Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓய்வு பெற்ற சரத் பொன்சேகா தனக்கு விடுதலைப்புலிகளினால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதனால் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என படைத்துறையினரை கேட்டுள்ளதாகவும் அதன்படி அவருக்கு 70 விசேட கொமாண்டோக்களும்,வாகன பாதுகாப்பு அணியும் வழங்கப்படும் எனவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதே நேரம் அவர் தனக்கு பாதுகாப்பான இடம் ஒன்றை தேடும்வரை இராணுவ தலைமையகத்தில் அவர் தொடர்ந்தும் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. http://www.eelanatham.net/news/important

    • 2 replies
    • 775 views
  2. பலாலி விமான நிலையச் சூழலில் குடியமர்ந்திருந்த மக்கள் மீண்டும் அங்கு தம்மைக் குடியமர அனுமதிக்குமாறு கோரியுள்ளதுடன் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க சங்கம் ஒன்றினையும் நிறுவியுள்ளனர். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை கூடிய அந்தப் பிரதேச மக்கள் தமக்கு நஷ்டஈடு வழங்கி மீளக்குடியமர அனுமதிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளனர். மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி தெற்கு, பலாலி மேற்கு, வசாவிளான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமது பிரதேசத்தைச் சேர்ந்த வளம் மிக்க காணிகளை சுவீகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, தமது நிலங்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கூடியிருந்த மக்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து "பலாலி விமான நிலைய வ…

  3. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்ட 600 தமிழ் இளைஞர்களில் 20 பேரை நேற்று விடுவிக்கப்பட்டனர். போதிய ஆதாரங்கள் இன்மையால் இவர்களை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த மாதம் இவ்வாறு 26 பேரை விடுவித்ததாகவும் அதே நேரம் பலவருடங்களாக இவர்கள் சிறைகளில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.http://www.eelanatham.net/news/important

  4. இன்று சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக கூட்டுப்படை தலைமையக பொறுப்பில் இருந்து விடைபெற்றார். முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்புடன், பலவர்ண கொடி குடை ஆடம்பரங்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சரத் பொன்சேகாவின் இடத்துக்கு விமான படை தளபதி ரொசான் குணதிலக நியமிக்கப்பட்டுளார் http://www.eelanatham.net/news/important

  5. இலங்கை வந்துள்ள பிரணாப் முகர்ஜி சென்னையூடாகவே வந்தார். இவர் சென்னையூடாக வரும் போது ஒரு மணித்தியாலமே இடைவெளி விட்டு பயண சீட்டினை போட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் தற்செயலாக கருணா நிதியை சந்திக்க வேண்டிவரலாம் என்பதற்காகவே எனினும் பிரணாப் முகர்ஜி தனது இலங்கையின் உண்மையான பயண நோக்கத்தினை மறைப்பதற்காக சென்னை வந்து போகவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அதாவது முகர்ஜியின் உண்மையான இலங்கை பயணம் சரத் பொன்சேகா விடயம் என்றும் ஆனால் அதனை மறைப்பதற்காக இலங்கை தமிழர் மீழ்குடியமர்வு பற்றி மஹிந்தவுடன் பேசப்போவதாக கூறப்பட்டது. தமிழ் மக்கள் விடயமாக பேசப்போவதாயின் தமிழ் நாட்டிற்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசிவிட்டு சென்றால் தான் எல்லோரும் நம்புவார்கள் என்ற அடிப்படையிலேயே தம…

  6. கடுமையான மற்றும் கனரக ஆயுதங்கள் தாங்கிய விடுதலைப் புலிகள் இன்னமும் வன்னிக் காடுகளில் உலவுவதாக நியூஸ் X செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் X எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை , இலங்கை இராணுவத்தினர் முதன் முதலாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிக்கு முதல் முதலாகச் சென்ற வெளிநாட்டு நிருபர் இவராவார். நியூஸ் X செய்திச்சேவை , இலங்கை அரச சார்பான ஒரு செய்திச் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவு…

  7. சர்வதேச அழுத்தங்களுக்கு நான் என்றும் பயப்படபோவதுமில்லை, பணியப் போவதுமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது மாநாடு கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இன்று (15.11.09) நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, யாருக்கும் நாம் பயப்படுவதற்கில்லை. எமது கட்சியின் முன்னைய தலைவர்களும், யாருக்கும் பயந்தபடி தீர்மானங்களை எடுக்கவில்லை. அவர்களின் வழியில் நானும் அப்படித்தான் நடந்து வருகின்றேன். சர்வதேச அழுத்தங்கள் எதற்கும் நான் பயப்படபோவதுமில்லை, பணியப் பொவதுமில்லை எனக் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் எதிர்கட்சிரைத் தாக்கவும் தவறவில்லை. தற்போது இங்கிருப்பது எதிர்க…

    • 2 replies
    • 937 views
  8. ராமேசுவரம், நவ. 15: இலங்கை கடற்படையில் சீன வீரர்கள் உள்ளதால், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலர் பிரவீன் தொகாடியா எச்சரித்துள்ளார். ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமேசுவரத்தில் பஜ்ரங் தளத்தின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பஜ்ரங் தள நிர்வாகிகள், தொண்டர்கள் கிராமப் புற மக்களுக்குச் சேவை செய்ய முடிவெடுக்கப்பட்டது. காஷ்மீர், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நமது எல்லைகளை பாகிஸ்தான், சீனா ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் எல்லையில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் புனித யாத்திரை சென்றுள்ளோம். இத…

  9. ஓய்வு பெறும் படைத் தளபதி சரத் பொன்சேக்கா நடத்தப்பட்ட விதம் குறித்து படையினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்த தகவல்களை அடுத்து படையினரைக் குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு அங்கமாக ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சம்பள அதிகரிப்பை நவம்பர் மாதம் முதல் வழங்க இருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் பாலசூரயா அறிவித்துள்ளார். இதனைத் தவிர படையினருக்கு மேலும் பல சலுகைகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. சரியான சம்பள அதிகரிப்பின்றி ஏனைய அரச ஊழியர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் படையினருக்க…

    • 0 replies
    • 948 views
  10. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும் இராணுவத்திலிருந்தும் ஓய்வுபெறும் சரத் பொன்சேக்காவிற்குப் பதிலாக முப்படைகளின் சார்பில் இன்று முற்பகல் கௌரவமளிக்கும் விழாவொன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தலைமையகத்திற்குள் அமைந்துள்ள அலுவலகத்திலிருந்தும், உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் சரத் பொன்சேக்காவை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்புச் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய சரத் பொன்சேக இன்று முற்பகல் தமது அலுவலகத்திலிருந்த அவரது உபகரணங்கள் சிலவற்றை அகற்றிக் கொண்டதாகத் தெரியவருகிறது. http://www.parantan.com/

    • 3 replies
    • 1.4k views
  11. நேற்று(15.11.2009) அன்று "சண்டே ரைம்ஸ்'"எழுதியிருந்த அரசியல் நோக்கிலிருந்து சில பகுதிகள் இவை. கடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார். அதன்மூலம் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவிருப்பதைத் தவிர்த்து விடுவார் என்று சில வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான பதவி விலகல் கடிதம் ஒன்று வருமானால் அரைமணி நேரத்துக்குள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும் என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவ…

  12. நூறு புகழ் பெற்றவர்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌனத்தின் வலி’வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை இப்புத்தகம் வெளியிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் அருந்ததி ராய், அனிதா பிரதாப், நக்கீரன் கோபால், ஆன்மீகப் பெரியோர்களான சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராயர் சின்னப்பா, திரையுலகின் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், சத்யராஜ், சீமான், சேரன், அமீர், பாலாஜி சக்தவேல், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், கே.வி.ஆனந்த், லிங்குசாமி, ராதா மோகன், கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், தபு சங்…

    • 2 replies
    • 1.2k views
  13. முதலில் நடத்தப்படுவது ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தின் போது அறிவிக்கப்படும் என ஜனாதிபதி உள்ளிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரபால சிறிசேனவும், அமைச்சர்களும் கடந்த காலம் பகிரங்கமாக கூறிவந்தனர். எனினும், முதன்னதாக ஜனாதிபதித் தேர்தலையா? பொதுத் தேர்தலையா? நடத்த வேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது எனக் கூறி ஜனாதிபதி தமது தேசிய சம்மேளன உரையை முடித்துக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 58வது தேசிய சம்மேளனம் நேற்று (15) கொழும்பு கெத்தராம விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 7.45க்கு முடிவடைந்தது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவரது உரையின் இறுதியில், முன்ன…

  14. சிறிலங்கா சுதந்திர கட்சியின் மா நாட்டிற்கு நேற்று தனது பிரதி நிதிகள் சார்பில் கட்சி அங்கத்தவர்களை அனுப்பியது மட்டுமன்றி விடுதலைப்புலிகளை அழித்ததற்கு பாராட்டும் தெரிவிக்கபட்டதாம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளளமை குறிப்பிடத்தக்கது. முதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சந்திர தேவ் மற்றும் ஜெயந்தி நடராஜனை தனது கட்சி பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது.காங்கிரஸ் கட்சியின் வெளிவ…

  15. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவின் இளைய புதல்வியை மணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டுள்ள ஜயந்த பெரேரா என்ற இளைஞரின் தந்தையான பிரதி காவல்துறை மா அதிபர் சிசில் பெரேராவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மன்னாருக்கு இடமாற்றம் செய்ய காவல்துறைத் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய காவல்துறைமா அதிபர் பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட 20 காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு மேலதிகமான வகையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவின் சகோதரர் ஜி.எஸ்.கே. முனசிங்கவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து சுற்றுலாத்துறைக் காவல் பிரிவின் பணிப்பா…

  16. [ தினக்குரல் ] - [ Nov 16, 2009 05:00 GMT ] படை அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த கடிதம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தன்னை ஓரங்கட்டுவதற்கு அரசாங்க உயர்மட்டத்தினால் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாக கவலை வெளியிட்டிருக்கும் ஜெனரல் ஓய்வுபெறுவதற்குத் தன்னை நிர்ப்பந்தித்த காரணிகளைக் கடிதத்தில் விளக்கமாகக் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. படைகளின் விவகாரங்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்குப் புறம்பாக அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரியவையாகியிருக்கும் சில பிரச…

    • 0 replies
    • 958 views
  17. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்‐ 15 November 09 02:34 pm (BST) அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் கிறிஸ்மஸ் தீவுகளில் போராட்டத்தை நடத்திய நபர் ஒருவரையும் அவுஸ்திரேலியா, நாடு கடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முனைந்த ஐம்பது இலங்கையர்களில் சிலரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். புகலிடம் கோரியவர்களில் 12 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமைவான முறையில் புகலிடம் கோருவோருக்கு தஞ்சமளிக்கப்படும் என அவுஸ்திரேலிய க…

  18. இலங்கையில் சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்திறனற்றதாக்கப்பட வேண்டுமென கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த வெளிநாட்டுச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே நாம் உண்மையான வெற்றியைப் பெற்றதாகக் கருத முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச இணையத்தளத்திற்கு வழங்கிய பேச்சிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையைக் குற்றம் சொல்லும் நாடுகள் மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிட வேண்டுமென நினைக்கின்றார்கள் என்றும் இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார். நாடு கடந்த அரசு குறித்த தீர்மானங்களும் அது குறித்த நடவடிக்கைகளும் அதற்கு புலம் பெயர் வாழ் மக்களிடம் இருக்கின்ற ஆதரவும் குறித்து ராஜபக்ச சகோதரர…

    • 0 replies
    • 1.4k views
  19. ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது. ஆஸ்ட்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலிய வாழ்க்கை ‘காந்தமாக’ இழுப்பதால்தான் தமிழர்கள் ஆஸ்ட்ரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய நினைக்கின்றனர் என்று ஐ.நா.விற்கான சிறிலங்க தூதர் பலித கோஹனா கூறியிருந்தார். வன்னி முகாம்களில் தமிழர் குழந்தைகள் போதுமான உணவு அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுகின்றன என்று ஊடகங்களுக்குக் கூறிய ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் …

    • 31 replies
    • 2.8k views
  20. கொழும்பு: இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் இந்தியா தனக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று அதிபர் ராஜபக்சே ரகசிய கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ராணுவத் தளபதி பொன்சேகா கூறியதும், பொன்சேகா உடனடியாக ராணுவ தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். சர்வதேச பொருளாதார நிலை, நிதி நெருக்கடி உள்ளிட் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசியதாக அதிபர் அலுவலக பணியாளர் ஒருவர் கூறினார…

  21. பொதுவாக இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது ஆகும். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் இந்தக் கருத்தாக்கம் பரவலாக வேறுபடுகிறது. ஆனால் இந்த இனப்படுகொலை என்ற வார்த்தைக்கான சட்டப்பூர்வ அர்த்தத்தை 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பால் இயற்றப்பட்ட இனப்படுகொலை தடுப்புச் சட்டத்தின் மூலம் நாம் அறியப் பெறுகிறோம். அதாவது ஒரு இனப்பிரிவை நாம் மேற்கூறிய வகையில் பாகுபடுத்தி, முழு அளவிலோ அல்லது பகுதியாகவோ அந்த இனத்தின் நபர்களை கொல்லுதல், அந்த நபர்களுக்கு மனோரீதியாக அழுத்தம் கொடுத்தல், அவர்களின் வாழ்விற்கு பலவகையில் துன்பம் …

  22. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது யாருக்கு? ஓர் ஆய்வு. மகிந்தவுக்கு வாக்களித்தாலும் சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தாலும் தமிழ்மக்களுக்கு ஒன்றும் நன்மை வரப்போவதில்லை. இரணடு பேரும் தமிழினப் படு கொலையை முன்னின்று செய்தவர்கள் இரண்டு பேரையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது வெளிப்படையானது. இத் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாம் அவ்வாறு செய்தாலும் இருவரில் ஒருவர்தான் ஜானாதிபதியாகப் போகிறார் என்பது நிச்சயம். இவ்வாறுதான் இருக்கிறது தமிழ் மக்களின் அரசியல் பலம். இதற்கு என்னதான் தீர்வு? யார் வந்தால் நமக்கென்ன என்று இருக்கப் போகிறீர்களா? இந்த இக்கட்டான நிலையில் இந்தியாவினால்தான் ஏதாவது பலன் தமிழ் மக்களுக்குண்டு. அப்பி…

  23. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கைது செய்ய.. சர்வதேச மனித உரிமைகள் பேரவை உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடு ஒன்றில் வைத்து சந்திரிகாவை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் நாட்டுத் தலைவர் ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தினால் சந்திரிகாவை வெளிநாடு ஒன்றில் வைத்து கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் 231 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறத…

  24. சீறீலங்கா அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ள சுமார் 20,000 தமிழ் இளைஞர் யுவதிகளும் கடுமையான சித்திரவதைகளுக்கு முகம் கொடுப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு முகாம்கள் என்ற போhவையில் சீறீலங்கா அரச படைகள் சித்தரவைத கூடங்களை நடத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் சிலரை மேற்கோள் காட்டி அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மாலை என இரு வேளையும் சீறீலங்காவின் தேசியக் கொடிக்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சீறீலங்காவின் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுமாறும் தேசிய கொடிக்கு இராணுவ மரியாதை டிசலுத்துமாறும் நிர்பந்திக்கப்படுவதாகவும் அதனை உரிய முறையில் மேற்க…

  25. ஜெனல் சரத் பொன்சேகா குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஜெனரல் கையளித்துள்ளார். இராணுவச் சீருடையை அகற்றும்வரை அரசியல் பேசுவதை தவிர்க்கப் போவதாக அவர் கூறியிருந்தார். ஊடகத்துறை அமைச்சரின் அரசியல் இராணுவ விளக்கங்களுக்கு ஜெனரல் அளித்த பதிலாகவே இதனைக் கருத வேண்டும். இவர் பதவியில் இருந்தவேளை கனடா, "நெஷனல் போஸ்ட்' பத்திரிகைக்கு வழங்கிய நேர் காணலில் அரசியல் கருத்துகளை உதிர்த்தபோது ஆட்சியாளர்கள் அதனை அங்கீகரித்திருந்தார்கள். ஸ்ரீலங்காவின் சிங்கள தேசிய இறைமையில் தமிழர்கள் பங்கு கேட்கக் கூடாதென ஜெனரல் கூறிய அரசியல் பார்வைகள் ஆட்சியாளருக்கு இதமாக இருந்திருக்கும். சாதகமான கருத்துகளுக்கு எப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.