ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
தலைவரின் தாயாரை சிவாஜிலிங்கம் பொறுப்பெடுத்தார்!படங்கள் இணைப்பு http://www.dailymirror.lk/index.php/news/711-prabas-parents-handed-over-to-sivaji.html
-
- 10 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அளித்த உறுதிமொழியை குறித்த உறவுகள் நிராகரித்துள்ளனர். தாம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வரப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். பிரபாகரனின் இரத்த உறவுகளான, டென்மார்க்கில் உள்ள மனேகரன், இந்தியாவிலுள்ள ஜெகதீஸ்வரி மற்றும் கனடாவில் உள்ள வினோதினி ஆகியோரே மஹிந்த ராஜபக்சவின் உறுதிமொழியை நிராகரித்துள்ளனர். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் இயற்கையானது என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் சனாதிபதி தேர்தலுக்கான பிரசார பயணத்தினை யாழில் இருந்து ஆரம்பிக்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு மகிந்த ராஜபக்ச வருகை தந்துள்ளார். இவ்வாறு தமிழ் மக்களது வாக்கினை குறிவைத்து யாழ்ப்பாணம் வந்துள்ள கொலை வெறியன் மகிந்தவினது பிரசார கூட்டத்திற்கு மக்களை வலு கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் தமிழின துரோகிகள் தமது விசுவசத்தினை கட்டுவதற்காக மக்களை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் இருந்து இவ்வாறு மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் வலு கட்டாயமாக ஈ.பி.டி.பி. கட்சியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வீதிகளில் சென்ற மக்களையும் கட்டாயபடுத்தி அழைத்துசென்றுள்ளனர். http://www.nerudal.com
-
- 0 replies
- 602 views
-
-
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெறவேண்டுமென்று ஐ.நா. அழைப்புவிடுத்திருப்பதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிழலை கவியச் செய்யும் விடயமாக இந்த சர்ச்சை மாற்றம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் தொலைக்காட்சிச் சேவையினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஒளிநாடா திரிபுபடுத்தப்பட்டதொன்று என்றும் தெரிவித்துள்ள இலங்கை அதிகாரிகள் போர்க் குற்றம் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் நிராகரித்திருக்கின்றனர். தமிழ் கைதிகளுக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் மரண தண்டனையை நிறைவேற்ற…
-
- 0 replies
- 523 views
-
-
வீரகேசரி இணையம் 1/10/2010 10:13:57 PM - கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் நினைவாக ஞாபகார்த்த மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த மண்டபத்தினை திறந்துவைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய, அமரர் மகேஸ்வரனின் மனைவி, பிள்ளைகள் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
-
- 0 replies
- 651 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது. பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamilskynews.org
-
- 0 replies
- 692 views
-
-
பேச்சுவார்த்தைகளுக்கு பொன்சேகா தயாராக இருக்கின்றார் !!! The JVP today renewed calls for a debate between Opposition Common Candidate General Sarath Fonseka and President Mahinda Rajapaksa on the alleged fraud in the procurement of certain military supplies. The JVP said General Fonseka was ready for the debate. JVP parliamentary group leader Anura Kumara Dissanayake told reporters that only these two are privy to all the arms deals as the Defence Minister and the Army Commander during that period. “Of course, we have no understanding about arms deals. Those who challenge us for a debate also do not know anything about them. The President is the Def…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரச்சென்று, தற்போது இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களிடம் சிறிலங்காவின் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகளுக்காக குரல்கொடுக்கும் ஒருவரை மேற் கோள்காட்டி அவுஸ்திரேலியா பத்திகையான "தி ஏஜ்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேஷியாவிலுள்ள சிறீலங்காத் தூதரகத்தைச் சேர்ந்த கப்டன் கபில் மற்றும் இரு அதிகாரிகள்கள் இலங்கை அகதிகள் எண்மரிடம் விசாரணை நடத்தியதாக அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த சாரதா நாதன் தெவித்துள்ளார். மேற்படி அதிகாரிகள் இலங்கையிலுள்ள தமது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான அகதிகளின் அந்தரங்கத் தகவல்கள் குறித்து அகதிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சாரதா நாதன…
-
- 0 replies
- 597 views
-
-
அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் இருந்து தொலைபேசி வாயிலாக வைகோ அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார். அதனை வல்வெட்டித்துறையில் ஒலிபெருக்கிமூலம் ஒலிபரப்பியுள்ளனர். அவர் பேசிய இரங்கல், எழுத்துவடிவில். தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நண்பகலில் நடைபெற்றது. அங்கு பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. அவ்வமயம் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் செய்த ஏற்பாட்டினால் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொலைபேசியில் இரங்கல் உரை ஆற்றினார். அந்த உரை அப்படியே…
-
- 1 reply
- 851 views
-
-
தேர்தல் பரப்புரைகளுக்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை பத்து மணியளவில் பலாலி வழியாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார். http://www.puthinappalakai.com/view.php?2bd2A4OXvJ04a40dmA45dnd04ac0AmAQ0e2de2ecPBZBBZa2cd2e5PdnBd4ae0dcC60MmYc4ce0ecPdZAAYa2cd4edXlm4U4b0
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் அறுபதாவது தேசிய மாநாடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் அமைக்கப்பட்ட அமிர்தலிங்கம் அரங்கில் இன்று காலை 10:30க்கு ஆரம்பமாகியது. http://www.puthinappalakai.com/view.php?2bd0nd54AmAce2ed2ZdBndP5ce0ec4aU4mlXd4a2cd4eQ60MmYca2cd2ecAmAQ0ed04a40dJvXO4Am0ca40ddZBBZBPecd0ea4YAAZdP54b0
-
- 0 replies
- 491 views
-
-
மறையும் வரை மாற்றானிடம் மண்டியிடாது வாழ்ந்து காட்டியதன் மானத்தமிழ் மகன் பானாகொடையில் தடுத்துவைத்தபோதும் பைந்தமிழன் பணியமாட்டான் என்பதற்குக் கட்டியம் கூறி நின்ற கர்ம வீரர்இ பெருந்தகை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளைஅவர்களுக்கு எமது இதய அஞ்சலி. மேலும் பார்வையிட http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEScQ372 நன்றி:- சங்கதி
-
- 1 reply
- 877 views
-
-
மகிந்த நல்லூர் கந்தனிடம் ஆசி வேண்டி மன்றாடினார்! இன்றைய யாழ் விஜயத்தின் ஒரு பகுதியாக நல்லூர் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். http://www.dailymirror.lk/index.php/news/images/757-seeking-divine-intervention.html
-
- 2 replies
- 1.3k views
-
-
வைகோ எல்லாளன் திரைப்படத்தை பற்றி பேசுகிறார் காணொளி பார்பதுக்கு இங்கு அழுத்துங்கள்! source : dailymotion.com video
-
- 0 replies
- 800 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டு ஆலயப்பிரதேசம் புனித நகராகப் பிரகடனம் செய்யப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவிப்பை நேற்று விடுத்தார். மன்னாருக்குச் நேற்றுக்காலை சென்ற ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப், மற்றும் சிலருடன் கலந்துரையாடிய பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். தற்சமயம் திருக்கேதீஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டு வருகிறது. புனரமைப்பு முடிந்த பின்னர் அந்த ஆலயத்துக்கு செல்லும் வீதியை போக்குவரத்துக்கு திறப்பேன். அந்தப் பிரதேசத்தை புனித நகராகப் பிரகடனம் செய்வேன் என்று மஹிந்த அங்கு கூறினார். கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக…
-
- 1 reply
- 647 views
-
-
ஈழப் படுகொலை புதிய சாட்சியம்! By: ரவிக்குமார் எம்.எல்.ஏ. Courtesy: ஆனந்த விகடன் - தை 10, 2010 இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில்... ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது! இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள் இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு கா…
-
- 0 replies
- 841 views
-
-
மட்டு மேயர் சிவகீத்தாவிற்கு எதிராக நீதிமன்றம் செல்ல ஆளும் கூட்டமைப்பு முடிவு! இவர் கடந்த தேர்தலில் ரி.எம்.வி.பி மூலமாக கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்,கருணாவின் அழைப்பின் பேரில் சுதந்திர கட்சியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.இவர் அண்மையில் பொன்சேகாவிற்கு தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார் என்பது தெரிந்ததே. http://www.dailymirror.lk/index.php/news/756-upfa-to-take-sivageetha-to-court.html
-
- 0 replies
- 721 views
-
-
ஆளும் கட்சியில் நின்று வெற்றி பெற்றுவிட்டு சரத்பொன்சேகாவுக்கு தனது ஆதரவை கொடுப்பதாக கூறிய மட்டு மா நகர சபை முதல்வர் சிவகேதா பிரபாகரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சன ஐக்கிய முன்னணி கூறியுள்ளது. சிவகேதா அவர்கள் முன்பு பிள்ளையான் குழுவில் இருந்து மஹிந்தவின் கட்சிக்காக உள்ளூராட்சி தேர்தலில் நின்று மட்டு மா நகர சபை முதல்வராக வந்தவர். பின்னர் கருணாவின் மிரட்டலுக்கு அமைய சிறிலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்தார். தற்போது சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதிதேர்தலில் ஆதரவு அளிப்பதாக கடந்த வியாழன் அன்று ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அறிவித்தார். ஆகவே இந்த நடைமுறையானது சட்ட முறைகளை மீறியுள்ளதாக கூறியே மஹிந்த அணி வழக்கு போட எண்ணியுள்ளது. ஆனால் இதில் சட்ட சிக்கல் எத…
-
- 0 replies
- 537 views
-
-
இலங்கை அரசாங்கம் போர்குற்றம் தொடர்பான நடு நிலையான, நீதியான ஓர் விசாரணையினை தவிர்க்க முடியாது. எதிர்கொண்டே ஆகவேண்டும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் நேற்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் விசாரணைக்கான நிபுணத்துவ குழுவொன்றினை அமைக்கபோவதாக கூறிய கருத்தை கண்டித்து செய்தி ஒன்றினை அனுப்பி இருந்தது. இதனை ஊடகக்ங்களுக்கும் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக ஐ. நா வின் செயலர் பான்கி மூன் அவர்களின் பேச்சாளர் கருத்து கூறுகையில்; இலங்கை அரசாங்கம் விசாரணை ஒன்றினை தவிர்க்க முடியாது எதிர்கொள்ள வேண்டும் என்பதனை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால், பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை எ…
-
- 3 replies
- 836 views
-
-
போர் முடிந்தாலும் அங்கு பாரபட்சங்களும் ஏற்ற தாள்வுகளும் கொண்ட நிலமை காணப்படுகின்றது. போருக்கு காரணமான பிரச்சினை தீரவில்லை ஆகவே தான் நாம் ஜி.எஸ்.பி மீழப்பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் என்றார் பிரிட்டிஸ் வெளி நாட்டு உதவிகளுக்கான துணை அமைச்சர் கரத் தொமஸ். நேற்று தமிழர்களிற்கான சட்ட ஆலோசனை அமைப்பின் ஆதரவில் லசந்தவின் ஓராண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மேலும் தனது உரையில்.. இலங்கையில் போரின் இறுதிப்பகுதியில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்குற்றம் தொடர்பில் வெளிப்படையான நடுனிலைமையான விசாரணைகளை நாம் வலியுறுத்துகின்றோம் அத்துடன் லசந்தவின் கொலை தொடர்பாகவும் நடு நிலைமையான விசாரணை வேண்டும். என்றார் அமைச்சர் கடத் தோமஸ். இதே வேளை இலங்கைக…
-
- 0 replies
- 524 views
-
-
மாதந்தைக்கு தமிழகம் எங்கும் உணர்வு பூர்வமாக அஞ்சலி திகதி: 09.01.2010 // தமிழீழம் தமிழர்களை தலைநிமிரச் செய்த தானைத்தலைவனை ஈன்றெடுத்த பெருமகன் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வீர அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. சிறிலங்காவின் தடுப்புக்காவலில் மனிதாபிமானமற்ற முறையில் சிறைவைக்கப்பட்டு உடல் உளரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில் மரணத்தை அரவணைத்து கொண்ட, எமது தேசியத்தலைவரது தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது மறைவை அடுத்தே தமிழகம் எங்கும் நினைவு அஞ்சல் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றுவருகின்றது. திருச்சியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற இருந்த அஞ்சலி ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள…
-
- 2 replies
- 740 views
-
-
இன்றைய தினம் நல்லூர் கந்தன் முன்றலில் மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் கரு ஜயசூரியாவும் ஒரே நேரத்தில் சநதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் நினைவாக அமைக்கப்பட்ட மண்டபத்தை கரு ஜயசூரிய திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி மகிநத ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் மகிந்தவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது. Source: http://seithi1.blogspot.com/2010/01/blog-post_3560.html
-
- 1 reply
- 700 views
-
-
யுத்த குற்றம் தொடர்பில் பதிலளித்து சர்வதேசத்தின் மத்தியில் ஆஜராகி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர மகிந்த திட்டம்? யுத்த குற்றம் தொடர்பில் பதிலளித்து சர்வதேசத்தின் மத்தியில் ஆஜராகி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு கடிதம் ஒன்றை பெறுவதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹோன கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். யுத்தம் குற்றம் தொடர்பில் சர்வதேச முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இலங்கை ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் இதற்காக இலங்கை அரசாங்கத்திட…
-
- 3 replies
- 760 views
-
-
ஜனாதிபதி பலாலி ராணுவ தளத்திற்கு இன்று விஜயம் செய்து ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றினார்.இதன்போது முப்படை தளபதிகளும் சமூகமளித்திருந்தனர். http://www.dailymirror.lk/index.php/news/753-president-visits-palaly-base.html
-
- 0 replies
- 611 views
-