ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
திறமை வாய்ந்த சிறிலங்கா படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள மறுத்ததால்தான், இந்திய அமைதி காக்கும் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல முடியாமல் போனது என்று இந்தியப் படையினர் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியில் சிறிலங்கா கூட்டுப்படை தலைமையகத்தின் பிரதானியாகவும் பாதுகாப்புச் செயலராகவும் பதவி வகித்த ஜெனரல் சிறில் ரணதுங்க கூறியுள்ளார். 'சமாதானத்தில் இருந்து சண்டைக்கு: பிரிவினைவாதத்தில் இருந்து பயங்கரவாதத்துக்கு' எனும் தலைப்பில் தனது பதவிக்கால நினைவுகளை தொகுத்து நூலாக சிறில் ரணதுங்க வெளியிட்டுள்ளார். இந்த நூலில் இந்திய அமைதி காக்கும் படை தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில…
-
- 0 replies
- 448 views
-
-
மீண்டும் எங்கள் புலிகளின் குரல்.... http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 3.6k views
-
-
05/07/2009, 02:23 ] வவுனியா பாடசாலை அதிபர் சுட்டுப்படுகொலை வவுனியா பாரதிபுரம் தமிழ்கலவன் பாடசாலையின் ஆதிபர் மற்றும் உந்துருளியில் பயணித்த மற்றுமொருவர் ஆகியோர் ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்ட பாடசாலை அதிபர் 39 அகவையுடைய ரமேஸ் கண்ணா எனவும் மற்றயவர் 31 அகவையுடைய சிவரூபன் எனவும் தெரியவருகிறது. pathivu
-
- 0 replies
- 546 views
-
-
"பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள். இன்று கரும்புலிகள் நாள்! தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் - இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள். கடந்த வருடம் கரும்புலிகள் நாள் நிகழ்வின்போது கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழீழத் தேசியத் தலைவர் எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள். தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர…
-
- 0 replies
- 583 views
-
-
தென் தமிழீழம் மட்டக்களப்பில் இன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்காச் சிங்களப் படைகளுக்குமிடையே நடந்த மோதலில் ஒரு சிங்களச் சிப்பாய் பலியாகி இருவர் காயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா சிங்கள அரசு கடந்த மாதம் அறிவித்த பின் நடந்த மோதல் சம்பவம் இதுவாகும். இச்சம்பவத்தில் காயமடைந்த போராளி ஒருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. SLA soldier killed in confrontaton with LTTE in Batticaloa A Sri Lanka Army (SLA) soldier was killed and two wounded in a clash that erupted at Kiraanku'lam in Batticaloa lagoon area in the early hours of Saturday, sources …
-
- 5 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், ஆனால் காவல்துறையினருக்கான அதிகாரத்தை வழங்கப் போவதில்லை எனவும் அண்மையில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் ஆனால் காவல்துறையினருக்கான அதிகாரத்தை வழங்கப் போவதில்லை எனவும் அண்மையில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதில் உள்ள காவல்துறையினருக்கான அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ர…
-
- 0 replies
- 394 views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெறவுள்ளதாக அந்நாட்டின் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வாட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெறவுள்ளனர். இது தொடர்பான கடிதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மகிந்தவின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் ஜெகத் அல்விஸ், இராணுவத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பிரிகேடியர் மகேஷ் சேனநாயக்க, 22 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜனக வல்கம, பிரிகேடியர் ஏ எல் ஆர் விஜயதுங்க, பிரிகேடியர் எச் எல் வீரதுங்க ஆகியோரே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெறவுள்ளன…
-
- 0 replies
- 482 views
-
-
இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும். அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார். முற்குறிப்பு: ஏராளமான கதைகள் உலவுகின்றன. என்னைப் பற்றியும் ஒரு கதை உலாவியது: 'மெளனம் சம்மதம்' என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு தகவல்களையும் ஒரு வேண்டுகோளையும் விடுத்து விட்டு முடிக்கின்றேன். தகவல் ஒன்று: சிவபெருமானே இறங்கி வந்தாலும் அவருடன் கருத்து வேறுபடுவதற்கும், எனது கருத்தை வெளியில் சொல்வதற்கும் எனக்கிருக்கும் உரிமையை அவர் நிராகரிக்க மாட்டார். தகவல் இரண்டு: தமிழ்ச்செல்வன் அண்ணனே எழுந்து வந்தா…
-
- 100 replies
- 10.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் இராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது. இதற்கு துணைபுரியும் வகையிலேயே http://www.ltteir.org என்ற இந்த இணையத்தளம் …
-
- 6 replies
- 3.2k views
-
-
ஈழத்தமிழர் மீதான இனவெறிதாக்குதலை நிறுத்தக்கோரி ஆந்திராவில் அரங்கக்கூட்டம் [படங்கள் இணைப்பு]ஈழத்தமிழர் மீதான இனவெறி தாக்குதலை நிறுத்தக்கோரியும், சம உரிமைகளை வழங்கக்கோரியும் இந்தியாவிலுள்ள ஆந்திரா மாநிலத்தில் EFLU பல்கலைக்கழக மாணவர்கள் , ஆந்திரபிரதேச மக்கள் சுதந்திர குழுவினர் இணைந்து அரங்கக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தியாவிலுள்ள ஆந்திரபிரதேசத்தில் இன்று(04.05.2009) மாலை 5 மணியளவில் EFLU பல்கலைக்கழக அரங்கத்தில் மாணவர்களால் அரங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, கிராந்தி சைதன்யா, பேராசியர் ஜாவித் ஆலம், சிபிசிஎல் கேசவன்…
-
- 0 replies
- 584 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்து சமுத்திர பிராந்தியம் மற்றும், உலகளாவிய அதிகாரத்தை பெறுவதில், இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை தமிழகர்கள் துரதிஷ்ட வசமாக சிக்கிக் கொண்டதாக பாகிஸ்தான் ஒப்சேவர்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழகர்களின் கசப்பான அனுபங்களுக்கும், அவர்களின் சுதந்திர முறியடிப்புக்கும், கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழன சுத்திகரிப்புக்கும் இந்தியாவும் சீனாவும் பொறுப்பு கூற வேண்டும் என அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சீனா, கடந்த 50 வருடகாலத்தில், சிங்கள அரசுக்கு ஒததுழைக்கும் நிலையான கொள்கையினை கொண்டுள்ளது. எனினும் இலங்கைத் தீவினுடான பொருளாதார சுயலாப நோக்கத்திலேயே இந்த ஒத்துழைப்புக் கொள்கை பேணப்பட்டு வருகிறது…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை சிறிலங்கா அரசு உலக வல்லரசுகளின் துணையோடு தோற்கடித்து விட்டது. இன்றைக்கு தமிழினம் தன்னுடைய தலைமையையும் படை வலிமையையும் இழந்து விடுதலைப் போரை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் நிற்கின்றது. தமிழீழப் போராட்டத்தை வேறு வடிவில் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தமிழினத்தை காலம் தள்ளிவிட்டிருக்கிறது. தனக்கு என்று ஒரு மொழியை, பண்பாட்டை, நிலப்பரப்பை கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகிய தமிழினம் ஒரு அரசை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருந்தது. அரசுக்கான கட்டமைப்புகளையும், முப்படையினரையும் கொண்டிருந்த தமிழீழத்தை சிங்களம் மீண்டும் ஆக்கிரமித்து விட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கின்ற வரலாறு இது. தமிழ் மன்னர்கள் தமது நிலத…
-
- 3 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகள் முழு இலங்கையும் கைப்பற்றுவதற்காக, அவர்கள் தயாரித்த வரைப்படங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. படையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்காது போனால், ஆறு மாத காலத்திற்குள் முழு இலங்கையையும் கைப்பற்றும் ரகசிய திட்டங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் வரைபடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்மையில் புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் மீட்கப்பட்ட ஆயுதங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையான உள்ள நகரங்களை உள்ளடக்கிய மாஸ்டர் பிளேன் என்ற திட்டம் தொடர்பான ஆவணமும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் திவயின கூறியுள்ளது. கெக்கிராவ பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் இ…
-
- 2 replies
- 2.5k views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள் பல மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதையடுத்து விழிப்படைந்திருக்கும் காவல்துறையினரும், புலனாய்வுத்துறையின் பிரிவுகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் இவை எங்கிருந்து வந்தன யாரால் ஒட்டப்பட்டன என்பதையிட்டு தீவிரமான விசாரணைகள் தொடங்கியிருப்பதாகவும் காவல்துறையுடன் தொடர்புடைய கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கின்ற அதேவேளையில் புலனாய்வு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான படைத்துறை பிரிவுகளின் அதிகாரிகளும் கடமையாற்றுகின்றனர். இந்த முகாம்களில் விடுதலைப…
-
- 5 replies
- 1.4k views
-
-
அவசரகாலச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை ரகசிய காவற்துறையினர் கைதுசெய்வதற்கான முனைப்புகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன் ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக சந்தர்ப்பம் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றும் அதனை அமைப்பின் ஏனைய தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருந்த தொடர்புகள், இலங்கையின் ச…
-
- 0 replies
- 778 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் புதிய பரமாணத்தை இலங்கை அரசாங்கம் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நவீன யுத்த தந்திரோபாயங்களில் புதிய அத்தியாயத்தை இலங்கை இராணுவம் உலகிற்கு வெளிக்காட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய ஆனந்த கல்லூரி பழைய மாணவர் கௌரவிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முழு உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு இன்று எமது படைவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக தோற்கடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத அமைப்பொன்றை வெற்றி கொள்வதற்கு சிறந்த தலைமைத்துவம் அவசியம், படைவீரர்கள் சரியான ம…
-
- 0 replies
- 631 views
-
-
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தி
-
- 0 replies
- 1k views
-
-
அசோசியேற்றற் பிறஸ் உடக நிறுவனத்தின் கொழும்பு பிரதான றவிநீஸ்மனின் ஊடக செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கடும் அதிர்ப்த்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. றவி நீஸ்மன் அண்மையில் இடம்பெயர்ந்த மக்கள் ‐ இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து எழுதிய கட்டுரை அரச உயர்மட்டத்தினரை குறிப்பாக மகிந்த சகோதரர்களை ஆத்திரமூட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் றவிநீஸ்மனை எதிர்வரும் ஒரு சில நாட்களில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு மகிந்த அரசாங்கம் பணித்துள்ளதாக குளோபல்தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. அத்துடன் அவருக்கான விசா நீடிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிய வருகிறது. எனினும் ஏ.பீ செய்தி நிறுவனமோ அல்லது அந்நிறுவனத்தின் கொழும்பு தலைமைய…
-
- 0 replies
- 787 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். மேலும் இரண்டு படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் உட்பட இருவர் இன்று வவுனியாவில் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 527 views
-
-
சிறிலங்காவுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் தமது நாட்டுக் குடிமக்களுக்கான கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியிருக்கின்ற போதிலும், அவர்களை வடபகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தொடர்ந்தும் எச்சரித்துள்ளது. சிறிலங்காவுக்கான பிரயாணங்களை மேற்கொள்வது தொடர்பில் தமது நாட்டின் அதிகாரபூர்வ அறிவித்தலை மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானியா நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. அந்த அறிவித்தலின் விபரம் வருமாறு: "சிறிலங்காவுக்கு பிரயாணம் மேற்கொள்வது தொடர்பில் வழங்கப்பட்டுவந்த ஆலோசனை அறிவித்தல்களில் விதித்திருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. யால தேசிய பூங்காவில் சிறுத்தைகளை அவதானித்தல், அறுகம்பை கடலில் நீர்ச் சறுக்கல் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் அல…
-
- 0 replies
- 495 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை ஒதுக்கி தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டிருப்பதாகத் தெரிகின்றது. கடந்த புதன்கிழமை மகிந்த கூட்டிய தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்குமான அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னரே இக்கோரிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் இறுதியிலேயே இக்கோரிக்கையை தான் மகிந்தவிடம் முன்வைத்ததாகத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா, இது தொடர்பாக மகிந்தவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதிகாரபூர்வமான கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்தார். புதினம்
-
- 0 replies
- 455 views
-
-
சிறிலங்காப் படையில் இருந்து தப்பிச் சென்றமைக்காகக் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் படையினருக்கும் உடனடியாகப் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
Sri Lankan Puppets in the Hands of Emerging Superpowers Richard Dixon We all wept when the Asian Tsunami took the lives of thousands When the Asian Tsunami struck the shores of Sri Lanka, more than thirty thousands died instantly. They stopped breathing in minutes after they were swept into the ocean. Their last chapters were very brief. News channels from major broadcasting networks were showing the horrors of tsunami twenty four hours a day, seven days a week. Media and Sports personalities appealed for aid. We packed gifts and took it to our churches and schools. Nations of the free world gave billions as aid to a country that still treats its Tamil minor…
-
- 5 replies
- 1.2k views
-