ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன. நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன EXIM வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கடன் பெறுநர்கள், வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன EXIM வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனினால் ஜனாதிபதி செயலகத்திடம் தகவலறியும் சட்டத்தின் ஊடாக கோரிய போதே ஜனாதிபதி செயலகம் இந்த மறுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது. …
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 10:16 AM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும் அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை பத்திரம் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இறுதியாக நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதா நிறைவேற்று அதிகார பிரதமர…
-
- 3 replies
- 403 views
- 1 follower
-
-
Published By: PRIYATHARSHAN 12 OCT, 2023 | 10:24 AM அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. புதன்கிழமை ( 11 ) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது. 103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இந்தக் கப்பலுக்கு கப்டன் ஆண்ட்ரூ எச் பெரெட்டி தலைமை தாங்குகிறார். கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
12 OCT, 2023 | 09:45 AM யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கபப்ட்டுள்ளனர். சிலர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள போதிலும், …
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
9 மாதங்களில் ஆயுதமேந்திய பாதாள உலகக் குழுக்களால் 49 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதாள உலக ஆயுதக் குழுக்களால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் இந்த மனிதப் படுகொலைகளால் தென் மற்றும் மேல் மாகாண மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை பதிவாகியுள்ள பாதாள உலகக் கொலைகளில் பெரும்பாலானவை தென் மற்றும் மேல் மாகாணங்களில் பதிவாகியுள்ளதால் தற்போது காலி, மாத்தறை, எல்பிட்டிய, ரத்கம போன்ற பல பிரதேசங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொஸ்கொட சுஜி மற்றும் ரத்கம விதுர ஆகிய இரு பாதாள உலகக் குழுக்களும் ஒருவரை ஒருவர் கொலை செய்யத் தொடங்கியதையடுத்து, தென் மாகாணம் பாதாள உலக பீதியில் மூழ்கியுள்ளது. தென் மாகமணத்தில் இராஜாங்க அ…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
11 OCT, 2023 | 05:22 PM உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மெளலானா : வர்த்தமானி வெளியானது! | Virakesari.lk
-
- 4 replies
- 466 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் புதன்கிழமை (11) கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியுமே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, யாழ். நகரில் உள்ள வீதி வழியாக வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து நிறைவுபெற்றது. யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம்! | Virakesari.lk
-
- 0 replies
- 253 views
-
-
எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் தந்தி டி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலையப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா? என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல், அது தவறா…
-
- 0 replies
- 253 views
-
-
11 OCT, 2023 | 04:07 PM சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிலுள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இன்று (11) அதிகாலை தனியான் யானை ஒன்று வந்து சென்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் உள்நுழைந்த ஒரு காட்டுயானை அப்பிரதேசத்தில் உள்ள பயன் தரும் வாழை மற்றும் ஏனைய பயிர்களை சேதப்படுத்தியுள்ளதுடன், வீடுகளின் சுவர்களும் உடைக்கப்பட்டு, வீட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூடைகளும் நாசமடைந்துள்ளன. இந்த வருடம் காட்டுயானை தாக்குதலுக்குள்ளாகி 3 நபர்கள் உயிரிழந்ததுடன், முதலை தாக்குதலுக்குள்ளாகி…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 OCT, 2023 | 11:17 AM (எம்.மனோசித்ரா) அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற உப அமைச்சர் கொமுரா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோருடன் ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும்…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 OCT, 2023 | 04:04 PM பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தத்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 43 replies
- 3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 OCT, 2023 | 09:11 AM தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் திங்கட்கிழமை (09) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னை மரத்தில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார். இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான பிரேத…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 OCT, 2023 | 10:32 PM ஆர்.ராம் பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள்,…
-
- 1 reply
- 390 views
- 1 follower
-
-
10 OCT, 2023 | 10:16 PM ஆர்.ராம் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று மாலையில் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் அவரை உயர்கல்வி அமைச்சர் கலாநிதி.சுரேன் ராகவன் நேரில் சென்று வரவேற்றிருந்ததோடு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன் பங்கேற்றிருந்தார். மேலும் “மீண்டும் கொழும்மை வந்தடைவதை இட்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் நாளையதினம் இந்து சமுத்திர எல…
-
- 4 replies
- 388 views
- 1 follower
-
-
3 மணி நேர 'நெஞ்சறை' சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் - மன்னார் வைத்தியசாலையில் சம்பவம் ! kugenOctober 11, 2023 'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் உயிர் இவ்வாறு காப்பாற்றப்பட்டது. கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தி…
-
- 4 replies
- 406 views
- 1 follower
-
-
11 OCT, 2023 | 09:14 AM 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக…
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 11:16 AM இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடையாமல் சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என பிலிப்பைன்சின் நிதியமைச்சர் பெஞ்சமின் ஈ டியோகோனோ தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்றின் பின்னர் பிலிப்பைன்ஸ் எதிர்கொண்ட பொருளாதார சவால்களை நினைவுகூர்ந்துள்ள அந்த நாட்டின் நிதியமைச்சர் வலுவான கட்டமைப்பு சீர்திருத்தங்களே நாடு மீண்டும் வலுவான நிலைக்கு வருவதற்கு உதவியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது! இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்திதுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது 1990 ஆம் ஆண்டு குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது ஆண் பிள்ளையும், பெண்பிள்ளையும் தமிழகத்திற்கு சென்று சென்னையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்திய மீனவர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் வந்திறங்கி உறவினர் வ…
-
- 1 reply
- 482 views
-
-
10 OCT, 2023 | 05:12 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 314 அதிகாரிகள் மற்றும் 1565 இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்த தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வு பனாகொடை இராணுவ முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர்…
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 OCT, 2023 | 04:59 PM (இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் மீண்டும் எம்முடன் இணையலாம், காலவகாசம் வழங்கப்படும். நாட்டுக்காகவே மாறுபட்ட அரசியல் கொள்கையை கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை பஷில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கட்சி என்ற ரீ…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் நபர்கள், யாரோ ஒருவருடைய பெயரைக் கூறி அவர் நிற்கிறாரா? என்று கேட்டிருக்கின்றனர். இரவு வேளை என்பதால் அவர் இல்லை என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்ட அவர்களில் ஒருவர் பூட்டப்பட்டிருந்த கதவின் …
-
- 0 replies
- 200 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்பவம் மற்றும் கோட்டாபயவின் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான பல தகவல்களை நான் அறிவேன். விரைவில் நாடாளுமன்றத்தில் இவை அம்பலப்படுத்தப்படும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்று கூறப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருந்த அசாத் மௌலானா சனல் 4இற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகத்தான் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலிருந்தே கோட்டாபய ராஜபக்ச தரப்பி…
-
- 3 replies
- 584 views
- 1 follower
-
-
அதிபர் பற்றாக்குறையை நிவர்த்திக்க 4,718 அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஆசிரியர் சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/276471
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
முதல் 1,000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டப்படிப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய தேவைகளுக்கு ஏ…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-