ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
WhatsUp செய்தி. அனுப்பியவர்கள் தனிப்பட்ட வகையில் தெரியும் என்பதால் பகிர்கிறேன். முடிந்தால் விரைவாக பகிருங்கள்: இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில் , அந்த வைத்திய சாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது . அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் . அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என ! அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண…
-
- 3 replies
- 438 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 12:55 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கு மேலாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்நிலையில் கடந்த ஜூன் மாத கால பகுதியில் அப்பகுதியில் இருந்த நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறினார். இராணுவத்தினர் வெளியேறிய போதிலும் அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாததால், மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டது. …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 03:05 PM இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் முதல் முறையாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை யானையில் இருந்து பாதுகாப்பதற்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏற…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது ! பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1352730
-
- 1 reply
- 370 views
-
-
கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் திட்டம் தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது …
-
- 3 replies
- 597 views
- 1 follower
-
-
அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில்…
-
- 4 replies
- 786 views
- 1 follower
-
-
06 OCT, 2023 | 02:47 PM மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், 'நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுவார். எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர்…
-
- 2 replies
- 530 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 OCT, 2023 | 12:58 PM (எம்.மனோசித்ரா) முறிந்து விழும் அபாய நிலையிலுள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னகோன், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், சுற்றாடல் அதிகாரசபை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு, வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொது மக்களுக்கு அசச்சுறுத்தலாக உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். …
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
06 OCT, 2023 | 11:42 AM பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணை கடத்திச் சென்று அவரது தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூவர் குறித்த இதுவரை தகவல் இல்லை டினவும் அந்தப் பொலிஸ் அதிகாரி கூறினார். https://www.virakesari.lk/article/166231
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
”முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், தேரர்களால் குறிவைக்கப்படுகிறது” முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிப் பகிஷ்கரிப்பத…
-
- 3 replies
- 628 views
-
-
பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாராளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணிகளை மக்களிடம் கையளிக்குமாறும், மகாவலி என்ற பெயரில் காணி அபகரிப்புகளை நிறுத்துமாறும் வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சபைக்கு நடுவில் சபாபீடத்திற்கு முன்னால் வந்து இவர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். http://www.samakalam.com/பாராளுமன்றத்தில்-தமிழ்த/
-
- 3 replies
- 673 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 OCT, 2023 | 03:49 PM கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் 03, 04 ஆம் திகதிகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகளும் சமூக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் கிண்ணியா நகர சபை முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த இடத்துக்கு சென்று இவ்வாறு தெரிவித்தார். இக்குழுவினர் புதையல் அகழ்வதற்காகவா அல்லது ஏதேனும் அடையாளங்களை புதைப்பதற்காகவா…
-
- 1 reply
- 273 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 12:48 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் கடந்த 5 வருடங்களில் மனித-யானை மோதலால் 618 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளளதுடன், 1,867 யானைகளும் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் கடந்த 2022 ஆம் வெளியிடப்பட்ட வருடாந்த தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித – யானை மோதலினை கட்டுப்படுத்த கடந்த இரண்டு வருடங்களில் (2021/ 2022) நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மின்சார வேலிகள் அமைப்பது மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக மாத்திரம் 228 கோடி ரூபா …
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய உயர்மட்ட அமைச்சரொருவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார். நாட்டில் தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல், தீவிரமடைந்துவரும் பௌத்த – சிங்கள மயமாக்கம் போன்ற பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. அந்தவகையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளின் சார்பின் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி, இலங்கையி…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் நாளை காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்…
-
- 6 replies
- 436 views
- 1 follower
-
-
கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்! நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த 48 மணிநேரத்தில் மணிநேரத்தில், மாத்திரம் 11 பேர் காணாமற்போயுள்ளனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யு.என்.டி.பி. தனது அறிக்கையொன்றில், இந்நாட்டில் 10 பேரில் 6 பேர், ஆபத்தான நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது 220 இலட்சம் மக்களில் 123 இலட்சம் மக்கள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர். ஆனால் இந்த அரசாங்…
-
- 0 replies
- 535 views
-
-
‘நாய்’ என திட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் : சபையில் சீறிய டயானா கமகே நாடாளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் கடும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சபையில் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்றும் கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது, ரஞ்சித் மத்தும பண்டார தன்னை ‘நாய்’ என திட்டியதாகவும் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம…
-
- 5 replies
- 653 views
-
-
நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்? கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்படும் சூழல் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் இன்றைய தினம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர், அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி இல்லை என நேற்றையதினம் (04) கூறியுள்ளார். இதனால் அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதோடு, உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாகக் கிடைக…
-
- 0 replies
- 410 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 10:28 AM (நா.தனுஜா) தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதற்கு ஆதாரவாகவே தாம் செயற்பட்டுவருவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இணையனுசரணை நாடுகளுக்குத் தாமே தலைமைதாங்குவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் நடை…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 10:22 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியால் இலங்கையின் கடன் சுமையில் ஒரு டொலரேனும் குறையவில்லை என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளை சட்டம் மீதான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், உலக வங்கியைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று கூறினாராம். அப்படியென்றால் அவர் மனநலம் பாதிக்ககப்பட்டவராக இருக்கலாம். நாட்டில் பண வீக்கம் 70 வீதமா…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
யுத்தத்தை தொடர்ந்து வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 400க்கும் அதிகமான பௌத்த தொல்பொருள் சின்னங்களுள் அதிகளவானவை தற்போது அழிக்கப்பட்டுள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் நேற்றைய தினம் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவு குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள தொல்பெருள் சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்…
-
- 4 replies
- 741 views
-
-
லிட்ரோ எரிவாயு விலை பாரியளவில் அதிகரிப்பு – புதிய விலைகள் இதோ! இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/275566
-
- 2 replies
- 564 views
- 1 follower
-
-
04 OCT, 2023 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை. அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
04 OCT, 2023 | 05:34 PM மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (04) கோட்டை ஸ்ரீ சம்புத்தலோக மகா விஹாரைக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். கேள்வி : ஜனாதிபதியின் உரை எப்படி இருந்தது? பதில் : சரி, அதுதான் கதை. கேள்வி : சர்வதேச விசாரணை வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறாரா? பதில் : ஆம், அது சரிதான். மக்கள் எதிர்பார்ப்பது இதைத்தான் இவ்வாறு பதில…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சர்வதேசத்திடம் கையேந்தும்போது ஜனாதிபதிக்கு இரண்டாம் நிலை என்ற எண்ணம் தோன்றவில்லையா? உள்ளக விசாரணையில் நீதி கிடைக்காத காரணத்தால் தான் சர்வதேச விசாரணையை கோருகிறோம். வங்குரோத்துக்கு மத்தியிலும் இனவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டமா அதி…
-
- 1 reply
- 325 views
-