ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு பகுதியிலுள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற 32 வயதான விதவைத் தாயார் ஒருவரும் 5 வயதான அவரின் மகளும் காணாமல் போயுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர்களைக் காணவில்லை என்றும் மன்னார் போலீஸ் நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளனர். தனக்கான நிவாரண மற்றும் பிற உதவிகளின்பொருட்டு பிரதேச செயலகத்துக்குச் சென்று விசாரித்து வருவதாக நித்தியலோகி எனப்படும் அத்தாயார் தனது மகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 2009 மே மாதம் 6 ஆம் திகதி நடந்த போரில் இவரின் கணவரான சுரேந்திரன் (35) கொல்லப்பட்டதாக அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 873 views
-
-
யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார். பிரதேசத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/09/blog-post_5674.html
-
- 0 replies
- 812 views
-
-
ஆஸ்திரேலியா மெல்பேர்னில் தியாக தீபம் திலீபனின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஸ்கோஸ்பியில் அமைந்துள்ள சென்யூட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவுநாளான 26 - 09 - 2010 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், நிகழ்வுகளின் ஆரம்பமாக ஆஸ்திரேலிய கொடி மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றன. அடுத்து, தியாக தீபம் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் பொதுமக்களின் மலர் வணக்கமும், த…
-
- 1 reply
- 1k views
-
-
உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளான செப் 26 திகதி கனடா தமிழ் இளையோர் அமைப்பு மரம் நடுதல் என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது .திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை முன்னிட்டு ரொண்டோ மாநகரில் தமிழ் இளையோர்களின் உதவியுடன் பல மரங்கள் நடப்பட்டு பூமித்தாய்க்கு கையளிக்கப்பட்டன. இவ் நிகழ்வில் தமிழ் இளையோர் பலர் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுரவபடத்தை நெச்சில் தாங்கியவாறு பங்கேடுத்திருந்தினர் திலீபன் அன்ன அவர்களின் தியாகத்தை வேற்று இன மக்களுக்கு எடுத்துரைத்தவாறு மரம் நடுகை நிகழ்வை நிறைவு செய்தனர…
-
- 1 reply
- 912 views
-
-
பொதுநலவாய போட்டிகள் - வெட்கித் தலைகுனியும் இந்தியா ! வருகிற மாதம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போட்டிகள் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதில் பங்குபற்றும் அனைத்து நாட்டு வீரர்களையும் தாம் தாக்கப்போவதாக பாகிஸ்த்தானை மைய்யமாகக் கொண்டியங்கும் தீவிரவாத அமைப்பொன்று எச்சரித்துவருகிறது. அந்த வகையில் இரு நாட்களுக்கு முன்னதாக தில்லியில் அரச வாகனம் ஒன்றின்மேல் தீவிரவாதிகள் துப்பாகித்தாக்குதல் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள். இது பல நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தட்டெறிதலில் தங்கப் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்த்திரேலிய வீர…
-
- 66 replies
- 5.6k views
-
-
கேபி யிற்கு 100 ஏக்கர் காணி, கருணாவுக்கு ஆலை வளாகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுக்குப் முன்னாள் பொறுப்பாளராக இருந்து பின்னர் இலங்கை அரசுடன் இணைந்து போராட்டத்தினை அழிப்பதற்கு இலங்கை இந்திய அரசுகளுக்கு பக்கபலமாக செயற்பட்ட கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது வெளிப்படையாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார். அவரைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடித்து அதன் மூலம் புலம் பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளுக்கு அல்லது இனப்படுகொலைக்கு எதிரான விசாரணைகளுக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துவதனை…
-
- 4 replies
- 2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இத்தாலியின் 3 தேர்தல் தொகுதியின் பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை இத்தாலி; தேர்தல் ஆணையகம் இன்று (செற்டெம்பர் 27) அறிவித்துள்ளது. தேர்தல் தொகுதி A திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் இத்தாலியின் மேற்பகுதி (valla d`Aosta,Piemonte,Lompardia,Trentinino Alto , Adige,Friuti venezia giulia, Veneto, Lguria மாநிலங்களில்) தேர்தல் தொகுதி B திருமதி. மேரி ஞானமலர் யேசுதாசன் இத்தாலியின் மத்திய பகுதி (Emilia Romania,Toscana,Umbria, Marche, Abruzzo,Molise,Puglia,Basilicate, Calabria, Campania,Lazio ஆகிய மாநிலங்களில்;) தேர்தல் தொகுதி C திருமதி. தாட்சாஜினி தவராஜசிங்கம் இத்தாலியின் கீழ்ப் பகுதி (Sicilia, Sa…
-
- 0 replies
- 458 views
-
-
யுத்தம் எம்மை முடமாக்கி முகாம்களுக்குள் தள்ளிவிட்டபோதும் தளராது படித்தோம்; தொடர்ந்தும் கல்வியில் சாதிப்போம் என தரம் 5புலமைப்பரிசில்ப் பரிட்சையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் முதன்மை பெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலத்தின் அவலங்களுக்கு மத்தியிலும் ஏனைய மாவட்டமாணவர்களைப்போல் மேற்படி மாவட்ட மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டதில் புனித திரேசா பெண்கள் பாடசாலை மாணவன் நி.கம்சிகன் 175புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப்பெற்றுள்ளான்.http://www.tharavu.com/2010/09/blog-post_26.html
-
- 1 reply
- 947 views
-
-
போர் இடம்பெற்ற காலத்தில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலையினால் இராணுவப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இராணுவப் படைவீரர் ஒருவர் மர்மமான முறையில் இறம்பைக் குளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். போத்தல் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த படைவீரரின் சடலம் இறம்பைக் குளம் பகுதியில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்களிடம் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும், இந்த ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிணக்கினால் படைவீரர் படுகொலை செய்பய்ப…
-
- 0 replies
- 804 views
-
-
லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா அரங்கில் மத்திய, மாநில அரசுக ளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.அவர், ’’ உலகில் தமிழன் நாதியற்றவனாகி விட்டான். இந்திய தேசிய இனங்களில் தமிழனை தவிர வேறு மொழிக்காரர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவை இந்த உலகமே கண்டிருக்கும்.வெள்ளை கொடி ஏந்திவந்த தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்தது உண்டா?’’என்று பேசினார்.அவர் மேலும், ‘’தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட முழுஅளவில் மு…
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 27, 2010 gotta in court விடுதலைப் புலி உறுப்பினர்கள் வௌ்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையில் சாட்யமளிக்க பாதுகாப்பு விவகார செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ் மேல் நீதிமன்றிற்கு சமூகம் கொடுத்தார். இந்த விசாரணைகளின் போது பொன்சேகா சமூகமளிக்கவில்லை. அவரது உடல் நிலை காரணமாகவே சமூகமளிக்கவில்லையென் கூரப்படுகின்றது. இதனால் வழக்கு விசாரணை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏராளமான சோடிப்புக்களையும் சாட்சி ஒழிப்புக்களையும் செய்த கோத்தா சிலரை வெளி நாட்டிற்கும் அனுப்பிய நிலையிலேயே துணிச்சலாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதித்தார் என்பது…
-
- 0 replies
- 967 views
-
-
மட்டக்களப்பில் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்ட 42 தமிழ் மக்களின் நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடை பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 42 தமிழ் மக்களின் 20 ஆவது நினைவுதினம் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற வயதுவேறுபாடின்றி அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலைகளை 1990 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 20 ஆம் நாள் சிங்கள கடையர்களும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். சவுக்கடை பகுதியில் உள்ள சிவன் கோவிலிலும், தேவாலயத்திலும் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கிராமத்தின் பல பகுதிகளில் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. http://meenakam…
-
- 3 replies
- 654 views
-
-
14 கோடி ரூபாய் செலவில் நியூயோர்க்கில் கும்மாளம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்ற சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சா தனது மகன் நமால் ராஜபக்சா உட்பட 130 பேருடன் சென்று மக்களின் வரிப்பணத்தில் 14 கோடிகளை ஏப்பம் விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அங்கு சென்றவர்கள் போட்ட கும்மாளங்களும் வெளிவந்துள்ளன. மகிந்தாவுடன் சென்றவர்கள் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பரவிடுதிகளில் தங்கியிருந்ததுடன், விலை உயர்ந்த பொருட்களையும் அரச செலவில் வாங்கி குவித்துள்ளனர். மகிந்தாவின் புதல்வர் நமால் ராஜபக்சாவும், அவரின் நண்பர்களும் இரவு கேளிக்கை விடுதிகளிலேயே பெண்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மிகவும் வ…
-
- 0 replies
- 824 views
-
-
சென்ற ஆண்டு எப்படி எமது விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டதோ, அதே பாணியில் எமது புலம்பெயர் போராட்டமும் ஒருசில பத்துப்பேரின் கையில் ஒப்படைக்கப்பட்டாயிற்று.அந்தப்பழகிய முகங்களைத்தான் எங்கும் காணமுடிகின்றது.ஏன் இந்த நிலை?இப்பொழுது எமக்கென்றொரு நாடில்லை. நேற்று இருந்ததை மீட்கவும் மனமில்லை. அப்படியென்றால், வெளியேற்றப்படும்போது எங்கு செல்வது? இதற்கு முன்னைய உதாரணங்களுண்டு. இது ஊகமல்ல. இது நூற்றுக்கு நூறு உண்மை.யூதர்கள் வெளியேற்றப்படும்போது அவர்களுக்கென்று பாலைவனம் கைகொடுத்தது. பர்மாவிலிருந்து துரத்தப்பட்டபோது கால்நடையாகச் சென்றுசேர இந்தியமண்ணிருந்தது. இடியமீன் உகண்டாவிலிருந்து துரத்தியபோதும் இந்தியமண் இடங்கொடுத்தது. கொழும்பிலிருந்து துரத்தி…
-
- 2 replies
- 1.9k views
-
-
சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும் முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. தளபதி ராம் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரமிக்க, உணர்வு மிக்க தளபதிகளுள் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. கிழக்கில் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை அடுத்து மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மட்டக்களப்பிலிருந்து கணிசமான அளவு போர…
-
- 1 reply
- 893 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 24ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் பள்ளிவாசல் தலைவர்களுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேண்டுகோளினை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும். இக்குற்றத்தைப் புரியும் ஒர…
-
- 0 replies
- 826 views
-
-
இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது. இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில், உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்த…
-
- 0 replies
- 702 views
-
-
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 06:54:09| யாழ்ப்பாணம்] தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட லஹ்ர் ஈ தொய்பா அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது. முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது. இலங்கையில் 200 லஹ்ர் ஈ தொய்பா அமைப்…
-
- 1 reply
- 2.2k views
-
-
புலிகளியக்கத்தை தடைசெய்தமைக்காக இந்தியவால் முன்வைக்கப்படும் காரணங்கள் போலியானவை, புனையப்பட்டவை - விசாரணை நீதிமன்றத்தில் வைக்கோ இந்திய மத்திய அரசாங்கத்தால் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி புலிகளியக்கத்தின் தடையை நீட்டிப்பதற்கான முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணைகள் புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்த விசாரணைக் குழுவில் தனது வாதங்களும் இடம்பெறவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ம.தி.மு.க தலைவர் திரு வை.கோபாலசாமி அவர்கள் மத்திய அரசின் தடை நீட்டிப்பை இந்த விசாரனக்குழு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தடை நீட்டிப்பிற்கான முதலாவது காரணமாக இந்திய மத்திய அரசு , புலிகள் தமிழ் நாட்டையும் சேர்த்து பரந்த தமிழீழத்தை உருவாக்கப் போராடுகிறார…
-
- 0 replies
- 905 views
-
-
சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு? பதில் கொடுக்க சிறீலங்கா தயக்கம் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா சிறீலங்கா அரசை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் சிறீலங்கா அதற்கான பதிலை தனது உரையில் சேர்க்காது தவிர்த்துவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபாமாவின் பேச்சில் பின்வரும் விடயங்கள் இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர். தற்போது பொருளாதார நெருக்கடிகள் எமக்கு சுமையாக உள்ளபோதும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளும் எமக்கு அச்சத்தை கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அதற்காக நாம் மனித உரிமை…
-
- 1 reply
- 1.9k views
-
-
உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையிலேயே தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பக்கேற்றுப் பேசிய அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொது அமர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தாம் இலங்கை மக்களின் விருப்பத்துடனேயே ஜனாதிபதியாக தேர்வானதாகவும், அதனினும் அதிகமான மதிப்புடன், தமது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமது இரண்டாம் தவணை பதவிக்காலத்தை எதிர்வரும் சில நாட்களில் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதம் என்பது அழித்து ஒழித்துவிட முடியாத ஒரு விடயமாக இருந்தது. எனினும் அதனை நாங்கள் அமைதியான முறையில்…
-
- 0 replies
- 647 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 26, 2010 இராஜபக்ஷ வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதனைவிட தென்பகுதியிலும் ஓர் மிகப்பெரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது இராஜபக்ஷ குடும்பத்தை எதிர்காலத்தில் யாரும் அசைக்க முடியாதபடியே இந்த ஏற்பாடு. வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை விருத்தி செய்து அந்த பகுதியில் தமிழர் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வது போன்று தெற்கில் கொழும்பை தனது அசைக்க முடியாத அரசியல் கேந்திர நிலையமாக மாற்றும் நடவடிக்கையே இராஜபக்ஷக்களின் கொழும்பு நடவடிக்கையாகும். கொழும்பு ஐக்கிய தேசியகட்சியின் கோட்டையாகும் என்பதனைவிட கோட்டையாக மாற்றப்பட்டு இருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனவை தொடர்ந்து வந்த ரணசிங்க பிரேமதாச கொழும்பை தமது , தமது கட்சியின் பிடியில் தொடர்ந்து இருப்பத…
-
- 3 replies
- 1k views
-
-
தகர்க்கப்பட்ட இரண்டுவருட உழைப்பு: அஜித் நேற்றுவரைக்கும் இலங்கைத் தீவிற்கு அப்பால் போருக்குப் பிந்திய காலத்தைய விவாதங்களின் கருப்பொருளாக அமைந்ததெல்லாம் இன்னமும் உரிமைப் போர் தேவையா என்பது தான். உரிமையா அபிவிருத்தியா, மறுசீரமைப்பா தன்னுரிமையா என்பவை விவாதங்களின் மையப்பகுதி. தமிழ் நாட்டின் முன்னைய புலிகளின் வலையமைப்பின் மற்றொரு பகுதி, இழந்து போன ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்று தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. சு.ப.வீரபாண்டியன், ரவிக்குமார், ஜெகத் கஸ்பர், கனிமொழி என்று ஒரு நீண்ட பட்டியல் உரிமை வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றனர். ஏற்கனவே புலியெதிர்ப்பில் அரசியல் வளர்த்த இன்னொரு பகுதி இவர்களோடு கைகோர்த்துக் கொண்டனர். இடது சாரியத்தையும், பின்நவீனத…
-
- 0 replies
- 1.3k views
-
-
எமது இலட்சியத்தை அடைவதற்காக நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் – தமிழீழ விடுதலைப்புலிகள் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்பதே ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் அவாவாக இருந்தது. அந்த அடிப்படையில் எமது இலட்சியத்தை அடைவதற்காக நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் என தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று உறுதி எடுப்போமாக என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/06/10 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 26/09/2010 அன்பார்ந்த தமிழ்மக்களே, இன்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்துமூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஓர் உயரிய இலட்சி…
-
- 0 replies
- 708 views
-
-
உள்நாட்டு யுத்தங்களில் சர்வதேச மனிதவுரிமை சட்டங்களைப் பின்பற்றக் கூடாது – பாசிட் மகிந்த ஜ.நாவில் பதிவேற்றியது பி.இரயாகரன் Saturday, 25 September 2010 13:37 பி.இரயாகரன் - சமர் 2010 தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான மனிதவுரிமைச் சட்டங்கள் அனைத்தும், குப்பையில் போட வேண்டும். நீதி, சட்டம், ஒழுங்கு எவையும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கிடையாது. இதை கடைப்பிடிக்கும்படி யாரும் கோர முடியாது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. அதை நாம் அனுமதிப்பதில்லை. அதை மீறினால் கொல்லப்படுவார்கள். இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களாகிய நாங்கள் நடைமுறைப்படுத்தும், ஜனநாயகம் இதுதான். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக மனிதவுரிமை சட்டத்தை எம் நாட்டில் அமுல்படுத்திட முடியாது என்று ஆட…
-
- 0 replies
- 490 views
-