Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 11:25 AM அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம் பெறுகின்றனவா என முன்னாள் இராணுவ பிரதானி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 13வது திருத்தத்திற்கு எதிரான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை இதனைத் தெரிவித்துள்ள அவர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கில் தனிநாடு உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாடு பிளவுபடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதனை அவசரமாக எதிர்க்கவேண்டிய தேவை உள்ளதாக தான் உணர்ந்ததாக ஜகத் டயஸ் குறிப்பிட்டுள்ள…

  2. 14 AUG, 2023 | 04:49 AM (எம்.ஆர்.எம்.வசீம்) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள இருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையி்ல், நிகழ்காலத்துக்கு ஏற்றவகையில் கல்வித்துறையைில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தற்போது இருக்கும் கல்வி நடவ…

  3. 13 AUG, 2023 | 02:50 PM வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வட பகுதியில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது. இருப்பினும் 90 விகிதத்துக்கு மேலான மருந்துகள் அதாவது முக்கியமான நோய்களுக்குறிய மருந்துகள் இருக்கின்றன. திடீரென ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்ற போது நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றார…

  4. சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெரியப்பா – யாழில் சம்பவம் தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன…

  5. மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை பிரித்தானிய பிரஜை ஒருவர் சிறிய சிறிபாத மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார். இன்று (13) காலை பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=176421

    • 0 replies
    • 612 views
  6. Published By: NANTHINI 13 AUG, 2023 | 11:08 AM யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகம் செய்து வந்த 25 வயதான சந்தேக நபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு அல்லைப்பிட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்கு உள வள சிகிச்சை வழங்கப்பட்டபோது, அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்ப் பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டார். அந்த இளைஞர் தான் உட்பட ஐந்து சிறுமிகள…

  7. Published By: NANTHINI 13 AUG, 2023 | 01:37 PM தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகில் இன்று (13) இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற கன ரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யாழ். இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவரே உயிரிழந்துள்ளார். அவர் சாவகச்சேரி, கண்டுவில் வீதியைச் சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவ…

  8. வடக்கில் நாளை திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் adminAugust 13, 2023 வடமாகாணத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார கால பகுதிக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எமது பகுதிகளில் டெங்கின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் எதிர்வரும் மாதங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே டெங்கின் தாக்கம் அதிகரிக்க கூடும்.டெங்கு ஒழிப்பு தொடர்பில் வடமகாணத்தில் கலந்துரையாடல்கள் ஆளுநர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அந்த கலந…

  9. போதைக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் விசேட சிகிச்சை நிலையம் adminAugust 13, 2023 வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது.. கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும் போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இருப்பி…

  10. ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி – ஜனாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்ட அதேவேளை இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடு…

  11. Published By: NANTHINI 13 AUG, 2023 | 10:22 AM திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் முல்லைத்தீவு - கள்ளப்பாட்டில் வைத்து கைது செய்துள்ளனர். விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால் விசுவமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து, நேற்று (12) முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இளைஞரை தடுப்புக்…

  12. உளநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக உளநல மருத்துவர்களை சந்திப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பொருளாதார அழுத்தம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவை இந்த பெரும்பாலான மன அழுத்த சூழ்நிலைகளுக்கான முக்கிய காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, இளைஞர்களின் நம்பிக்கை வீழ்ச்சி, எதிர்மறையான நிச்சயமற்ற மனநிலை, பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பணம் தேடும் முயற்சியில் தோல்வி என்பன இந்த மன அழுத்தத்தின் பிரதான காரணங்கள் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ரூமி ர…

  13. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2023 | 08:23 PM மட்டக்களப்பு வாகரையில் கடந்த வியாழக்கிழமை (10) பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து, காணாமல்போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11) பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு, இது தொடர்பில் 17 வயதான இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய 4 சிறுமிகள் கடந்த வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வ…

  14. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2023 | 08:29 PM இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 55 பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக் காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால் வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும் கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன்…

  15. பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள் பாறுக் ஷிஹான் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை …

    • 6 replies
    • 712 views
  16. மலையக மக்கள் பிரதிநிதிகள் வரட்டு கௌரவத்தை விட வேண்டும்! " மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார். எனவே, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வரட்டு கௌரவத்தை விட்டு விட்டு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் மாற்றமொன்று வரும்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (11) ஜனாதிபதி செயல…

    • 0 replies
    • 274 views
  17. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் இதுராகாரே தம்மரத்தன தேரர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். …

    • 2 replies
    • 482 views
  18. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்! மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் நடவடிக்கை! written by adminAugust 12, 2023 திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலை…

  19. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்குவதற்கு மொஸ்கோ தீர்மானம் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA) இணைந்து வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு மேலும் 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக Nizhny Novgorod இல் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும்,, பல தொழில்நுட்ப வகைகளின் கீழ், ரஷ்…

  20. Published By: RAJEEBAN 12 AUG, 2023 | 07:46 AM கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது, எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனத…

  21. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் PET ஸ்கேன் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. PET ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மருந்தினை விநியோகிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அசமந்தம் காட்டுவதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துளார். அந்த மருந்தினை விநியோகிப்பதற்கு விலைமனு கோரல் மூலம் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போதிலும், அந்நிறுவனம் மருந்தினை இதுவரை வழங்காதுள்ளது. தற்போது இலங்கையில் தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் மாத்திரமே PET ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹரகம வைத்தியசாலையில் PET ஸ்கேன் சோத…

  22. Published By: VISHNU 11 AUG, 2023 | 05:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப…

  23. Published By: DIGITAL DESK 3 11 AUG, 2023 | 04:38 PM (எம்.வை.எம்.சியாம்) அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி 6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மூலம் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரிடம் நபர் ஒருவர் 6,271,000 ரூபா பண மோசடி செய்துள்ளதாக கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு பிர…

  24. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெய்யிலுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் அதிக வறட்சி நிலமையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளன. குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படாத கிராமப்பபுறங்களில் மக்கள் குடிநீருக்காக அதிகளவு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 14 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3 பௌஸர்கள் மூலம் தினமும் 20,000 லீற்றர் குடிநீர் மக்களுக்கு வழங்கி வருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை நிருவாகம் தெரிவிக்கின்றது. அனர்த்த முகாமைத்துவ நி…

  25. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்பட்டதாக தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தாதே, கற்பிக்க வந்த இடத்தில் கள்ளத்தனம் எதற்கு, பாடசாலைக்குள் நடப்பது பாடத்திட்டமா அல்லது படப்பிடிப்பா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர். இதனையடுத்து,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.