விரைவாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 16 ஆம் நாள் வாழைச்சேனை உதவி அரச அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் காணி ஆணையாளர் தர்மதாசா, வாழைச்சோனை பௌத்த ஆலயத்தின் பிரதமகுரு வண நவநி அபயவன்சலங்காரா தேரர், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி விமலசேனா, கல்குடா காவல்நிலைய பொறுப்பதிகாரி சமரசிங்கா, வாழைச்சேனை உதவி அரச அதிபர் இரிதரன் ஆகியோர் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு
-
- 0 replies
- 532 views
-
-
நமல் ராஜபக்சவிற்கும் பசில் இராஜபக்சவிற்கும் பனிப்போர் நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சி திட்டத்தில் நாமலின் தலையீடு பற்றி பல தடவை மஹிந்தவிற்கு பசில் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் மஹிந்தவின் துணைவியார் நாமல் ராஜபக்ஷவை, தன் கணவர் மஹிந்தவிற்கு அடுத்த நாட்டின் அதிகாரம் உள்ளவர் நாமல்தான் என அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றார். கடந்த வாரத்தில் கிளிநொச்சியில் காணி சுவீகரிப்பு கூட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ ஜி.எல்.பீரிஸ் அவர்கலை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தினார். இதனால் பசில் ஆத்திரமடைந்தார். இதற்கு பதிலாக நாமலின் மாவட்டமான ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி கூட்டத்திற்கு பசில் அழையா விருந்தாளியாக போய் குந்தினாராம். இவ்வாறு கருத்து மோதல்கள் வலுத்து வரும் நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்த அறிகுறியும் இலங்கை அரசிடம் இல்லை என்று சர்வதேச நெருக்கடி குழு குற்றம் சாற்றியுள்ளது. யுத்தத்தால் சின்னாபின்னமடைந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மறுவாழ்வை ஏற்படுத்தும் உறுதிமொழியுடன், 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய இலங்கை அதிபர் ராஜபக்ச அடுத்த 6 வருடத்திற்கான இரண்டாவது பதவிக்காலத்தை இன்று ஆரம்பிக்கிறார். இந்நிலையில்,யுத்தத்தினால் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்குத் தேவைப்படும் எந்தவொரு விடயங்களிலும் எந்தவொரு ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதற்கான அறிகுறி எதுவும் அரசாங்கத்திடம் காணப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கைத் திட்டத்திற்கான பணிப்பாளர் அலன் கீனன் குற்றம் சாற்றியுள்ளார். …
-
- 1 reply
- 589 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை 20 November 10 02:06 am (BST) இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடா நோக்கி சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கனடா மற்றும் இந்திய புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கனேடிய புலனாய்வுப் பிரிவின் ரொபர்ட் பி பெடனும், இந்திய புலனாய்வுப் பிரிவின் ராஜீவ் மாதூர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்…
-
- 1 reply
- 667 views
-
-
"தாய்நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் தேசிய ஐக்கியத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் உலகின் உன்னத தேசங்களின் மத்தியில் சிறப்பு மிக்க நாடாக இலங்கையை மிளிரச் செய்வதே தமது முதலாவது இலக்கு' என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ "அணிசேராமையே' அரசாங்கத்தின் கொள்கையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக முன்றிலில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ எமக்கு பகைநாடுகள் என்று எதுவும் இல்லை. அந்த மாதிரியான குழுக்களையோ, அணிகளையோ நாம் கொண்டிருக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்காக பலநாடுகளுடன் நாம் உடன்படிக்கை செய்துகொண்டிருந்தோம். நட்புறவு கொண்டிருந்தோம்.இப்போது அபிவிர…
-
- 0 replies
- 710 views
-
-
வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று உயர்மட்டத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளும…
-
- 0 replies
- 611 views
-
-
கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும் முத்துக்குமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
”ஆண் பிள்ளைகளுக்கு முன்னால் அம்மணம் ஆக்கி எஜமானியம்மா என்னை சோதனை செய்தார்” (படம் இணைக்கப்பட்டுள்ளது) சவூதி அரேபியாவில் எஜமானர்களின் கொடுமைக்கு பலிக் கடா ஆக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் ஒருவரின் கதை இது. பெருமாள் ராஜகுமாரி (வயது -35). கொழும்பில் கொஸ்கம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். இவரது தந்தைக்கு வயது-75. தாய்க்கு வயது 65. 13 வருடங்களுக்கு முன்பே கணவனால் கைவிடப்பட்டு விட்டார். மூன்று குழந்தைகள். ஒரு குழந்தைக்கு கண் பார்வை குறைவு. பெற்றோரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. எனவே கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி சவூதி அரேபிய வீடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். எஜமானர், எஜமானரின் மனைவ…
-
- 10 replies
- 23.5k views
-
-
ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும். போர்க்குற்ற விசாரணையை (War Crimes) மட்டும் முன்னிலைப் படுத்தாமல் இனப் படுகொலையையும் (Genocide) முன்னிலைப் படுத்துவதாக அனைத்து செயல் பாடுகளும் அமைய வேண்டும். போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அது குற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாக கொண்ட வடிவமைப்பு. இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணை பாதிக்கப்பட்ட இனத்தை, இன…
-
- 6 replies
- 1.2k views
-
-
நேர்த்தி செய்ய முறிகண்டி சென்ற நல்லூர் தம்பதியினர் விபத்தில் பலி [20 நவம்பர் 2010, சனிக்கிழமை 8:00 மு.ப இலங்கை] கிளிநொச்சி,நவ.20 கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் நேர்த் திக் கடன் செலுத்தச் சென்ற நல்லூரைச் சேர்ந்த தம்பதியர் விபத்தில் அந்த இடத்திலேயே மரணமானார்கள். மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத் தி லேயே தம்பதியினர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக் கப்பட்டது. நேற்றுக்காலை 7.30 மணிய ளவில் இடம்பெற்ற இந்த விபத் தில் நல்லூர் செட்டித்தெரு வைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா(வயது 52), அவ ரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி(வயது 48) ஆகி யோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இச்சம்பவத்தில் 8 படையி னர் கா…
-
- 0 replies
- 720 views
-
-
புனித மக்காவில் இலங்கையர் ஐவர் மரணம் வீரகேசரி இணையம் 11/20/2010 9:51:06 AM இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை. அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து, அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெர…
-
- 0 replies
- 534 views
-
-
சண்டிலிப்பாயின் வடக்கே அழகும் செழிப்பும் மிக்க ஒரு சிறிய கிராமமே ஆலங்குலாய் ஆகும். பல போராட்ட வடுக்களைச் சுமந்து நிற்கும் இக் கிராமம், முன்னேறிப்பாய்சல் காலப்பகுதியில் பாரிய சேதங்களை தாங்கியும் அழிந்து விடாமல் நிமிர்ந்து நிற்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணமானவர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கின்ற ஊர்ப்பற்று மிக்க இளைஞர்களும், மக்களும் தான் என்று சொல்லலாம். அவர்களின் ஒருங்கிணைப்பு மையமாக திகழ்வதும், ஆண்டாண்டு காலமாக தலை முறைகளாக கட்டி காத்து வரப்பட்டது இந்த நூலகம் தான். புலம் பெயர் தமிழர்களின் உதவியாலு மற்றும், குழந்தைகளுக்கான மாதாந்த மருந்துவ முகாம், மரணசடங்கிற்கான தள்ளுவண்டில் சேவை என இது தற்போது சிறிது சிறிதாக முன்னேறி வரும் நிலையில்.. கடந்த 16.11.2010 ம் திகதி இர…
-
- 2 replies
- 840 views
-
-
மஹிந்தவின் இரண்டாவது நிறைவேற்று அதிகார பதவி ஏற்பிற்கு பெரும் பொருட்செலவும் பெரும் அதிகாரமும் செலவழிகப்பட்டன. நாட்டின் பத்திரிகை தர்மத்திற்கு ஆப்பு வைத்த மஹிந்த அந்த பத்திரிகை துறையினரை தனது பிறந்த நாளிற்கும், பதவி ஏற்பு வைபவத்தின் போதும் தனது படத்தினை முதல் பக்கத்தில் பிரசுரிக்குமாறும் அத்துடன் அதி மேதகு ஜனாதிபதியினை வாழ்த்துகின்றோம் என போடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாராம். இவ்வாறு த எகொனொமிக் டைம்ஸ் கூறியுள்ளது. இதற்கமைய அனைத்து அரச இயந்திரங்களும் விரட்டியும் மிரட்டியும் பணத்தினை வழங்கியும் இந்த விளம்பரத்தினை செய்தனவாம். வில்லத்தனமான சிரிப்புடன் தனது பதவியினை ஏற்றுகொண்ட மஹிந்தா தமிழ் மக்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டவர். தேர்தல்களில் தமிழ் மக்கள் அவருக்கு வாக…
-
- 0 replies
- 733 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் மோதல்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 மாணவர்கள் உட்பட 14 பேருக்கு ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழக பாட நடவடிக்கையில் இணைந்துகொள்ள நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். நேற்று முன்தினம் வர்த்த பீட மாணவி ஒருவரை பகுடி வதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 5 மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் இருவருக்குமாக 7 மாணவர்களுக்கும் ஒரு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா நுண்கலைக் கல்லூரியில் கடந்த மாதம் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 மாணவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 461 views
-
-
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந் துன் நெத்தி மீது யாழ்ப்பாணத்தில் வைத்து இனந் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று சக்தி வானொலி தெரிவித்தது. இவர்கள் இருவரும் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவரான மொஹமட் ஹொடெக் மற்றும் அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கடந்த 14ஆம் திகதி மாலை ஞாயிற்றுக்கிழம…
-
- 0 replies
- 304 views
-
-
நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. அதேபோன்று அபிவிருத்திக்காகவும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. சர்வதேச நாடுகளும் முன்னெடுத்த ஒப்பந்தங்களை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பதவி ஏற்பு வைபவத்தில் கூறினார் மஹிந்தா. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள், யுத்தம், போதைப்பொருள், ஆயுதங்கள், ஊழல் மோசடிகள் ஆகியவை அற்ற நாடே எமக்கு வேண்டும். எனவும் மஹிந்தா பேசினார். தான் ஓய்வு பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பிரஜையொருவர் "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகளை ஒழுங்காகச் செய்துள்ளீர்கள்"என்று கூறினால் அதுவே எனது வெற்றியும் நான் செய்த வேலைகளுக்குமான திருப்தியுமாகும். என்…
-
- 0 replies
- 352 views
-
-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ்…
-
- 5 replies
- 1.4k views
-
-
யுத்தத்தின் முடிவின் பின்னரான புதுடில்லியுடனான சமன்பாட்டில் தொடர்ந்து சீனா காட்டை விளையாட விரும்பும் இலங்கைக்கு நோபாளத்திலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. நேபாளத்துக்குள்ள இந்தியாவுடனான பிரச்சினையை சீனாவை ஈடுபடுத்தாமல் நேபாளம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீன அரசுத் தலைமை கூறியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார் நேபாளம் தொடர்பில் இந்தியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பு தொடர்பான பயங்களை தீர்ப்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை உதவும் என்ற பிரசண்டாவின் கருத்துக்கு பதில் கூறுவதாகவே சீனாவின் அறிவுபூர்வமான இந்தக் கருத்துக் கூறப்பட்டது. இந்தியாவினதும் சீனாவினதும் தலையீட்டின் காரணமாகவே நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கான தீர்வு குழப்பப்படுவதாக ஒரு கருத்த…
-
- 4 replies
- 1.3k views
-