ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
தமிழர்களே இவ்விணையத்தை "http://www.indybay.org/"'>http://www.indybay.org/" பயன்படுத்திகொள்ளுங்கள். "San Fransisco" - வை மையமாக கொண்ட ஒரு இணையதளம் வலதுபுறம் "Publish your news" என்ற பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் "http://www.indybay.org/publish.php"'>http://www.indybay.org/publish.php" பகுதி பக்கம் செல்லும். அதில் நீங்கள் நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி புகைப்படத்துடன், காணொளியுடன் பதிவேற்றலாம். எல்லா தகவல்களையும் பதித்த பிறகு "Preview" பொத்தானை அழுத்தினால் அதன்பின் "How many files to upload?" என்று கேட்கும் அதிகப்பட்சம் 20 புகைப்படங்கள் பதிவேற்றலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்திகளை பதிவேற்றலாம். http://www.indybay.org/ Select "Region" as I…
-
- 0 replies
- 824 views
-
-
இந்திய இராணுவ தளபதி வி.கே.சிங் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை இராணுவ தளபதி லெப்.ஜெனரல்.ஜகத் ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9823:2010-09-06-12-17-50&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 537 views
-
-
அடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய மூவர் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். சிறிலங்கா திரும்பிய அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுதுத்தே அனைத்துலக மன்னிப்புசபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இருநாட்டு அரசாங்கங்களும் தனியே அவர்களின் பாதுகாப்புக்கு மட்டும் பொறுப்பல்ல, திருப்பி அனுப்படும் அகதிகளுக்கு ஏற்படும் நிலைக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.http://www.…
-
- 5 replies
- 1.3k views
-
-
இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி? [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:29 GMT ] [ தி.வண்ணமதி ] அனைத்துலக சண்டியர்களில் ஒன்றான இஸ்ரேலுடன் சிறிலங்கா தனது சாணக்கியம் நிறைந்த நட்பினை பேணிவருகிறது, அதன் மூலம் தனக்கு ஒரு பலம் அதிகரித்திருப்பதாகவே சிறிலங்கா எண்ணுகிறது. எனினும் இந்த நட்பு வல்லாதிக்கத்தை எதிர்த்துநிற்கும் மூன்றாம் உலகநாடுகளுடனான சிறிலங்காவின் உறவில் பாதிப்பினை உருவாக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இது தொடர்பாக 'கிரீன் லெப்ட்' [greenleft] என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி ஆய்வினை ’புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்திருப்பவர் தி.வண்ணமதி. அதன் முழுவடிவம் வருமாறு, ”தக…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருகோணமலையில் தனியார் கல்வி நிறுவனம் சென்று படித்து விட்டு திரும்பிய மானவன் ஒருவன் இன்று கடத்தப்பட்டுள்ளார். 19 வயது மாணவனான குணரட்னம் சர்மிலன் என்பவரரே கடத்தப்பட்டவராவர். http://www.dailymirror.lk/index.php/news/6365-boy-kidnapped.html
-
- 0 replies
- 447 views
-
-
சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமான படை அதிகாரி சிங்கப்பூருக்கு தப்பியோட்டம் திகதி:06.09.2010 சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய என்ற முன்னாள் இராணுவ அதிகாரி விசாரணைக்கு முகம் கொடுக்காமல் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய ஆயுத தளபாடப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர். இவரே ஆயுத தளபாடக் கொள்வனவுகள் மற்றும் படையினருக்குத் தேவையான ஆயுததளபாடங்கள் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டு வந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 531 views
-
-
கட்டுநாயக்கவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பொறியியல் துறை மாணவர்கள் இருவர் நேற்று இரவு புகையிரத விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளார்கள். இருவரும் குழு ஒன்றினால் இரவு துரத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். அக்குழுவினரிடம் இருந்து தப்புகின்றமைக்காக காரில் வேகமாகப் பயணித்தனர். அப்போதே புகையிரதத்துடன் இவர்களின் கார் மோதுண்டது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9809:2010-09-06-08-14-44&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 648 views
-
-
திரு மனோகரன் அவர்கள் பற்றிய சிறு அறிமுகம் * 1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார். * 1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்த…
-
- 7 replies
- 2.5k views
-
-
போரில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை - வியட்னாமியர்களை போல ஈழத்தமிழருக்கும் அநீதி [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 07:12 GMT ] [ தி.வண்ணமதி ] போரின் இறுதிநாட்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மூடிமறைத்தே வருகிறது இதற்காக நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் ஒரு திரையையும் அது உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக 'காடியன்' என்ற ஆங்கில இணையத்தளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்திருப்பது தி.வண்ணமதி. அதன் முழுவடிவம் வருமாறு, பான் கீ மூன் வாக்குறுதிகளை வழங்கியிருந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இடம்பெற்ற அட்டூழியங்களை விசாரிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் இடம்பெறாமல் தடுக்கப்பட்டுவி…
-
- 0 replies
- 629 views
-
-
மிரட்டல், மோசடி, அத்துமீறல், அராஜகம் - வெற்றியை நோக்கி நகரும் சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தம் [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 06:08 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் அரசியலமைப்பின் 18வது திருத்தம் நாடாளுமன்றத்தில் வரும் புதன்கிழமை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இது தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களின் தொகுப்பு: அரசியலமைப்புத் திருத்தத்துக்கு கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாக சிறிலங்கா பிரதமர் தகவல் சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சிறிலங்கா …
-
- 0 replies
- 379 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 ஈழ நாதம் நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவ தளபதியை சிங்கள தளபதி லெப்.ஜெ. ஜயசூரியா விமான நிலையத்தில் வரவேற்றார். இந்திய படைத்தளபதி வி.கே. சிங் அவர்களும் அவரது பாரியார் உட்பட ஐந்து உயர் அதிகாரிகள் வந்தனர். இலங்கை வந்துள்ள சிங் ஈழத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னோடிகளில் ஒருவர்; வங்க தேச போரிலும் தலைமை வகித்தவர்; ஜம்மு காஸ்மீரில் பொதுமக்கள் உட்பட அனைவரையும் கோத்தபாய பாணியில் போட்டுத்தள்ளியதால் அதிவிசேட பதக்கமான பரம் விஷித் சேவா பதக்கம் குடியரசு தலைவரால் இவருக்கு வழங்கப்பட்டது. http://www.youtube.com/user/Eelanatham#p/a/u/0/pvG0DU5FXsg ஜெனெரல் விஜய் குமார் சிங் கொழும்பில் மஹிந்த, கோத்தா, ஜி.எல்.பீரிஸ், இராணு…
-
- 0 replies
- 482 views
-
-
சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் அரசியலமைப்பின் 18வது திருத்தம் நாடாளுமன்றத்தில் வரும் புதன்கிழமை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இது தொடர்பான பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றியுள்ளன. அரசியலமைப்புத் திருத்தத்துக்கு கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாக சிறிலங்கா பிரதமர் தகவல் சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண தெரிவித்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின 18வது திருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ள அரசாங்கம், இத…
-
- 0 replies
- 553 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 ஈழ நாதம் இலங்கை அரசாங்கம் இப்போதும் தாம் போரின் போது பொதுமக்களை கொல்லவில்லை என மறுத்து வருகின்றது. என கார்டியன் பத்தியாளர் பீற்றர் போர்கட் வார காடியன் வார இதழிற்கு எழுதியுள்ளார். வியட்னாம் போரின் போது அமெரிக்க படைகள் ஒரு வழக்கத்தை கொண்டிருந்தனர் அதாவது வியட்னாம் போரில் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றும் அவ்வாறு யாரும் கொல்லப்பட்டால் அவர்கள் அனைவரும் வியட்கொங் போராளிகளே என்பதே அந்த வழக்கம். அதே பாணியில்தான் இராஜபக்ஷாக்கள் இலங்கையில் போரின் போது கொல்லப்பட்டவர்கள் எல்லாம் புலிகள் என்று கூறி கணக்கினை முடிக்க பார்க்கின்றார்கள் என கூறியுள்ளார் பீற்றர். ஐக்கிய நாடுகள் சபையானது 7000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என கணிப…
-
- 0 replies
- 558 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 18 ஆவது அரசியல் திருத்தம் குறித்து கருத்து வெளியிடுகையில் சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். 18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் கண்டிக்கப்பட வேண்டியது. ஜனநாயகத்தை விரும்பும் நபர் என்ற வகையில் அரசாங்கத்தின் உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது எனவும், அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டு தமது ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட அத…
-
- 0 replies
- 424 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 ஈழ நாதம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் எதிர்வரும் 15ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது சிறந்த தலைமைத்துவம் வழங்கியமைக்காக தலைசிறந்த மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழ நாதம்
-
- 0 replies
- 397 views
-
-
ஆட்சியுரிமை அதிகாரம் உள்ளவரை பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது. - ஆக்கம் : பேராசிரியர். றோகான் சமரஜீவ (transcurrents.com) எதிர்க்கட்சியினர் மேற்குறித்த கேள்விக்கு ஒரு சாதாரண பதிலைக் கூறமுடியாது தோற்றுப்போய், நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரா, ஜனாதிபதியா என்கிற வார்த்தை விளையாட்டைத் தேடுகின்றனர். அரசாங்கப் பேச்சாளர் பதவிக் காலம் எத்தனை தடவைகள் என்கிற கட்டுப்பாட்டின் அதிகாரம் மக்களின் கைகளிலேயே உள்ளது, ஏனெனில் அவர்கள்தான் தங்களுக்கு வேண்டியவர்களைத் தெரிவு செய்கிறார்கள், என்கிற இலகுவான ஆனால் தவறான விடையைச் சொல்கிறார். அதிகாரம் படைத்த பிரபுத்துவ மனப்போக்கு கொண்டவர்களால் அளிக்கப் படுவது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விடயம் போலத் தெரிகிறது. இது காலம் கட…
-
- 0 replies
- 352 views
-
-
கனேடியத் தமிழர்கள் நூற்றுக் கணக்கானோர் ரொரன்ரோவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தி உள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின் Yonge Street இல் உள்ள Queen’s Park நோக்கிப் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், கனடா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுங்கள், முட்கம்பி முகாம்களை மூடுங்கள், யுத்தக் குற்றங்களை ஐ.நா விசாரிக்க வேண்டும், யுத்தக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாதைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். இலங்கைப் பொருட்கள் மற்றும் சேவைகளை அங்குள்ள தமிழர்களும், ஏன…
-
- 0 replies
- 516 views
-
-
கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி, பெண்ணொருவர் உயிர்பிழைத்தார்:தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாளப்பிள்ளை திகதி:06.09.2010 இலங்கையில் இருந்து வெளியேறி சன் சீ கப்பலில் ஏறுவதற்கு முன்னர், 6 இலங்கை அகதிகள் கடல் அனர்த்தம் ஒன்றில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்றுள்ள இலங்கை அகதி ஒருவரை மேற்கோள்காட்டி, சீடிவி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாளப்பிள்ளை இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண் உட்பட 7 பேர் இலங்கையில் இருந்து வெளியேறி மலேசியாவில் தங்கி இருந்ததாகவும், அவர்கள் பின்னர் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் செல்ல முற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் இ…
-
- 0 replies
- 759 views
-
-
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தனர். முக்கியமாக மட்டக்களப்பின் எழுவான்கரைப் பிரதேசம் ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கொலைகார இந்தியப் படைகள் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிய பின்னர் சுமார் ஆறுமாத காலம் ஓரளவு நிம்மதியடைந்திருந்த கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் 1990 யூன் மாதம் 10ஆம் திகதிக்கு பின் போர் ஆரம்பிக்கப்பட்டதையட…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கை அரசுக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தர் பணியில் 1997 முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே ஈடுபட்டது. ஆனால் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டது என்று ஐரோப்பிய கவுன்சிலின் செயலாளர் நாயகமும்- நோர்வேயின் முன்னாள் பிரதமரும்- நோர்வே தொழில் கட்சிப் பிரமுகருமான Torbjørn Jagland பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவரைப் போலவே சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் இவ்வாறான விமர்சனங்களை அடிக்கடி முன்வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் உண்மையில் நோர்வே…
-
- 9 replies
- 1.4k views
-
-
டிஆர் பாலு தமிழரோ… இந்தியரோ அல்ல… சிங்களவர்! – தாமரை இலங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் திமுக எம்பி டி ஆர் பாலு. இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, “இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது. இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டற…
-
- 0 replies
- 780 views
-
-
முத்துக்குமார் ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா..! என் இனிய வலைத்தமிழ் மக்களே..! 2009, ஜனவரி 29. மறக்க முடியுமா இந்த நாளை..!? முத்துக்குமார் என்னும் தமிழ் மாவீரன், தமிழீழத்திற்காக அக்னியில் தன்னை மாய்த்துக் கொண்டு சோம்பேறிகளாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் இருந்த கொஞ்சநஞ்ச உணர்வாளர்களையும் "இன்னும் ஏன் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்காமல் கேட்ட கொடிய நாள்..! தனது மரணத்தை உயிராயுதமாக ஏந்திய முத்துக்குமாரின் மரண சாசனம் அன்றைக்கு தமிழக மாணவர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுதுவதிலிருந்தும் வந்து உணர்ச்சிப் பெருக்கோடு கலந்து கொண்டார்கள். தற்போது மு…
-
- 0 replies
- 730 views
-
-
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார். இன்று சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜெனரல் விஜய்குமார் சிங் புதுடெல்லியில் அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “போர் நடைபெற்ற காலங்களில் இருந்த எல்லாப் பகையுணர்வையும் காயங்களையும் சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் இப்போது புதைத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்ச் சகோதரர்கள் போரினால் இழந்து போன வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகவும் பரந்த மனதுடன் உதவ வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிர்காலம் மிகவும் …
-
- 5 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவின் Leicester நகரத்தில் உள்ள ஹரி கிருஷ்ணா இந்து ஆலயத்தில் நேற்று பிரித்தானிய நேரம் மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் வரையிலான பக்தர்கள் வெறும் 30 செக்கன்களுக்கு இடையில் மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்துள்ளார்கள். இது ஒரு தெய்வச் செயல் என்றும் இறைவனின் அற்புதம் என்றும் நம்பப்படுகின்றது. ஆலயத்தில் திருவிழா ஒன்றை முன்னிட்டு அன்னதானத்துக்காக மடப்பள்ளியில் பெருஞ்சமையல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சமைத்து முடித்த பின்னர் சிலிண்டரை சிலிண்டர் ரியூப் இல் ஒருவர் துண்டித்திருக்கின்றார். ஆயினும் அவர் காஸ் லீக் ஆகின்றது என உணர்ந்து கொண்டார். விபரீதத்தை உணர்ந்த அவர் சுதாகரித்தார். மிகவும் துரிதமாக செயற்பட்டார். ம…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கையில் காணாமல் போதல்கள் இன்னமும் தொடர்கின்றன என்று சர்வதேச யூரிகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச யூரிகள் சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான Gerald Staberock இவ்வாறு சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போதல்கள் வகைதொகையின்றி இடம்பெற்றன. எமக்கு கிடைத்து வருகின்ற தகவல்களின்படி இக்காணாமல் போதல்கள் அங்கு தொடரத்தான் செய்கின்றன என்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9755:2010-09-05-13-21-57&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 1 reply
- 650 views
-