ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
இலங்கை போர் முடிவடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் மலேசியாவிற்கு தப்பிவந்ததாகவும், ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்ற மாதம் வரை 500க்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் அகதிகளாக தமது நாட்டில் தஞ்சமடைய வந்ததாகவும், ஆனால், அவர்களைக் கைது செய்து நாடுகடத்தி விட்டதாகவும் மலேசிய அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் பற்றிய விவரங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தமிழர்களைக் கடத்தி கப்பம் போரும் அவலம் தொடரும் நிலையில் இந்தியாவிலும் இலங்கைத் தமிழர்களைக் கடத்தி கப்பம் கோரும் அவலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சென்னை நீலாங்கரை பிரதேசத்தில் வசித்து வந்த தமிழ் இளைஞர் ஒருவரைக் கடத்தி 2லட்சம் ரூபா கப்பமாக கோரப்பட்டுள்ளமை தொடர்பாக இலங்கையர் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 வயதான ஜெயமோகன் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியான 30வயதுடைய கிறிஸ்ரியானா சோபியா மற்றும் அவரது 2 வயது பெண்குழந்தையான கனிமொழி சகிதம் இலங்கையிலிருந்து இந்தியா சென்று சென்னை நீலாங்கரை சீஎம்பி நகரில் வசித்து வந்தனர். நேற்றுக் காலை அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என வீட்டுக்கு வந்த…
-
- 0 replies
- 701 views
-
-
எம் உயிரினும் மேலான போராளிகளைச் சிங்களவனின் சிறையிலிருந்து மீட்டெடுப்போம். சிங்களவனின் சித்திரவதைச் சிறைகூடங்களிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத்துன்பங்களை அனுபவிக்கும் எம் தாயக விடுதலைப்போராளிகளை விடுவிப்பதற்கு எம்மாலான சகல உதவிகளையும் செய்வதற்கு நாம் தயாராகுவோம்.எதிரியானவன் தன்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம்,மனித உரிமைமீறல் குற்றம் இனப்படுகொலைக்குற்றம் என்பனவற்றில் இருந்து தப்புவதற்காக நயவஞ்சகமாக இந்தியனின் ஆதரவுடன் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்குவோம் என்று ஏமாற்றி குற்றவாக்குமூலம் பெற்று அவர்களை நீதிமன்றின்முன் நிறுத்தாமல், நிரந்தரமாகவே சிறையில் தள்ளுவதற்குத் திட்டம் தீட்டுகின்றான்.போராளிகளின்மேல் போர்க்குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தினால் அவர்களுக்கு சட்ட உதவி கிடை…
-
- 1 reply
- 946 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பாவித்த கிளிநொச்சி இரணைமடு வானூர்தி ஓடு பாதையை இந்திய வான் படையினர் தற்பொழுது பாவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானூர்தி தளத்தை இந்திய அரசிடம் சிறீலங்கா அரசு கையளித்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள வான் படைத் தளபதிகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி இருக்கின்றது. இரணைமடு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு கீழ்நிலை படை அதிகாரிகளோ, படையினரோ செல்லுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வானூர்தி தளத்தில் இருந்து இந்திய வான் படையினர் இந்தியாவிற்கு நேரடியாகப் பயணம் செய்து வருவதுடன், இந்தியாவில் இருந்து செல்லும் இந்தியப் படையினர் சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கியும…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு: வாக்களித்தோர் எண்ணிக்கை 8274, தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156, தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67. இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்…
-
- 15 replies
- 1.2k views
-
-
சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்.. சைக்கிள் சின்னத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பத்மினி சிதம்பர நாதன் குமுதம் றிப்போட்டர் பத்திரிகைக்காக வழங்கிய பேட்டியில் யாழ்ப்பாண மக்கள் பணத்திற்காகவும் சாராயத்திற்காகவும் ஓட்டுப்போட்டுவிட்டார்கள் என யாழ்ப்பாண மக்களையே தமிழ்நாட்டு பத்திரிகையில் கேவலப்படுத்தியுள்ளார்.. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித் துள்ளது. விரைவில், புதிய பிரதமர் பதவி ஏற்கப்போகிறார். அவர் நிச்சயம் தமிழராக இருக்கப் போவதில்லை. இந்தப் பொதுத் தேர்தலி…
-
- 44 replies
- 3.2k views
-
-
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது. பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம். பொதுக்கூட்டத்தில் சீமான், ’’இனி எந்த காலத்திலும் சிதம்பரம் சிவகங்கையை ஜெயிக்க முடியாது. நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டியதுதான். கனடாவில் என்னை திருப்பி அனுப்பும் போது ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறாயா என்று சீக்கியன் கேட்டான். நியாயப்படுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொடைக்குக் கர்ணன் என்றுதான் நாம் அறிந்துள்ளோம். அந்தக் கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் துரியோதனன். இராஜகுமாரர்களுக்கான வில்வித்தைப் போட்டியில் கர்ணனும் கலந்து கொள்கின்றான். போட்டியில் கலந்து கொள்ள வந்த இராஜ குமாரர்கள் அத்தனை பேரும் கர்ணனைப் பார்த்து தேரோட்டியின் மகன் என ஏளனம் செய்கின்றனர். இராஜகுமாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய வில்வித்தைப் போட்டியில் தேரோட்டியின் மகன் எங்ஙனம் பங்கேற்ற முடியும் என சர்ச்சை எழுகின்றது.கர்ணன் நாணிக்கோணி தலைகுனிந்து நிற்கிறான். அந்த நேரத்தில் சபை நடுவே எழுந்து கர்ணனை நான் இராஜகுமாரன் ஆக்குகின்றேன் என துரியோதனன் முழுங்குகின்றான். கர்ணனை இராஜகுமாரனாக்கினால் அவனுக்கு தேசம் எங்கே என்று வினா எழுகிறது.‘அங்கததேசம்’ என்று துரியோதனன் மொழி கி…
-
- 7 replies
- 3.3k views
-
-
இன்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் கைத்தொழில் அமைச்சராக வன்னியில் தமிழின விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழரது வாக்குரிமையையும் தடுத்த றிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சிறுகைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டிருப்பது டக்ளஸை அவமானப்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அரசிற்கு முண்டு கொடுத்த டக்ளஸைப் பின்தள்ளி அண்மையில் அரசில் இணைந்து கொண்ட பதியுதீனுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது குறித்து ஈ.பி.டி.பி வட்டாரங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அங்கயன் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ந…
-
- 7 replies
- 1.2k views
-
-
2010 பிப்ரவரி 28 - தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 35ஆம் நாள், காலை 8 மணியளவில் அதம்பையிலிருந்து புறப்பட்டு, ஈரமே இல்லாமல் காய்ந்து கிடந்த கல்லணைக் கால்வாயின் கரையோடு நடந்து 11 மணியளவில் ஊரணிபுரத்தை அடைந்த போது, வேட்டுகள் முழங்க வரவேற்பளித்தவர்களில் பெரும்பாலார் கறுப்பு - சிவப்புக் கரைவேட்டி கட்டிய தி.மு.க.வினர். ம.தி.மு.க.வினரும் ஓரிருவர் இருந்தனர். மனித உரிமை மற்றும் பொது நல அமைப்பினர், தமிழுணர்வர்கள் சிலரும் இருந்தனர். சி.பி.எம். கட்சிக்காரர் ஒருவரும் இருந்தார். 1970 தொடக்கத்தில் மா-லெ இயக்கப் பணி ஆற்றிய போதும், சிறையிலிருந்து 1985 இல் சி.பி.எம் உறுப்பினராக வெளியே வந்த பிறகும் இந்தப் பகுதியோடு எனக்கிருந்த நெருங்கிய தொடர்பு இப்படிப் பலதரப்பட்டவர்கள் திரண்…
-
- 0 replies
- 868 views
-
-
புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். அமைச்சர்கள் விபரம் 1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர் 3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர் 4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் 5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர் 6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், ம…
-
- 3 replies
- 608 views
-
-
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். “புதிய அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொள்ளாது ஒற்றுமையாகச் செயற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி ஆற்றிய உரையின்போதே இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது, “மக்கள் தமது தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யவே அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை உணாந்து…
-
- 0 replies
- 755 views
-
-
முன்னாள் மேஜர் ஜெனரல், தற்போதைய பாரளுமன்ற மற்றும் ஜ.தே.மு கட்சியின் உறுப்பினருமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் சபாநாயக்கருக்கு வாழ்த்து தெரிவிக்கையில் தான் மிகவும் மனப்பாரத்தின் மத்தியில் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், பாராளுன்றத்திற்கு தெரிவாகிய அனைவரும் சமமான பார்வையில் பார்க்கப்பட வேண்டும். நல்ல தீர்வுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க காத்திருக்கின்றேன், போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ள நான் கடும் மன வேதனையுடன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். அத்துடன் என்னை பாராளுமன்றில் பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கும் , சக பாராளுமன்ற உறுப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் - என்றார் http://www.tamilarkal.com/
-
- 14 replies
- 2k views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது. பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4.50க்கு முடிந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம். அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இத்தாலியில் தமிழ் பெண் கொலை உறவினர்கள் இருக்கிறார்களா? 17.04.2010 இல் இத்தாலியில் கொலை செய்யப்பட்;ட தமிழ் பெண்ணின் உடலை இதுவரை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை இவருடைய உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்த உதவுங்கள் என இத்தாலிய தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது பெயர் - இராமன் விஜயலக்ஸ்மி வயது- 36 இடம் - கிளிநொச்சி தற்காலிக முகவரி -lamporecchio (pistoia)-italy தொடர்பு கொள்ள -UNGA ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம் இத்தாலிய பணிமனை மக்கள் சேவைப்பிரிவு இத்தாலி தொ பேசி இல - +393346708523/+393204031624 (mrs.shana) …
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்ததே. இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. வன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நட…
-
- 1 reply
- 630 views
-
-
தமது நாட்டில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹசெய்ன் தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் எதுவுமின்றிக் கைது செய்யப்பட்ட இவர்கள் தமது நாட்டை பயங்கரவாதத்திற்கான தளமாகப் பாவிப்பதைத் தடுப்பதற்காகவே கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் கைது செய்யப்பட்ட இவர்கள் குறித்த பூர்வாங்க விசாரணைகளை மலேசியப் பொலிசார் நடத்தியதாகவும் இதன் பின்னரே இவர்கள்; இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தோ இவர்களது பெய…
-
- 0 replies
- 1k views
-
-
மே மாதம் 2ம் திகதி நடைபெற இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கொள்கையில் உறுதியுடன் செயற்படக் கூடியவர்களையும் அரசியற் புலமையுள்ளவர்களையும் தெரிவு செய்யும்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் போட்டியிடுபவருமான ஈழவேந்தன் தெரிவித்திருக்கிறார். ஈழம் வெப் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் அச்சத்துடனும் உலக நாடுகள் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தலின் வெற்றி என்பது புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது எனக் குறிப்பிட்ட ஈழவேந்தன் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குக்களைச் செலுத்தி திறமையும் தமிழுணர்வும் கொள்கைப் …
-
- 2 replies
- 610 views
-
-
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் விராஜ் மெண்டிசிற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்து வரும் விராஜ் மெண்டிஸ் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற மாநாடொன்றை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக இந்தியாவிற்குள் நுழைவதற்கான விசா விண்ணப்பத்தை ஜெர்மனியிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சமர்பித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசின் போர்க் குற்ற மீறல்கள் வெளியில் வருவதைத் தடுக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் ஒன்றே இது எனக் கூறப்படுகின்றது. SOURCE: http://www.eelamweb.com
-
- 2 replies
- 663 views
-
-
இலங்கையின் ஊடகங்களைத் தாக்குவதில் முன்னின்ற மேர்வின் சில்வாவிற்கு பிரதி ஊடக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் சிரச மற்றும் சக்தி ஊடகங்களின் தலைமை அலுவலகம் மீதான தாக்குதலைத் தானே நடத்தியதாக ஒத்துக் கொண்டிருந்த மேர்வின் சில்வா தொடர்ந்து ஊடக அடக்குமுறைகளை முன்னெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபவாஹினி அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய போது அங்கு பணியாற்றும் ஊழியர்களால் இவர் நையப்புடைக்கப்பட்டும் இருந்தார். பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாகவும் இவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டிருந்தது. மகிந்த றாஜபக்ச ஊடகங்கள் தொடர்பாக எத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறார் என்பதை இந்த நியமனம் உணர்த்துவதாக அவதானிகள் தெரி…
-
- 1 reply
- 617 views
-
-
மானிப்பாய் பகுதியில் இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு தப்பி ஓடியுள்ளார். வன்னயில் இருந்து மானிப்பாய் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த பெண் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்து வேளையில் குற்றப்புலனாய்வினர் எனக் கூறி பலாத்காரமாக மோட்டடர் சைக்கிளில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் சம்பந்தமாக இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நஞ்சருந்தியதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அலுவர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவரே தப்பி ஓட…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும்…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மறுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறாம். இலங்கையில் நடக்கும் விழா என்பதôல் அழைப்பிதழை பார்த்து முன்னண…
-
- 0 replies
- 642 views
-
-
இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியூசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளர்ர். நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73 வயதான மருத்துவரே இவ்வாறு நியூசிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில் நியூசிலாந்து இந்த விருதினை வழங்கியுள்ளது. 2010ம் ஆண்டின் சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கும் பட்டியலில் நாகலிங்கம் ராசலிங்கத்தன் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கு பல்வேறு வழிகளில் குறித்த மருத்துவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நியூசிலாந்து வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களில் ஒன்று …
-
- 2 replies
- 989 views
-
-
யாப்பு மாற்றம் விரைவில் - கோத்தா கூறுகின்றார் கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 இலங்கையின் அரசியல் யாப்பினை விரைவில் மாற்றுவதற்கு மஹிந்த கட்சிகளுடன் பேசி வருவதாகவும் விரைவில் அதனை செய்வார் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.அல்ஜசீராவுக்கு தொலைபேசியூடாக பேசிய கோத்தபாய அரசாங்கம் அதிக ஆசனங்களைபெற்றுள்ளதாகவும் கூடவே தனது சகோதரர் எல்லா வகையான அதிகாரங்களை கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலதிக அதிகாரங்களை பெறவேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இல்லை ஆகவே யாப்பு மாற்றத்தினை மேற்கொள்ள அவர் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறியுள்ளார். கோத்தபாய. http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 582 views
-