Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முந்திரிக் காணியில் கடற்படை முகாம் கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது முந்திரிக் காணி கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள அரசாங்க முந்திரி பண்ணைக்குரிய 1200 ஏக்கர் காணி கடற்படை முகாமொன்று அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கூறுகின்றார் இது தொடர்பாக தனது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முந்திரி செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார் …

    • 2 replies
    • 546 views
  2. புலத்தில் கோடைகால விடுமுறை விட்டாகி விட்டது. ஏற்கனவே பலர் தாயகத்தை நோக்கி புறப்பட்டிருப்பார்கள் இன்னும் ஏராளமானோர் புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். ஏற்கனவே தாயகத்திற்கு சென்றவர்களும் செல்ல இருப்பவர்களுக்கும் சில செய்திகளை நாங்கள் சொல்ல விரும்புகின்றோம். ஏற்கனவே சென்றவர்களுக்கு செல்ல இருப்பவர்கள் இந்தச் செய்திகளை தாயகத்திற்கு சுமந்து சென்று தெரிவிக்க வேண்டும் என்பது எமது அவாவாகும். நீங்கள் தாயகத்தில் கால்வைக்கும்போது பல மாற்றங்களை அங்கு காணக்கூடும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தங்களது நாளாந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட சொந்தங்களை நீங்கள் சந்திக்கலாம். எங்கள் புகையிலையையும், வெங்காயத்தையும் சந்தைப்படுத்த நல்லவாய்ப்புக் கிடைத்த…

  3. சிறிலங்க கடற்படையினர் தாக்குதல் : தமிழக மீனவர்கள் 50 பேர் காயம் ஞாயிறு, 11 ஜூலை 2010( 15:27 IST ) கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 130 படகுகளில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, நேற்று இரவு அங்கு 8 படகுகளில் வந்த சிறிலங்க கடற்படையினர் மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், மீனவர்கள் வைத்திருந்த பாட்டரிகளையும், ஜி.எஸ்.பி. கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுவிட்டதாக …

    • 0 replies
    • 456 views
  4. மஹிந்த தன்னை நேரடியாக கேட்டுக்கொண்டால் மட்டுமே போராட்டத்தினை கைவிடமுடியும் என கூறியுளாராம் விமல். இதேவேளை, நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது என அவரது குடும்ப டாக்டர் தெரிவித்தார் என்று விமல் வீரவன்ஸவின் உதவியாளர் கூறினார். உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் விமல் வீரவன்ஸ எம்.பியை நேற்று முன் தினம் மாலை அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, மேர்வின் சில்வா ஆகியோர் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவருடன் உரையாடினர். நேற்றுக்காலை அமைச்சர் தினேஷ் குணவர்தன விமல் வீரவன்ஸவைப் பார்வையிட்டார். அவரது உடல்நிலை குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார். கொழும்பு 07 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் பெரு…

  5. Jul 9, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகி இராசதந்திர தொடர்புகளை தமிழ் மக்கள் சீனாவுடனும் ஏற்படுத்தவேண்டும். இந்திய மத்திய அரசை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படையாகத் தெரிவிக்க தொடங்கி விட்டார்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பீர்களானால் அவர்கள் மிக அதிகமாக வெறுக்கும் அரசு இந்திய மத்திய அரசாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களின் அழிவுக்குத் திட்டமிட்டு உதவிய நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இந்தியாவின் கரங்கள் தமிழ் மக்களின் குருதியில் தோய்ந்திருக்கின்றன தமிழ் மக்களின் அவலக் குரலுக்கு செவிசாய்க்காமல் தமிழ் மக்களை அழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும்…

    • 4 replies
    • 587 views
  6. எம் மண்ணில் இந்திய அமைதி படை கோரத்தாண்டவமாடி வெளியேறிய போது எனக்கு 16 வயது பல இடங்களில் இடப்பெயர்வுகள்,படுகொலைகள்,வன்புணர்வுகள்.அதற்க்குமேலாய் என் கண்முன்னே எனக்கு கல்வி போதித்த ஆசிரியரும்,அவர் மகனும் கொடூரமாக சுட்டுக்கொல்லபட்டபோது பெருமளவில் மன பாதிப்புக்குள்ளானேன். அதன் தாக்கம் காரணமாகவே மண்ணில் புலிவீரர்கள் மிளிர்ந்த போது நானும் அவர்களில் ஒருவனானேன்.எனது வயதின் குறைவு காரணமாக இயக்க தலைமை எனை உறுப்பினராக இணைத்து கொள்ளவில்லை.மேலாக நான் தொடர்ந்தும் கல்விகற்ப்பதற்க்கு முழு ஒழுங்குகளையும்,அவர்களே மேற்கொண்டனர்..பல்கலைகழக கல்வி,இதரகல்விகள்,என எனது கல்விகள் தொடர்ந்த போதும் களமுனைக்கு செல்வதற்க்கு கேட்கும் போதெல்லாம் கல்வியை தொடரும் படியே அறிவுறுத்தல் கிடைக்கும்.ஒவ்வொரு வி…

  7. நான் சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் ஒருவரை சந்தித்து ஈழப்பிரச்சனையில் .... சிங்கள புத்த வெறியர்கள் , இந்து மதத்தை அழிக்க முயல்கின்றனர் என்று பேசிக்கொண்டிருந்தேன் அவருக்கு ... ஈழப்பிரச்சனை குறித்து போதிய அறிவோ விழிப்புணர்வோ இருக்கவில்லை ... ஈழத்தில் இடிக்கப்பட்ட இந்துக்கோயில்கள் பற்றிய விபரங்கள் ,புத்த சிங்கள ஆக்கிரமிப்பு போன்ற தகவல்களை தமிழக பா.ஜ.க தலைவர், அகில இந்திய தலைமை, வி.எச்.பி, ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளுக்கு அனுப்பி இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா என்ற கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் ............................ இந்த விஷ்யத்தில் நாடு கடந்த தமிழீழ அரசை க்கொண்டு ஏதாவது செயலாற்ற முடியுமா என்றும் யோசிக்கலாமே!

  8. சிறீலங்கா கடற்படை மீண்டும் வெறிச்செயல் - 50 தமிழக மீனவர்கள் படுகாயம் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிறீலங்கா கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர். இம்முறை நடந்த சம்பவத்தில் 50 மீனவர்கள் காயமடைந்திருப்பதால் மீனவர்களிடையே பெரும் கொதிப்பு காணப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை தமிழக மீனவளத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் இன்று கூறுகையில், இராமேஸ்வரத்திலிருந்து 130 படகுகளில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு எட்டு ரோந்துப் படகுகளில் சிறீலங்கா கடற்படையினர் வந்து சுற்றி வளைத்துள்ளனர். மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மீ…

  9. ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களை தண்டிக்க புதிய சட்டம் திகதி: 11.07.2010 // தமிழீழம் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களை தண்டிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சனையினை மையப்படுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சங்கதி

  10. அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன்: சீமான் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்று சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது தமிழகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வ…

  11. மணலாறில் சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகளின் தாக்குதல்கள் திகதி: 11.07.2010 // தமிழீழம் மணலாற்றின் மேற்புற காட்டுப்பகுதிகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. முல்லைத்தீவின் மணலாற்றின் மேற்புற பெருங்காட்டுப்பகுதிகள் மீது கடந்த இரண்டுநாட்களாக சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். அண்மையில் மட்டக்களப்பு பகுதி மீது சிறீலங்காப்படையினரின் வான்கலங்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மணலாற்றின் மேற்புற பெருங்கடுகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என …

  12. ஞாயிற்றுக்கிழமை, 11, ஜூலை 2010 (18:59 IST) இலங்கைக்கு சென்ற ஈழத்தமிழர்கள் கடத்தல்: உறவினர்கள் கண்ணீர் பல வருடங்களுக்கு முன்பாக இலங்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து தப்பி மலேசியாவில் தஞ்சம் புகுந்தனர் இலங்கை தமிழர்கள். மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் இவர்கள், அகதிகளுக்கான அடையாளத்துடன் இருந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு அகதிகளுக்கான அடையாளம் மட்டுமே கிடைத்தது. எந்த உரிமையும் கிடைக்கப்படவில்லை. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள், மீண்டும் இலங்கைக்கே சென்று விடலாம் என்று திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில் இலங்கை அரசும், வெளிநாடு சென்றிருக்கும் இலங்கை தமிழர்கள் தாயகம் வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று அறிவித்திருந…

  13. வவுனியாவில் 60 ஏக்கர் நிலம் வளங்குமாறு மில்ற்றோயின் மகன் அழுத்தம்! வவுனியா செட்டிகுளம் பகுதியில் 60 ஏக்கர் நிலப்பரப்பினை தனக்கு வழங்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோவின் மகன் அரச அதிகாரிகளை நிர்ப்பந்தித்து வருகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாது, வவுனியா செட்டிகுளம் வலயம் நான்கு முகாமை அடுத்துள்ள மீடியா பாம் என்கின்ற பகுதியில் உள்ள நிலப்பரப்பினையே தனக்கு வழங்குமாறு அவர் நிர்ப்பந்திப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் உள்ள காணி பொதுக்காணி என்றும் அதனை தமக்கு வழங்குமாறு அவர் குறித்த பகுதியை உள்ளடக்கிய நிர்வாக உயர் அதிகாரிகளை நிர்ப்பந்திக்கும் அதேவேளை வட மாகாண ஆளுநரும் அதேகாணியை மில்றோய் பெர்னாண்ட…

  14. அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 12:48[iST] கொழும்பு: கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தையும், ஐ.நா.வளர்ச்சி முகமை அலுவலகத்தையும் மூட பான் கி மூன் உத்தரவிட்டிருப்பது அவசர கோல செயலாகும் என்று இலங்கை [^] கூறியுள்ளது. இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ள ஐ.நா. குழுவை கண்டித்து கொழும்பில் சிங்களர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஐ.நா. அலுவலகத்தை மூட பான் கி மூன் உத்தரவிட்டார். கொழும்புக்கான ஐ.நா. பிரதிநிதியான நீல் பூனேவும் திரும்பப் பெறப்பட்டு விட்டார். இதனால் இலங்கைக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள…

  15. சரணடைதல் ஊடாக சிங்களத்திடம் மாற்றம் உருவாகும் என்பது பைத்தியங்களின் கற்பனை! Pழளவநன டில: ழn ஜூலை 10, 2010 உலகின் மனிதாபிமானம் மிக்க நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் கடும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக சிங்கள தேசம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அதன் முழு இலக்கும் புலம்பெயர் தமிழர்களை நோக்கியதாகவே உள்ளது. இலங்கைத் தீவினுள்ளே சிங்கள அரசின் எத்தகைய பயங்கரவாத நடவடிக்கையினையும் எதிர்த்து நிற்கும் பலம் ஈழத் தமிழர்களுக்கு இப்போது கிடையாது. இப்போதும் அவர்களுக்கான அரசியல் பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் அளவிற்குப் பலமற்றவர்களாகவே நாட்டின் உள்ளேயும் வெளியேயும் அலைய வைக்கப்படுகிறார்கள். ஆதலால்,…

  16. நிபுணர் குழுவிற்கான பயணத்திற்காக இலங்கை அரசிடம் பான் கீ மூன் விசா கோருவாரா? - இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி! இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக் குழுவை கலைக்கும் வரை ஐக்கிய நாடுகள் அலுவலர்களை பணயம் வைக்குமாறு மக்களிடம் கோரிய இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சவை ஒரு "தனிப்பட்டவர்" என ஐக்கிய நாடுகள் கூறி ஒருவாரத்தின் பின்னர் மிகவும் தாமதமாக ஜுலை மாதம் 8ஆம் திகதி அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினரால் இந்த பணய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு தலைமையும் தாங்கியமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று இன்னர் சிற்றி பிறஸ் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் ஐக்கிய நாடுகள் கட்டிடத்தில் அமைந்திருந்த தமது …

  17. பயங்கரவாதிகள் போன்று செயற்படும் ஐ.நா.விற்கு பதிலடி கொடுப்போம் அரசு மிரட்டு! பயங்கரவாதிகளைப் போல ஐக்கிய நாடுகள் சபை செயற்படக் கூடாது. போதியளவு சாட்சிகளின்றி பான் கீ மூன் நிபுணர் குழுவினால் விசாரணைகளையும் முன்னெடுக்க முடியாது. இலங்கைக்கு எதிரான குழுவிடம் யார் சாட்சியமளிக்கின்றார்கள் என்பதையும் கண்டறிந்த பின்னர் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உரையாற்றிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் உலுகல்ல மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் விமல் வீரவன்சவின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினால்…

    • 3 replies
    • 688 views
  18. இந்திய-இலங்கை உறவு கோடீஸ்வரர்களுக்கு மட்டும்தானா? விஜயகாந்த் கேள்வி ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 11, 2010, 14:36[iST] சென்னை: இந்திய - இலங்கையின் இன்றைய உறவு, கோடீஸ்வர கம்பெனிகளுக்கு மட்டும்தான் பயன்பட வேண்டுமா? ஏழை, எளிய மீனவர்களின் உரிமையை மட்டுமல்ல, உயிரையும் பறிக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலோர மீனவர்களைப் பொறுத்தவரையில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது என்பது அவர்களது வாழ்வுரிமையாகும். மத்திய, மாநில அரசுகள் வாழ்வதற்கு வழி செய்யாமல், ஏற்கனவே இருந்த வாழ்வுரிமைகளையும் பறிக்க அனுமதிப்பது நியாயமா?. 29.9.2009 அன்று டெல்லியில் தே.மு.தி.க. சார்பில் இந்த வாழ்வுரிமையை வற்புறுத்தி தமிழக கடலோர ம…

  19. ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!! சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்தறிந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர்குழு அமைப்பதற்கு முடிவெடுத்தமையின் பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதை தெரிந்துகொண்ட சிறிலங்கா அரச அதிபர் மகிந்த இந்தியாவுக்கு எதிராக கடும் சீற்றத்தில் உள்ளார் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இந்தியாவின் இந்த மறைமுக தாக்குதலுக்கு எதிராக தமது தரப்பின் இராஜதந்திர தாக்குதலை மேற்கொள்வதற்கு மகிந்த தரப்பு தற்போது உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இத…

  20. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை சந்தித்த இந்திய அதிகாரிகள் இந்தியா வட பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செய்யவிருப்பதாகவும், அவற்றுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுள்ளதாகவும் குழுவில் இடம்பெற்றுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார் தலைமன்னாருக்கான கப்பல் சேவையை இந்தியா ஆரம்பிக்கவுள்ளதுடன், வட பகுதியில் ரயில்வே பாதை அமைத்தல், காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைத் தல் உள்ளிட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இந்தியா வடக்கில் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்தச் சந்திப்புக்களின் போது, இந்திய அமைச்சர்கள் இருவரும் தங்களிடம் தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார். ஈழநாதம்

  21. கே.பியின் 18 கப்பல்களும் பெற்றோல் நிலையங்களும் எங்கே ரணில் கேள்வி கே.பி பத்மனாதன் அவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என்று இலங்கை அரசு அறிவித்து சில மாதங்களில் அவருக்கு சொந்தமான கப்பல்கள், 600க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள்,500க்கும் மேற்பட்ட பெற்றோல் நிலையங்கள் பொன்றவற்றை அரசு தம்வசப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதித்தேர்தல் காலப்பகுதியில் அரசு அறிவித்திருந்தது. கே.பிக்கு சொந்தமானதாக கூறப்படும் கப்பல்களில் 5 கப்பல்களை இலங்கைக்கு கொண்டுவருவதாகவும் அப்போது அரசு பிரச்சாரம் செய்திருந்தது,ஆனால் இதுவரையில் புலிகளுக்கு சொந்தமான எந்தவொரு கப்பல்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதே உண்மையாகும். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியி…

  22. ஐ.நா. அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகத்துக்கு அநேகர் ஊர்வலம் வீரகேசரி இணையம் 7/9/2010 10:00:42 AM கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பெருந்திரளானோர் ரஷ்ய தூதரகத்தை நோக்கி தற்போது ஊர்வலமாகச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 'ரஷ்யாவுக்கு நன்றி' என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருப்பதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

  23. சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (17:11 IST) இனி தமிழன் தாக்கப்பட்டால் ஒரு சிங்களவன் கூட தமிழகத்திலிருந்து உயிருடன் திரும்ப முடியாது: சீமான் ஆவேசம் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீதான ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணை குழுவை எதிர்க்கும் சீனா, ரஷியா போன்ற நாடுகளை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் தீரன், இயக்குனர் புகழேந்தி, தமிழ் முழக்கம் சாகுல்அமீது, நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அத…

  24. நீங்கள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் செய்திகளிலிருந்து முக்கியமாக ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள் முன்னர், புலிகளின் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாளராக புலிகளின் தலைவரினால் நியமிக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீ லங்கா அரசினால் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தற்போது ஸ்ரீ லங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் K.P. (கே. பத்மநாதன்) என்பவரைப்பற்றிய செய்திகள்தாம் அவை. K.P.’இற்கு ஆதரவாக ஒரு சிலரும், K.P.’இற்கு எதிராக இன்னும் ஒருசிலருமாக மக்களிடையே பிரச்சாரங்களை மேற்கொண்டு இருப்பதனை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். K.P.’இனது கடந்த காலத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் உண்மையில் ஒருவரிடமுமே இல்லை. ஸ்ரீ லங்கா கூறும் பேச்சுக்களை வைத்தே மாத்திரம் நாம் K.P.’யைப்பற்றி…

    • 0 replies
    • 410 views
  25. கனடாவில் அடைக்கலம் கோரிய தமிழர்கள் விடுதலைப்புலிகள் அல்ல: கனடா திகதி: 11.07.2010 // தமிழீழம் கடந்த வருடம் கனடாவில் அடைக்கலத் தஞ்சம் கோரிய 76 தமிழ் மக்களில் எவரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என கனடா எல்லை பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கனடாவை சென்றடைந்த “ஓசீன் லேடி” கப்பலில் இருந்த 76 தமிழ் மக்கள் கனடா அரசிடம் அடைக்கலத்தஞ்சம் கோரியிருந்தனர். எனினும் அவர்களில் 25 பேர் விடுதலைப்புலிகளின் இடைநிலை தளபதிகள் என த வன்கூவர் சன் என்ற பத்திரிகை கனேடிய எல்லை சேவை அமைப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அடைக்கலத் தஞ்சம் கோரியவர்களில் விடுதலைப்புலிகள் என சந்தே…

    • 1 reply
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.