ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி மனிதப் பேரவலத்திற்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் அமைப்புக்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
Nimalka Fernando மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர். கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல.. சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல், மனித…
-
- 10 replies
- 1.9k views
-
-
உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் : பிரான்ஸ் வீரகேசரி இணையம் 2/6/2009 10:29:27 AM - இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத் தீர்வினை எட்ட முடியும் என பிரான்ஸ் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து நாட்டின் அனைத்து குடிமக்களது உரிமைகளையும் பேணும் வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பெருந்தொகையாக சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எ…
-
- 0 replies
- 611 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியதனால் அலுவலக கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டதுடன் அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
வன்னியில் ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 2ம்திகதி வரையான காலப்பகுதிக்குள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களினாலும் 733 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான ஆதாரங்கள் புள்ளிவிபரங்கள் எம்மிடம் உள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் புலிகள் என்று கூறிவருவது கடைந்தெடுத்த பொய்ய…
-
- 0 replies
- 578 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையின் விளைவான உள்நாட்டுப் போர் மிக மோசமான கட்டத்தை அடைந்து. சிவிலியன்கள் பெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்படும் பேரவலம் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் இணைத்தலைமைகள் என்று தம்மை வர்ணித்துக்கொள்ளும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை ஒன்றிணைந்து விடுத்திருக்கும் ஒரு கூட்டறிக்கை பலத்த வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பியிருக்கின்றது. குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர் வாழும் தேசங்களில் இந்த நான்கு நாடுகளுக்கும் எதிரான உணர்வலைகளை இந்த அறிக்கை கிளப்பி விட்டிருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் ஒரே வழி என்று கூறிக்கொள்ளும் சர்வதேசம், மறுபுறத்தில் மேற்படி அறிக்கை மூலம், இராணுவத் தீர்வில…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இனவெறிக் கொடூரத்தை கண்டித்தும் ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்க அனைத்துலக சமூகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் நேற்று அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்" "எமக்கு தேவை சமாதானம் மட்டுமே" "மக்களை மக்களாக நடத்துங்கள்" என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணி அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளனர். கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உண்ணாவிரதம் நடை பெறுகின்ற இடத்திற்கு வருகை தந்து, எங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்தி எமது ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என சுதந்திர மாணவர் முன்னணியினர் அறிவித்துள்ளனர். சர்வதேச சமுகத்தில் உள்ள அனைத்து தமிழ்மக்களினதும் ஆதரவையும் எதிர்பார்த்து காத…
-
- 0 replies
- 980 views
-
-
யுத்த குற்றங்கள் மற்றறொரு தரப்பின் யுத்த குற்றங்களினால் மூடி மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது வன்னிப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்பெயர தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்த பிரதேச மக்கள் சுதந்திரமாக இடம்பெயர எவ்வித தடையும் இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்த போதிலும், யதார்த்தத்தில் அவ்வாறான சுதந்திரம் காணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களது உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முன்னெடுப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு …
-
- 1 reply
- 785 views
-
-
ஈழத்தமிழர் அவலத்திற்கு அதிமுக மௌனம் தொண்டர் ஆவேசம் ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றுக் கூறி அ.தி.மு.க கரை வேட்டியை தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக தொண்டர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 40. அ.தி.மு.க தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (50) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அ.தி.மு.க கட்சி வேட்டியை அவிழ்த்து …
-
- 3 replies
- 1.5k views
-
-
சண்டையை நிறுத்த இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியா கோரிக்கை டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படு…
-
- 5 replies
- 2.3k views
-
-
EU passes resolution on Sri Lanka Civilians caught in deadly crossfire between the Sri Lankan Government and LTTE, the persecution of the Rohingya people of Burma, and the refusal to extradite convicted murderer Cesare Battisti by the Brazilian authorities, were the subjects of three resolutions on democracy and human rights adopted at the end of this week's EU Parliament plenary session today. The resolution on Sri Lanka said the capture of rebel strongholds by the Sri Lankan army "may constitute a turning point in the crisis" and could pave the way for peace and stability, but warns that a political solution needs to be found and the humanitarian crisis ad…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை இனப்படுகொலை; இந்தியாவும் குற்றவாளியா? : அமெரிக்க முன்னாள் அமைச்சு செயலர்கள் அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள். இதுபற்றிக் கூட்டாக அறிக்கையொன்றை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ”தேச எல்லைகள் என்பவை சர்வதேசப்…
-
- 5 replies
- 1.1k views
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3 தினமலரில் வந்துள்ள செய்தி. புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ: அவரது மின்னஞ்சல் முகவரி. cmcell@tn.gov.in ***
-
- 7 replies
- 2.5k views
-
-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் இலங்கை செல்கிறார். அப்போது மீண்டும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் இலங்கை சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கை செல்கிறார். பிரணாப் இலங்கை சென்று வந்த இரண்டு தினங்களில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.நிரந்தர போர் நிறுத்தம் கோரி தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை மீண்டும் வலியுறூத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்…
-
- 3 replies
- 1.4k views
-
-
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றையே இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை திணிப்பதற்கு அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ முற்படக் கூடாது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவ்வாறு திணிக்க முயற்சித்தால் போராட்டம் தொடரும் எனக் கூறினார். “வன்னியில் தொடரும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களால் ஒரு வாரத்தில் 733 பேர் கொல்லப்பட்டதுடன், 2615 பேர் காயமடைந்துள்ளனர்” என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என அரசாங்கம் கூ…
-
- 3 replies
- 909 views
-
-
-
எமெர்ஜன்சி திட்டம் இலங்கையின் இறுதி ஆயுதம் -------------------------------------------------------------------------------- கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த தாக்குதல் களைக் கண்டித்துஇ உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன. ஆனால்இ இதற்கெல்லாம் கொஞ்ச மும் செவிசாய்க்காத சிங்கள அரசோஇ 4-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகுஇ போர் நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக ராஜபக்ஷே…
-
- 11 replies
- 2.1k views
-
-
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (05.02.2009) மாலை சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. ஈழத்தமிழர்களை காக்க நடைபெறும் கறுப்புக்கொடி ஊர்வலத்தின் போது ஆதரவாளர்கள் எடுக்கவேண்டிய சூளுரைகளை இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டார். வரும் 7ஆம் தேதி இவ்வியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருப்புக்கொடி பேரணியில் கீழ் காணும் 5 சூளுரைகளையும் எடுக்க வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார். 1. இலங்கை சிங்கள அரசின் கொலைவெறி ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் விளிம்பில் துடிக்கிற நமது தொப்புள் கொடி உறவுகளை, ஈழத்தமிழ்மக்களை பாதுகாக்க வீறு கொண்டு எழுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம். …
-
- 1 reply
- 871 views
-
-
சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும
-
- 25 replies
- 3.2k views
- 1 follower
-
-
-
இலங்கை அரசால் தமிழ் மக்களின் மேல் பாவிக்கப்படும் கொத்தணி குண்டு பற்றி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் கண்டனம் Use of Cluster Bombs by Sri lanka Government on innocent Wanni Tamil civilian condemed by UK MPs
-
- 0 replies
- 867 views
-
-
திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு - பாகம் 1 (காணொளி) திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2 (காணொளி) நன்றி குமுதம்
-
- 0 replies
- 685 views
-