ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நாளை வரப்போகும் முதலாவது கப்பலை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை பிரதி அமைச்சர் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள வைபவத்தில் முதலாவது கப்பல் வரவேற்கப்படும் என்று துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டைய பட்டுப் பாதையை நினைவுகூரும் வகையில் பிரித் பாராயணத்துடன் ஒரு வழிகாட்டிப் படகு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும். இதையடுத்து முதலாவது கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும். ஜெட் லைனர் கப்பல் மற்றும் இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மற்றொரு கப்பல் என்பனவும் நாளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும். …
-
- 3 replies
- 641 views
-
-
Nov 17, 2010 / பகுதி: செய்தி / நிவாரணப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது - மகிந்த நிவாரணப் பணிகளில் தமிழர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கக் கூடாதென அரச சார்பற்ற நிறுவனங்களிடம் மகிந்த வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளின் போது எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழர்களை மட்டுமே முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றன. அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தினால் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் பாதிப்படைந்துள்ளார்கள். தமிழர்கள் மட்டும் பாதிப்படையவில்லை. ஆயினும் எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமும் பாதிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் பால் கவனம் செலுத்துவதில்லை என்றும் …
-
- 1 reply
- 535 views
-
-
ஓஷ்சாவா பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு 16 ம் திகதி செவ்வாய்கிழமை பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் நடனங்கள், ப…
-
- 2 replies
- 688 views
-
-
Nov 17, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு - பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு என்.எஸ்.எஸ்.பி கட்சியின் பொதுச் செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆரம்பம் முதல் நீதியான, தெளிவான, ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுவரும் கலாநிதி விக்கிரமபாகு, தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார். சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவாக இருக்கட்டும், அல்லது முன்னயை அரசுத் தலைவர்களாக இருக்கட்டும் அவர்கள…
-
- 1 reply
- 449 views
-
-
ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துநெட்டி மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்திய கூலிப்படையினரின் படங்களை ஜே.வி.பி வெளியிட்டுள்ளது. இவர்கள் இராணுவத்தினரின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிப்பதாகவும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இப்படங்களை ஜே.வி.பி யின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. www.tamilcnn.com
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவுக்கு இந்தியா ஊடாக பராக் ஒபாமாவின் செய்தி? நவ 18, 2010 இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இம்மாதம் 25ம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செய்தியொன்றை அவர் இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறவுள்ளார் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி இலங்கை தொடர்பில் ஏதோ இரகசிய செய்தியொன்றை கிருஸ்ணாவிடம் கூறியுள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கை விஜயத்தின் போது கிருஸ்ணா அந்தச் செய்தியை இலங்கை அரச தலைவர்களிடம் எட்ட வைக்கவுள்ளார் என்பதுடன், பெரும்பாலும் சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவுகள் குறித்ததாக அந்தச் செய…
-
- 1 reply
- 748 views
-
-
கிளி நொச்சியில் போதைப்பொருள் கலந்த பாக்கு சீவல் விற்பனை கிளிநொச்சியில் போதைப் பொருள் கலந்த பாக்குச் சீவல் விற்கப்படு வருகின்றது. கிளிநொச்சியின் நகரப் பகுதியிலும் தருமபுரம் பகுதியிலும் போதைப்பொருள் கலந்த பாக்குச் சீவல் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. தென் இலங்கை வியாபாரிகள் இந்த விற்பனையில் ஈடுபடுகின்றனர். பாக்கு சீவல் என்ற பெயரில் இவை விற்கப்பட்டு வருகின்றன. கலர் பாக்கு என்ற பேரிலும், பீடாபாக்கு என்ற பேரிலும் இவை விற்கப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. சமீப காலமாக இத்தகைய போதைப் பொருள் கலந்த பாக்குச் சீவலைப் பாடசாலை மாணவர்கள் இரகசியமாகப் பெற்றுப் பாவித்து வந்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் …
-
- 1 reply
- 897 views
-
-
போராளிகளை மீட்டுத்தர நான் பணம் வாங்கினேனா? தப்பு என்கிறார் வினாயகமூர்த்தி எம்.பி. போராளி எழிலனின் மனைவி அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சுதாவின் உறவினர் ஆகியோரிடம் சம்பந்தப்பட்டவர்களை மீட்டுத்தர காசு வாங்கியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உண்மையில் நான் வாங்கவில்லைஇவ்வாறு கூறியுள்ளார் கூட்டமைப்பு எம்.பி. வினாகமூர்த்தி உண்மையில் நடந்தது என்ன? கடந்த சில வாரங்களிற்கு முன்பு மேஜர் மதியழகன் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர் தான் பயங்கரவாத புலனாய்வுத்துறையைச் சார்ந்தவர். விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான எழிலன் இராணுவத்தினரிடம் சரணடைந்து இப்பொழுது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுவிப்பதற்கு 15 இலட்சம் ர…
-
- 1 reply
- 752 views
-
-
சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில் முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். 'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். …
-
- 0 replies
- 659 views
-
-
பாகம் 1 'முள்ளிவாய்க்கால் மே 19 - ஈழத் தமிழர் வரலாற்றில் நேர்ந்த ஓர் ஊழிப் பெருவெள்ளம் (பிரளயம்);. அது எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது. பழைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. புதிய சூழலுக்கேற்பப் புதிய பார்வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், வேறு வழியில்லை”. அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்த போது, ஈழத் தமிழ்ப் பெரியவர் ஒருவர் இவ்வாறு பேசக் கேட்டேன். அவர் தம்மை ஈழத் தமிழர் என்று கூட சொல்லிக் கொள்ளாமல், 'இலங்கைத் தமிழர்' என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். கருத்துப் பிளவு தமிழர் தாயகம், இறைமை மீட்பு, தமிழீழ விடுதலை… இந்தக் குறிக்கோள்களையெல்லாம் அடியோடு மறந்து விட்டு, அங்கே துயருற்ற மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச்…
-
- 4 replies
- 793 views
-
-
த.தே.கூ உடைபடக் கூடிய சாத்தியங்கள் உள்ளது - வீரகேசரி நவ 18, 2010 தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பலரும் முயன்றுவரும் நிலையில் தமிழத் தேசிய கூட்மைப்பு உடைபடக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல தமிழ்ப் பத்திரிகை (வீரகேசரி) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த தமிழ்த் தேசிய கூட்மைப்பினர் கருத்துக் கூற மறுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவாம் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் இயங்க வேண்டுமென்னும் சுலோகத்தில் சிலரும் இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில்தான் இயங்க வேண்டும் என்று சிலரும் பனிப்போர் ஒன்றில் ஈடுபட்டுவருதைக் காணக் கூடியதாக இருப்பதாக அப்பத்திர…
-
- 1 reply
- 770 views
-
-
Nov 18, 2010 / பகுதி: செய்தி / இராமநாதன் முகாமில் இருப்பவர்களையும் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்ற நடவடிக்கை மனிக்பாம் வலயம் நாலில் இருந்த அகதிகளை பலவந்தமாக இடம் மாற்றியதுபோல் - இராமநாதன் முகாமில் இருப்பவர்களையும் கதிர்காமர் முகாமுக்கு மாற்றுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயினும் இவ்வாறு இடம்மாறுவதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை என்ற தமது நிலைப்பாட்டை அதிகாரிகளிடம் தெரிவித்து, மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோருவதற்காக எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என முகாம் வாசிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இராமநாதன் முகாமில் மாத்திரம் 4500 பேர் வரையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இங்குள்ளவர்களை இன்று கதிர்காமர் முகாமுக்கு இடம் மாற…
-
- 0 replies
- 323 views
-
-
குவல்ப் ஹம்பர் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீர்ர் தின நிகழ்வு 17ம் திகதி புதன்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது. கனேடிய தேசியக்கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழீழ கொடிக்கீதம் இசைக்கப்பட்டது. அடுத்த தாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகைதந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் தெரிவித்தனர். இதன் பின்னர் மாணவர்களால் ஓழுங்குசெய்யப்பட்ட எழுச்சி நடனங்கள் பேச்சுக்கள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்றன. பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு இந்த ஆண்டே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 575 views
-
-
நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது Posted by: on Nov 17, 2010 ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது. …
-
- 0 replies
- 623 views
-
-
பொருளாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது 17 November 10 12:24 pm (BST) பொருளாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யாங் சுப்பிங்கும், நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இதேவேளை, சீன ஜனாதிபதி ஹீ ஜின்டாவோவின் விசேட பிரதிநிதி சான் கோவுவேய் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
-
- 4 replies
- 502 views
-
-
ஆய்வு நிறுவனம் ஒன்று உலக அளவில் 196 நாடுகளில் உள்ள தீவிரவாதம் சம்பந்தமான நிலமைகளின் அடிப்படையில் ஓர் தகவல்சுட்டியை வெளியிட்டுள்ளது. சீனா, அவுஸ்திரேலியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கனடா, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில் தீவிரவாதம் சம்பந்தமான ஆபத்துக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தீவிரவாதம் சம்பந்தமான ஆபத்துக்கள் முன்னைய நாடுகளைவிட அதிக அளவில் காணப்படுகின்றன. சோமாலியா, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளில் தீவிரவாதம் சம்பந்தமான ஆபத்துக்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சில நாடுகளில் தீவிரவாதம் சம்பந்தமான ஆபத்துக்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஏனைய பகுதிகளைவிட அதிக அளவில் காணப்படுகின்றன. உ+ம்: இலங்கை கொ…
-
- 0 replies
- 809 views
-
-
கொழும்பு: இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்திருந்த, இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த வீடு மிக ஆடம்பரமான, சகல வசதிகளும் நிறைந்தது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் வரதராஜப் பெருமாளின் தொலைபேசி உரை மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும், அதற்கு இலங்கை அரசு அளித்த வெகுமதிதான் இந்த வீடு என்றும் கூறப்படுகிறது. http://thatstamil.oneindia.in/news/2010/11/17/lanka-go…
-
- 0 replies
- 614 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் விசாரணைப் பணி, யாழ்ப்பாணத்திலும் முடிபடைந்துவிட்டது. வன்னி யுத்தத்தின் போது நடந்த கொடூரங்களை கேட்டறிந்து கொள்வதற்காக இந்த ஆணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு கண்ணீர்க் காவி யமாய் சாட்சியங்கள் அமைந்திருந்தன. என் பிள்ளை எங்கே? என் கணவர் எங்கே? அம்மாவை இழந்தேன், அப்பாவைப் பறிகொடுத் தேன், அண்ணாவைக் காணவில்லை, தம்பியைத் தேடுகின்றோம், கடவுளே! எத்தனை துயரம். இனப் பேதமை, மனித நேயமில்லாத மானிடச் சமூகம், எத்தனை துயரத்தை நமக்குத் தந்து விட்டன. சாட்சியங்களைக் கேட்டவர்கள் நிச்சயமாக மனிதத்திற்காக அழுதிருப்பார்கள். இரு…
-
- 0 replies
- 675 views
-
-
இலங்கை தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை: ரணில் வீரகேசரி இணையம் 11/17/2010 4:17:00 PM இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை என்று எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை சென்ற போது ஊடகவியலாளர்கிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இங்க தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சொந்த விடயமாக சென்னை வந்துள்ளேன். இன்று ஒரு நாள் இங்கு தங்குகிறேன். அப்போது, சிலரை சந்தித்து பேச உள்ளேன். கேள்வி : இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி எந்த அளவுக்கு நடை பெறுகின்றது? அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் எங்கள…
-
- 2 replies
- 771 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவில் நடத்த அனுமதிக்க முடியாது-மத்திய அரசு புதன்கிழமை, நவம்பர் 17, 2010, 12:43[iST] டெல்லி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியா [^] வில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை [^] எடுக்கப்படும் என, மத்திய அரசு [^] எச்சரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு, உலகம் முழுக்க பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நாடுகடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்படும் அந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்…
-
- 4 replies
- 951 views
-
-
சேபியர்கள் போலவே சிங்கள சமூகம் நடந்துகொள்கிறது: அமெரிக்க எழுத்தாளர் நவ 16, 2010 யூகோஸ்லாவாக்கியாவின் பெரும்பான்மை இனமான சேபியர்கள் போலவும், ஈரானில் உள்ள சியாற்றி இன மக்களைப் போலவும் சிறுபான்மை இனத்தின் மீது அதிக இனத்துவேசம் கொண்டவர்களாக சிங்கள சமூகம் உள்ளது என அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை எழுத்தாளர் றொபேட் டி கப்லன் தெரிவித்துள்ளார். இந்து சமூத்திரப் பிராந்தியமும், அமெரிக்காவின் எதிர்கால ஆளுமையும் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பூகோள அரசியலில் சிறீலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகம் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதை பர்மாவைக் கொண்டு தீர்மானிக்கலாம். இந்தோனேசியாவும் உலக …
-
- 4 replies
- 982 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான ரமேஷ், நடேசன், புலிதேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும் அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர் எனவும் மேஜனர் ஜெனரல் சவீந்திர சில்வா நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும்போதே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர (தலைவர்), டபிள்யூ.எம்.பி.பி. வராவேவ, எம்.எஸ்.ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ட்ரையல் அட் பார் விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பு வழக்குரைஞரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண தலைமையில்…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதன்கிழமை, நவம்பர் 17, 2010 நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் சரிசமமாக நடத்தப்படுகின்றனரா? அவர்கள் சரியான உரிமையோடு வாழ்கின்றார்களா?அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந் நாட்டில் வாழும் தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வடக்கில் தற்போது யுத்தம் முடிவடைந்தும் இராணுவத்தினரின் அட்டகாசம் ஓயவில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகு…
-
- 3 replies
- 758 views
-
-
பிரபல கசினோ மன்னன் இலங்கையில் முதலீடு! செவ்வாய், 16 நவம்பர் 2010 17:35 பிரபல கசினோ மன்னன் ராகேஷ் ஜுனிஹுன்வாலா இன்னும் ஆறு மாத காலத்துக்குள் இலங்கையில் கசினோ கட்டிடத் தொகுதியொன்றைத் தொடங்கவுள்ளார். இந்தியப் பிராந்தியத்தில் கசினோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அது தற்போது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. எனவே தெற்காசியாவின் மிகச் சிறந்த கசினோ நிலையத்தை தான் இலங்கையில் உருவாக்கவுள்ளதாக ராகேஷ் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் பணக்கார கசினோ நிறுவனமான டெல்டாவின் உரிமையாளரே இவராவார். இவர் உலகின் 57 வது பணக்காரரும் கூட. கொழும்பில் கசினோ பிராந்தியத்தின் ஆரம்பத்தோடு கொழும்பு பேராவாவிப் பகுதி கசினோ நிலையங்களின் கேந்திர மையமாக ம…
-
- 2 replies
- 755 views
-
-
17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாயக விடியலுக்காய் உழைத்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 2.3k views
-