Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செட்டிகுளம் பகுதியில் கள வைத்தியசாலை ஒன்றை அமைக்க ஐ.சி.ஆர்.சி நடவடிக்கை திகதி: 22.06.2009 // தமிழீழம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு தங்கியுள்ளவர்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஐ.சி.ஆர்.சியும் அந்தப் பகுதியில் கள வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எவ் என்ற பிரஞ்சு மருத்துவ தொண்டு நிறுவனத்தின் கள வைத்தியசாலை மற்றும் பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளின் கள வைத்தியசாலைகள் என்பன ஏற்கனவே இந்தப் பகுதியில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் செட்டிகுளத்தில் அரச மாவட்ட வைத்தியசாலை ஒன்றும், முகாம்களில் சுகாதாரத் திணைக்களத்தின் வைத்திய பிரிவுகளும் தடுத்து வைக்கப்பட்டு…

  2. அணு ஆலைகளை உருவாக்கி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக விஞ்ஞான தொழில்நுட்ப வள அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். அமைதியான நோக்கத்திற்காக அணு சக்தியைப் பயன்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆலை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளை விடவும் அணு ஆலைகளை உருவாக்குவதற்கு அதிக செலவு ஏற்படுகின்ற போதிலும் அனல் மின் நிலைய பராமரிப்புச் செலவுகளைவிட அணு ஆலைகளுக்கான பராமரிப்புச் செலவு குறைவானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனல் மின…

    • 2 replies
    • 967 views
  3. - இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் பொக்குளிப்பான் மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய தொற்று நோய்கள் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த முகாம்களில் 12 ஆயிரத்து 195 பேருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், 2139 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பரவியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  4. இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுடனான உறவுகளை துண்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய உதவி வழங்கும் நாடுகளது குழுவில் ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய இந்த புதிய சர்வதேச நாடுகள் குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. சமாதான முன்னெடுப்புக்களோ அல்லது யுத்தமோ நிலவாத சந்தர்ப்பத்தில் உதவி வழங்கும் நாடுகளது உறவு அவசியமில்லை என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, உதவி வழங்கும் நாடுகள் குழுவின் பணிகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அந்தத் தகவல் மேலும…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய தாக்குதல்களிலிருந்து கிராம மக்களையும், தம்மையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே கிழக்கு வாழ் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதாக மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களை களையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். பள்ளி வாசல் பேரவையின் ஊடாக ஆயுதங்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒப்படைக்குமாறு தாம் கிழக்கு இளைஞர்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வ…

  6. கடுமையான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய ஓர் நிலையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதவானுமான நிஷாங்க உதலாகம தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு எதிரான விசாரணைகள் மிகவும் முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைய செயற்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் போர்க் குற்றங்களில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக கடுயைமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்…

  7. யாழ்க்குடாநாட்டில் மீன் பிடிப்பதற்கென மீனவர்களுக்கென கடந்த 3 வருடங்களாக அமுலில் இருக்கும் பாஸ் நடைமுறைகளில் எந்தவிதமான தளர்வும் காட்டப்பட மாட்டாது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்க்குடாநாட்டில் 24 மணிநேர மீன்பிடி தொடர்பான அறிவித்தல் ஒன்றை அரசின் உயர் மட்டம் விடுத்திருந்த போதிலும் இன்று இது தொடர்பாக பல பகுதிகளிலும் உள்ள மீனவர்களை படைத்தரப்பு அழைத்து கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள பாஸ் நடைமுறைகளின் அடிப்படையிலேயெ மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டும் எனவும் படையினரின் தளங்கள் அமைந்திருக்கும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீன் பிடிக்க தொடர்ந்தும் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின…

  8. சித்திரம் பேசுது

    • 0 replies
    • 883 views
  9. இலங்கையின் தற்போதைய மனிதாபிமான நிலவரத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிவரவு நடவடிக்கையை கனடா தற்போது துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது. கனடிய குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருப்போர் மற்றும் இலங்கையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கொண்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் (கணவன் அல்லது மனைவி, பொதுவான சட்ட ரீதியான பங்காளிகள், பெற்றோர்கள், பாட்டன், பாட்டி, நிராதரவான குடும்ப உறுப்பினர்கள்) ஆகியோர் தற்போதைய மனிதாபிமான நிலவரத்தில் நேரடியாகவும் அல்லது குறிப்பிட்டத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் கனடா குடியுரிமை, குடிவரவு பிரிவுக்கு அறிவிக்க முடியும். இது தொடர்பான அறிவிப்பை கனடிய குடிவரவுப் பிரிவு கடந்த 3 ஆம் நாள் அறிவித்திருந்த…

    • 2 replies
    • 975 views
  10. 21/06/2009 தடுப்பு முகாம்களில் சின்னமுத்து மற்றும் ஈரல் வீக்கம் போன்ற தொற்று நோய்கள் பரவியுள்ளன நூறாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் உள்ள வவுனியா தடுப்பு முகாம்களில் சின்னமுத்து மற்றும் ஈரல் வீக்கம் போன்ற தொற்று நோய்கள் பரவியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சின்னமுத்து நோயால் அவதிப்படுகிறார்கள் எனவும், ஒரு நாளைக்கு 40 தொடக்கம் 50 பேர்களுக்கு சின்னமுத்து நோய் பரவிவருகிறது எனவும் அறியப்படுகிறது. ஜுன் 12ஆம் திகதி வரையில், 2,139 பேர் ஈரல் வீக்க நோய்க்கு உள்ளாகியிருந்தார்கள் என்று வவுனியா மருத்துவ செய்திகள் தெரிவிக்கின்றன. ஜுன் 16 வரையில், கிட்டத்தட்ட 2,85,018 இடம்பெயர்ந்த குடும்பங்களின் அங்கத்துவர்கள் பல …

  11. அரசு ஒன்றின் அடிப்படைப் பண்புகளாக நவீன அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் 5 முக்கிய பண்புகளை அடையாளம் காண்பிக்கின்றனர். அரசின் பண்புகளில் ஒன்றாகவே அரசாங்கம் கருதப்படுகிறது. அரசு என்றால் என்ன? என்பதற்கான தெளிவான வரைவிலக்கணம் அரசியல் விஞ்ஞான ஆவாளர்களினால் கூறப்படாவிட்டாலும்அரசியல் அறிஞர்கள் தாம் வாழ்ந்த அரசியல் கால சூழ்நிலைகளுக்கேற்ப இதுதான் அரசு என்று தமது கூற்றுக்களை காலாகாலமாக வெளியிட்டுவந்தனர். அவ்வாறு அரசு பற்றிய வரைவிலக்கணங்களை கூறியவர்களுள் அரசியல் அறிஞரான ரூசோவின் கருத்து பிரபல்யமிக்கது. அவர் அதிகாரங்களைப் பெற்ற ஒரு மையமே அரசு என்றார். அவ்வாறே அரசாங்கம் என்றால், அதிகாரங்களை அமுல்படுத்தும் ஒரு கருவியே அரசாங்கம் என அரசியல் ஆவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். …

  12. யூத வழியில் தமிழீழம் - பூங்குழலி 1939 - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர் களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு. அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர் களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்த னமான படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. இந்த தடுப்பு முகாம்கள்தான் - பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஹோலோகாஸ்ட் என்றால் "ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது" என…

    • 1 reply
    • 2.1k views
  13. நாடு கடந்த அரசாங்கம்! இலங்கை அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 யூன் 2009இ 12:38.42 Pஆ புஆவு +05:30 ஸ நாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மைஇ ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த "நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொல் அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது. "நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும…

    • 0 replies
    • 1.2k views
  14. மனச்சாட்சியற்ற சில இளைஞர்கள் இலங்கையில் இருந்து அகதியாக தமிழ் நாடு வந்திருக்கும் சில அப்பாவிப் பெண்களை ஏமாற்றுவதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2006 இல் விமானம் மூலம் தமிழ் நாடு வந்த இலங்கையைச் சேர்ந்த பிரியதர்சினி (27)(பெய்ர் மாற்றம்), செல்வராசா (27)(பெயர் மாற்றம்) ஆகியோர் திருச்சியில் தங்கியிருந்தனர். பிரிட்டன் செல்ல விரும்பிய செல்வராசா, பிரியதர்சினியை திருமணம் செய்வதாகவும் பிரிட்டன் சென்றதும் பிரியதர்சினியையும் அங்கேயே அழைத்துச் சென்று விடுவதாகவும் பொய் வாக்குக் கொடுத்துள்ளார். இதை நம்பிய பிரியதர்சினியின் பெற்றோரும் திருமணத்துக்குச் சம்மதித்து ஜனவரி, 2006 இல் சென்னை, ஆலப்பாக்கத்தில் இவர்களின் திருமணமும், திருமணப் பதிவும் நடந்துள்ளன. இதன்பின் 3 நாட்கள் மட்டுமே பிர…

  15. மேலும்...... http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=53

    • 12 replies
    • 2.6k views
  16. [21/06/2009, 15:31 மணி தமிழீழம் ] அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபர்களில், 25 பேர் இறந்துள்ளனர் யுத்தத்தாலும் மற்றும் தடுப்பு முகாம்களின் நிலமைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் வயோதிபர்களில், கடந்த ஒரு மாத காலத்துக்குள், 25 பேர் இறந்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது. இவர்கள், வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து பின்பு வவுனியா கோயில்குளம் சிவன் கோவில் நிர்வாகத்தால் நடாத்தப்படும் வயோதிபர் இல்லத்துக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருந்தார்கள். இன்னும் 2 இடம் பெயர்ந்த வயோதிபர்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என மாவட்டச் செயலகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வயோதிபர் இல்லத்தில் தற்போது உள்ளோரி…

  17. COLOMBO, Sri Lanka, June 20 (UPI) -- A United Nations agency says it is helping thousands of displaced Sri Lankan residents return to their village homes. The U.N. High Commissioner for Refugees said in a news release Friday it helped 2,231 people return to Sri Lankan villages June 6 in the wake of the defeat of Liberation Tigers of Tamil Eelam rebels. Many villages in northwestern Sri Lanka have been abandoned for years as a result of the rebel group's 25-year-long clash with government forces. "Most of the villages in this area were deserted. The only signs of life before the recent returns were soldiers or cattle left behind when people fled," Pathmanath…

  18. தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்…

    • 11 replies
    • 7.9k views
  19. 21/06/2009, 21:52 ] ததேகூ மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையதிட்டம் : கொழும்பு ஊடகம் வன்னி மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிவநாதன் கிசோர் உட்பட மூன்று ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஜவுடன் பேச்சுநடாத்தி அரசுடன் இணையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை முன்னரும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் அவர்கள் இவ்வாறு அரசுடன் இணையவுள்ளதாக செய்தி வெளிவந்தபோதும் இதனை மறுத்திருந்த நாhடாளுமன்ற உறுப்பினர் சிவநான் கிசோர் அவர்கள் தான் எந்தவொரு சந்தர்பத்திலும் விலைபோகமாட்டேன் எனவும் தம்ழ்தேசியத்திற்காக தான் ஒன்று பட்டு உழைப்பேன் எனவும் அறிக்கைவிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க…

  20. உலகக்கிண்ண இருபது/20 கிரிக்கட் போட்டிகளின் பெண்களுக்கான இறுதிப்போட்டி லண்டன் நேரம் 2 மணிக்கும், ஆண்களுக்கான இறுதிபோட்டி 4 மணிக்கும் இன்று நடைபெற உள்ளன. இதில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணியினர் பாகிஸ்தான் அணியினரை லோர்ட்ஸ் மைதானத்தில்(LORDS) எதிர்கொள்ள உள்ளனர். இந்தப் போட்டியைக் காண்பதற்கும் இலங்கை அணியினரை உற்சாகப்படுத்துவதற்கும் இலங்கை ஜனாதிபதி லண்டன் வந்துள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் சில வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து, அங்கே மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை லண்டன் வாழ் தமிழர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு லண்டன் வாழ் அனைத்து தமிழர்களினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் நிகழ்வு அமைப்பாளர்கள், அனைவரையும் காலம் தாழ்த்தா…

  21. ஞாயிற்றுக்கிழமை, 21, ஜூன் 2009 (16:45 IST) நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வர வேற்றார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர், ‘’மதிமுகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆன…

    • 1 reply
    • 1.2k views
  22. மேற்குலகத்தை சிறிலங்காவின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற வேண்டும்: மகிந்த ராஜபக்ச திகதி: 21.06.2009 // தமிழீழம் மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து சிறிலங்காவை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முனவர வேண்டும். இந்த நாடுகளை சிறிலங்காவின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற முடியும் என நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் பண்டைய காலத்தில் இருந்து பௌத்த துறவிகள் சிறிலங்காவின் வரலாற்றில் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பணிகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர். சங்கதி

    • 1 reply
    • 575 views
  23. ஞாயிற்றுக்கிழமை, 21, ஜூன் 2009 (8:48 IST) இந்திரா காந்தியை சீக்கியர்கள் படுகொலை செய்ததற்காக சீக்கிய இனத்தை அழித்தார்களா? கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றதால்தான் இன்று அவர்களுக்கு பேரழிவு ஏற்பட்டது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இதில் எந்த உண்மையும் இல்லை. இந்திரா காந்தியை சீக்கியர்கள் படுகொலை செய்ததற்காக சீக்கிய இனத்தை அழித்தார்களா? அதற்கு பிறகு தானே ஒரு சீக்கியரை பிரதமர் பதவியில் அமர வைத்து இருக்கிறார்கள். இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரா…

    • 4 replies
    • 834 views
  24. மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து சிறிலங்காவை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 841 views
  25. மட்டக்களப்பு பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து வீரகேசரி இணையம் 6/21/2009 11:20:43 AM - வடக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் இம் மாதச் சம்பளப்பட்டியலில் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து. எவ்வித காரணமோ, முன்னறிவித்தலோ,சம்மதமோ இன்றி தங்களுடைய சம்பளப் பட்டியலில் அதிகாரிகளினால் தன்னிச்சையாக ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டிருப்பது குறித்து அதிர்பர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு தமது அதிருப்தியையும் வெளிப்ப…

    • 2 replies
    • 602 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.