ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி – தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் – கஜேந்திரன்.எம்.பி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னிணியின் சார்பாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய நான் எனது கொள்கை நிலைப்பாடு பற்றியும், என்மீது சேறு பூசும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் வதந்திகள் தொடர்பாகவும், எனது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டமைப்பு தலைமையின் தவறான நடவடிக்கைகள் காரணமாக நாம் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டமை தொடர்பாகவும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தமி…
-
- 3 replies
- 744 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல்-2010 யாழ்.மாவட்டத்தில் பதினைந்து அரசியல் கட்சிகளும் பன்னிரண்டு சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஆள்களின் எண்ணிக்கையில் கூறுவதாயின், 324 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒன்றரை அடி நீளமான வாக்குச் சீட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி நீளமான வாக்குச் சீட்டில் தாம் விரும்பும் வாக்காளர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குப் புள்ளடிபோடும் பணி சாதாரணமானதல்ல. என்றுமில்லாதவாறு ஒன்றரை அடி நீளத்தில் வாக்குச் சீட்டிருப்பதால் வாக்காளர்கள் சிரமப்படுவது மட்டுமன்றி வேட்பாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது-அதனால் நேரம் தாமதமாவது-இது தொடர்பில் தேர்தல் பணியாளர்கள் என்ன நினைப்பார்களோ, ஏது நினைப்பார்களோ என்ற பதகளிப்பு, முடிபில் ஏதோவொரு சின்னத்திற்கு நேரே புள…
-
- 3 replies
- 598 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் ஆறடி அறைக்குள் அடைக்கப்பட்டோ அல்லது ஆறடி குழிக்குள் புதைக்கப்பட்டோ எனது சரித்திரம் முடிவடைந்திருக்கும். இந்த நிலைமை ஏற்படா மல் அமோக வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்த மாத்தளை மக்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக் கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டு முகமாக மாத்தளை பெர்னார்ட் அலுவிகார மைதானத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்துக்கு வருகை தந்த அவரை ஸ்ரீ.ல. சு.க. வின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் மாயழகு சசிகரன் பொன்னாடை போர்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை. என்றாலும், குளத்துடன் கோபிக்கும் தைரியமும், அதனை உடைக்கும் ஆற்றலும் இல்லாமல் அந்த மீனகளை இரையாக்கும் ஆசையுடன் தவித்தன. ஆனாலும், அந்த மீன்களை அரவணைத்துப் பாதுகாத்தது அந்த வற்றாத குளம். மீன்களும் ஆனந்தமாக நீச்சலடித்தன. அபார நம்பிக்கையுடன் எந்த அச்சமும் இல்லாமல் நீந்தி மகிழ்ந்தன. அயற்காட்டுச் சிங்கள நரிகளுக்கும் அந்த அழகு பிடிக்கவில்லை. குளத்திலிருந்துகொண்டு கும்மாளம் போடும் அந்த மீன்களை நினைத்தபோதெல்லாம் பசி எடுத்தது. அதனால், அந்த மீன்களைக் குரூரத்துடன் பார்த்தது. அவற்றைச் சிதைத்து…
-
- 13 replies
- 1.2k views
-
-
''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன் [ சனிக்கிழமை, 20 மார்ச் 2010, 01:06.25 PM GMT +05:30 ] ''பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் பொலிஸ்! இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழின் அட்டைச் சிறப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்ல…
-
- 26 replies
- 3k views
-
-
தமிழீழ தேசத்தில் எமது மக்கள் தங்கள் அபிலாசைகளை எடுத்துரைக்க முடியாத நிலையில் சிங்களத்தின் வதை முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் வாடும் நிலையில் தமிழீழ மக்களின் ஒருமித்த குரலாக, சுதந்திரமாக தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையை தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துரைத்து வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக இருந்துவருகின்றனர். இதனால் சீற்றம் கொண்டுள்ள சறிலங்கா அரசு பல நாசகார முயற்சியில் ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம். எந்தவொரு சக்தியின் நிகழ்சி நிரல்களிலும் செயல்படாது தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை தாகமாக கொண்டு செயல்பட்டு வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் பல் வேறு இடையூறுகளை சந்தித்துவருகின்றனர். தமது நிகழ்சி நிரலில் செயல்பட மறுக்கும் செயல்பாட்ட…
-
- 2 replies
- 649 views
-
-
இணக்கப்பாட்டு அரசியலும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களும்‐ ஆனந்தத் தாண்டவன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேற்றைய பிபிஸி நேர்காணலைக் கேட்ட போது கவுண்டமணியினுடையதும் செந்திலதும் வாழைப்பழ நகைச்சுவை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் யாராவது நேற்றைய பிபிஸியைக் கேட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அதிலிருந்து உருவி எடுத்திருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கப்பூரின் நாளிதழான ஸ்ரெய்ட் ஸ்ரெய்ட் ரைம்ஸ் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலை அடியொற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பி.பி.ஸிசெய்தியாளர் எழுப்பிய கேள்விகளும் அவற்றுக்கு அமைச்சர் அளித்த பதில்களுமே அந்த வாழைப்பழ நகைச்சுவையை ஞாபகத்தி…
-
- 0 replies
- 506 views
-
-
கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுகிறது – சுரேஸ் பிரேமசந்திரன்:‐ கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கிரமமான முறையில் கொக்காவில் பிரதேசம் இராணுவ மயப்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகத் தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாரியளவிலான ஒளிபரப்புத் தூபியொன்று கொக்காவில் நகரில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டும் சுமார் 40000 படைத்தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப…
-
- 2 replies
- 629 views
-
-
இத்தாலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுதந்திர தமிழீழமே எமக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பும் இத்தாலியில் உருவாக இருக்கும் ஈழத்தமிழர் மக்களவைகான பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 16 வாக்களிப்பு மையங்களில் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் வாக்களிக்காத அனைத்து மக்களையும் தங்கள் வரலாற்றுக் கடமையை செய்யுமாறுஅன்புடன் அழைக்கிறோம். இத்தாலி வாழ் ஈழத் தமிழருக்கு ஒர் அழைப்பு : பணி. எஸ். யே. இம்மானுவேல் இத்தாலி வாழ் ஈழத் தமிழ் மக்கள் மார்ச் மாதம் 21ம் திகதி எமது அரசியல் இலட்சியத்தின் அச்சாணியாக திகளும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பையும் மக்கள் பேர…
-
- 0 replies
- 484 views
-
-
மார்ச் 21st, 2010 மீனகம் எதிர்வரும் மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளர் திரு சி.வரதராஜன் அவர்கள் தனது கொள்கை விளக்க அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அதனை இங்கு தருகிறோம். தன்னை உயர்த்துவதற்கு அரசியலைப் பயன்படுத்துபவன் அரசியல்வாதி. மக்களை உயர்த்துவதற்கு அரசியலைப் பயன்படுத்துபவன் அரசியல்ஞானி. நான் அரசியல்வாதியல்ல. எமது அரசியல் இலக்கு தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை. எமது பொருளாதார இலக்கு எமது வளங்கள் எம்மவர்களால் கையாளப்படல் வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத …
-
- 0 replies
- 577 views
-
-
முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன். ஜனவரி 29 வியாழக…
-
- 2 replies
- 725 views
-
-
17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்:ஐரோப்பிய ஒன்றியம் வீரகேசரி வாரவெளியீடு 3/21/2010 11:39:19 AM இலங்கை அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைறைப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளதாக அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருவதாக நேற்று வெளியான வாராந்த சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் இலங்கை அரசின் சார்பில் சென்ற இலங்கை குழுவினர் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்…
-
- 2 replies
- 409 views
-
-
பெருநிலத்தின் கதைகள் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண்டு வரப்படுகிறது. அபாயமும் இருளும் பொருந்திய சூழலில் இந்தக் கு…
-
- 2 replies
- 844 views
-
-
இலங்கையின் வடபகுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உமை மீறல்கள்தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்வதற்கு வசதியாக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தாம் நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்கப் போவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ ன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலை பேசியில் தொடர்புகொண்டு தெவித்திருந்தார். அத்துடன் இவ்வாறானதொரு குழுவினை நியமிப்பதற்கான பூரண தத்துவார்த்த உரிமையும் தமக்கு இருப்பதாகவும் அவர் ஆணித்தரமாகத் தெவித்திருந்தார். ஐ.நா. செயலாளர் இப்படித் தெவித்திருப்பது இன்று இலங்கை அரசியலிலும் சர்வதேசத்திலும் ஒரு முக்கியத்துவமிக்க விடயமாகவே பேசப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து நீண்டகால மௌனத்தின் பின் திடீரென ஐ.நா. செயலாளர் இவ்வாறு தெவித்திருப்பது இலங்கை அ…
-
- 0 replies
- 519 views
-
-
'இலங்கை ஒரு கவலைக்குரிய நாடு'-பிரிட்டன் அறிக்கை [ BBC தமிழோசை ] - [ Mar 21, 2010 04:00 GMT ] தமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் அதில் இலங்கையை கவலை தருகின்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், நிலைமை இன்னமும் மிகவும் மோசமானதாகவே இர…
-
- 0 replies
- 454 views
-
-
போர் வடுவை ஆற்றுப்படுத்த உளவள ஆற்றுப்படுத்தல் [ உதயன் ] - [ Mar 21, 2010 04:00 GMT ] வன்னிப் பிரதேசத்தில் கடந்த வருடம் நடை பெற்ற கொடிய போரினால் பாதிப்புற்ற மக்களின் புனர்வாழ்வுச் செயற்பாடுகளில் மிகப் பிரதானமா னதாகக் கொள்ளப்பட வேண்டியது, அதனால் உளவளம் பாதிப்புற்றோரின் ஆற்றுப்படுத்தலாகும். உளவள மனநல பாதிப்பின் கொடூரம், புறத்தே புலப்படுவதைவிட, தெரிவதைவிட சம்பந்தப் பட்டவர்களையும் அவர்களின் இரத்த உறவுகளை யும் ஆழ்மனதுவரை வேகவைத்து வேதனைப் படுத்தி வருவது சமூக மட்டத்தில் இன்னும் பெரி தும் உணரப்பட்டதாக இல்லை. உளவளம் பாதிப் புற்றவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் செயற்பாடு கள் மிகப் பரந்த அளவில் தொடங்கப்பட்டதாகவும் இல்லை. ஒரு மனிதனின் உடல் நலத்தில், உள்ளிருந்து பெ…
-
- 0 replies
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்துகொண்டிருந்த போதும் நடந்து முடிந்த பின்னரான முள்வேலி முகாம் அவலங்களின்போதும் அங்கிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் அழைத்துச் சென்று அழிக்கப்பட்ட வேளைகளிலும் எமது அரசியல் பலத்தின் கணக்கு சரியாகவே இருந்தது. 22 கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். தேர்தல் அறிவிக்கப்படும் தினம் வரை இந்தப் பலம் அப்படியேதான் இருந்தது. யாரும் வெளியேறவோ யாரும் வெளியேற்றப்படவே இல்லாமல் ஈழத் தமிழர்களது அரசியல் பலத்தின் எண்ணிக்கை 22 என அடித்துக் கூறும் வகையில்தான் இருந்தது. ஆனாலும் அந்த 22 தமிழீழ மக்களது அரசியல் பலம் அந்த மக்களுக்காக எதனைச் செய்தது? எதனைப் பெற்றுக் கொடுத்தது? முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முடிவுகட்டவும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா உதவிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கும் முயற்சிகளில் சில அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுவருகின்றன. எனவே தமிழ் மக்களை மீண்டும் ஒரு மாøயக்குள் தள்ளுவதன் மூலம் அவர்களின் இருப்பை முற்றாக அழிவுக்கு உள்ளாக்க சில சக்திகள் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றன என்பது தெளிவானது. இந்த நிலையில் இந்தியா தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத்தருமா என்ற கேள்விக்கான சாத்தியங்களை ஆராய்வது இங்கு பொருத்தமானது. 1980 களில் ஈழத்மிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக விடு…
-
- 0 replies
- 388 views
-
-
சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது. யாழ். மாவட்டத்திற்கு செல்லும் சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகளை இவரே இப்போது செய்வதாகவும் தெரியவருகின்றது. சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ போன்றவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாகவும் இவர்களின் அண்மைய யாழ். விஜயங்களின் போது திரு யோகராஜனே தங்குமிடம் மற்றும் அ…
-
- 0 replies
- 461 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து அரச தரப்பினர் பாரிய வியூகங்களை அமைத்து வருகின்றனர். 13ஆவது, 17ஆவது திருத்தச் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது உட்பட பல நிகழ்ச்சி நிரல்கள் மூன்றில் இரண்டில் உள்ளடக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்குலகின் ஊடாக பிறிதொரு நெருக்கடிக்களமொன்று அரசை நோக்கி திறந்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது, மந்த கதியில் செயற்பட்ட ஐ.நா. தற்போது சிறப்பு நிபுணர் குழு அமைக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. சிங்கள தேசத்தினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்ட பின்னர் மேற்குலக கண்க…
-
- 11 replies
- 1.1k views
-
-
நிவாரண கிராமத்தில் தங்கியுள்ள மக்கள். இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தாமதமடைவதினால் செட்டிகுளம் நிவாரண கிராமத்தில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தற்போது கடும் வெய்யில் காலம் இந்த தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வசிக்கின்றனர். கூடாரங்கள் பழுதடைந்த நிலையில் பொலித்தீன் விரிப்புக்கள் கூடாரங்களுக்கு மேல் விரிக்கப்பட்டுள்ளது. இதில் வசிப்பது என்பதுமிகவும் கஸ்டமானகாரியமாகும். பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வாக்கு கேட்டு செல்லும் வன்னி வேட்பாளர்களும் இதனை அவதானித்து வந்துள்ளனர். வன்னிப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 70 ஆயிரம் பேர் நிவாரண கிராமங்களில் வசிக்கின்றனர். ஆரம்பத்தில் மூன்று இலட்சம் மக்கள் பல…
-
- 1 reply
- 450 views
-
-
இந்தியாவின் சிங்களத்தை நம்பி செயற்படும் முயற்சிகள் தோற்கடிக்கப்படவேண்டும் உபகண்ட துணை ஆசிரியர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 21, 2010 INDO CHINA சீனாவுக்கு போட்டியாக இலங்கைக்கு எவ்வளவை கொடுத்தாலும் இந்தியாவினால் அவர்களது இலக்கினை அடைய முடியாது. சீனாவின் இலங்கை மீதான அபிவிருத்தி , முதலீடு ஆகியவற்றின் ஊடான செல்வாக்கினை முறியடிக்க இந்தியாவும் அதே பாணியில் அபிவிருத்தி, முதலீடு, வியாபாரம் என நிதியினை கொட்டி வருகின்றது. இது சிங்களவர்களுக்கு இராஜபோகம் தான். ஏனெனில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இலங்கைக்கு உதவிகளை செய்து வந்தார்களோ அவ்வாறே இப்போது அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கைக்கு இரு நாடுகளும் அள்ளி கொட்டிக்கொண்டு இருக்கின்றன. இந்த போட்டிய…
-
- 5 replies
- 466 views
-
-
தனித்துவமான இறைமை கொண்ட தேசமே தீர்வு - த.தே.ம.முன்னணி திருமலை நிருபர் சனிக்கிழமை , மார்ச் 20, 2010 TNAF “தமிழ் மக்கள் - தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" த.தே.ம.முன்னணியின் தேர்தல் அறிக்கைதாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. “தமிழ் மக்கள் - தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு” என்பதை இனப்பிச்சினைக்கான தீர்வுத்திட்டமாக தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்மொழிகிறது. அத்துடன், கொள்கை அடிப்படைகளில் …
-
- 6 replies
- 746 views
-
-
ஒட்டு சுட்டான் முல்லைத்தீவுக்கு இந்திய தூதர் சென்றார். வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 21, 2010 இலங்கைக்கான இந்தியதூதர் அசோக் காந்தா கடந்த 19 ஆம் திகதி வவுனியாவுக்கு சென்று பின்னர் ஒட்டு சுட்டான் , முல்லைதீவுக்கும் சென்றுள்ளார்.அங்கு மீழக்குடியமர்ந்துள்ள மக்களை பார்த்துள்ளாராம். இந்தியா செய்து வரும் உதவிகளை மக்களுக்கு எடுத்துக்கூறியதுடன் தம்மால் ஈழத்தமிழர்களுக்கு என வழங்கப்பட்ட தகரங்கள்களை பயன்படுத்தி எவ்வாறு மக்கள் (அந்த வெயில் வெட்கைக்குள் ) வாழ்கின்றார்கள் என்பதனையும் நேரில் பார்த்து அதிசயப்பட்டாராம். மேலும் இது போன்ற உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் எனவும் வாக்குறுதிகள் வழங்கியுள்ளார் அசோக் காந்தா. http://www.eelanatham.net/story/%E0%AE%92%E0%AE%9F%E0…
-
- 3 replies
- 664 views
-
-
இலங்கையில் பாரியளவில் பூமியதிர்வு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பூவியியல் பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மையிலான பிரதேசத்தில் புதிய புவி ஓடொன்று உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தெற்கே ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய படை உருவாகியுள்ளது. இந்த நிலைமையின் காரணமாக இலங்கையில் எந்த நேரத்திலும் பாரியளவிலான இயற்கை அனர்த்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புயற் காற்றுகள், மண் சரிவுகள், வெள்ளங்கள், பூமியதிர்வு அல்லது சுனாமி போன்ற அனர்த்தங்களை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், குறித்த இயற்கை அனர்த்தங்கள் தொடர்…
-
- 1 reply
- 904 views
-