Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார். இதேவேளை, சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதியின் சோதனை புத்தகத்தை அறிமுகப்படுத்தவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 218 பஸ் விபத்துக்கள் இந்த வருடத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக எரந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/267075

  2. 06 AUG, 2023 | 10:45 AM முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில், தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நானும் அவ்விடத்துக்கு கள விஜயம் செய்தபோது இராணுவத்தினர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. …

  3. Published By: NANTHINI 06 AUG, 2023 | 10:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பலதரப்பட்ட கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்த நிலையில், கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளுக்கும் உறுதியளித்துள்ளார். கப்பல் கட்டுமான துறையில் உலகில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இலங்கை ஒரு தீவு நாடென்ற வகையில் கப்பல் கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார ரீதியில் நன்மைகள் கிடைக்கப்ப…

  4. மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன கடந்த 21ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாது என தெரிவித்துள்ளார். மின்சார சபைக்கான வருமானத்தை 3,300 கோடி ரூபாவால் அதிகரிக்கும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பு அமுலாக வேண்டுமென மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் மின் கட்டணம் அதிகரி…

  5. 05 AUG, 2023 | 08:09 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய கடன் உதவியின் கீழ் எமக்கு 237 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றது. அதற்கமைவாக இதுவரையில் 207 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளோம். இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கான மருந்துகளில் ஒரு மருந்து தரமற்றதாக இருக்கலாம். இருப்பினும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டில் சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடி மற்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு…

  6. இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்! இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் வலியுறுத்துகிறது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிடுகின்றார். எனினும், அந்த முட்டைகளை பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். லங்கா சதொச ஊடாக தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். அடுத்த வாரத்திற்குள் அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயா…

    • 0 replies
    • 320 views
  7. வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்கும் செயல்! இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அவர் மதிக்கத் தயார் இல்லை என்பதையே காட்டுகின்றது என தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தரப்பினருக்கு இந்த செயற்பாடு நன்றாகவே தெரியும் எனினும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வாய்ப்பை இல்லாமல் செய்து சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்ற செயலாகவே இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள…

    • 0 replies
    • 279 views
  8. 05 AUG, 2023 | 12:50 PM புத்தளம் அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 30ற்கும் அதிகமான யானைகள் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை சஞ்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியால் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சஞ்சரிக்கும் அரிய வகைக் காட்சியை பார்வையிட்டனர். குறித்த காட்டு யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில் செல்வதற்கு மிகவும் அச்சத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது அச்சம் தெரிவிக்கின்றமை குறிப…

  9. Published By: DIGITAL DESK 3 05 AUG, 2023 | 11:43 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது பிரதமர் மோடி 13 தொடர்பில் கூறியது அவருக்கு நன்கு விளங்கியிருக்கும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவரது உரை எவ்வாறு இருக்கும் என ஊடகவியலாளர் விக்னேஸ்வரனிடம் கேள்…

  10. நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும் இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். (a) Tamilmirror Online || இன்சுலின் இல்லை

  11. முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இடம்பெற்று அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. …

  12. முல்லைத்தீவு பஸ் நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அதனை, இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று வியாழக்கிழமை (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் நீண்ட நேர விவாதம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன் தெரிவிக்கையில், தனியார் பஸ் சங்கத்தினால் கூறப்பட்ட ஏற்பாடுகள் பிரதேச சபையினால் 100 வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வேறுவிதமான பிரச்சினையை கூறுகிறார்கள். முள்ளிவாய்க்காலால் பஸ் வரும் என்றால் பஸ்…

  13. 1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று சென்று பார்வையிட்டார். https://thinakkural.lk/article/266876

  14. கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க மற்றும் CT ஸ்கேன் பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 400 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது செயலிழந்துள்ள CT, PET, MR ஸ்கேன் இயந்திரங்களை திருத்தும் பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். “கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை உடன…

  15. Published By: VISHNU 04 AUG, 2023 | 12:37 PM மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் த…

  16. தீவகம் முழுவதையும் ஒரு அதிகாரசபைக்குள் உட்படுத்தி கொழு்பில் இருந்து கட்டுப்படுத்த முயற்சி? adminAugust 4, 2023 இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அவர் மதிக்கத் தயார் இல்லை என்பதையே காட்டுகின்றது என தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தரப்பினருக்கு இந்த செயற்பாடு நன்றாகவே தெரியும் எனினும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வாய்ப்பை இல்லாம் செய்து சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவி…

    • 2 replies
    • 546 views
  17. Published By: DIGITAL DESK 3 04 AUG, 2023 | 11:28 AM அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் குருணாகலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம் உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார். இதன்போது, அவருடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுப்பட்ட இளைஞன் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றார். பின்ன…

  18. கிளிநொச்சியில் தீ விபத்து : தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியது! கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையில் தும்பு தொழிற்சாலை தொழில் நடவடிக்கை இடம்பெறாத நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயினை,கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள், இடர் முகாமைத்துவக் குழுவினர், கிளிநொச்சி தீயணைப்பு பிரிவினரின் உதவி…

  19. 03 AUG, 2023 | 04:56 PM பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மடு திருத்தல ஆவணி திருவிழாவில் ஏழு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மடு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (28) மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் திருவிழா தொடர்பில் குறிப்பிட்…

  20. பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் ஊடாக முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறுவர் அபிவிருத்த…

  21. 03 AUG, 2023 | 04:43 PM கிளிநொச்சி - பூநகரி பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் இன்று (03) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மக்கள் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் தொழிற்சாலைக்கான கல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான முதற்கட்ட தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். 'விவசாய நிலங்களை அழிக்காதே', 'ஏழை மக்களின் வ…

  22. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 05:15 PM திருமணத்திற்கு பெண் பார்க்கச் சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார். இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளி…

  23. மின் கட்டண நிலுவையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு : இருளில் மூழ்கியது மிஹிந்தலை மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின் பொறியியலாளர் சமுத்திரநாத ஜயவர்தன இனை உறுதிப்படுத்தினார். மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் தூபி நிர்மாணம் போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த வேளையிலேயே இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி பூஜ்ய வளவ ஹங்குனவே தம்மரதன தேரர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1343140

  24. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 04:45 PM யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். இந்நிலையில், மாணவி இன்று வியாழக்கிழமை (03) காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில்…

  25. சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்! adminAugust 3, 2023 யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து புத்தர் சிலைகளை நிறுவி , முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பிக்குகள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.