ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
நேற்று சரத்பொன்சேகா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி கொல்லப்பட்டார்.சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்காலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றத்தை ஒப்புகொண்டனர் என்றும் கூறியுள்ள தங்காலை பொலிஸ் சுப்பிரிண்டன் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் சித்த சுவாதீனமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி இருவரும்தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பொலிஸ் அதிகாரி கிங்ஸ்லி எக்க நாயக்கா. http://www.eelanatham.net/news/important
-
- 3 replies
- 692 views
-
-
பொலனறுவ மாவட்டம் கந்துருவெல எனும் இடத்தில் 28 வது மைல் கல்லில் மஹிந்த ஆதரவாளர்களும், சரத் ஆதரவாளர்களும் வீதி மறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவேளை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாழ் வெட்டு, கத்தி குத்து என்பன மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது 10 இற்கு மேற்பட்டவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சண்டை நிலமையை மீறியதன் பின்னர் பொலிசார் அவ்விடம் விரைந்து கண்ணீர் புகை தாக்குதலினை இருதரப்பும் பிரயோகித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 774 views
-
-
இலங்கையின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் உதவி இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தாயராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பதவி ஏற்றுள்ள முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி டொனால்ட் பெரேராவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமரிடம் பதவி ஏற்புக் கடிதத்தை கையளித்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களில் இஸ்ரேல் காத்திரமான பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக சிமோன் பெரஸ் கூறியுள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2906&cntnt01origid=52&cntnt01detailtem…
-
- 2 replies
- 797 views
-
-
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வன்முறைகள் இடம்பெற்று வருவதனையிட்டு ஐ. நா கடும் விசனம் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வன்முறைகள் இடம்பெற்று வருவதனையிட்டு ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனம் தெரிவித்துள்ளது. மாத்தறை தங்காலை பகுதியில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் கூட்டுக்கொல்லப்பட்டு சிலர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை தனது விசனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வன்முறைச்சம்பவங்கள் மட்டில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் பேச்சாளர் கூறியுள்ளார். தேர்தலினை முன்னிட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் விசனத்துக்குரியது என ஐக்கிய நாடுகள் சபையின் உத்தி…
-
- 1 reply
- 500 views
-
-
தமிழர்களே உடனடியாக ஆதாரங்களை (புகைப்படங்கள் மற்றும் காணொளி) மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு [Milan based Permanent Peoples Tribunal – PPT] அனுப்புங்கள் எதிர்வரும் சனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland] இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும். மக்களின் நிலையான நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal - PPT] விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ன. அவை தொடர்பாக - அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ள…
-
- 0 replies
- 619 views
-
-
வண்ணார்பண்ணை, ஏ9 ஊடான போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கையிலிருந்து பாம்பாட்டிகள், குரங்குகள் மூலம் வித்தை காண்பிப்போன் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அனுராதபுரம் பகுதியிலிருந்து எட்டுப்பேர் அடங்கிய குழுவினர் குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குடாநாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும் இந்தக் குழுவினர் பொது இடங்கள், வியாபார நிலையங்கள் முன்பாக சாகசங்களைச் செய்து வருவாயையும் பெற்றுக் கொள்கின்றனர். வீதியோரங்களில் இவ்வாறான சாகச நிகழ்வுகளில் இவர்கள் ஈடுபடுவதால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குடாநாட்டுக்கு தென்னிலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் மட்டுமன்றி விய…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம்....? புலம்பெயர் தமிழர்களின் உதவிகளைப் பெற முயற்சி‐உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்தும் விசேட கூட்டம்‐ 12 January 10 10:15 pm (BST) வடக்கு‐கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயங்களை இலங்கையரசு கைவிட்டுவிட்ட நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவி கோர முடிவாகியுள்ளது. வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் எனும் அரசின் அறிவிப்புக்கள் கண்துடைப்பாக பிசுபிசுத்துள்ள நிலையிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளைக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதேசங்களில் புனர்வாழ்வுத புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளைக் …
-
- 1 reply
- 623 views
-
-
திருமதி.ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை ஆளும் கட்சியிலிருந்து விலகுமாறு குடும்பத்தார் அழுத்தம் செய் நன்றி அறியாத ராஜபக்சேவினர் பின்னால் சென்று தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயையும் இழக்க வேண்டாம் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டான தொகுதியின் அமைப்பாளர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளேயிடம் அறிவுரை வழங்கியுள்ள அவரது தந்தை அரசில் இருந்து விலகுமாறு எச்சரித்திருப்பதாகவும் மிக நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் இம்முறை ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்கப் போவதாக சுதர்சினியின் தந்தையார் இதன்போது வலியுறுத்திக் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் 57வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் கலந்…
-
- 0 replies
- 629 views
-
-
அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வீடியோவை பார்க்க......... மூலம்: link
-
- 20 replies
- 2.6k views
-
-
இராஜதந்திரிகளை நாடுகடத்துவதற்கு நடவடிக்கை - பிரதமர் ரட்னசிறி இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா வெளிவிவகார அமைச்சருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக தீர்மானம் மேற்கொண்டமையின் பின்னணியில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர் இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் http://www.sankathi.com/index.php?mact=…
-
- 0 replies
- 529 views
-
-
சரத் ஆதரவாளர்கள் மீது தூப்பாக்கிப் பிரயோகம்; ஒரு பெண் பலி : தங்கல்லையில் சம்பவம் வீரகேசரி இணையம் 1/12/2010 3:50:45 PM - தங்கல்லை, உபுன்கம தலுன்ன பகுதியில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணம் செய்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. திஸ்ஸமஹராமவில் நடைபெறவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தீவிரமாகத் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவினர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் நால…
-
- 4 replies
- 880 views
-
-
நெருக்கமான போட்டியில் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி; ஆனால் தேர்தலில் அவர்களுக்கு ஆர்வமில்லை - ஐ. நா. நிறுவன ஆய்வு பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும் புதிதாகச் சிறிலங்காவுக்குத் திரும்பியவர்களும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இரின் [integrated Regional Information Networks - IRIN] எனப்படுவது - ஐ. நா.வின் மனிதார்ந்த விவகார ஒருங்கிணைப்புச் செயலகத்தின் [uN Office for Coordination of Humanitarian Affairs] ஒர் ஆய்வு நிறுவனமாகும். இரின் நிறுவன ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னியில் இடம்பெற்ற போரை அடுத்து இடம் பெயர்ந்த 280,000 தமிழரில் ச…
-
- 2 replies
- 571 views
-
-
யாருக்கு வாக்களிப்பீர்: உங்கள் மீதான போருக்கு உத்தரவிட்டவருக்கா, அந்தப் போரை நடத்தியவருக்கா? பாரிய மனித அவலத்தை நிகழ்த்திய போதிலும் போரை முன்னின்று நடாத்திய ராஜபக்சவையும், பொன்சேகாவையும் - போரின் வெற்றிக்காகப் போற்றப் பட வேண்டியவர்கள் என்றே பெரும்பாலான சிங்கள மக்கள் கருதுகின்றார்கள். இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டுவது சிங்கள மக்கள் மத்தியில் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் - இருவரையுமே, போரில் வெற்றி வாகை சூடியவர்களாகவே அவர்கள் கருதுகின்றார்கள். தமிழ் மக்களின் இரத்த ஆறு ஓட வைத்து போரில் வெற்றி ஈட்டிய இவர்களுக்கு இடையேயான போட்டி சிங்களத் தேசியவாதிகளின் வாக்குப் பலத்தைச் சிதறடித்து உள்ளதால், …
-
- 1 reply
- 583 views
-
-
வன்னிமக்களின் பொருட்களை இராணுவத்தினர் எடுக்கின்றனரா? - மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர் மோதல்கள் நடைபெற்ற வன்னிப் பகுதியிலிருந்து தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றை படையினர் களவாடி தென் னிலங்கைக்குக் கொண்டு செல்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார மறுத்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சிக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, படையினர் ஏராளமான வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், படகுவெளி இணைப்பு இயந்திரங்கள், இதர உபகரணங்களை அங்கிருந்து கண்டெடுத்தனர். எங்களால் கண்டெடுக்கப்பட்ட அனைத்து உபகரணங்களும் கணக்கில் எடுக்கப்பட்டுள் ளன. மேலும் அவை குறித்த விபரங்களை அப்பகுதி அரசாங்க அதிபரிடம் நாங்கள் கொடுத்துள்ளோம். எந்த பொருட…
-
- 0 replies
- 592 views
-
-
சனல் 4 தொடர்பான வீடியோ ஆவணத்தினை மூன்று நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த ஐக்கிய நாடுகளின் போர் குற்ற மற்றும் சித்திரவதைகள் தடுப்பிற்கான சிறப்பு பிரதினிதி பிலிப் அல்ஸ்டன் அந்த வீடியோ உண்மை என கூறி அறிக்கை விட்டார். மேலும் இலங்கையில் போர்குற்ற விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு உதவுவதற்காக நிபுணத்துவ குழுவினை அமைக்கவுள்ளதாகவும் அறிக்கைவிட்டார். இதே வேளை இலங்கை அரசாங்கம் பிலிப் அல்ஸ்டன் அவர்களின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறு அறிக்கையும் விட்டது. ஆனால் பிலிப் அல்ஸ்டன் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார். இதே வேளை பிலிப் அல்ஸ்டனை கட்டுப்படுத்த இலங்கை இந்தியா ஊடாக மேற்கொண்ட முயற்சிகளும் தோற்று போனமை இங்கு குறிப…
-
- 0 replies
- 350 views
-
-
பிரபாகரன் தாய் இந்தியா செல்லலாம்: ராஜபக்சே விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் இந்தியா செல்ல விரும்பினால் அவர்களை அனுப்பி வைக்க தயார் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் இன்று வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க இந்தியா ஒப்புக் கொண்டால் தாம் அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இந்தியா செல்ல வேண்டும் என்று பிரபாகரனின் தாயார் பார்வதி பிள்ளை விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரை தனது வீட்டில் வைத்து பராமரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை இறந்ததைத் தொடர்ந்து பிர…
-
- 1 reply
- 802 views
-
-
தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு: தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்…
-
- 15 replies
- 1.4k views
-
-
500 மில்லியன் ரூபா பசில் லஞ்சம் - செல்லசாமி மறுப்பு அரசாங்கத்தில் இருந்து விலகி தபால் தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ்.செல்லசாமி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்தால் அவருக்கு அமைச்சு பதவியும் 500 மில்லியன் ரூபா பணத்தை வழங்க தயார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சா செல்லசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா 200 மில்லியன் பணத்தை நேற்று அதிகாலை செல்லசாமியின் வீட்டுக் கொண்டு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தில் மீண்டும் இணைந்தால் இந்த பணத்தை இப்போதே வழங்க முடியும் என கூறியுள்ளார். செல்லசாமி இதனை நிராகரித்தை தொடர்ந்து, அமைச்சர் மேர்வின் சில்வாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பசில் ராஜபக்சா மேற்குறிப்பிட்ட தனது யோசனை முன்வ…
-
- 3 replies
- 761 views
-
-
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம்.என சம்பந்தன் ஐயா நேற்று யாழில் கூறியுள்ளார். இந்தியா தான் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன். ஆனால் என்ன திர்ர்வு பற்றி பேசபோகின்றேன் என மக்களிடம் கூறவில்லை. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தி…
-
- 25 replies
- 2.1k views
-
-
மகிந்தவை ஆதரித்துப் பேசுமாறு வேலுப்பிள்ளை துன்புறுத்தப்பட்டார். kayathri தேசிய தலைவரின் தந்தை அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 19 வது வயதில் பிரித்தானிய ராணியின் முடி ஆட்சிக்குட்பட்டு இலங்கை இருந்தபோது, பணியாற்ற ஆரம்பித்தார். அவர் முதலில் பணியாற்றியது பிரித்தானிய அரசிற்காகும். பின்னர் அவர் இலங்கை அரசாங்கத்தின் கீழ் 39 வருடம் வேலைசெய்து தனது 58 வது வயதில் இளைப்பாறினார். அரசாங்கத் திணைக்களத்தில் வேலை பார்த்ததால் சிங்கள மொழியை சரளமாக வாசிக்கவும் பேசவும் வல்லவர். இவர் முல்லைத்தீவு, கிளிநொச்சி, துணுக்காய், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார். போர் மூண்டவேளையில் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த இவர்கள், தமது மகன் ஆட்சிக்குட்பட்டிருந்த பெருநிலப்பரப்பு குற…
-
- 3 replies
- 1.5k views
-
-
மகிந்தவின் ஆட்சியிலேயே என்றும் நிகழ்ந்திராத தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கள் நடந்தன: ஹரீஸ் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேயே என்றும் நிகழ்ந்திராத தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கள் நடந்தேறியுள்ளன என்று கல்முனை மானகர முதல்வர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை கல்முனையில் தேர்தல் பரப்புரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் சரித்திரத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவு காணி சுவீகரிப்புக்களும் சுறண்டல்களும், மகிந்தராஜபக்சவின் ஆட்சியிலேயே நடைபெற்று வருகின்றது. அம்பாறை பொத்துவில் கரங்காவட்டை தொடக்கம் திருகோணமலை வரை குடியேற்றம் என்றபெயரில் தமிழ் முஸ்லீம் மக்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. என்றும் தெரிவித்துள்ளார். http://www.sanka…
-
- 0 replies
- 409 views
-
-
பிலிப் அல்ஸ்டன் கூற்று சுதந்திரமானது என நழுவ பார்க்கும் பான்கி மூன் யுத்தத்தில் வெற்றிகொண்டது போல நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "நிறைவேற்று அதிகாரத்தால் துஷ்பிரயோகம் தான் நடக்கிறது. அதனை இல்லாதொழித்து ஜனநாயத்தை நிலைநாட்டுவதையே எனது முதற்கடமையாக கொண்டுள்ளேன். என்னுடன் இணைந்துள்ளவர்கள் ஊழல்களுடன் தொடர்புபட்டவர்கள் அல்லர். தூய்மையான கரங…
-
- 0 replies
- 533 views
-
-
சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது. தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார். நாம் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் (?)காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய…
-
- 13 replies
- 1.5k views
-
-
யுத்தத்தைப் போன்று நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் : ஜெனரல் சரத் யுத்தத்தில் வெற்றிகொண்டது போல நாட்டையும் வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "நிறைவேற்று அதிகாரத்தால் துஷ்பிரயோகம் தான் நடக்கிறது. அதனை இல்லாதொழித்து ஜனநாயத்தை நிலைநாட்டுவதையே எனது முதற்கடமையாக கொண்டுள்ளேன். என்னுடன் இணைந்துள்ளவர்கள் ஊழல்களுடன் தொடர்புபட்டவர்கள் அல்லர்…
-
- 1 reply
- 475 views
-
-
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு சாத்திய மில்லை! - சிவசக்தி ஆனந்தனிடம் இராணுவ அதிகாரி தெரிவிப்பு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே அரசியல்வாதிகள், உயர் பாது காப்பு வலயப் பகுதிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படு வர் என தெரிவிக்கின்றார்களே தவிர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அனுமதியின்றி உள்நுழையவே முடியாது என படைத்தரப்பு தம்மிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் வந்திருந்த போது வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள எனது சகோதரியின் வீட்டை பார்வையிடுவதற்குச் சென்றே…
-
- 0 replies
- 501 views
-