Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போராளிகளை சிறையில் பார்வையிட ஐ. நா வுக்கு தொடர்ந்தும் தடை வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 விடுதலைப்புலிப் போராளிகளை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்னமும் தடையே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று கவலை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அட்ரெச் மஹே சிக் இவ்வாறு கவலை வெளியிட்டார். இம்முகாம்களில் சுமார் 12 ஆயிரம் பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து அரசின் நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களில் அநேகமானோர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால…

    • 0 replies
    • 370 views
  2. ஐந்து வருடங்களில் மிகமோசமான மனித உரிமை மீறல் நடந்த நாடுகளில் இலங்கை வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 கடந்த 5 வருட காலப்பகுதியில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது என்று சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சர்வதேச குழு (Minority Rights Group International) நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: கடந்த 5 வருட காலப் பகுதியில் உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல் சம்பவங்களும், மனிதப் பேரவலங்களும் பெரிதும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான், ஏமன் ஆக…

    • 0 replies
    • 443 views
  3. சட்ட மன்றத்தில் தி.வேல்முருகன் இன்று பேசுகையில் : இலங்கயிலிருந்து ஏதிலிகளாக சென்ற 75 தமிழ் குடும்பங்களும் அதில் 15 பச்சிளம் குழந்தைகளும் மலேசியா அரசாங்காத்தால் கைது செய்ய பட்டு அவர்களை அந்த நாட்டிற்குள்ளும் விடாமல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் ஒப்படைக்காமல் கடந்த முன்று நாட்களாக பசியும் பட்டினியுமாக வாடி கொண்டு இருக்கிறார்கள்.தயவு செய்து இந்த அவையின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவருகிறேன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மத்திய அரசின் மூலமாக அவர்களி உயிர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை இந்த அவையில் முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் அவர் வெளி…

  4. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..

  5. http://www.yarl.com/articles/files/100427_Colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

    • 1 reply
    • 651 views
  6. விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம். துணைபோகும் இந்தியம்….? இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ…

  7. மாவீரர் திருமேனியில் வீதி புனரமைக்கும் மகிந்த அரசின் இராணுவம். – வ.ஐ.ச.ஜெயபாலன் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை புல்டோசரால் இடித்து குவித்துள்ளனர் என்ற செய்தியை முன்னரே அறிந்திருந்தோம். .மேற்படி இடிபாடுகளை மாவீரர் திருமேனியின் எச்சங்களோடு வீதி அமைக்க மகிந்த அரசின் இராணுவ அதிகாரிகள் பயன் படுத்திய சேதி பேரதிற்ச்சி தருகிறது. ஈழத் தமிழர்கள் மீதான தங்கள் வெற்றிப் பிரகடனமாகவும் தமிழரை இழிவு படுத்தி அச்சுறுத்தும் மகிந்த அரசின் தேர்தல் உத்திகளில் ஒன்றாகவும் இப் பாதகச் செயல் நிகழ்த்தப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் உச்சமாக நிறைவேறிய பாதகம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக உள்ளது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல இடிபாடுகளை மாவீரர்களின் தலை மயிர் …

    • 3 replies
    • 913 views
  8. வரும் வியாழக்கிழமை 29.04.2010 அன்று மூத்த ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் தாங்களும் தங்கள் ஊடக நிறுவனத்தைச் சார்ந்த அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாம் தாழ்மையோடு வேண்டி நிற்கிறோம். அமெரிக்க பல்கலைக் கழக விரிவுரையாளர், பல ஆங்கில ஊடகவியலாளர்கள், மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் என பல் சமூகத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். எனவே உங்கள் வரவை நீங்கள் முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம். உங்கள் வருகையை நீங்கள் முன்கூட்டியே பதிவுசெய்வதன் மூலம், இந்நிகழ்வுகளை நாம் இலகுவாக நடாத்த முடியும். நிகழ்வுகள் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்கு முடிவடையும். நிகழ்ச்சி நடைபெற இருக்கும் இடம் குறித்த விபரங்கள் இங்கு இணைக…

  9. ஐதேக தலைவர் ரணில் ஒரு பச்சைத் துரோகி ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகமாகும். நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய எமது தலைவர் மனோ கணேசனின் குரலை ஒலிக்கவிடாமல் செய்துவிட்ட ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைதொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்த பிரபா கணேசன் மேலும் கூறியதாவது: “எமது கட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் ஸ்தாபக கட்சியாகும். நான்கு ஸ்தாபக கட்சிகளுக்கும் தேசியப்பட்டிய…

    • 0 replies
    • 1.1k views
  10. தமிழ் மக்களின் விடுதலைக்காக கணவனும் மனைவியுமாக குடும்பமாக இணைந்து பேராட்டத்தில் தன்னுடைய இரண்டு கண்களையும் ஒற்றைக் கையையும் இழந்து போய் இன்று தன்வாழ்வாதாரத்திற்காகவும்..தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் போராளியின் குரல் இது புலம்பெயர் உறவுகளே கடந்த காலத்தில் இவர்கள் குவித்த வெற்றிகளில் மகிழ்ந்தோம்.வெற்றிக்களிப்பில் மிதந்தோம்..ஆனால் இன்று அதே வெற்றிகளை குவித்தவர்கள் இன்று மிக மோசமாக ஒதுங்குவதற்கு ஒரு குடிசையோ ஒரு வேளை உணவை பெறவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கவும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்..இன்றைய இவர்கள் போராட்டத்திற்கும் புலம்பெயர் உறவுகளே உதவுவீர்களா???? கண்ணிரண்டையும் ஒற்றைக்கையையும் போராட்டத்தில் இழந்த ஒரு …

    • 4 replies
    • 1.7k views
  11. தேசியத் தலைவரின் தாயாரை இந்தியா, கனடா நிராகரித்தால் இலங்கை வருவார்: சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளை இந்தியாவும், கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது மலேசியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார். கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸா விண்ணப்பத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் மலேசியா சென்று, அவரை கொழும்புக்கு அழைத்து வந்து…

  12. வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார். tamil.dailymirror.lk

    • 3 replies
    • 475 views
  13. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த வெள்ளிக்கிழமை விசேட சிகிச்சைக்காக கொழும்புக்கு வந்து சென்றதாக இசிரா (ஐ.எஸ்.ஆர்.ஐ.ஏ.) செய்திச் சேவை தெரிவித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் எலியந்த லின்ட்சே வைட்டிடம் சிகிச்சை பெறுவதற்காக அவர் வருகை தந்திருந்தார். ஐ.பி.எல். அரையிறுதி ஆட்டத்தின் போது விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கையில் பேரில் சச்சின் டெண்டுல்கருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து டாக்டர் வைட் சிகிச்சையளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இடம்பெற்ற ஐ.பி.எல். இல் சென்னை சுப்ப கிங்ஸுக…

  14. ஊடுருவிய மாஃபியாக்கள்! By: அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் Courtesy: நக்கீரன் - சித்திரை 24, 2010 கடற் புலிகள், பெண்புலிகள், தனது தனிப்பட்ட விருப்புகள்- பழக்கங்கள் -சந்தோஷங்கள் பற்றி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மனம் திறந்து பேசிய நேர்காணலின் நிறைவுப் பகுதிகளை சற்றே இடை வேளைக்குப் பின் பதிவு செய்கிறேன். இவ்விதழில் சுவீடன் நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த 15-ம் தேதியன்று மூன்று நீதிபதிகள் குழுவைக் கொண்டு விசாரித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கினை கவனப்படுத்த விழைகிறேன். விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்கும் வழக்கு அதிபர் ராஜபக்சேவின் சிறு வயதுத் தோழனும், கருணம்மானை துரோகப் பிரிதலுக்கு ஈர்த்துச் சென்ற திரை மறைவுப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமாயிருந்தவர…

    • 0 replies
    • 1.2k views
  15. நல்லூர் உல்லாச ஹோட்டலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வீரகேசரி வாரவெளியீடு தமிழ் மக்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க நல்லூர் பிரதேசத்தில் உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி மற்றும் கீரிமலைக் கடலுக்குள் இறங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும். தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதற்கும் அவர்களது சமயக் கடமைகளுக்குத் தடை விதிப்பதற்குமான ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஹோட்டல் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு தாம் யாழ்.மாநகர சபை மேய…

    • 3 replies
    • 741 views
  16. இந்தியாவுக்கு தொடர்ச்சியாக விளக்கியதன் மூலம் படை நடவடிக்கைகளை இடையூறின்றி தொடரமுடிந்தது.பாதுகாப்புச் செயலர் வீரகேசரி வாரவெளியீடு இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதற்கு முக்கிய பங்குவகித்த காரணிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். இந்திய செய்தியாளர் சி.கே.சசிகுமாருக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திடசங்கற்பம் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. துணிச்சலான பல தீர்மானங்களை அவர் மேற்கொண்டார். அந்தச் செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ இது தொடர்பாக கூறியுள்ளதாவது: பொதுவாக சண்டைகளில் படையினர் சண்டையிடுவது, இராணுவ வாகனங்கள் முதலானவற்றையே சண்டைக்களத்துக்கு வெளியே உள்ளவர்கள்…

    • 4 replies
    • 616 views
  17. மனித உரிமைகளைப் பேணுவதாயின் அவசரகால விதிகளை நீக்குங்கள்! [ உதயன் ] - [ Apr 27, 2010 04:00 GMT ] அவசரகாலச் சட்ட விதிகளைத் தளர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கின்றது என்ற செய்தியை புதிய வெளிவிவ கார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டிருக்கின்றார். இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் கால்கோள் இட்டுக் காரணமாக அமைந்திருக்கும் ஒரு விட யம் குறித்து அரசு கவனம் செலுத்தத் தயாராகி வருவது நல்லதோர் சமிக்ஞையே. 1971 இல் தென்னிலங்கைக் கிளர்ச்சியை அடுத்து, பொதுசனப் பாதுகாப்புச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் அவசர கால ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டன. அன்று தொட்டு இடையிடையே சிலகாலம், அமைதியும், சமாதான மும் நிலவிய சொற்ப வேளைகள் தவிர ஏனைய காலம் முழு வதும், இந்தத…

    • 0 replies
    • 450 views
  18. வவுனியா திருநாவற்குளம் பகுதியில் சிறுமி கொலையுடன் தொடர்புடையவர்கள் புளொட் அமைப்பினர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா திருநாவற்குளம் பகுதியில் கடந்தவாரம் தாயையும் சிறுமியையும் கத்தியால் குத்திவிட்டு நகைகள் பணம் உட்பட்ட பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் புளொட் அமைப்பைச் சேர்ந்த தாசன், கிரி, குரு ஆகிய நீண்ட கால உறுப்பினர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்தே புளொட் அமைப்பினர் சம்பவத்துடன் தொடர்புபட்டமை தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன.இதேவேளை புளொட் அமைப்பினைச் சேர்ந்த மேலும் இருவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகில் உள்ள புதல் …

    • 1 reply
    • 782 views
  19. தமிழர் எதிர்ப்பு-அமிதாப் பரிசீலனை சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமியின் விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்தப்படவுள்ளமை குறித்து தமிழர் அமைப்புக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அதன் ஏற்பாட்டுக்குழு உடனடியாகக் கூடி விவாதிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் விளம்பரத் தூதுவரான நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா ஜூலையில் இலங்கையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அரசாங்கப் படைகளால் அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்ற இந்திய தமிழர் அமைப்புக்கள் இந்த விழாவை இந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அத்துடன் இந்த விழாவின் ஏற்பாட்…

    • 1 reply
    • 696 views
  20. கிழக்கு மாகாண சபை மீது விசாரணை செய்து அதனை கலைக்க அரசு திட்டம் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 26, 2010 பிள்ளையான் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இடம்பெற்றுள்ளவை எனக் கூறப்படும் ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம இதனை உறுதி செய்துள்ளார். பிள்ளையான் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தமையால் மக்களிடம் பிள்ளையானுக்கு செல்வாக்கு இல்லை என்பதனை அரசு புரிந்துகொண்டுள்ளது. ஆகவே விசாரணை செய்து மாகாண சபையினை கலைப்பதன் மூலம் பிள்ளையானை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இது கருணாவின் திட்டப்படி நடப்பதாகவும் கூறப்படுகின்றது. …

    • 8 replies
    • 621 views
  21. வவுனியா திருநாவற்குளம் கொள்ளை ‐ கொலையுடன் தொடர்புடைய தாஸ் கல்மடுக் குளத்தில் சடலமாக மீட்பு‐ கொள்ளை கொலைகள் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொலிசார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு‐ 27 April 10 09:30 am (BST) வவுனியா திருநாவற்குளம் கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான தாஸ் கல்மடுக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவருடன் ஏற்கனவே மூன்று சந்தேகநபர்களையும் தாம் கைது செய்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்திருந்தனர். எனினும் இன்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ள இடம்மொன்றைக் காட்டுவதாக பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட இவர் பின்னர் குளமொன்றில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் குளத்தில் வ…

    • 3 replies
    • 977 views
  22. யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன் வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 Sampanthan நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததனை வரவேற்ற சம்பந்தன் யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கூடவே யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் எடுத்துக்கூற தவறிவிட்டார். இதனால் போரிற்கு பிந்திய முதலாவது பாராளுமன்றில் தமிழர் சார்பாக தெரிவு செய…

    • 43 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.