ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
சிறிலங்காவின் மத்திய மாகாணம், கண்டியில் உள்ள கிராமம் ஒன்றில் முஸ்லிம் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு நடத்திய போர் முடிவுக்கு வந்திருக்கும் இந்த நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த அனைவரையும் கண்டுபிடிக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க சூளுரைத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த நன்மைகளை கெடுத்தது இந்தியா என்று புலவர் புலமைப்பித்தன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கில் யுத்தம் காரணமாக அல்லலுறும் அப்பாவி பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கோரப்பட்ட மொத்த உதவித் தொகையில் 60 வீதமான உதவிகளை வழங்குவதற்கு தயார் என உதவி வழங்கும் நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. கடந்த மே மாதம் வரையில் கோரப்பட்ட தொகையில் 32 வீதம் மட்டுமே வழங்க முடியும் என உதவி வழங்கும் வழங்கும் நாடுகள் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது உதவி தொகை அறுபது வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அகதிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 155 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணம…
-
- 0 replies
- 501 views
-
-
ராஜபக்சேவுக்கு பி.ஆர். வேலை பார்த்த இந்தியா-கருத்தரங்கில் தாக்கு திங்கள்கிழமை, ஜூலை 6, 2009, 14:17 [iST] சென்னை: இலங்கை இனப்போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சேவின் பி.ஆர்.ஓ போலத்தான் இந்தியா நடந்து கொண்டது என்று பிரபல பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன் கூறினார். இலங்கையில் அடுத்தது என்ன என்ற தலைப்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் பேசுகையில், ஜனநாயக ரீதியிலான தீர்வு காண முயற்சிக்காமல், இலங்கை அரசை, சர்வதேச சமுதாயத்திடமிருந்து பாதுகாக்கக்கத்தான் இந்தியா அதிக அக்கறை காட்டி வந்தது. இலங்கை அரசு செய்து வந்த போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகளை சர்வதேச சமுதாயத்திடமிருந்து மறைக்கும் நடவடிக்கைகளில்தான் இந்தியா ஈடுபட்டிருந்தது. இஸ்ரேல், பாகிஸ்த…
-
- 1 reply
- 821 views
-
-
ஒபாமா அரச தலைவராகியதனைப் போன்று இலங்கையில் தமிழர் ஒருவர் அரச தலைவராக முடியுமா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 314 views
-
-
சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
வவுனியாச் செய்தியாளர் கோபி 07/07/2009, 02:19 கிளிநொச்சி நகருக்கு மின்சாரமாம் - படையினர் கிளிநொச்சி நகரில் மக்கள் மீளக் குடியேற அனுமதி மறுத்துவரும் சிறீலங்கா படையினர், அங்கு மின்சாரம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். நகருக்கு எதிர்வரும் 10ஆம் நாள் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்திருப்பதாக, மின்சார சபைப் பணிப்பாளர் எதிரிசிங்க தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகருக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகர் தவிர்ந்த ஏனைய இடங்களிற்கு மின்சார வசதியை ஏற்படுத்த 4 பில்லியன் ரூபா தேவை என்றும் அவர் கூறினார். முல்லைத்தீவு நகரை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்துள்ள சிறீலங்கா அரசு, அங்கு மக்கள் மீளக்குடியேற அ…
-
- 0 replies
- 648 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்படவிருக்கின்றது. வன்னிப் பகுதியில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதனை அகற்றும் பணியில் சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவும் வகையில் ஏற்கனவே தமது கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவுகள் பலவற்றை இந்தியா அனுப்பிவைத்திருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே கண்ணிவெடிகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றை இந்தியா அனுப்பிவைக்கவிருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். வன…
-
- 0 replies
- 766 views
-
-
இஸ்ரேலிடம் இருந்து சுப்ப டோரா படகுகள் ஆறை சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவிருக்கின்றது. இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இடம்பெறும் கள்ளக் கடத்தல்களைத் தடுப்பதற்காகவே இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுப்ப டோரா எம்.கே. ரக சுற்றுக்காவல் படகுகள் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வெற்றிகரமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நான்கு அடி ஆழமான நீரில் கூட இந்த படகுகளைப் பயன்படுத்த முடியும் என்பதால் கொமாண்டோ அணியினரை கடற்கரையில் கொண்டுவந்து இறக்குவதற்கும் ஏற்றிச் செல்வதற்கும் மிகவும் வசதியான படகாக இது கருதப்பட்டது. 20 மி.மீ. பல்குழல் துப்பாக்கிகளையும், 40 மி.மீ. தன்னியக்க கிரனைட் லோஞ்சர்களையும…
-
- 1 reply
- 472 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருந்த முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி ஒரு நாடகம் என்பது இப்போது வெளிப்படையாகியிருக்கின்றது. ஆயுத ஒப்படைப்புக்காக போதுமானளவு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், கையளிக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. அதிலும் பாவனைக்கு உதவாத ஆயுதங்கள் சில மட்டும்தான் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களிடம் மேலும் பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பது காவல்துறையினருக்குத் தெரியும். மிகுதியாகவுள்ள ஆயுதங்களைக் களைவதற்கு தேடுதல் நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்படும் என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற போதிலும், முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இடையே இது பெரும் எதிர்ப்…
-
- 0 replies
- 399 views
-
-
வடமேல் மாகாணத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளுர் மக்களிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றதில், வெளிநாட்டவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பிங்கிரியா, தலகஹபிட்டிய பகுதியில் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுடன், நேற்றிரவு குடிபோதையில் சென்ற ஒருவர் தகராறு செய்து கொள்ளையிட முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில், வெளிநாட்டவர்கள் பலரும், உள்ளுர் மக்கள் நால்வரும் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வெளிநாட்டவர் ஒருவர் முதலில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நன்றி பதிவு
-
- 0 replies
- 563 views
-
-
சமஸ்டி வழங்கப்பட மாட்டாது என்ற சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் கூற்றுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. சமஸ்டி ஆட்சிமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தமிழ் மக்களிற்கு என்ன கொடுக்க வேண்டும் என தனக்குத் தெரியும் எனவும், அதற்கான ஆணையை மக்கள் தனக்கு வழங்கியிருப்பதாகவும், மகிந்த தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பத்திரிகை என தமிழ்நாடு தலைவர்களால் வர்ணிக்கப்படும் “த ஹிந்து” நாழிதழிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சிறீலங்கா அதிபருக்கு மிகவும் நெருங்கியவர் என வர்ணிக்கப்படும் “ஹிந்து” நாழிதழின் ஆசிரியர் ராமிற்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 13வது திருத்த சட்டம் பற்றியும் ம…
-
- 0 replies
- 665 views
-
-
யாழ்தேவி ரயில் தீ விபத்தில் 25 மில்லியன் ரூபா நஷ்டம் - விசாரணைக் குழுவும் நியமனம் வீரகேசரி நாளேடு 7/6/2009 8:46:40 PM - யாழ்தேவி சொகுசு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 25 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் லிருந்து தெரியவந்துள்ளது என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி.பி விஜயசேகர தெரிவித்தார். இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட விசாரணைக்குழு ஒன்றும் நாளை செவ்வாய்க்கிழமை நியமிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி சொகுசு ரயிலில் சாலியபுரம் பகுதியில் வைத்து தீ விபத்து ஏற்பட்டதுடன் இதனால் இரண்டு பெட்டிகள்…
-
- 4 replies
- 704 views
-
-
""மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.'' அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும்.போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது. மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும்.அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இனங் காண வேண்டிய கடப்பாடு மக்களுக்கு உண்டு. புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இப்பொறுப்பு உண்டு. ஐ.நா. மனித…
-
- 1 reply
- 605 views
-
-
அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு உரையாற்றியபோது மேலும் கூறியதாவது: ஈழத்து கலை நிகழ்ச்சி இங்கே நடந்த போது, என் கண்களின் ஓரம் ஈரமானது. அங்கு போர் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. களம் ஓய்ந்து விட்டாலும், காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதத்தில், நான் எனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை. …
-
- 6 replies
- 946 views
-
-
தமிழக பெண்களை சிங்கள ராணுவம் விபசாரம் செய்ய வற்புறுத்துகிறது:கி.வீரமணி தஞ்சை பெரியார் இல்லத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ''ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை நித்தம், நித்தம் கேள்விக்குறியாக உள்ளது. போர் முடிந்து 2 மாதங்கள் ஆகவிட்டன. விடுதலைப்புலிகளை எதிர்த்துதான் போர் புரிகிறோம். மக்களுக்கு எதிராக அல்ல என்று ராஜபக்சே கூறினார். விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்துவிட்டோம் என்று சொல்லும் ராஜபக்சே, தங்களது சொந்த இடங்களுக்கு தமிழர்களை செல்லவிடாமல் தடுத்து முள்வேலிக்கு பின்னால் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாக பிரித்து வைத்து இருப்பது ரத்த கண்ணீரை வரவழைக்கிறது. தமிழக பெண்களை சிங்கள ராணுவம் விபசாரம் செய்ய வற்புறுத்துகிறது என …
-
- 0 replies
- 693 views
-
-
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் "வடக்கின் வசந்தம்" ஈனச் செயலைக் கண்டிப்போம்! தடுத்து நிறுத்துவோம்!! வன்னிப் பெண்களுக்கு களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனச் செயலைக்கண்டித்து தடுத்து நிறுத்த தமிழர்களை ஒன்றிணைய நாம் தமிழர் இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது. நான்காம் ஈழப் போரில் வன்னிப் பெருநில மக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை இராணுவத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மக்களில் இளைஞர்களைப் பிரித்து அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. எனவே முகாம்களில் அதிக அளவில் இருப்பது பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும்தான…
-
- 3 replies
- 1.3k views
-
-
செய்தியாளர் கோபி 06/07/2009, 16:57 முல்லைத்தீவு மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற முடியாதுள்ளது - எமில்டா சுகுமார் அதியுயர் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவு நகரம் சிறீலங்காப் படையினரால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதால் முல்லைத்தீவை சொந்த இடமாகக் கொண்ட மக்களை அவர்களின் இடங்களில் மீளக் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி மேரி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து மக்களின் நிலைமை தொடர்பில் உரையாடிபோதே மக்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு நகரம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் படையினரால் கொண்டு வ…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கையில் சமஷ்டி முறைக்கான தீர்வுக்கே இடமில்லை - மகிந்த ராஜபக்ச இலங்கை இனப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதனை வழங்க வேண்டும் எதனை வழங்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்து நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிளிக்கும் போது, இனப் பிரச்சினைக்கு எதனை வழங்க வேண்டும். எதனை வழங்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும். இதற்கான அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கோருவோர் நாம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் தேவைகள் இங்கு கிடைக்காது. இலங்கையில் ச…
-
- 0 replies
- 518 views
-
-
India is to send its soldiers to Sri Lanka to help de-mine areas once held by the Tamil Tigers, Indian Foreign Secretary Shivshankar Menon said. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=53935 வரவேர்கத்தக்க நகர்வு! ...... இன்று இது எமக்கு தேவையும் கூட .........
-
- 2 replies
- 965 views
-
-
1. உயிர்காக்க எழுவோம் - ஒலி வடிவம் 2. இனி தமிழர்கள் செய்யவேண்டியது - ஒலிவடிவம் தேசியத் தலைவரினுடனான நேர் காணலில் தேசியத் தலைவரின் எதிர்கால நோக்கு இணைப்புக்கு தமிழ்த்தேசியம்
-
- 0 replies
- 739 views
-
-
05/07/2009, 13:15 [தமிழ்நாடு செய்தியாளர் அகரவேல்] மகிந்த அயல் நாடுகளின் கைக்கூலியாகச் செயற்படுகின்றார் - சீமான் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அயல் நாடுகளின் கைக்கூலியாகச் செயற்பட்டு வருவதாக, தமிழின உணர்வாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச, 5,000 கோடி அமெரிக்க டொலர்களுக்காக கச்சதீவை சீனாவிற்கு தாரைவார்த்திருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.தி.மு.க மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சீமான் இதனைத் தெரிவித்தார். தமிழ்நாட…
-
- 1 reply
- 594 views
-
-
கொழும்பு: இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தமிழர்கள், அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே. விடுதலைப் புலிகளுடனான போருக்கு முன்பு ஒரு மாதிரி பேசி வந்தார் ராஜபக்சே. போர் முடிந்ததும், தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்யப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட தமிழர்கள் எங்களது சகோதரர்கள், அவர்களைக் காப்பது எங்களது கடமை என்றார். ஆனால் போர் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அதுகுறித்த எந்தத் திட்டத்தையும் இலங்கை அரசிடமிருந்து காணோம். மேலும் அதிகாரப் பகிர்வு, 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசிடமிருந்து உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லை. …
-
- 1 reply
- 707 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திய போரில் சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர், இது தொடர்பான தகவல்கள் ஒருபோதும் வெளிவரப்போவதில்லை எனவும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்ட போரில் இந்தியா வெறுமனே ஒரு பொதுமக்கள் தொடர்பு முகாமையாளர் (public relations manager) போலவே செயற்பட்டிருக்கின்றது எனவும் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளரான சத்தியா சிவராமன் தெரிவித்திருக்கின்றார். "சிறிலங்காவில் அடுத்தது என்ன?" என்ற தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்திய அவர், "இன நெருக்கடிக்கு ஜனநாயக ரீதியான தீர்வொன்றைக் காண்பதற்குப் பதிலாக,…
-
- 1 reply
- 866 views
-