ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
தேசியம் என்ற பெயரால் நாடுகடந்த அரசாங்கத்தை துண்டாட திறந்தமடல் என்ற பெயரில் சேரமானின் பகிரங்க முயற்சி சேரமானின் திறந்த மடல் இணைப்பு ஏமாறக் கூடாது தமிழினம் இதற்கு துணைபோகக் கூடாது திரு.சே.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் முள்ளிவாயக்கால் படுகொலைகள் முடிந்த பின் எல்லாவற்றையும் இழந்து பெரும் துயரத்தில் இருந்தவேளையில் புலம் பெயர்ந்த தமிழீழமக்களின் ஒரே ஆறுதலாக இருந்த நாடுகடந்த அரசாங்கத்தின் தோற்றம் பெரும் ஆறுதலாக இருந்தது. தற்போது நடைபெறும் இப்படியான சதிமுயற்சிகளால் பெரும் துயரத்தில் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் சிக்கிச் சீரழிகிறது. உண்மையான இன உணர்வும் தமிழ்தேசியத் தலைவனை நேசிக்கும் மக்களால் இப்படியான செயற்பாடுகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை மாறாக பிழவுபட்டு நிற்கும்…
-
- 7 replies
- 1.1k views
-
-
Last month in Victoria, three Australian Tamil men walked from court with criminal convictions and good behaviour bonds, after pleading guilty to funding the separatist Sri Lankan group, the Tamil Tigers - marking an end to a multi-million dollar investigation by the Australian Federal Police. Monica Attard speaks with one of the trio - Arumugan Rajeevan. http://www.abc.net.au/rn/sundayprofile/stories/2010/2893395.htm
-
- 0 replies
- 878 views
-
-
இந்தியாவில் ரணில் விக்கிரம சிங்க ஐக்கிய தேசிய கட்சின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்றைய தினம் இந்தியா சென்றுள்ளார். தனிப்பட்ட காரணங்கள் காரணமாகவே இவர் தென்னிந்தியாவுக்கு சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் ஐக்கிய தேசிய கட்சியை மீளக்கட்டியெழுப்பும் குழு கடந்த வாரம் நியமிக்கப்பட்டு நேற்று முன்னதினம் அதன் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கட்சியின் தலைவரிடம் இன்றைய தினம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதும் அது திங்கட்கிழமையே சமர்ப்பிக்கடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15926
-
- 5 replies
- 642 views
-
-
ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் இலங்கை பயணம் ரத்து! இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவிருப்பதாலும், வேறு சில காரணங்களாலும் அவர் விழாவில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான் ஆகியோர் கொழும்பு விழாவில் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கொக்கரித்திருந்தார். இதைத் தொடர்ந்து அமிதாப் குடும்பம் இலங்கையில் நடக்கும் விழாவில் பங்கேற்கக் கூடாது என்று கோரி தமிழ் அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. …
-
- 3 replies
- 744 views
-
-
http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/98 Click Here To Take Action! (US Participants) Click Here To Take Action! (International Participants) Tamil Refugees Suffer in Prison-like Conditions Click Here To Take Action! (US Participants) Click Here To Take Action! (International Participants) Photo: Tamilnet Over one hundred Tamil asylum seekers have recently been detained in Tanjung Pinang, Indonesia. These are the same Tamils who were stranded on a boat off the coast of Merak, Indonesia for seven months. These Tamils, being held and treated like criminals in a prison-li…
-
- 2 replies
- 506 views
-
-
யாழ் பிரதி மேயர் கைது: மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஈ.பி.டி.பி கட்சியின் யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் இளங்கோ கைது செய்யப்பட்டதை அடுத்து மாநகர சபை ஊழியர்கள் இன்று முதல் 'வேலை நிறுத்தப் போராட்டத்தை' மேற்கொண்டுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபில்நாத் படுகொலை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி நீதிவான் பிரபாகரனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரின் மாநகர சபையின் பிரதி மேயர் நேற்று யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வேளை இப்படுகொலையின் பிரதான சந்தேக நபரான ஈ.பி.டி.பி கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் சாள்ஸ் கைது செய்யப்பட்டு அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 2 replies
- 709 views
-
-
http://www.yarl.com/articles/files/100511_naam_thamilar_rajendran.mp3 நன்றி: ATBC
-
- 3 replies
- 575 views
-
-
http://www.yarl.com/articles/files/100511_thurairatnasingam.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 648 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலிலிருந்து விலகிக் கொண்டுள்ள போதிலும் அதன் செயற்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு பின் அதிலிருந்து விலகிக் கொண்டவரும் வெண்புறா அமைப்பின் தலைவருமான திரு. எம்.எஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தமிழ் ஸ்டார் வானொலிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியின் விபரம் வருமாறு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டதற்கான காரணங்களைக் கூறுவீர்களா? மீண்டும் ஒரு முறை இந்தத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்படக் கூடிய பணச் செலவைக் கருத்தில் கொண்டும் இதன் காரணமாக மக்கள…
-
- 2 replies
- 776 views
-
-
போர் முடிந்தும் விரும்பதகாத மாற்றங்கள் வட கிழக்கில் நடக்கின்றனவாம் - இந்தியா மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 11, 2010 இலங்கையில் போர் முடிவுற்றாலும் விரும்பதகாத செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெறுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. புது டெல்லியில் நடந்த மா நாடு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சீனாவின் ஆதிக்கம் மற்றும் அன்னியரின் தலையீடுகளையே இந்தியா மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்ரது. போர் முடிந்தபின்னர் தமக்கே வடக்கு கிழக்கு என்ற நினைப்பில் இருந்த இந்தியாவிற்கு சீனா , பாகிஸ்தாம் மற்றும் நாடுகளின் பிரசன்னங்கள் எரிச்சலையூட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது ஆனாலும் அதனை எதிர்கொள்ளும் சக்தி இந்தியாவிற்கு இல்லை. இருந்த ஒரே ஒரு சக்திய…
-
- 3 replies
- 1.4k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்திலுள்ள Philadelphia நகரில் நடைபெற இருக்கின்றது. இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 17,18, 19 என மூன்று தினங்கள் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத் தொடரின் போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான தேர்தல் கடந்த மே 2ம் திகதி உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது. ஒரு சில நாடுகளில் இடம்பெற்ற சில தேர்தல் முறைகேடுகள் காரணமாக மீள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதி…
-
- 9 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனையுடன் தமிழத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இந்நிலையில் மலேசியாவில் வரும் 15ஆம் தேதிக்குள் விசா காலம் முடிவடைவதால், பார்வதி அம்மாள் இலங்கை செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து சிவாஜிலிங்கம் உதவியோடு திங்கள்கிழமை மாலை இலங்கை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பார்வதி அம்மாள், அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார். தமிழகத்தில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருப்பது பற்றி தமிழக அரசு மூலமோ, இந்திய அரசு மூலமோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள சிவாஜிலிங்கம்,…
-
- 12 replies
- 1.5k views
-
-
கடந்த ஆண்டு வன்னி நிலப்பரப்பில் எமது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொலை செய்யப்பட்டிருந்த காலப்பகுதியிலிருந்து தாம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தி இதன் மூலம் தமிழ் மக்களிற்கு ஒரு விடிவு பிறக்கப் போகிறது என்னும் ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் விதமாக அறிக்கைகளை வெளிவிடுவதில் Tamils for Obama என்னும் அமைப்பு முன்னின்றதைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். தாயகத்தில் ஒவ்வொரு தினமும் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டுமே என்று மக்கள் அனைவரும் பதைபதைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இதோ ஒபாமா எமது மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப் போகிறார் என்னும் விதமாய் இந…
-
- 1 reply
- 908 views
-
-
மகிந்த மூன்றாவது தடவையும் ஆட்சிக்கு வரும் அபாயம் திகதி: 11.05.2010 // தமிழீழம் மகிந்த ராஜபக்சவை மூன்றாவது தடவையும் (18 ஆண்டுகள்) அல்லது அதற்கு மேலும் ஆட்சியிலமர்த்தும் வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய ஊகங்கள் வெளியாகிவந்த நிலையில், நேற்று கருத்துரைத்த ஆளும் கட்சியின் செயரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரமுடை அரசுத் தலைவர் ஆட்சிக்கு இரண்டு தடவைகள் (12 ஆண்டுகள்) என கால அவகாசம் விதிப்பது முறையல்ல எனத் தெரிவித்துள்ளார். இது மட்டுமன்றி அரசியல் அமைப்பில் மேலும் பல மாற்றங்கள் இடம்பெற இருப்பதுடன், இந்த மாற்றங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறும் நோக்கில் 144 ஆசன…
-
- 1 reply
- 495 views
-
-
http://www.yarl.com/articles/files/100511_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 566 views
-
-
அமிதாப்பச்சன் சிறீலங்கா செல்வதைக்கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் இந்தித்திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா மற்றும் பல துரைத்துறையினர் சிறிலங்காவில் நடைபெறும் திரைப்பட விழாவுக்கு செல்வதைக்கண்டித்து தமிழகத்தில் தமிழ்நாடு மாணவர்கழகத்தினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் நேற்று(10.05.2010) மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாணவர்கழகத்தின் மாநில பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமை யேற்றுள்ளார். சட்டக்கல்லூரி மாணவர்களும், அரசுக்கலைக்கல்லூரி மாணவர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். http://meenakam.com/?p=15941
-
- 1 reply
- 849 views
-
-
இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் பேசினார். அப்போது அவர், ’’விடுதலைப் புலிகள் முன்பு போர்க்களத்தில் இருந்தவாறு, இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர். போர்க்களத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட உடன், தங்கள் நடவடிக்கைகளை வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இலங்கைக்கு வெளியில் வேறு நாடுகளில் இருந்தவாறு, தூதரக ரீதியாக தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் செயல்படத் துவங்கியுள்ளனர். இது மிகவும் அபாயகரமான நடவடிக்கை. எனவே இது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேணடும்’’ என்று கூறியுள்ளார். நக்கீரன்.
-
- 5 replies
- 1.3k views
-
-
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர்: பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். புலிகளுடனான ய…
-
- 4 replies
- 781 views
-
-
மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து! ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம். இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்! வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் …
-
- 1 reply
- 596 views
-
-
தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும்: சீமான் அறிவிப்பு அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் வீட்டின் முன் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பில் மும்பைத்தமிழர்களால் காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறுகின்றது. தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்று…
-
- 0 replies
- 713 views
-
-
மாகாண சபைகளை இணைத்து செனட் சபை - சுசில் பிறேமஜயந்த சிறிலங்காவிலுள்ள அனைத்து மாகாண சபைகளையும் இணைத்து 25 உறுப்பினர்களுக்கு மேற்படாத வகையில் புதிய செனட் சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கான அரசியல் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தோ்தல் விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர் அத்தோ்தல் முடிந்ததும் சிறிலங்காவின் 9 மாகாண சபைகளையும் உள்ளடக்கியதாக செனட் சபை உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மாகாண சபைகள் சம்பந்தமாக நாடாளுமன்றில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அது இந்த செனட் சபையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://meenaka…
-
- 0 replies
- 462 views
-
-
ஐ.நா.அரசியல் செயலரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லியன் பெஸ்கோவின் இலங்கைக்கான விஜயம் பின்போடப்பட்டுள்ளது. இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்னும் சில தினங்களில் அவர் இலங்கைக்கு வர இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தன. தனிப்பிட்ட விடயம் காரணமாக அவரின் இலங்கைக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இலங்கை விஜயம் தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவித்திருந்தும் இலங்கை அரசு அவரின் பயணம் சம்பந்தமாக உரிய கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. http://meenakam.com/?p=15922
-
- 0 replies
- 381 views
-
-
Big B to attend IIFA awards in Sri Lanka? According to officials of Sri Lanka Tourist Board (SLTB), Amitabh Bachchan has confirmed that he will take part in IIFA awards in Colombo, Sri Lanka from June 3 to 5. Remember, a few weeks back Tamil groups in India had strongly protested and even staged a demonstration in front of Bachchan’s house in Mumbai. And when groups in Tamil Nadu led by director Seeman threatened to boycott Bachchan and his family member’s film, he played it down. At that time Big B had said that he “would not like to hurt anybody’s feelings” and would take a decision that was acceptable to all. But the company that is running IIFA, Wizcra…
-
- 5 replies
- 2k views
-
-
இரா. சம்பந்தன் கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல் அன்பான கூட்டமைப்பினரே, 17ம் திகதி எல்லா ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்ய முடிவெடுத்துள்ளமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்,மே 18ம் திகதி என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்?. அன்றைய தினத்தில் 40,000 மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இப்போது உலகமே ஏற்றுக் கொள்ளுகின்றது. உலகத் தமிழர்கள் அத்தினத்தை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், போர்க்குற்ற நாளாகவும் அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதிபத்திய சிங்கள அரசு அந்தத் தினத்தை வெற்றி விழாவாகக் கொண்டாடத் தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினராகிய நீங்கள் இந்த நாளில் என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்? வீட்டைப் பூட்டி உள்ளேயிருந்து ஒப்ப…
-
- 7 replies
- 991 views
-
-
புலிகளை அழித்து இலங்கையினை சீனாவுக்கு கொடுத்துவிட்டது இந்தியா - இந்திய ஊடகவியலாளர் மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 விடுதலைபுலிகளை அழிக்க உதவியதன் மூலம் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டார்கள். இதன் பின்னர் இலங்கை முற்றாக சீனா ஆக்கிரமித்துள்ளது. இனி இந்தியாவிற்கு அங்கு சாதகமான சூழல் எதுவும் இல்லை இவ்வாறு கூறியுள்ளார் ஊடகவியலாளர் பகவான் சிங். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது குடியேற்றங்கள் நடக்கின்றன அந்த நாடு முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87…
-
- 3 replies
- 1.5k views
-