Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்களை விரும்பும் நாட்டிற்கு அனுப்பக்கோரி தூதரகத்தில் சீமான் மனு மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்கள் விரும்பும் நாட்டிற்கு உரிய உதவிகள் செய்து அனுப்ப வேண்டும் என்றுக்கோரி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் சீமான் தலைமையில் மனு அளித்துள்ளனர். சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள்,குழந்தைகள் உட்பட 75 பேர், தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக்கொள்வோம் என்று கப்பலில் தப்பித்துச்சென்றனர். ஆனால் அப்படிச் சென்றவர்களின் படகை…

    • 1 reply
    • 369 views
  2. ஓய்வறியா தலைவன் -கண்மணி நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்து வரும் பாடலைப்போல தெளிந்த நீரோடை ஒலிக்கிறது. உயரமான மரக்கிளைகளை ஊடுருவி நிலவொளி வருகிறது. இரவு நீண்டு செல்கிறது. அந்த மனிதர் இன்னும் விழித்திருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலையால் அவர் இன்னும் தூங்கவில்லை. அவர் தொடர்ந்து தமது மண்ணின் விடுதலைக்காக உழைத்தார். இன்றுவரை, இந்த வினாடிவரை அறிவியல் பூர்வமான அவருடைய சிந்தனையும், ஆக்கப்பூர்வமான லட்சியமும், அடக்கமான உழைப்பும், அகலமான பார்வையும், ஆழமான அன்பும் கொண்ட ஒரு மகத்தான மனிதர், நமது தாய் மண்ணின் விடுதலைக்காக, தமிழ் மண்ணின் மானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் கரங்களில் சுமந்த கருவிகள், பகைவனின் பகை முறித்தது. அவரின் மனங்களில் தோன்றி…

  3. யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் தனியாருக்கு சொந்தமான நிலைகளில் இருந்து பின்வாங்க உள்ளதாக அறிவித்தார் கோத்தபாய. யாழ் குடாவில் இருந்து படைகளை படிப்படியாக விலக்க முன் வந்தாராம் யாழ் குடா சிறீலங்கா படைத்தளபதி. ஆனால் இப்போ யாழ் குடாவில் ஈபிடிபி ஆயுதக் கும்பலால் நடத்தப்படும் படுகொலைகள் கப்பம் அறவிடல்கள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கள் சட்டவிரோத செயற்பாடுகளை காரணம் காட்டி தமது முன்னைய அறிவிப்பில் இருந்து இவர்கள் பின்வாங்கியுள்ளனராம். ஈபிடிபி ஆயுதக் கும்பல் சிறீலங்கா அரசின் ஒரு அங்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் சிறீலங்கா படைகளுக்கான குடா நாட்டு தளபதி ஈபிடிபி ஆயுதக் கும்பலின் செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். அந்தள…

    • 13 replies
    • 1.8k views
  4. சிறிலங்கா முழுவதிலும் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சிறிலங்கா முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் பல மருந்துவகைகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. நோயாளர்கள் முறைப்பாடு செய்யுமளவிற்கு இந்த நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமளவிற்கு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாட்டினை ஆராய்வதற்கு சிறிலங்கா சுகாதார அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மருந்துப்பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக…

  5. அவசரகாலச்சட்டம் நீக்கப்படமாட்டாது – சிறிலங்கா பிரதமர் அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவசரகாலச் சட்டம் நீக்கப்படமாட்டாது என சிறிலங்காவின் பிரதமர் தெரிவிக்கின்றார். அவசரகாலச்சட்டம் சம்பந்தமான பிரேரணையை இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவசரகாலச் சட்டத்தினை கொண்டு முக்கிய சவால்களை வெற்றிகொள்ள நோ்ந்ததாக தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல்கள் தொடர்வதனால் இதனை ஒழிப்பதற்கு அவசரகாலச்சட்டம் நீடீக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்’ளார். http://meenakam.com/?p=15348

  6. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு அரசுடன் பேசுவோம் - சம்பந்தன் வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து அந்தப் பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்முடன் அரசாங்கம் திறந்த மனதுடன் பேசினால் கலந்தாலோசனை நடத்தினால் நாம் எமது முழு ஆதரவையும் வழங்குவோம். பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர் களு ம் இந்தியத் தூதுவர் அசோக்கே காந்தவின் அழைப்பின் பேரில் அவரை நேற்று நண்பகல் சந்தித்தனர்.அப்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு இந்தியத் தூதுவரிடம் உறுதியாகத் தெரிவித்தனர். நட்புரீதியாக இடம்பெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தன் தலைமையில் நாடாளும…

    • 0 replies
    • 303 views
  7. நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நாடுகடந்த தமிழீழ அரசுக்காய் எமது குரல் ஓங்கி ஒலிக்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் பயணிக்கும் நாம் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போரையும் குழப்பங்கள் ஏற்படுத்துவோரையும் மக்கள் மத்தியில் இனம்காட்டி உறுதிமிக்க செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்போம். அந்த வகையில் பல எதிர்பார்ப்புக்களோடு சவால்களை எதிர்கொண்டவாறு சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு முடிவெடுத்த எமது குழுமம் தேர்தல் நடக்கும் நாடுகளில் எமது செய்தியாளர்கள் கட்டுரையாளர்கள் ஆய்வாளர்கள் விமர்சகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தகவல்களை திரட்டி தேர்தல் கள மதிப்பீடுகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்த முனைகின்றோம். இத் …

    • 1 reply
    • 907 views
  8. 'அரச பராமரிப்பிலேயே பார்வதி அம்மாள் சிகிச்சை' விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், தமிழக அரசின் பாதுகாப்பில் தமிழக அரசு குறிப்பிடும் மருத்துவமனையில், தமிழக அரசின் செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது…

    • 6 replies
    • 1.1k views
  9. நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடாவிலிருந்து வெற்றி பெற்றுள்ள திரு. ஈழவேந்தன் அவர்களை eelamweb இணையத்தளத்திற்காக பேட்டி கண்டோம். தேர்தல் வெற்றி, அடுத்த கட்ட நடவடிக்கைகள், இந்திய நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை: உங்கள் வெற்றி குறித்து உங்கள் கருத்து மிகக் குறுகிய காலமாகக் கனடாவில் வாழும் என் மீது அன்பைப் பொழிந்து எனது கருத்துக்களிலும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கே இந்த வெற்றி சென்றடைய வேண்டும். என்மீது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களின் பிரதிநிதியாய் பணி செய்வேன். நான் பணி செய்யும் காலத்தில் என்னை மொட்டையெனக் கருதினால் தீட்டிப் பயன்படுத்தலாம். கறள் என்றால் தூக்கி வீசலாம…

    • 3 replies
    • 904 views
  10. ஏப் 30, 2010 மணி தமிழீழம் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்ரர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு! எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். நான்நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் முசிறியிலுள்ள டாக்ரர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன் ஆனால் 2003 ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வ…

  11. ஊடகவியலாளர் மீது இலக்கு பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் முகமாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் கருதும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் அனைத்து பாகங்கள் பற்றியும் இந்தப் பட்டியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய மதிப்பீட்டில் யார் யார் ஊடக சுதந்திரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் எப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று இந்த அமைப்பு அதில் விபரித்துள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் தொனி சாடும் விதமாகவும் கேலி செய்யும் விதமாகவும் இருகிறது. ஆய…

    • 0 replies
    • 634 views
  12. குடா நாட்டின் அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க திட்டம் யாழ் நிருபர் திங்கட்கிழமை, மே 3, 2010 குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.மக்கள் நலன்கருதி தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்றும் இராணுவத்தால் வேஎண்டுகோள் விடப்பட்டுள்ளது. இராணுவம் தான் அனைத்து சமூக சீர்கேடுகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டிவிட்டு அதில் ஈடுபட்டம் வந்துள்ளது. ஆனால் இப்போ அதனை கட்டுப்படுத்த தாம் நடவட…

    • 0 replies
    • 564 views
  13. கடந்த ஏப்ரல் 15ந் தேதி தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு அடிப்படை இன அழிப்பின் அடையாளத்தை வரைந்து காட்டியது. “பேசப்படாத இனப்படுகொலை, இலங்கையில் போர் குற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் இலங்கை நடத்திய மாந்த நேய அடக்குமுறைகளைக் குறித்தும், தமிழர்களின் வாழ்வு பறிக்கப்பட்டதை குறித்தும் பல்வேறு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சிலரின் சொற்கள் நமது மனங்களை இடியாய் உலுக்கி எடுக்கிறது. குறிப்பாக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜசேந்திர சச்சார் குறிப்பிடும்போது, தமிழர்களுக்கு சமத்துவமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒருவேளை இலங்கை அரசு இதை செய்ய தவ…

  14. இலங்கையின் வழியில் தனது போர்க் குற்ற நடவடிக்கைகளை இந்தியா தொடர்கிறது என்று பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அகில இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்களது கைதைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை: அகில இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்கள் நேற்று மத்திய காவல்துறையினரால் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை இது வரை காவல்துறை வெளியிடவில்லை. 80 வயதை கடந்த மூத்த தலைவரான அவரின் இருப்பிடம் அறியாமல் காஷ்மீர மக்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். கடந்த பல ஆண்டு காலமாக காஷ்மீர மக்களின் தன்னுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் சை…

  15. சரத்பொன்சேகா மீதான யுத்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் 21 ஆம் திகதி வரை இடைநிறுத்தம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிறிலங்காவின் தரைப்படைத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான முதலாவது யுத்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை இம்மாதம் 21ம் திகதிவரையில் இடைநிறுத்துமாறு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தமக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட முதலாவது நீதிமன்றத்தின் நீதிபதிகள் தகுதியற்றவர்கள் என்பதனால் அதனை இரத்துச்செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தனது மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார். …

  16. இங்கிலாந்தில் லண்டனுக்கு வெளியில் நடைபெற்ற குழறுபடிகள் காரணமாக அப்பகுதித் தேர்தல் முடிவுகள் ரத்து என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் யாருக்காவது தெரியுமா?

    • 0 replies
    • 1.2k views
  17. இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம் - உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள் மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பகூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் இயக்க தலைவரும், திரைப்பட டைரக்டருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று வன்னிவதை முகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் உள்பட 75 பேர் தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக் கொள்வோம் என்று கப்பலில் தப்பித்து சென்றனர். ஆனால் அப்படி சென்றவர்களின் படகை மலேசிய காவ…

    • 1 reply
    • 545 views
  18. அனைத்து அரசுகளும் ஊடகவியலாளர்களை பாதுக்கவேண்டும் – ஐ.நா.செயலர் அனைத்து நாட்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக ஊடக சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிட்டு அறிக்கையிலேயே ஐ.நா.செயலாளர் நாயகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை கட்டவீழ்த்தி விடும் நபர்கள் மட்டில் பக்கசார்பற்ற விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம் மக்களின் அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனித உரிமை பிரகடனத்…

  19. மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!! சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் - தீர்வ…

    • 32 replies
    • 2.1k views
  20. கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய திகதி: 30.04.2010 // தமிழீழம் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்…

  21. தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். கணவன்மார்கள் தடுப்பு…

    • 15 replies
    • 1.7k views
  22. வளமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்தவர்கள் பதுங்குகுளிக்குள்ளே பிணங்களாகிய போது அவர்களின் வாழ்வில் முதல் இடிவிழுகிறது. தன்குடும்பத்துத் துயரை எம்மோடு பகிர்கிறாள் கிருபா என்ற யுவதி. பட்டதாரி அண்ணனை இழந்த துயர் தங்கைகளை இழந்த துயர் மனநிலை பாதிக்கப்பட்ட தாயின் நிலை குடும்பமே ஆதரவற்றுத் தவிக்கிறது. இறுதியாக இவர்களது நம்பிக்கையாக உள்ள பல்கலைக்கழகம் சென்ற தம்பியை யாராவது படிப்பிக்குமாறு கெஞ்சுகிறாள். இதோ அவளது குரலிலிருந்து....

    • 0 replies
    • 1.5k views
  23. திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்கப்போவதாக சிறிலங்கா அறிவிப்பு ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்க சிறிலங்காவின் அதிபர் தீர்மானித்ததுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், நீண்ட காலத்தின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு மன்னிப்பு வழங்க சிறிலங்காவின் அதிபர் தீர்மானித்துள்ளார். http://meenakam.com/?p=15228

  24. மட்டு-கொழும்பு தொடரூந்து சேவை பாதிப்பு கொழும்பு மட்டக்களப்பிற்கும் இடையிலான தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கெக்கிராவை பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கும் அதுபோல், மட்டக்களப்பிலிருந்து இன்று காலை 07.30 மணிக்கும் பயணிக்க இருந்த தொடரூந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடருந்து தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=15231

  25. கடந்த நூற்றாண்டில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின்போதும் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் படிப்படியாக வீடு திரும்புகிறார்கள். ஆனால் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கும் இந்த முல்லீம்களுக்கு அயலிலுள்ள தமிழர்களுடன் இணக்கத்துடன் வாழ்வது சவால் நிறைந்த காரியமாகவே இருக்கும். இவ்வாறு ஐ.நாவின் மனிதார்ந்த விவகாரங்களுக்கான செயலகத்தின் IRIN செய்தித் தளத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அத்தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளதாவது, தமிழர்களுக்குச் சுதந்திரத் தனிநாடு அமைப்பதற்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவ…

    • 0 replies
    • 418 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.