ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
வன்னியில் சிங்களத்தினால் தமிழர்களின் லட்சக்கணக்கான வீடுகள் அழித்தொழிக்கப்பட்டு, இன்று அங்குள்ள எஞ்சிய மக்கள் படங்குகளின் கீழும், மரங்களின் கீழும் ஏதிலிகளாக வாழும் சூழ்நிலையில், மிக வேகமாக வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகிறது. வன்னியில் உள்ள தமிழ் பூர்வீக கிராமமான கொக்கிளாயில் 80களில், அங்கிருந்த மக்களை கொன்றொளித்தும், அவர்களின் உடைமைகளை அழித்தும் அப்பகுதிகளில் இருந்து துரத்திய சிங்களம், அங்கு சில சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியது. மீண்டும் இப்போது லண்டனில் இருக்கும் சிங்கள இனவாத அமைப்புகளினதும், இனவாதிகளினதும் உதவியுடன் கொக்கிளாயில் மீண்டும் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்திருக்கிறது. படங்கள்: சிங்கள இராணுவ இணையத்தளத்திலிருந்து ..
-
- 27 replies
- 2.2k views
-
-
முல்லைத்தீவின் நந்திக்கடலை சீன நிறுவனம் ஒன்றிடம் மீள்வளர்ப்புத் திட்டத்துக்காக ஒப்படைப்பதற்கு சிறிலங்கா அரசு தயாராகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் மீள்வளர்ப்பு மற்றும் மீள்பிடித்திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனர்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் சீபாஸ் எனப்படும் மீன் இனத்தை நந்திக்கடலில் வளர்க்கவும் அவற்றை பிடித்து ஏற்றுமதி செய்வதற்குமான உரிமைiயை வழங்குமாறு சீன நிறுவனம் ஒன்று சிறலங்கா அரசை அணுகியுள்ளது. “அவர்கள் எம்முடன் இது பற்றிப் பேச்சு நடத்தினர். விரைவில் தமது திட்ட வரைபுகளுடன் இங்கு வருவார்க…
-
- 7 replies
- 2k views
-
-
ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகளின் தலைவர வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்‐ 16 June 10 06:42 am (BST) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 80 வயதான பார்வதி அம்மாள் கடந்த 10 வருடங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார். வல்வெட்டித்துஐற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை சற்று மோசமானதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.# http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25889&ca…
-
- 0 replies
- 1.3k views
-
-
படையினர் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியோர் தொடர்பிலான சில வழக்குகளை பாரபட்சமின்றியும் துணிவுடனும் மேற்கொண்டுவந்த சாவகச்சேரி, வவுனியா நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாவகச்சேரி நீதிவானாகப் பணியாற் றும் ரி.ஜே. பிரபாகரன் அக்கரைப்பற்று நீதி மன்றத்துக்கும், வவுனியா நீதிவானாகப் பணியாற்றும் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானாக எஸ். அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம…
-
- 0 replies
- 760 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது:- திவயின. இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள விவாதம் தொடர்பில் அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை பிரித்தானிய அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான சிங் யா பஹான் மெக் டொனா என்பவரே இந்த விவாதத்தைக் கோரியுள்ளார் என திவயின நாளேடு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய சமுகத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கையில் ஈழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையும் கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட வன்னி விஜயம் தொடர்பான அறிக்கை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வன்னி மாவட்டங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தினதுமாக மொத்தம் 28 கிராமங்களுக்கு மே மாதம் 21,22,23, 24 ஆகிய திகதிகளில் விஜயம் செய்தது தொடர்பான அறிக்கை. 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு வன்னிக்கு மே மாதம் 21,22,23, 24 ஆகிய திகதிகளில் விஜயம் செய்தது. (1) மதியாமடு (2) நைனாமடு (3)நெடுங்கேணி (4) வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒலுமடு (5) தட்சணாமருதமடு (6) பாலம்பிட்டி (7) சின்னப்பண்டிவிரிச்சான் (8) ஈச்சலவக்கை (9) மன்னார் மா…
-
- 0 replies
- 655 views
-
-
தமிழக எம்.பிக்கள் விரைவில் இலங்கை வருவர் : அமைச்சர் கெஹெலிய வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழக எம்.பிக்கள் இலங்கை வரவுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை நிலவரங்களை சர்வதேசம் அறிந்துகொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24408
-
- 0 replies
- 557 views
-
-
இலங்கை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் பிலிப் அல்ஸ்டன் குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார். தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை மற்றும் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இலங்கை ஜனாதிபதி நியமிக்க உத்தேசித்துள்ள விசாரணைக் குழுவின் நம்பகத் தனமை குறித்து சந்தேகம் தெரிவித்த அஸ்ரன் சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலமே உண்மைகளைக் கண்டறிய…
-
- 0 replies
- 655 views
-
-
விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரம் : ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலி மீது புகார் விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ரயில்வே தண்டவாளம் தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்பரம் கோர்ட் வக்கீல் கண்ணன் , சென்னை ஐகோர்ட் வக்கீல் பாபு ஆகியோர் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மீது புகார் கொடுக்க எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நிருபர்களுக்கு வக்கீல்கள் அளித்த பேட்டியில் : விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என தெரிவி…
-
- 5 replies
- 1.3k views
-
-
சதி…சதி தினமணி தலையங்கம். அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது…
-
- 8 replies
- 1.9k views
-
-
-
http://www.yarl.com/articles/files/10615_appappillai_vinayakamoorthy.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 498 views
-
-
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய, மாநில அரசுக்கள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீடிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கடந்த வாரம் இந்தியா பயணமாகியிருந்த அமைச்சரை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி சென்னையில் தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் 4பேரை காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பே…
-
- 2 replies
- 909 views
-
-
http://www.yarl.com/articles/files/100615_kaanamal_ponoor_lalitha.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 749 views
-
-
http://www.yarl.com/articles/files/100615_jaffna_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.yarl.com/articles/files/100615_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.yarl.com/articles/files/100615_mahendran.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 502 views
-
-
http://www.yarl.com/articles/files/100615_afta-prof_selvanathan.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 456 views
-
-
தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமே தவிர, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் அல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களையும்உள்ளடக்கிய குழு ஒன்று கடந்த வாரம் இந்தியாவின் கேரளா பகுதிக்கு சென்றிருந்தது. இக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பாமல் புதுடில்லியில் தங்கியுள்ளார். இது சம்பந்தமாக இந்தியாவில் தங்கியுள்ள முதலமைச்சருடன் தமிழ்மிரர் இணையதளம் நேரடியா தொடர்பு கொண…
-
- 2 replies
- 884 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதி சமந்த பௌவரும் கலந்துரையாடியுள்ளனர். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவர்கள் இருவரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா புட்டினியஸ், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை மற்றும் சிவில் பாதுகாப்பு தலைவர் டேவிட் பிரெஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, மேற்படி கலந்துரையாடல் நட்பு ரீதியானதாக அமைந்தி…
-
- 1 reply
- 695 views
-
-
ஈழத் தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போர் தொடங்கியுள்ளன: தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி ஈழத்தமிழர்கள் மீது மீண்டுமொரு போரை தொடுக்கும், இந்திய இலங்கை அரசுகள் புதிதாக போட்டுள்ள ஒப்பந்தங்களை கண்டித்து தமிழகமெங்கும் வரும் 18.06.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈழத்தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போரை இலங்கையும், இந்தியாவும் புதிய முறையில் தொடங்கியுள்ளன என்பதற்கான அடையாளம் தான் மன்மோகன் சிங் இராசபட்சே உடன்பாடுகள்! கடந்த 08.06.2010 அன்று புதுதில்லியில் சிவப்புக் கம்பளம் விரித்து இராசபட்சேயை வரவேற்ற இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்து முடிந்த பெரும் போருக்குப் பின்னர் இப்போது மீள்குடிய மர்வு இடம்பெறுகின்றது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தவிர தங்கள் வாழ்க்கைக்கு வேறு ஆதாரம் இல்லை என்ற கட்டாயத்தில் மீள்குடியமர்வில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இருந்தும் வன்னியில் மீள் குடியமரும் மக்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்படவில்லை.பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவதான நிலைமை அங்குள்ளதெனில், மக்களின் அவலநிலை எத்தகையதென்பதை ஊகித்தறிவதில் எந்தக் கஷ்டமும் இருக்க முடியாது. எனவே வன் னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் பாது காப்புத் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அரசின் கட்டாய கடமையாகும். யுத்தத்தில் பெற்ற வெற்றி…
-
- 7 replies
- 1.1k views
-
-
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி திருமணம் ‐ படங்கள் இணைப்பு‐ பார்க்க: http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25697&cat=1 13 June 10 07:28 am (BST) முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி வவுனியா பம்பைமடுவில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீமுத்து ஜெயந்திநாதக் குருக்கள் இந்து மணமக்களுக்கு இந்து சமயப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். மன்னார் மறைமாவட்டத்தின் குடும்ப ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு அன்ரனி ஜெபமாலை அடிகளார் கத்தோலிக்க மணமக்களுக்கு கத்தோலிக்க சமய முறைப்படி திருமணத்தை …
-
- 30 replies
- 2.8k views
-
-
இப்படித்தான் சென்றவாரம் ரி வி ஐ தொலைக்காட்சியைப்ப்ற்றி,சி ரி ஆர் வானொலி ஊழியர்கள் பற்றி எல்லாம் எழுதுகிறார்கள் உண்மை யாதெனில் ரிவிஐ நிறுவனத்துக்கு பத்து பங்குதாரர்கள்,அவர்களில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களும் ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்.(கடந்த மே மாதம் வரையும் நல்லதோ கெட்டதோ ஒரு குடையின் கீழ் தான் அனைவரும் இருந்தோம்) (இப்போ நிலை சற்று வேறுதான் சிங்களவன் சொன்னபடி தமிழ் தேசியத்தை உடைக்கிறான், நம்மவரும் அதற்கு எடுபட்டு ஆடுகிறார்கள்)இப்போ எந்த கை ஓங்குகிறதோ அதனிடம் போய் சேரும்.அதேபோல சிரிஆர் வானொலியை நடத்துவது விவேகானந்தனோ,சக்தியோ அல்ல அவர்கள் கடைமையில் இருக்கும்போது மேலிடம் செய்தியை கொடுத்தால் அதை வெளியிடுவது அவர்களது கடைமை.அதற்காக அவர்களை எப்படியெல்லாம் குற்றம் சாட்…
-
- 32 replies
- 4.5k views
-