ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:46 PM பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 02:41 PM (எம்.மனோசித்ரா) மூலோபாய சுற்றுப்புற ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் , பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் கடற்படைய தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருடன் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுடனான சந்திப்பின் போது, குறித்த இந்திய தூதுக்குழுவின் ஏனைய செயற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைவதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
யாழில் பாடசாலை மாணவர் ஒருவர் மாவா போதை பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/270840
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 12:26 PM அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போ…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திரக்கூடாது என்று அதற்கெதிராக முழு முனைப்போடு சோனகர்கள் ஆர்ப்பட்டங்களை அவ்வப்போது முன்னெடுப்பது கண்கூடு. அப்படித்தான், தமிழர்களுக்கான 13 ம் திருத்தச்சட்டம் என்னும் மாயமான் மூலம் கிடைக்கப்பெறும் அதிகார பகிர்வுக்கு எதிராக முஸ்லிம்கள் இன்று கல்குடாவில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் போது பேசிய சோனகர் ஒருவர், 13ம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கிழக்கு மாகாணத்திற்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கக்கூடாது என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும் முழக்கமிட்டார். மேல…
-
- 10 replies
- 976 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 11:27 AM யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர். யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால், சந்தேகத்திற்கு…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 10:43 AM 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய எஸ்டிடி - எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதே கால…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (27) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில், சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் காய்ச்சல் இல்லாவிட்டாலும், அதிக உடல…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 10:31 AM நுண்ணுயிர் கொல்லி மருந்து ஏற்றப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. திங்கட்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரி உள்ளிட்ட ஏனைய மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இந்த மரணத்திற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தா…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 09:16 AM ( எம்.வை.எம்.சியாம்) நாட்டின் சுகாதார துறையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளது. இதே வேளை இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் முன்வைக்கவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து தட்ட…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
திருகோணமலையில் இந்தியா வசமாகும் பல நூறு ஏக்கர் காணிகள்! ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் சிக்கல் ColomboTrincomaleeSri LankaIndia 5 மணி நேரம் முன் Dhayani in சமூகம் திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், 35,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம் கொழும்பு மாவட்டத்தினை போன்ற ஒரு பிரதேசத்தினையே இவ்வாறு …
-
- 1 reply
- 386 views
-
-
”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வருகின்றது” மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை மன்னார், முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 541 views
-
-
இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் Published By: VISHNU 28 AUG, 2023 | 07:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பு நாடாகிய இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ள நாடு என்றவகையில் இலங்கை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்வதென்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர…
-
- 0 replies
- 239 views
-
-
யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடல் நீர் மிகவும் சுத்தமான நன்னீராக மாற்றப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள 70,000 குடும்பங்கள் அத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தாளையடி பிரதேசத்தில் புதிய திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 24 replies
- 1.5k views
- 2 followers
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:33 PM யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை திங்கட்கிழமை (28) பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து இரு இடங்களில் கொள்ளையிடப்பட்ட 28 பவுண் நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, வாள் ஒன்று மற்றும் நான்கு கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் அருட்தந்தையை கத்தி …
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:41 PM தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலையை அண்டியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளையும், குடியிருப்புக்காணிகளையும் வனவளத் திணைக்களம் மற்றும், தொல்லியல் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ளன. இந் நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்குமாறும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். அந்தவகையில் மக்கள் பிரதிநிதிகள், அரசஅதிகாரிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தண்ணிமுறிப்புப் பகுதிக்கு (28)இன்று விஜயம் மேற்கொண்டு காணிப் பிணக்குத் தொடர்பில் ஆ…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 AUG, 2023 | 08:38 PM (எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்) இந்தியா சந்திராயன் 1, 2, 3 ஆகியவற்றை சந்திரனுக்கு செலுத்துவதற்காக 263 அமெரிக்க டொலர் மில்லியன் செலவழித்திருக்கிறது. ஆனால் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 ஐ செலுத்துவதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலழிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவி…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் : சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார். ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில்; நண்பர்களுடன் நீராட சென்ற 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்றே நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முருகதாஸ் திலக்சன் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந…
-
- 0 replies
- 501 views
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 12:58 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை திங்கட்கிழமை (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளை தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட செயலாளரினால் அறி…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 01:31 PM இந்தியா அனுசரணை இன்றி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் மக்களின் தளபதி அமரர் அமிர்தலிங்கம் கருதியதால் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்றுக் கொண்டார் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கா. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்த தின நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமரர் அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு தலைமை …
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
காணிப்பிரச்சினைகளை ஈரோசால் தீர்க்கமுடியும்
-
- 6 replies
- 370 views
-
-
வந்தேறு குடிகள் சிங்களவர் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும்: சபா குகதாஸ் TamilsNorthern Province of Sri Lanka 8 மணி நேரம் முன் ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (27.08.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்ட பொய்களை முன் வைக்கும் சிங்கள இனவாதிகளே, உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது விஜயனுடைய …
-
- 0 replies
- 391 views
-
-
யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்! யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார நிவாரண உதவி திட்டத்தினூடாக 250 கர்ப்பிணி பெண்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்கூரஹல ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி அவர்களும் கலந்து கொண்ட…
-
- 55 replies
- 4k views
-
-
26 AUG, 2023 | 07:37 PM ஆர்.ராம் இலங்கைக்கும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுகின்றமையால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், இலங்கைக்குள் போர் மற்றும் ஆய்வுக் கப்பல்கள் விமானங்களின் வருகைகளின் போது வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்காக ‘நிலையான செயற்பாட்டுப் பொறிமுறை’ வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது…
-
- 3 replies
- 495 views
- 1 follower
-
-
25 AUG, 2023 | 07:00 PM அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து சுட்டிக்காட்டினார். அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்க…
-
- 3 replies
- 295 views
- 1 follower
-