Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் அண்மையில் சிறுவன் ஒருவன் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகி உயிரிழந்தமையை அடுத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் ஊசி மருந்துகளை செலுத்தும் நடவடிக்கை நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடை வைத்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கிராமப் புறங்களில் சில வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு முறையாக ஊசி மருந்துகள் செலுத்தப்படுவதில்லை. அத்துடன், அவற்றுடன் விளையாடும் சிறார்களும் பாதுகாப்பாக செயற்படாத பட்சத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற சாத்தியம் உள்ளதாக குறிப்பிட்டார். உயிரிழந்த சிறுவனும் நாய் கடிக்கு உள்ளான நிலையில், அது குறித்து பெற்றோருக்கு அறிவிக்காமல் இருந்தமையாலேயே உயிரிழக்க நே…

  2. Published By: DIGITAL DESK 3 21 JUL, 2023 | 09:19 AM வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (20) நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2016 ம் ஆண்டு இரு நாட்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டும். இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் மீனவர் பிரச…

  3. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை ஆலயம், ஆசிரியர் விடுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றவை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மதுபானசாலை தொடர்பில் கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணை…

  4. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2023 | 04:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ - டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அத்துடன் பயணிகள் பஸ் வண்டிகளில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் வருமானம் அதிகரித்துள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் காவிந்த ஜயவர்தன எம். பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொது போக்க…

  5. தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை! நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்…

  6. ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்! பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார். அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) என்ற விமானத்தில் இன்று பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதேவேளை அவர் இன்று மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1340604

  7. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு! ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பும் வரை இது அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றா…

  8. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் நேரடியாகவும் மற…

  9. வவுனியாவில் சிறுவனைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது! பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், தாம் கடமைபுரியும் வவுனியா மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் உட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றுபவர் எனவும், குறித்த நபர் நகர்ப்புறத்தை அண்டிய பாடசாலை மாணவன் ஒருவனையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வவுனியா, குருமன்காடு பகுதியை சேர…

  10. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 20 ஜூலை 2023, 10:21 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். கட…

  11. யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை! written by adminJuly 19, 2023 யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு , அவற்றையும் ஒழுங்குக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில், நடாத்திய கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். அதன் போது, தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்ளை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப்பின்னர் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறும், அதேவேள…

  12. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை 4 வருட காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்த வரிச்சலுகை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி நிறைவடையவிருந்தது. புதிய ஜி.எஸ்..பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை தீர்வை வரி சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. (a) https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஜி-எஸ்-பி-பிளஸ்-வரிச்சலுகை-நீடிப்பு/150-…

  13. பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது, பொருளாதார நெருக்கடியினால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் த…

  14. தேசிய அடையாள அட்டை குறித்து வடக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு தேசிய அடையாள அட்டை சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19.07.2023) சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறுகையில்,“ வடக்கு மாகாணத்தில் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. த…

    • 0 replies
    • 260 views
  15. Published By: DIGITAL DESK 3 19 JUL, 2023 | 02:46 PM அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (19) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கு மாகாணத்தில் நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றது. தற்பொழுது வடக்கில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாகவே நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், இன்சுலின் உற்பத்தி தடைப்படுகின்றது. மதுபாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வ…

  16. Published By: DIGITAL DESK 3 19 JUL, 2023 | 04:47 PM நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல், கொழும்பு மாநகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மனைகளை கட்டி சொந்தவீடுகள் வழங்கவும் சஜித் பிரேமதாச எம்முடன் ஒரு கட்சியாக, தேசிய கூட்டணியாக உடன்பாடு கண்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளி கட்சியாக அங்கம் வகிக்க பிரதான காரணங்களில் இது …

  17. கலந்துரையாடல்களில் இனிமேல் பயனில்லை : சி.வி.விக்னேஸ்வரன்! சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சென்றிருந்த போதும் ஜனாதிபதி பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பிலேயே கலந்துரையாடினார் என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டார். அதன்பின்னர் தமிழ்…

  18. ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக் காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத் தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி அதை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருப்பதானது எமது கட்சியின் நிலைப்பாடுகளே சரியானது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், …

  19. யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு வலைவீசும் பொலிஸார் !! யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கடந்த 08 ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர். அதனை அடுத்து யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினருக்கு பொலிஸார் அறிவித்து இருந்தனர். அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போலி சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க வந்த தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் …

  20. இலங்கையின் கடவுச்சீட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட நிலைமை! இலங்கையின் கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. இலங்கை கடவுச்சீட்டை வைத்திருக்கும் 41 நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் அல்லது ஒன்-அரைவல் விசாவைவழங்கியுள்ள நிலையில், இலங்கை தரவரிசையில் முன்னேறியுள்ளது. சிங்கப்பூர், மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ…

  21. இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது : உலக வங்கி! இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளதுடன், சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் கடாட் சேவோர்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 12 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் வட்டி விகிதங்கள் மற்றும் எதிர்மறையான வளர்ச்சி வீதங்கள் குறைவடைந்துள்ள அ…

  22. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமருக்கு விடுக்கும் கோரிக்கை! தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கை இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நேற்று (17) கையளிக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு , வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பில் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் திணைக்களத்தில் புகார் கொடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது நான்கு காட்சிகள் அதில் அங்கம் வகித்தன. அன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரையில் சில கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து இணைந்தன.சில க…

  24. யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம் யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற , சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டதில் , 07 மாணவர்களும் , கடலட்டை பண்ணை உரிமையாளர் …

    • 12 replies
    • 1.1k views
  25. Published By: VISHNU 18 JUL, 2023 | 09:27 PM வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டர் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40 ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதன்போது முச்சக்கரவண்டி-1, மோட்டார் சைக்கிள்கள் -34, துவிச்சக்கரவண்டி- 8, என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலையில் தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. பொதும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.