Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுயை இம்மாணவி குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான ஐயுப்கான் அஸ்சிறாபேகம் என்ற மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://www.tharavu.com/2010/10/blog-post_1435.html

    • 0 replies
    • 790 views
  2. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து போலீசார் வைகோ உள்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_14.html

    • 0 replies
    • 1.1k views
  3. கொழும்பு மாநகரசபை எல்லையில் வீடுகளை அகற்றி சீனக் கம்பனிகளுக்கு வழங்கத்திட்டம் - ரணில் அக் 15, 2010 கொழும்பு மாநகரசபை எல்லையில் உள்ள 68 ஆயிரம் வீடுகளை நிர்மூலமாக்கி அம் மக்களை வெளியேற்றி அனைத்துக் காணிகளையும் சீனக் கம்பனிகளுக்கு விற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையை அதிகார சபையாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டர்h. sangathie

  4. மண்டியிட மறுத்து நிமிர்ந்து நிற்கிறது சிறிலங்கா - அதிர்ச்சியில் அனைத்துலக சமூகம் [ வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010, 05:02 GMT ] [ தி.வண்ணமதி ] போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் இதுவிடயம் தொடர்பில் வளைந்து கொடுப்பதற்கு மறுக்கிறது. இந்த விடயம் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீக்கத்துக்கும் வழிவகுத்து, ஆயினும் இந்த வரிச்சலுகை நீக்கம் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் பெரியளவில் பாத்திப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நிகழவில்லை. இது தொடர்பாக ‘ஐ.பி.எஸ்’ [iPS] என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை ’புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்திருப்பவர…

  5. சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010 முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீரென வந்து தாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும். திரும்பப் போகப்போவ தில்லை எனத் தெரிவித்திருக்கும் சிங்களக் குடும்பங்களின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் சிவில் நிர்வாகத்துக்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பி.பி.ஸிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேறும் நோக்குடன் வந்துள்ளதாகக் கூறும் யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் தொடர்பாக பி.பி.ஸிக்கு யாழ். அரச அதிபர் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.ஸி. செய்திச் சேவையில் தெரிவிக்கப் பட்டதாவது: யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாடகைக்கு குடியிருந…

    • 1 reply
    • 1.2k views
  6. ராஜபக்சவின் உருவப்படத்தைத் தொங்கவிடுங்கள் : தமிழ் உணர்வாளர்கள் காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது. பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில…

    • 3 replies
    • 963 views
  7. பொதுநலவாய போட்டிகளின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்கிறார் என்ற செய்தி பொய்யானது இந்தியாவின் புதுடெல்லி நகரில் நடைபெறும் 19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாள் விழாவின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்வதாக அரச மற்றும் தனியார் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் என்ற வகையிலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாhpயொருவர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி இந்த வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்கிறார் என அரசாங்கத்தின் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொதுநலவாய நடவடிக்கைகளில் அவ்வாறான வ…

    • 4 replies
    • 959 views
  8. Oct 13சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி தீவிரம். Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) சிறைத் தண்டனை பெற்றுள்ள சரத் பொன்சேகாவின் குடியுரிமையை ரத்துச் செய்துவிட்டு அவரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கான வழி வகைகள் குறித்து ஜனாதிபதி தனக்கு நெருக்கமான சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை தொடர்பில் நாளுக்கு நாள் வலுத்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பை கருத்திற் கொண்டே அவரை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது. அதன் மூலம் பொதுமக்களின் எதிர்ப்பல…

  9. தமிழர்களே பின்னூட்டம் இடுங்கள். இனவெறியன் "கேமிக்கல்" ராசபக்சே காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க இந்தியா வருகை... Cycling, marathon and closing ceremony of the Commonwealth Games will be telecast live from air as the government on Friday allowed using helicopters over the road events and the Jawaharlal Nehru Stadium. The decision to allow helicopters to fly over designated roads of cycling and marathon and the stadium was taken at a high-level meeting attended by top Home Ministry officials and security agencies. However, the choppers will not be allowed to fly over the no-fly areas like Rashtrapati Bhavan, Parliament House and Prime Minister’s residen…

    • 3 replies
    • 1.4k views
  10. செக் குடியரசில் வன்னி எலி ‘தமிழியம்’ சுபாஸ் இயக்கிய “வன்னி எலி” குறும்படம் செக் குடியரசில் நடைபெறும் 14 வது சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளது. இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 26 முதல் 31 வரை வண்ணமயமான வசந்தகால சூழலில் செக் குடியரசில் நிகழ உள்ளது. உலகம் முழுதும் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட படங்களிலிருந்து கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் நிகழ்ச்சியின் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வன்னி எலி இவ் நிகழ்ச்சியின் ஷார்ட் ஜாய் என்ற பிரிவில் பங்கேற்கிறது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய ஆவணத்திரைப்பட விழாவான ஜிலாவா சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில் தேர்வாகும் திரைப்படத்தின் படைப்பாளி அதன் உருவாக்கம் குறித்…

  11. முல்லைத்தீவு, உடையார் கட்டு குளக்கட்டை அண்டி அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி "பங்கர்' ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிக ளின் வான்படைப் பிரிவுக்குச் சொந்தமான 75 கிலோ மற்றும் 50 கிலோ நிறைகளைக் கொண்ட 11 விமானக் குண்டுகள் யாழ். பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குற்ற விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன. நான்கு அடி நீளத்தையும் 2 அடி சுற்றளவைக் கொண்டதுமான 75 கிலோ நிறை கொண்ட 4 விமானக் குண்டுகளும், ஏறக் குறைய அதே அளவுகளைக் கொண்ட 50 கிலோ எடையுள்ள 7 விமானக் குண்டுகளும் இவ்விதம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன என்று மேற்படி பொலிஸ்குழு தெரிவித்துள்ளது. மேலும் யுத்தம் நிலவிய கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு தமது இலகுரக விமானங்கள் மூலம் தெற்கின் பொருளாதார இலக்குகள…

  12. வடக்கில் அதிகளவு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அபிவிருத்தி நிறுவனமொன்றின் முன்னணி ஆய்வாளர் முத்துகிருஸ்ணன் சரவணானந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாயத் துறையில் அதிகளவு முதலீடுகள் அவசியப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 25 ஆண்டு காலமாக தங்கி வாழும் மனோ நிலையைக் கொண்டுள்ள மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு உடனடியாக தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவிகளை நம்பியே யுத்த பிரதேச மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில் உடனடி மாற்றம் அவசியம் எனவும், மக்களின் வாழ்வதாரத்தை வலுப்படுத்தி அவர்களின் வருமான வழிகளை ஸ்…

    • 0 replies
    • 498 views
  13. அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் அவரை கொல்லப்போவதாக மீண்டும் தொலைபேசி மிரட்டல் விடப்படுள்ளது. மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அ.திமு.க பொதுச்செயலாளர்.ஜெயலலிதா கலந்து கொண்டால் குண்டுவைத்து கொல்லப்படுவார் என தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளரிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. அந்தப் புகார் மனுவில்,ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுக்கப் பட்டதற்காக கிண்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலின் சி.டி.யும் இணைக்கப் பட்டிருந்தது. அதை சி.பி.ஐ க்கு அனுப்பி வைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது அந்தப் புகார் மனுவில், “தொலைபேசியில் தொடர்பு…

    • 0 replies
    • 633 views
  14. பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு… http://meenakam.com/?p=10710

  15. புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது இந்தியத் தலைமை எதிர்பார்க்காத ஒன்றாக இருந்திருக்காது. அதனை எதிர்பார்த்தும் மகிந்தவை புதுடில்லி அழைத்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. சீனாவுடன் நெருக்கமாகவுள்ள மகிந்தவை தமது பக்கத்துக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இதுவும் உள்ளது. புதுடில்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்னான பேச்சுக்களை மீள ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் …

    • 3 replies
    • 1.1k views
  16. ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம் ரொறொன்ரோ, கனடா தமிழ் இளையோர் அமைப்பு வெளிவரவிருக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டு ஈழத் தமிழர் படுகொலை காட்சிகளை கொண்டிருப்பதோடு, அவர்களது நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு காட்டபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ் விளையாட்டானது தமிழர்களை கொடிய கொலைகாரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து, அவர்களை கொல்வதை விளையாடும் இளையோர்களுக்கு இலக்காக வழங்குகி அவர்களுக்கு தப்பான கருத்தூட்டம் செய்கின்றது. தமிழர் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் ‘Ghost Recon Predator’ எ…

  17. வடகிழக்கில் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை நிலவுகின்றது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் புனரமைக்கப்படாதமையால் பாடசாலை மாணவர்கள் மர நிழல்களின் கீழிருந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் வடக்கு கிழக்கில் யுத்தினால் சேதமைடைந்த பாடசாலைகள் இன்னும் புனரமைக்கப்படவில்லை. இதனால் இந்த மாகாணங்களில் பாடசாலைச் சிறுவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். என்று அவ் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வன்னிப்பகுதியில் மீளக்குடியேற்றப்பட்ட பகுதிகளில் துவக்கப்பட்ட பாடசாலைகளில் தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை என்று மக்களின் விசனம் தெரிவிக்கின்றார்கள். h…

  18. மட்டக்களப்பில் யானைத்தாக்கும் சம்பவம் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39ம் கொலனியில் வீட்டிற்குள் யானை புகுந்து தாக்கியதில் 69வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதோடு நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரு சிறுமிகளும் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இச்சிறுமிகள் படுகாயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது கொல்லப்பட்ட பெண் படுத்துறக்கிக்கொண்டு இருக்கையில் யானையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://m…

  19. தாய்லாந்து ஏதிலிகளின் பிரச்சினை தொடர்பாக கனிமொழி எம்பி யுடன் ஏதிலிகளை நாம் தொடர்பெடுத்துக்கொடுத்து பேசியதன் ஒலிப்பதிவு.. http://meenakam.com/?p=10695

  20. UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல் UNHCR இல் பதிவு செய்து தாய்லாந்தில் இருக்கும் தமிழீழ ஏதிலிகளை கனடிய சர்வதேச காவல்துறையும், சிறீலங்கா காவல்துறையினரும் முறையற்ற முறையில் கைது செய்கின்றனர். இது தொடர்பாக தாய்லாந்திலுள்ள ஈழ ஏதிலி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு அளித்த செவ்வி… http://meenakam.com/?p=10692

  21. வட மாகாணத்துக்கான அபிவிருத்திக் குழுவின் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி வவுனியா இராணுவ தலைமை முகாமில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் கருதியே இராணுவ முகாமில் அதனை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழு கூட்டமும் திருமலை கடற்படை முகாமில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வடக்கு அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். www.tharavu.com

  22. எமது கட்சயில் இருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திரு…

    • 0 replies
    • 557 views
  23. பிரபாகரன் இருக்கிறாரா என்பது குறித்து காலம் பதில் சொல்லும்-'பிரதமர்' ருத்திரகுமாரன் புதன்கிழமை, அக்டோபர் 13, 2010, 10:44[iST] லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள உருத்திரகுமாரன். பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அளித்துள்ள பேட்டி: ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு …

  24. 13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம் படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

  25. புதன்கிழமை, 13, அக்டோபர் 2010 (10:16 IST) இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா? கி.வீரமணி கண்டனம் டெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ‘இடிஅமீன்’ ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதா என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஈழத் தமிழர்களை அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் பட்டியில் அடைக்கும் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.