Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்ச்சூழ்நிலை காரணமாக 2005 ஐல் இருந்து பூட்டப்பட்டிருந்த இரு சரணாலயங்கள் இலங்கையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. தலைநகரத்தில் இருந்து 312 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியியான லகுகலையில் அமைத்துள்ள குமண பறவைகள் சரணாலயமும், 318 கி.மீ தூரத்தில் கிழக்கில் அமைந்துள்ள காட்டுப் பூங்காவுடனான சரணாலயமும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. போரில்லாமையால் பாதுகாப்பு அமைச்சு இவற்றை மீளத் திறக்க சம்மதம் அளித்துள்ளதாக தெரியவருகின்றது மூலம்: xinhuanet

  2. புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!? விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான “மலேசியா ராஜன்” சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், இவரை நேற்று காலை கொழும்பில் கைது செய்ததாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் முக்கிய – மூத்த – உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமானநிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து …

  3. கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...இலங்கையில் இருந்து கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...இந்தியாவில் இருந்து கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...இங்லாந்தில் இருந்து கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...அமேரிக்காவில் இருந்து -

  4. தமிழர்களின் ஆவணக் காப்பகமாகத் திகழ்ந்த தமிழ்நேஷன் இணையத்தளமும் மூடப்பட்டுவிட்டது. நேற்று முன்தினத்துடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இந்தத் தளம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய இணையத்தளமாகத் திகழ்ந்தது தமிழ்நேஷன். அதன் பிறகும் கூடஇ தொடர்ந்து செயல்பட்டு வந்தது. விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்வுகள் ஆவணங்கள் தவிரஇ தமிழரின் தொன்மைச் சிறப்புஇ இலக்கிய வரலாறுஇ தமிழரின் அரசியல் சிறப்பு என பல பிரிவுகளை உள்ளடக்கிய தளமாக இருந்த தமிழ்நேஷன்இ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 replies
    • 1.8k views
  5. தமிழ் ஊடகங்கள், புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகளினால் ஜனாதிபதிக்கு குறைவான வாக்குகள் கிடைத்தன – டக்ளஸ் தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வடக்கில் குறைவான வாக்குகள் கிடைக்கப் பெற்றதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் ஊடகங்கள் பிரதேச மக்களை பிழையான வழியில் இட்டுச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் வெற்றியீட்டுவார் என சில ஊடகங்கள் அறுதியிட்டுக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு அழுத்தம் கொ…

  6. சிறிலங்கா இராணுவத்திற்குள் சரத் பொன்சேகா அணி, கோத்தா அணி என இரண்டாக பிளவு படும் நிலைகள் அதிகரிக்கின்றது. இதுவரை 40 பேருக்கு மேற்பட்ட அதிகார நிலையில் உள்ளவர்கள் இரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பல திடீர் இடமாற்றங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. தற்போது இராணுவ தலைமையக பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனெரல் மெண்டக சமரசிங்க நீக்கப்பட்டு மேஜர் ஜெனெரல் டய ரட்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மெண்டக சமரசிங்க சரத் பொன்சேகாவின் விசுவாசி என கூறப்படுகின்றது. இதனை விட 10 இற்கும் மெேற்பட்ட அதி்காரிகள் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்பதனால் தேர்தல் காலங்களில் வெளி நாடுகளிற்கு அனுப்பபட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.. http://www.eelanatham.net/story/%E0%AE%…

  7. முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….- மணி.செந்தில் மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ; (புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்) பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர். . முத்துக்குமார் . இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர் அல்ல. இது ஒரு போர் முழக்கம். ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின் விழிப்பின் உச்சம். . முத்துக்குமார். இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர் அல்ல. இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை கண்டு கதறி கூட அழ முடியாத அளவிற…

  8. முத்துக்குமாரின் உயிரை மதிப்பது உண்மையானால் அனைவரும் தமிழால் ஒன்றுபட்டு நிமிர வேண்டும் – இயக்குநர் சீமான் அடியோ கேட்க: http://meenakam.com/?p=4403 [இணைப்பு] முத்துக்குமாரின் உயிரை மதிப்பது உண்மையானால் உயிரிலும் மேலான எமது மொழியின் பால் ஒன்று பட்டு தமிழினம் நிமிர்ந்து நிற்கவேண்டும் என முத்துக்குமார் அவர்களின் ஒராண்டு நினைவு நாளில் இயக்குனர் சீமான் தமிழினத்திற்கு ஒற்றுமைக்குரல் எழுப்பியுள்ளார். மீனகம் : முத்துக்குமார் அண்ணையின் ஒராண்டு நிகழ்விற்கு நீங்கள் எந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்? ஆம், முத்துக்குமாரின் நினைவுக்கு மாபெரும் பேரணியும் எழுச்சி கூட்டமும் நடத்துவது என்று முடிவு செய்து வீரத்தமிழன் முத்துக்குமாரின் நினைவைப் போற்றும் எழுச்சி நா…

  9. லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது (வீரகேசரி நாளேடு 1/30/2010 12:26:51 PM) லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது கைது தொடர்பாக தமக்கு தெரியவந்த போதிலும் அது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான லங்கா பத்திரிகை…

    • 0 replies
    • 433 views
  10. விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்! முனைவர் பால் நியூமேன் வியாழன், 28 ஜனவரி 2010( 18:26 IST ) சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து அயர்லாந்து தலைநக…

    • 7 replies
    • 1.3k views
  11. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் நேற்று பிற்பகல் முகமூடியணிந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அலுவலகத்தில் கடமையாற்றி வந்த ஊழியர்களில் நால்வரும் விசேட அதிரடிப்படையினரின் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் தெரிவித்தது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள போதிலும் இது தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்தார். …

  12. தமிழ் உணர்வாளன் முத்துக்குமார் உயிர் நீத்து ஒரு வருடம் முடிவடைகிறது. அவனின் தொடர்ச்சியாக தமிழகத்தில் பதினெட்டு உணர்வாளர்களும் ஜெனீவாவில் முருகதாஸும் இன்னுயிரத் தந்தாவது தமிழர்களையும் உலகத்தையும் விழித்தெழ வைத்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றி விடவேண்டுமென்று தம்மை எரித்துக் கொண்டனர். வாழ்வு மகத்தானது; கொண்டாடப் படவேண்டியது; பாதியிலேயே தம் வாழ்வை முடித்துக் கொண்ட இச்சகோதரர்கள் தம்மிலும் மேலாக தம் சக மனிதர்களை நேசித்தவர்கள், வாழ்ந்து போராடியிருக்கலாம். ஆனால் தமிழினப் படுகொலையைத் தாங்க முடியாமல் மனம் சோர்ந்து ஒருவர் பின் ஒருவராக நம்மிடமிருந்து பிரிந்து சென்றார்கள். ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை கொலை செய்த ராஜிவ் காந்தியைப் புலிகள் கொலை செய்தனர் என்பதைச் சாட்டாக வைத்து, ஈ…

  13. தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட எதிர் கட்சியினர் தமது களைப்பைத் தீர்த்துக் கொள்ள ஒரு உல்லாச விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டே தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டாடலாம் என ஒன்று கூடினர். அவர்கள் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர்களை இலங்கை இராணுவம் சூழ்ந்து கொண்டது. அமெரிக்கத் தலையீட்டால் முதலில் ரணில் விக்கிரமசிங்க விடுவிக்கப் பட்டார். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் படைத்துறைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ந்தும் அங்கு "இராணுவ முற்றுகைக்கு உட்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தார். நாட்டை "பயங்கரவாதிகளிடம்" இருந்து பாதுகாத்தவர் தன் பாதுகாப்பிற்காக கவலைப்படும் நிலை. சட்டரீதியாக தனக்கு பாதுகாப…

    • 4 replies
    • 1.4k views
  14. இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் மிகவும் மோசடியான தேர்தல் என வரலாற்றில் பதியப்படுவதுடன் அடால்ப் ஹிட்லரின் சாதனையை மகிந்த ராஜபக்ஸ முறியடித்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அவர் கூறியுள்ளார். ராஜகிரியவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. 1933ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் நடத்திய தேர்தல் குறித்து வரலாற்று…

  15. DEAR FRIENDS! HON. BLAKE REPLIED TO (SHAN NALLIAH, NORWAY, shanmugappirabunalliah@gmail.com, http://worldtamilrefugeesforum.blogspot.com) REQUEST TO HELP THEM / TAKE THEM TO USA THROUGH UNHCR.... http://worldtamilrefugeesforum.blogspot.com/2010/01/honrobert-oblake-us-state-dept-usg.html Please Urge UNHCR (United Nations High Commissioner for Refugees) to take action to save boat tamils. UNHCR-Büro in Österreich Postfach 550 A-1400 Wien Telefon +43 (0)1 - 260 60 4048 Telefax +43 (0)1 - 263 411 5 ausvi@unhcr.org UNHCR Headquarters (Online Contacts Form) http://www.unhcr.org/php/contact.php?opt=headquarters Forward to All frien…

  16. வெள்ளி, ஜனவரி 29, 2010 03:21 | சிவதாசன், கொழும்பு இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தியை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்: கடந்த 26-01-2010 அன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதன் மூலம் நடைபெற்று முடிந்த தேர்தல் சிங்கள தே…

    • 3 replies
    • 585 views
  17. விசேட அதிரடிப்படையினர் டற்போது கொழும்பிலுள்ள சரத்பொன்சேகாவின் றோயல் கல்லூரிக்கு அருகிலுள்ள அலுவலகத்தை இருநூறுக்கு மேற்பட்ட முகமூடியணிந்த அதிரடிப்படையினர் சோதனையிட்டு வருகின்றனர். சோதனை முடிந்தவுடன் பொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்பதால் கொழும்பில் பரபரப்பு.அதேவேளை ஊடகங்களை அங்கேயிருந்து அதிரடிப்படையினர் விரட்டிவருகின்றனர். மேலதிக செய்திகள் விரைவில்......... http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=265:2010-01-29-11-14-14&catid=34:ceylonnews&Itemid=71

  18. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் வந்த ஒரு படம். சிங்களவர்கள் எப்படி இந்த தேர்தல் முடிவை எடுக்கின்றார்கள் என்பதற்கும் அவர்கள் வாக்களிக்க முன் எவ்வாறு கருதியிருக்கின்றார்கள் என்பதற்கும் ஒரு சின்னச் சான்று

  19. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைகளை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாக ஆட்சி பீடமேறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை மக்களே கூடுதல் ஆதரவு வழங்கியதாகவும், இம்முறையும் அதே நிலைமையே தொடர்வதாகவும் அவர்…

  20. இரகசிய இடங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் - ஐ.நா .மனித உரிமை விசாரணையாளர்கள் by Virakesari Online இரகசிய இடங்களில் மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்து தகவல்களை பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என ஐக்கியநாடுகள் மனித உரிமை விசாரணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை ஆகியன உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்து மக்களை இரகசியமாக தடுத்து வைக்கும் நடைமுறைகள் பற்றி ஐக்கியநாடுகள் விரிவான முறையில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய…

  21. கொழும்பு: "இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது குறித்து, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், ராஜபக்ஷே வெற்றி பெற்றதற்கும் அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலின்போது வன்முறைகள் நடந்ததாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது.குறிப்பாக பிரசாரம், ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இலங்கை அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முழு அளவிலா…

  22. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா சினமன் லேகசைட் ஹோட்டலில் படையிலிருந்து தப்பியோடியவர்களுடன் தங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார. இவர்களை இனங்கண்டு நாம் வெளியேற்றி யுள்ளோமே தவிர பொன்சேகாவை நாம் கைது செய்யவுமில்லை. செய்யப்போவதுமில்லை.சரத் பொன்சேகாவுக்கு எங்கும் செல்வதற்கு உரிமை உண்டு. அவர் விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்தில் சென்று வரலாம் என்றார். எனினும் இச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா சரத் பொன்சேகாவுடன் இருந்தவர்கள் அரசாங்கத்தினால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.இச் சம்பவங்களினால் கொழும்பில் ஒரு விதமான…

    • 4 replies
    • 581 views
  23. சிறுபான்மை இனத்தவர்களை ஒன்றிணைத்த தேர்தல் முடிவு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகக் குறிப்பிட்ட இரு விட யங்களை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. ஒன்று விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தனது அரசுப் படைகளின் வெற்றியை அடுத்து அவர் அறிவித்த விட யம்."இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை இனம் என்று ஒன்று இல்லை.'' என்ற பிரகடனம் அடுத்தது தமது இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தலை முற்கூட்டியே நடத்தும் அறிவிப்பை வெளியிட்ட கையோடு அவர் கூறியது.""கடந்த தடவை (2005 நவம்பர்) ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்கள் வாக்களிக்க முடியாத இக்கட்டு நிலவியது. அவர்கள் சுதந்திரமாகவும், சுயாதீனமாக வும் வாக்களிக்கக்கூடிய நிலைமை விடுதலைப் புலிகள…

    • 0 replies
    • 506 views
  24. வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் வாக்குகள் குறைந்தமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத்பொன் சேகாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை வைத்துக் கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தமையே என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட்டமைப்பினரின் இவ் வகையான பிரசாரம் காரணமாக அந்தப்பகு திகளில் மீண்டும் இனவாதம் ஒன்று தோற்றம் பெற்றுள்ளதாகவும் அதனைகளையும் தேவை அரசாங்கத்திற்குத் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது, பொதுவாக அரசாங்கத்திற்கு நாடளாவிய ரீதியாகத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.