Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: RAJEEBAN 23 JUN, 2023 | 11:16 AM விசேட மருத்துவநிபுணர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்துள்ளதாலும் ஏனைய சிலரை சர்வதேச பல்கலைகழகங்கள் உள்வாங்குவதாலும் இலங்கையின்சுகாதார துறை நெருக்கடிகளை எதிர்கொள்ளநேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை சமீபத்தில் வைத்தியர்களின் ஓய்வுவயது எல்லையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் இதற்கு காரணமாக உள்ளது எனவும் கருத்துக்கள்வெளியாகியுள்ளன. 2024 இல் நாட்டிற்கு 4229 விசேட வைத்திய நிபுணர்கள் தேவை என சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது எனினும் இடமாற்றம் அடிப்படையிலான புள்ளிவிபரங்கள் 750 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவேண்டியுள்ளதை புலப்படுத்தியுள்ளன. இருதயநோய் நிபுணர்…

  2. மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது ஏன் என்பது வங்கித் தலைவர்களுக்குக் கூட தெரியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர். மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும். இது உள்நாட்டுக் கடனைக் குறைக்கச் செல்வதை வ…

  3. 28 JUN, 2023 | 11:02 AM கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற வீதியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/158747

  4. இணைய விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த யாழ். இளைஞன் Posted on June 29, 2023 by தென்னவள் 8 0 இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் இளைஞன் தொடர்பு கொண்ட போது , மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதம…

  5. Published By: VISHNU 29 JUN, 2023 | 04:30 PM யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின் தெரிவித்தார். உலக வாங்கியால் வெளியிடப்பட்ட கடல் அட்ட பண்ணை தொடர்பில் கடத்தொழில் சங்கங்களுக்கு விழிப்புணர் கூட்டம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள ஆழம் குறைந்த கடற்கரைகளில் எவ்வித பரந்துபட்ட ஆய்வுகளும் திட்ட மிடல்களும் இன்றி க…

  6. கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்க விசா மறுப்பு Posted on June 28, 2023 by தென்னவள் 5 0 அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த ஈழ கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என கவலை தெரிவித்திருக்கிறார். நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் கவிஞர் தீபச்செல்வன். அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகி…

  7. விபத்தில் சிக்கிய விஜயகலா உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் எவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://…

  8. Published By: VISHNU 29 JUN, 2023 | 03:53 PM விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலை பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில் அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர…

  9. திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்றிரவு 8.20 மணிக்குப் புறப்பட்ட விமானமொன்று தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரண்டரை மணிநேரத்தில் மீண்டும் இலங்கையை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-455 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 301 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வேறொரு விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ht…

  10. 28 JUN, 2023 | 02:53 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கட்டாமுரி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவன் தனது சகோதரர் மற்றும் இரண்டு மைத்துனர்களுடன் வேட்டையாடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/158776

  11. விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளது. திட்டமிடப்பட்ட குத்தகைக் காலாவதியால் விமானப் பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கணித்திருந்தது, எனினும், எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைமை மோசமடைந்தது. உள்நாட்டில் உதிரிப்பாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. அ…

  12. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மக்களுக்கு பாதிப்பு இல்லை : ஜனாதிபதி! உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மீதியும் பாதிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொது நிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பை ஏற்படாது. கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்திலும் எவ்வித பாதிப்பு…

  13. ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்? இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பி உள்ளார். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை…

  14. 28 JUN, 2023 | 10:46 AM விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய சுமார் 6 இலட்சம் பேரின் உடல் தகுதிக்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்காததால் இதுவரை சாரதி உரிமம் பெற முடியவில்லை. எனவே, வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன், அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்க…

  15. 24 JUN, 2023 | 11:15 AM தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த வாகனங்களின் பெறுமதியையும் நிர்ணயிக்க முடியாதுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்ட…

  16. Published By: RAJEEBAN 27 JUN, 2023 | 11:59 AM இலங்கை கடந்த இரண்டு தசாப்த காலமாக புவிசார் அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சீனாவின் அரச தொலைக்காட்சியான சிஜிடிஎன்னிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்த இலங்கையின் ஆர்வம் குறித்து நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியிலான உறவுகளை மீள ஆரம்பிக்கவேண்டிய தருணம் இது என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அரசியல் கட்சிகள் அரசாங்கங்கள் மத்தியிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் மாத்திரமல்லாமல் பொதுமக்கள…

  17. மத நல்லிணக்கம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குழுவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத போதனைகளை அவதூறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1336428

    • 1 reply
    • 149 views
  18. இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் -ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘பிரான்ஸ் 24’ இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக குறித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில். “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஊகங்கள் நிலவுகின்றன. சீன வர்த்தகர்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்கு கடற்படை கட்டளை அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும். ஹம்பாந்தோட்டை மற்…

    • 2 replies
    • 166 views
  19. அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி! வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விஜயத்தின் போது பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். வேறுபட்ட தரப்பினருடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடன் மறுசீரமைப்பு திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும், வார இறுத…

    • 1 reply
    • 210 views
  20. Published By: RAJEEBAN 27 JUN, 2023 | 10:51 AM யுத்தகுற்றச்சாட்டுகள் எவற்றையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கலாம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யுத்தகாலத்தில் அவரின் நடவடிக்;கைகளிற்காக விசாரணைசெய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி எந்த குற்றச்சாட்டுகளையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கவேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். எவரும் ஆணைக்குழு முன்னிலையி;ல் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர…

  21. 27 JUN, 2023 | 02:21 PM (நா.தனுஜா) இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமா…

  22. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2023 | 11:35 AM யாழ். சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் யாழ்.காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதர்ஷன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது மற்றும…

  23. சுகாதார அமைச்சிலிருந்து காணாமல் போன வாகனங்கள்? சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்கள் 1950 மற்றும் 1996 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டவை என பொதுக் கணக்குகள் தொடர்பான நாடளுமன்றக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்றும் இந்த வாகனங்கள் தொடர்பான வருவாய் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1115 மோட்டார் சைக்கிள்களில் பதினொரு மோட்டார் சைக்கிள்கள் பற்றிய த…

  24. Published By: RAJEEBAN 27 JUN, 2023 | 07:07 AM பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பு சென்று அவரை சந்தித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி வந்திருந்தபோது கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது …

  25. ராஜபக்ஷர்களால் மாத்திரமே நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் - பொதுஜன பெரமுன Published By: VISHNU 25 JUN, 2023 | 08:04 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது ஜனாதிபதி வேட்பாளரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம். நாட்டின் ஒருமைப்பாட்டை ராஜபக்ஷர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கலாவெவபகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …

    • 1 reply
    • 410 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.