ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010 நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புக்களுடன் கொண்டிருந்த நிலையான தொடர்பினை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். இவ்வாறு கூறியுள்ளனர் முப்படைத்தளபதிகள். நாட்டில் யுத்தம் நடை பெற்ற காலப் பகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புகளுடன் நிலையான தொடர்பை கொண்டிருந்தது. குறிப்பாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் நிலையான தொடர்பைப் பேணி வந்தனர். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிக ளுடன் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து இராணுவம் கொண்டிருந்த தொடர்புகளை நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். அதேவேளை, மனிதாபிமா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோகிராம் எடையுடைய தங்கம் அவர் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது மீட்கப்பட்டிருக்கின்றது என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் அவசர கால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”நான் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னரும் ஏராளமான தங்கங்கள் படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இத்தங்கங்களுக்கு எல்லாம் என்ன நட…
-
- 6 replies
- 1.7k views
-
-
கடந்த கால யுத்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் விதவையான தாய் ஒருவர் வாழ்க்கையே சூனியம் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கங்களுடன் மனம் உடைந்து போய்க் காணப்படுகின்றார். கமலேஸ்வரி விஜிதா (வயது 27) என்பவரே இந்த அவலைப் பெண் ஆவார். யுத்தத்தால் இவர் சிறுவயதிலேயே தந்தையைப் பறி கொடுக்க நேர்ந்தது. தாயார்தான் இவரை வீடுகளில் கூலிப் பணி செய்து காப்பாற்றினார். கலியாணமும் செய்து வைத்தார். திருமண வாழ்க்கையின் பலனாக இவருக்கு இரு பெண் குழந்தைகள். ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்த கால இடப்பெயர்வின்போது கணவர் எறிகணைத் தாக்குதலுக்கு உயிர்ப்பலி ஆகி விட்டார். இடப்பெயர்வுகள், முகாம் வாழ்க்கை என்று அனுபவித்த சோதனைகள் ஏராளம். மீண்டும் சொந்தக் கிராமத்தில் ஜீவிதம்.…
-
- 0 replies
- 689 views
-
-
சீனாவின் புத்தளம் நுரைச்சோலையில் அமைத்து வரும் மனல் மின் நிலையத்தால் இயற்கையில் மாற்றம் ஏறபட்டுள்ளதாக மக்கள் விசனம் சீனாவின் நிறுவனமொன்று நுரைச்சோலையில் அமைத்துவரும் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதற் கட்ட நிர்மானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகள் வட மேல் மாகாண சுற்றாடல் மதிப்பீடின்றி இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ் ஆப்தீன் தெரிவித்துள்ளார். சீனாவின் அனல் மின் நிலைய வேலைகள் ஆரம்பமானது தொடக்கம் புத்தளத்தில் போதிய மழை இல்லையென அவர் கவலை வெயியிட்டதுடன் மின்சக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை அவர் எழுதியுள்ளார். சீன மின்நிலையத்தின் வேலைகள் மழையினால் தாமதமடையுமென்பதால் சீனர்கள் அதியுயர் தொழி…
-
- 0 replies
- 735 views
-
-
தமிழரின் பாரம்பரிய உடுப்புக்களை அணிந்துகொண்டு வராத எவரும் நல்லூர் திருவிழாவின்போது ஆலயத்துக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆலய நிர்வாகத்தினரும், யாழ்.மாநகர சபை முதல்வரும் விடுத்திருந்த அறிவித்தல்கள் வெறும் நோட்டிஸுகளாக மாத்திரம் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலையும் மாத்திரமே அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் ஜீன்ஸ், சல்வார் போன்ற உடுப்புக்களை அணிந்து வரவே கூடாது என்றும் இவ்வறிவித்தல்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த அறிவித்தல்களை ஒரு பொருட்டாகக் கூடாக மதிக்காமல் ஏராளமான அடியவர்கள் ஜீன்ஸ், சேட், சல்வார், குட்டைப் பாவாடை, சட்டை ஆகியவற்றை அணிந்து கொண்டு ஆலயத்துக்குள் உட்பிரவேசித்து வருகின்றமையையும்,…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.நேற்று (08.09.2010) காலை Bantzenheim எனும் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து Balgau ஊடாக 26km நடந்து Neuf-Brisach எனும் இடத்தைசென்றடைந்தனர்.சீரற்ற காலநிலையிலும் மனவுறுதியுடன் தமது சீரிய நோக்கத்தை மனதில் கொண்டு,அடாது மழை பெய்தாலும் விடாது நடப்போம் என்று தமது மனிதநேய நடைபயணத்தை மேற்கொண்டு இதுவரை 307மஅ வரையான தூரத்தை அடைந்துள்ளனர். பெல்ஜியம், புறுசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்க…
-
- 1 reply
- 450 views
-
-
கொழும்பில் 2011 ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என, தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன், புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.சி. சக்தி, வெ. சேகர், இலங்கை தமிழ் எழுத்தாளர் எஸ்பொ, கவிஞர் காசி ஆனந்தன், எழுத்தாளர்கள் தாமரை, பா. செயப்பிரகாசம் ஆகியோர் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தலைநகர் கொழும்பில் 2011 ஜனவரி 5, 6, 7, 8 தேதிகளில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த இருப்பதாக சிவத்தம்பி உள்ளிட்ட சிலர் அறிவித்துள்ளனர். ஈழத் தமிழர்கள் மிகவும் துயரத்தில் இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த ம…
-
- 28 replies
- 3.4k views
-
-
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் | International Tamil Writers Forum 3 B, 46th Lane, Colombo -06 P.O.Box: 350, Craigieburn,Vic-3064 Srilanka Australia T.Ph: 00 94 2586013, 0094 777306506 T.Ph: 00 61 (0)3 9308 1484 Fax: 00 94 11 2362862 E.Mail: international.twfes@yahoo.com.au E.Mail:editor@gnanam.info 05-09-2010 ஊடகங்களுக்கான அறிக்கை இலங்கையில் கொழும்பில் எதிர்வரும் ஜன…
-
- 2 replies
- 581 views
-
-
அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக ஜேவிபி யினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிந்த நிலையில் இவ்ஜனவெள்ளம் ஒன்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கொழும்பு ஆயுர்வேத சந்தியில் ஆரம்பமான இவ்வார்பாட்டம் , பாராளுமன்ற முன்றலை சென்றடைந்துள்ளது. Dailymirror.lk
-
- 6 replies
- 2.5k views
-
-
http://www.yarl.com/files/100907_sritharan.mp3 நன்றி: ATBC]
-
- 1 reply
- 778 views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 8, 2010 ஈழ நாதம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொர்பான வாக்கெடுப்பு நடைபெறுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தெரிய வருகிறது. இந்த நிலைமையானது கவலைக்குரியது எனத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முக்கியமானதொரு வாக்கெடுப்பு நடைபெறுகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பது குறித்த முக்கிய கூட்டத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடத்தி அதில் வாக்;கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவெடுத்தலில் தலைவர் இரா.சம்பந்தன், சி.யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், வினோதர…
-
- 1 reply
- 684 views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 8, 2010 யாழ் நகரில் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கட்டாய பஞ்சாயத்து இப்போ பொலிஸ் நிலையங்களில் நடக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்த இடத்தை இப்போ ஈபிஆர் எல் எவ் ஒட்டுக்குழு நிரப்பிக்கொண்டு வருகின்றது. இவர்களின் கட்ட பஞ்சாயத்து யாழ் நகரில் பல மறைவிடங்களில் நடக்கின்றது. இதனால் பொலிசாருக்கு சில முறைப்பாடுகள் இப்போ போவதில்லை. அண்மையில் கேர்மன் மற்றும் பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களின் உறவுகளிடம் கப்பம் கோரி விரட்டியுள்ளனர். யாழில் உள்ள தம் உறவுகளிடம் மிரட்டி பணம் தருமாறு கோரியதாக கூறியுள்ளனர். இவர்களின் கட்ட பஞ்சாயத்திற்கு உதவுமால் போல எம் மக்களும் சில பிரச்சினைகளை அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்து சிலரை பழிவாங்குவதற்காகவோ அல்லது சாதி …
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 8, 2010 ஈழ நாதம் அம்பாரை மாவட்ட கூட்டமைப்பு எம்.பி. பியசேனா அவர்கள் இன்று நடைபெறவுள்ள 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளிப்பார் என அரசாங்கம் கூறியுள்ளது. இதே வேளை நாசூக்காக பல எம்.பி. க்கள் வெளி நாட்டிற்கு சென்று விட்டதால் இவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9%E0…
-
- 1 reply
- 679 views
-
-
முள்ளிவாய்க்காலில் கடற்படைப் புலனாய்வுத்துறையினரால் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட படகுகளுக்கான நான்கு உள்ளக இயந்திரங்களும் (inboard engines) அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடற்புலிகள் சக்திமிக்க தாக்குதல் படகுகளுக்காக அவற்றை கொண்டு வந்திருப்பதாகவும், இவை கடற்படைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘மேர்குரூசியர்ஸ்’ (Mercruisers) என்ற இந்த உள்ளக படகு இயந்திரங்கள் நான்கும் மிகவும் நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளன. நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் சுமார் 100 வரையிலான இத்தகைய மேர்குரூசியர்ஸ் இயந்திரங்களை கடற்புலிகள் கொள்வனவு செய்திருக்கலாம் என்றும் அவற்றில் பல…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் -தீபச்செல்வன் கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச் செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப் படம் திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர். "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை' (கலாச்சுவடு 2008), "ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்' (உயிர்மை 2009), "பாழ் நகரத்தின் பொழுது' (காலச்சுவடு 2010), ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன், யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் "தீபம்' என்ற வலைப்பக்கத்தைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்தி வருகிறார். - …
-
- 5 replies
- 1.1k views
-
-
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்தவை ஹிட்லராக வர்ணித்து அந்த உருவ பொம்மையை எரித்த காட்சியினை பாருங்க
-
- 1 reply
- 2k views
-
-
பாடகர் சாந்தனை விடுவித்தார் தயாமாஸ்ரர்! தாயகத்தின் எழுச்சிப் பாடகரான எஸ்.ஜி.சாந்தன் நேற்று முன்னாள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009 மே 18ஆம் திகதி இராணுவத்தினரால் ஓமந்தையில் கைது செய்யப்பட்ட சாந்தன் இராணுவத்தின் பல்வேறு முகாம்களில் விசாரணைகளுக உட்படுபடுத்தப்பட்டதன் பின்னர் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாராந்தம் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுவந்திருந்தார். இதேகாலப்பகுதியில் திருமதி மஹிந்தராஜபக்சவினால் போராளிகள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களில் சாந்தனும் இடம்பெற்றிருந்தார். குறித்த கலைஞர்களை விடுவிப்பதாக கடந்த சில மாதங்களாக முன்னாள் போராளிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் தாராக் குளம் தேசிய வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து வேறு குடியேற்றத் திட்ட பத்திரத்தை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச வழங்கியுள்ளார். கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த விமல் தாராக் குளம் தேசிய வீடமைப்புத்திட்டக் குடியிப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்குவதாகத் தெரிவித்து அவர்களை அழைத்து பத்திரம் ஒன்றை வழங்கினார். அப்பத்திரத்தின் வெளியே தாராக்குளம் குடியிருப்பாளர் என்று குடியிருப்பாளரின் பெயரும் தாராக்குளம் வீட்டு இலக்கமும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே நாவற்குழி குடியேற்றத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என எழுதப்பட்டிருந்து. தாராக்குள…
-
- 0 replies
- 1.1k views
-
-
வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து சீமான் ஒரு கூட்டத்தில் பேசினார். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவரை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர். "இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக டைரக்டர் சீமான் மீது அடக்குமுறை ஏவப்பட்டு தேசிய பாதுகாப்பு ச…
-
- 0 replies
- 674 views
-
-
எம்.வி.சன்.சியின் வரவைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான கப்பல்கள் கனடா நோக்கி வரக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Vic Toews தெரிவித்துள்ளார். எம்.வி.சன்.சி பயணம் இத்தமிழர்களுக்கு ஒரு பரீட்சார்த்த முயற்சி மாதிரி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இக்கப்பல்களின் வரவை எப்படிக் கனடா முறியடிக்க உள்ளது? என்பதை வெளிப்படுத்த அமைச்சர் மறுத்து விட்டார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9954:2010-09-08-05-22-03&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 785 views
-
-
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பலவாணர் ஜெகபாலன் என்பவர் இந்நீண்ட காலப்பகுதியில் ஒரு நாள் கூட அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் எவரையும் சந்திக்க முடியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்று 1999 ஆம் ஆண்டு ஜா- எலவில் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பிரிகேடியர் லக்கி அலுகம கொல்லப்பட்டார். இத்தற்கொலைத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே ஜெகபாலன் ஒரு தசாப்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து ஜெகபாலன் குடும்பத்தினரையும், உறவினர்களையும் சந்திக்கின்றமைக்கு நீதிம…
-
- 0 replies
- 573 views
-
-
விடுதலையின்றி சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வளர்ந்தது அல்லது வாழ்ந்ததுவா? என அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கேட்டுள்ளார்கள். தமது அவல நிலையையும், தமது குடும்பங்களின் துயரங்களையும் கருத்திற்கொண்டு, தம்மை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்வதற்காகவாவது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சட்டத்தரணிகளிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல வருடங்களாக அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களின் கீழ் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்…
-
- 0 replies
- 623 views
-
-
இன்றைய நல்லூர் தேர்த் திருவிழாவின்போது 18 வயது இளம் யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். தேர் உற்சவத்தைத் தொடர்ந்து காலை 11.00 மணியளவில் இவ்விளம் யுவதி அவரது நண்பிகளுடன் ஆலயத்தின் பின் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர்களைப் பின் தொடர்ந்து சென்ற இரு இளைஞர்கள் இவ்விளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.ஆனால் யுவதி கூச்சலிட்டு கத்தினார். அருகில் கடமையிலிருந்த பொலிஸாரை உதவிக்குக் கூப்பிட்டார். இளைஞர்கள் இருவரும் தப்பியோட முயற்சித்தனர். ஆயினும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9930:2010-09-07-18-06-1…
-
- 0 replies
- 944 views
-
-
ஒரு ஊடகவியலாளனாக எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான் கொண்டிருக்கா விட்டால், எனது நண்பர்களை போலே நானும் காசுமீரத்து நகரவீதிகளில் கல்லெறிந்து கொண்டிருப்பேன் வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தனவோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பர…
-
- 0 replies
- 758 views
-
-
வவுனியா மாவட்டத்தின் செட்டிக் குளம் நலன்புரி முகாமில் அகதிகளாக அந்தரித்துக் கொண்டிருக்கும் உறவினர்களுக்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 14 மில்லியன் ரூபாய் நிதியை அப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவர் கையாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 60 பேர் வரையானோர் இப்பெருந்தொகைப் பணத்தை இம்முகாமையாளரூடாக நம்பிக்கையின் பேரில் அனுப்பி இருந்தனர். ஆனால் இப்பணம் அகதிகளைச் சென்றடையவே இல்லை என்பதுடன் முகாமையாளரையும் காணவில்லை. வவுனியா பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு இம்மோசடி குறித்து எவரும் இன்னமும் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யவில்லை. ஆயினும்…
-
- 0 replies
- 1.4k views
-