ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
கியூப பிரஜைகள் ஐவரை சிறை வைத்திருக்கும் அமெரிக்கா அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அமைச்சர் விமல் வீரவன்சவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான மனுவொன்றை அமெரிக்கத் தூதருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்க முயற்சி செய்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27677
-
- 0 replies
- 637 views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010 எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சங்கடத்தில் தள்ளியுள்ளனர். இவர்களது பேச்சினை இனியும் கேட்டுக் கொண்டிருக்காது அனோமா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதன் மூலமே தனது கணவரை விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், சரத் பொன்சேகா என்பவருக்கு செல்யூட் அடிக்கவும் செல்யூட் வாங்க…
-
- 0 replies
- 515 views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010 யாழ் வந்துள்ள அத்து மீறிய சிங்கள குடியேறிகள் பற்றி கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் தமக்குச் சொந்த நிலம் இருப்பதாக யாழ். வந்துள்ள சிங்களக் குடும்பங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அவர்கள் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களா என்பதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கனவே இங்கு வாழ்ந்தார்களா என்பது குறித்தும் ஆராயவேண்டும். அப்படி அவர்கள் வாழ்ந்தவர்களாக ஆதாரம் இல்லாவிடில் இதனைச் சிங்களக் குடியேற்றமாகவே கருதவேண்டும். இது தொடர்பாக யாழ். அரச அதிபருடன் நான் பேசவிருக்கிறேன் என்றார் அவர். ஈ.பி.டி.பி. எம்…
-
- 0 replies
- 686 views
-
-
Human violations committed during the Sri Lanka conflict must be subject to an independent, international investigation, former UN Assistant Secretary General Denis Halliday was quoted by Irish Times. “Sri Lanka has been forgotten, despite the staggering violations of human rights, the war crimes and the crimes against humanity that took place there,” he has said. “All this has been ignored.” http://www.dailymirror.lk/index.php/news/7009-sl-forgotten-halliday.html
-
- 0 replies
- 663 views
-
-
நடுவர்களின் தவறினால் தனது தங்கப்பதக்கத்தை இழந்த அவுஸ்த்திரேலிய குறுந்தூற ஓட்ட வீராங்கனை - சல்லி பியர்சன் நேற்று மாலை பொதுநலவாயபோட்டிகளில் நடந்த பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்ற அவுஸ்த்திரேலிய குறுந்தூர ஓட்ட வீராங்கனை பல மணிநேரத்திற்குப் பின்னதாக தனது ஓட்டம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டு தனது தங்கப் பதக்கத்தையும் இழந்தார். ஓட்டம் ஆரம்பிக்க ஆரம்பிப்பாளரினால் வேட்டுத் தீர்க்கப்படும் தருணத்தில் சற்று முன்னதாகவே ஓடத் தொடங்கிவிட்டர் என்கிற காரணத்தை முன்வைத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. போட்டியின்போது முதலில் ஓட ஆரம்பித்தவர் இங்கிலாந்து விராங்கனை. அவரைத் தொடர்ந்தே அவுஸ்த்திரேலிய வீராங்கனை ஓட ஆரம்பித்தார்.…
-
- 3 replies
- 969 views
-
-
180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியமர யாழ்.வந்தன. காணிகள் தருமாறு அரச அதிபருக்கு மனு: திரும்பப் போவதில்லை எனவும் தெரிவிப்பு முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந…
-
- 1 reply
- 590 views
-
-
ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?. யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார். இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்கு சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக்சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார்கள். போருக்கு பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கி…
-
- 7 replies
- 1.6k views
-
-
வியாழக்கிழமை, 7, அக்டோபர் 2010 (16:5 IST) விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சேவே கூறிவிட்ட நிலையில், இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாயக் கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவ…
-
- 2 replies
- 655 views
-
-
ஏமாறாதே ஏமாறாதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே! “மானிட வாழ்வென வாழ்வென நொந்து...” இந்தப் பாடல் வரிகள் பட்டினத்தடிகளுக்கு உரித்தானவை.மானிட வாழ்வில் இறுதிக்கால சோகத்தை அனுபவ வாயிலாக உணர்ந்து பாடப்பெற்ற இந்த வரிகளை ஈழத் தமிழ் மக்கள் பல வரு டங்களாக அனுபவித்து கண்ணீர் விடுகின்றனர். இடப் பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரி ழப்புக்கள், காணாமல் போனவர்களின் சோகங்கள், ஊனங்கள், முட்கம்பி முகாம்கள், குடிசை வாழ்வு இப்படி எத்தனையே சோகங்கள் எங்கள் வாழ்வை நாசம் செய்துவிட்டன. முற்றுப் பெறாத தொடர் சோகமாக இருக்கும் இத் துன்பியலில் இருந்து விடுபடுவ தற்கான வழியை இறைவனே வகுத்தருள வேண்டும். அந்த நம்பிக்கையைத் தவிர தமிழ் மக்களிடம் வேறு எதுவும் இல்லை. முப்பது ஆண்டுகால யுத்தமும் இனப் பிரச்சினையும…
-
- 2 replies
- 2.2k views
-
-
பூகோள வலயத்தினுள் நாடுகடந்த அரசுகள்?-நாகலிங்கம் மதியழகன்- திகதி: 07.10.2010 2009 மே 19 இற்கு முன்னரும் பின்னருமாக இலங்கையின் தமிழர் போராட்டத்தை இரு பிரிவிற்குள் கொண்டுவரலாம். 2009 மே இற்கு முன்னராக இலங்கை அரசாங்கத்தின் அதிகூடிய விற்பனைப் பொருளாக 'யுத்தமும்' பொருளாதாரத்தை ஈடுசெய்யும் உற்பத்திப் பொருளாக 'சமாதானத்தையும்' நகர்ந்து சென்ற கால வரலாற்றில் காணக்கூடியதாக இருந்தது. 2009 மே இற்கு பின்னராக இலங்கை அரசாங்கத்தின் விற்பனைப் பொருளாக 'நாடுகடந்து தமிழர் உரிமைக்காக போராடும் அமைப்புகளை' தடை செய்தல். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் தனது காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் அதேவேளையில். யுத்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றிய கவனத்தை திசை திருப்பும் ஒர…
-
- 1 reply
- 838 views
-
-
ஒவ்வொரு நாட்டிலும் அறவழியிலும் அரசியல் வழியிலும் எமது மக்களை ஒருங்கிணைக்கும் பாரிய வரலாற்றுக் கடமை நம் முன் நிற்கிறது. அதனை நிறைவேற்றும் முயற்சியின் அங்கம்தான் தேசிய அளவில் கட்டியெழுப்பப்படும் ஈழத்தமிழர் அவைகள் என்பதை அனைவருக்கும் எடுத்துரைத்து, அரவணைத்து, மாபெரும் மக்கள் சக்தியாக மாற்றவேண்டியது எமது கைகளிலே உள்ளது. ஈழத்தமிழர் அவைகள்; எமது இலக்கான தமிழீழத் தாயகக் கனவை நினைவாக்கி, தமிழர்களுக்கென்று சுதந்திரமும் இறையாண்மையும் மிக்கதொரு நிலப்பரப்பினை உருவாக்கி, எம் இனம் செழிப்போடு வாழ வழி சமைக்கப்பாடுபடுகிறது என்பதை எம் மக்கள் தெளிவாக உணரவேண்டும். அதற்கேற்றவாறு எமது வேலைகளை துல்லியதாகவும் உறுதியாகவும் வரையறுத்து செயல்படவேண்டும். மேலும், ஈழத்தமிழர் அவைகள் தனித்தமிழீ…
-
- 0 replies
- 632 views
-
-
'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று' என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், 'மலர்ந்தது சிங்கள தேசம்' என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான ஆனந்த விகடன் இதழில் வெளியான செய்தி அப்படியே வாசகர்களுக்காக, சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி …
-
- 1 reply
- 910 views
-
-
காத்திருக்க வைக்கும் உத்தியே! போர் முடிவடைந்து விட்டது. ஆனால் தமிழர் களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இந்த நாட்டின் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் முடிவடையவில்லை, ஒடுக்கு முறைகள் தொடர்கின்றன. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் நாட்டில் வாழும் மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்று பலவாறாக அரசாங்கத் தரப்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் போர் முடிவுற்று 15 மாதங்கள் கடந்தும் இனப்பிரச் சினையைத் தீர்ப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. இந்த நிலையை நீக்கி, அரசாங்கத்துக்கும், சிறுபான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளுக்கும், அவர்கள் தலைவர்களுக்கும் இடையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண் டும். புத…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை துரிதகெதியில் அகலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். வீதியோரக் கட்டடங்களை அகற்றியும் பள்ளங்களைச் சீர்செய்தும் மரங்களை அகற்றியும் மிகவேகமாகப் இப்பணி நடைபெறுவதைக் காண முடிகின்றது. வீதியோரத்திலுள்ள தனியார் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சுற்றுமதிலை சிறிது உள்வாங்கிக் கட்டியும் தமது எல்லைகளை இப்பணிக்கு விட்டுக் கொடுத்தும் உதவி செய்வதைக் காண முடிகின்றது. வீதிக்காகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் நிலத்தைச் செவ்வை செய்தும் மண் நிரப்பி வீதிக்குள் உள்வாங்கியும் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருவதையும் காண முடிகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27603
-
- 14 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழருக்கு பிழைப்பில்லை; சிங்களருக்கு சுற்றுலாத் தலம்! ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரினால் உள்நாட்டிலேயே அகதிகாளாக்கப்பட்டு, தங்கள் வாழ்வுடங்களையும், வசித்த இல்லங்களையும், தங்கள் காணிகளையும் இழந்து, பிழைப்பின்றி தமிழர்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களுக்காக சுற்றுலாத் தலங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறது சிறிலங்க இராணுவம்! யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் கடலோர பட்டிணமான காங்கேசன்துறை ஒரு நேரத்தில் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தொரு நகராகும். தமிழர்களுக்கு எதிரான போரில் அங்கு வாழ்ந்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டு, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அந்தப் பகுதிதான் இன்று ஒரு சுற்றுல…
-
- 0 replies
- 843 views
-
-
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதி தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ் விவசாயிகள் தொடர்ந்தும் சிங்களவர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்டப் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி்.செல்வராசா தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் சுமார் 25 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட்டிருந்த காலப்பகுதியில் சிங்களவர்கள் இந்த நிலங்களை ஆக்கிரமித்திருந்தனர். அண்மையில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்த தமிழ் விவசாயிகள் இருவர் சிங்களவர்களால் அடித்து விரட்டப்படடுள்ளதாக செல்வராசா தெரிவித்துள்ளார். இது சம்பந்தம…
-
- 0 replies
- 642 views
-
-
சிறைவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உதவி வரும் சிறை அதிகாரிகள் தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின்படி சிறைச்சாலைகள் ஆணையாளர், சிறை அத்தியட்சகர் சாந்த பெர்னாண்டோ என்பவரை ஈடுபடுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை சிறையில் பணியாற்றிய இவர் உடனடியாக வெலிக்கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரியே, பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறை அறையிலிருந்த மின்விளக்கு மற்றும் கட்டில்களை அகற்றியுள்ளார். இதனிடையே, பொன்சேகா தொடர்பான சகல தகவல்களையும் இந்த அதிகாரி சிறைச்சாலை ஆணையாளருக்கு வழங்கி வருவதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. http://www.tharavu.com/2010/10/blog-post_6160.html
-
- 0 replies
- 720 views
-
-
எம். வி சன் சீ கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி கனடாவை அண்மிக்கும் என எதிர்பார்ப்பு. திகதி: 04.08.2010 200 அகதிகளுடன் கனடாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் எம். வி சன் சீ கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி கனடாவை அண்மிக்கும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. இந்த கப்பல் கடந்த மே மாதம் தாய்லாந்து வளைகுடாவை அண்மித்ததுடன், அதே மாதம் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பையும் அண்மித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், எம்.வி சன் சீ கப்பல் கடந்த மாதம் கோடேமலாவை அண்மித்திருந்ததாக த ஏசியன் ரிபியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த கப்பலில் தாய்லாந்து கொடி பறக்க விடப்பட்டிருப்பதாகவும், அந்த கப்பல் கனடாவை நோக்கி பயணிப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினரால் அ…
-
- 39 replies
- 4.1k views
-
-
சரத்பொன்சேகாவிற்காக தன்னை சிறையில் அடைக்குமாறு கூறிய சோபித தேரர் இன்று கண்டியில் தலதா மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்தார். கொழும்பில் இருந்து புறப்பட்ட இவரின் வாகனத்தை பின் தொடர்ந்து முன்னாலும் பின்னாலும் லொறிகள் வந்து கொண்டிருந்ததாகவும் திடீரென அந்த லொறி தனது வாகனத்தில் மோதியதாகவும் அதனால் தனது வாகனம் சேதமுற்றதுடன் தான் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது திட்டமிட்ட ஓர் சதி நடவடிக்கை என தேரர் பொலிசில் புகார் செய்துள்ளார். மேவின் சில்வாவின் விளையாட்டாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஈழ நாதம் நெற்
-
- 2 replies
- 1.2k views
-
-
கொடிய போரின் பலாபலன்; கிளிநொச்சியில் நாளொன்றிற்கு 4 பேர் தற்கொலை! அதிர்ச்சி ரிப்போர்ட் வியாழன், 07 அக்டோபர் 2010 08:41 கிளிநொச்சியில் யுத்தத்தின் பின்னர் தற்கொலைகள் அதிகரித்துள்ளன எனவும் நாளொன்றுக்கு 4 பேர் என்ற விகிதத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. எனவும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உள நல மருத்துவர் மா. ஜெயராசா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் எமது தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் இவ்வாறான நிலைமைக்கு பிரதான காரணம் சமூகப்பின்னனியே ஆகும். குறிப்பாக விதவைகள் கணவன்மார் காணாமல் போன நிலையில் வாழும் பெண்களே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதே போல் யுத்தத்தினால் மனநோயாளியா…
-
- 0 replies
- 697 views
-
-
பண்டாரவன்னியன் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் - கற்சிலைமடு மக்கள் அக் 7, 2010 Font size: Decrease font Enlarge font கற்சிலைமடுவில் உடைக்கப்பட்டுள்ள வன்னி மன்னன் பண்டார வன்னியனின் உருவச் சிலையையும், நினைவுக் கல்லையும் மீண்டும் அப்பகுதியில் அமைக்குமாறு கற்சிலைமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எமது வரலாற்றுச் சின்னமான அந்தச் சிலையை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சங்கிலி யன் மன்னனின்சிலை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரலாற்றுச் சான்றாகப் பேணப்படுகின்றதோ அதேபோன்றே வன்னியில் பண்டார வன்னியனின் சிலையும் பாதுகாக்கப்பட்ட வரலாறு பேணப்பட வேண்டும். எனினும் எமது வரலாற்றை மறைப்பதற…
-
- 0 replies
- 747 views
-
-
சிறைவாசம் அனுபவிக்கும் பொன்சேகாவின் பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் இன்று உறுதிப்படுத்தி பொன்சேகாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி இனி பொன்சேகாவிற்கான பாராளுமன்ற உறுபுரிமை சலுகைகள் எதுவும் கிடைக்காது. கூடவே பாதுகாப்புக்களும் விலக்கி கொள்ளமுடியும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே ஜெனெரல் பதவி பறிக்கப்பட்டதால் அந்த சலுகைகளும் பாதுகாப்பும் பறிகப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழ நாதம் நெற்
-
- 0 replies
- 493 views
-
-
வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2010 சரத்பொன்சேகா அளித்த பேட்டியில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதன் பேரிலேயே வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான சவீந்திர சில்வா தொடர்பில் தெரிவிக்கப்படும் கூற்றுகள் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்குரிய வாய்ப்பை இழக்க நேரிடலாமென சரத்பொன்சேகா தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மறுவாரம் அவரது தெளிவுபடுத்தும் அறிக்கையை பிரசுரிக்க தான் இணங்கியதாகவும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற வெ…
-
- 1 reply
- 941 views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தலைவர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள். உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். தலைவர் பிரபாகரனின் வீட்டைப…
-
- 9 replies
- 1.4k views
-
-
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளத் தவறியமை, சீனாவுக்கு சென்றிருந்த போது, குறித்த காலத்திற்கு மேல் அங்கு தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 6.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோர் இந…
-
- 1 reply
- 562 views
-