Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 393 views
  2. கடந்த 11 மாதங்களில் இலங்கை இராணுவ முகாமில் இருந்து 11,000 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்ற செய்திவெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த வருடத்தில் 38,000 பேரை படையில் சேர்த்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் இந்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான 11 மாத காலப்பகுதியில் 11,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். அரசு மேற்கொண்டு வரும் பெரும் எடுப்பிலான பிரச்சாரங்களை தொடர்ந்தே அதிகளவான இளைஞர்கள் படைகளில் இணைந்து வருகின்றனர். படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவர்களின் ஆயுத தேவைகளையும…

  3. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து இடம்பெற்ற தேடுதலில் 65 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 453 views
  4. முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்களும் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 892 views
  5. சிறிலங்காவுக்கு பாகிஸ்தானிடமிருந்து மாதத்துக்கு மூன்று முறை இராணுவத்தளபாடங்கள் - சிவாஜி திங்கள், 29 டிசம்பர் 2008, 12:42 மணி தமிழீழம் [செயதியாளர் மயூரன் ] பாகிஸ்தானில் இருந்து மாதத்துக்கு மூன்று முறை கப்பலில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இலங்கைக்கு வருவதாக த.தே.கூ பா.உ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தேவையான வெடிகுண்டுகளும், வெடிமருந்துகளும் பாகிஸ்தானில் இருந்துதான் வருகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றது'' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் குரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகம். ராஜபக்சவின்சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்…

  6. சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 688 views
  7. ஆட்களே இல்லாத கிளிநொச்சியில் திடீரென முளைத்த ஒன்றரை லட்சம் பேர்! [29 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:55 மு.ப இலங்கை] ‘ஆட இயலாதவன் மேடை சரியில்லை என்றானாம்!’ - எனக் கூறுவார்கள். கிளிநொச்சியைப் பிடிக்கும் மூர்க்கத்தில் இருக்கும் இலங்கை அரசுத் தரப்பும் அது தாமதமாவதன் காரணமாக - தமது இயலாமை காரணமாக - அப்படித்தான் விளக்கம், வியாக்கியானம் கூறுகின்றது போலும். கடந்த செப்டெம்பரில் தமது அலரிமாளிகை இல்லத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதத்தில் அரசுப் படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடும் எனத் தாம் எதிர்பார்க்கின்றார் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் மிச்சம் இருக்க…

  8. கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையிலிருந்து மட்டக்களப்பில் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவு

  9. மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்த்தை தெரிவிக்கும் சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு சமர் ஆய்வுப் பிரிவின் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  10. கிளிநொச்சி மோதலில் சிங்கள ராணுவத்தின் மேஜர் ஜெனரல் பலி ! கிளிநொச்சி மோதலில் சிறிலங்காவின் மேஜர் ஜெனரல் தர உயரதிகாரி பலி திகதி: 28.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளிநொச்சியில் கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முன்னேற்ற நகர்வின்போது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் பலியான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. நரன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லசந்த மகேஷ்குமார என்ற அதிகாரியே இந்த மோதலின் போது பலியாகியுள்ளார். இவரது இறுதி நிகழ்வுகள் இராணுவ மரியாதையுடன் நேற்று ராகமவில் இடம்பெற்றுள்ளது நன்றி சங்கதி.

    • 4 replies
    • 4.6k views
  11. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட நிஷா சூறாவளித் தாக்கத்திற்கான நட்டஈடு பெறும் நோக்கில் வகுப்பறைகளை ‘புல்டோசர்’ கொண்டு இடித்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் காரைநகரில் நடைபெற்றுள்ளது. காரைநகர் டாக்டர் தியாகராஜா பாடசாலையின் அதிபரும், கல்லூரி நிர்வாகசபையின் செயலாளருமே இவ்வாறு நடந்துகொண்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம் அமைக்கும் நோக்கில் வகுப்பறைகளை புல்டோசர் கருவியைக் கொண்டு உடைத்துவிட்டு, நிஷா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கும் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சித்ததாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பகம் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதுட…

  12. 01.'பயங்கரவாதம் கிலோ என்ன விலை? மும்பைத்தாக்குதலை முன்வைத்து ஒரு விலை நிர்ணயம்" என்றுதான் உண்மையிலேயே இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு 'பயங்கரவாதம்" பெரும் சந்தைப் பொருளாக மாற்றம் கண்டு வருகிறது. செப்டம்பர் 11 நியூயோர்;க்கில் நடந்த தாக்குதலுடன் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த வியாபாரம் அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலுடன் மேற்படி மாற்றத்தை அடைந்துள்ளதாகவே படுகிறது. ஏனெனில் இத்தாக்குதல் நடந்ததிலிருந்து இந்திய அதிகார வர்க்கத்தை தாங்கிப் பிடிக்கும் ஊடகங்கள் இப்புற நிலையை உருவாக்க பெரும் பாடுபடுகின்றன. ஆனால் மும்பைத்தாக்குதல் உலக அளவில் உடனடியாக சில எதிர்வினைகளை தோற்றுவித்த போதும் ஒரு சில நாட்களிலேயே அது பெரிய வட்டத்திலிருந்து ஒரு புள்ளியாகத் தேய…

  13. யாழ்குடாவில் மூடப்படும் படை முகாம்கள் திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவம் களமுனையில் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் யாழ்குடாவில் இருந்து படையினரை மீளப்பெற்று வன்னிக்கு அனுப்பி வருகின்றது. அண்மையில் அராலி, பருத்தித்துறை, அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இருந்து முகாம்களை மூடி படையினரை வன்னிக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் வலிகாமம் சண்டிலிப்பாய் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான படைமுகாம் நேற்று நள்ளிரவுடன் மூடப்பட்டு, தற்போது அப்பகுதியில் சிறிய காவல் அரண்கள் இரண்டை மட்டும் படையினர் நிறுவி வருகின்றனர். சங்கதி

  14. சகாக்களின் இழப்பால் படையினர் மத்தியில் மனநிலைப் பாதிப்பு திகதி: 28.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] படையில் புதிதாக சேர்க்கப்பட்ட படைச்சிப்பாய்கள் தங்கள் சகாக்கள் களத்தில் உயிரிழப்பதை நேரில் கண்டு மனநிலை பாதிக்கிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படையில் புதிதாக சேர்க்கப்படும் சிங்கள் இளைஞர்கள் இருவருடங்களுக்கு சண்டையிலீடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அளித்தே படையில் சோக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் குறுகிய கால பயிற்சியின் பின்னர் உடனடியாகவே அவர்கள் களமுனைகளுக்கு கொண்டு வரப்பட்டு சண்டையிலீடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இத்தககல்கள் தற்போது விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த, பிடிபட்ட படைச் சிப்பாய்களது வாக்குமூலங்களிலிருந்து வெளிவந்துள்ளன. இவ்…

    • 2 replies
    • 2.9k views
  15. சிறிலங்கா படைகளில் சேர "அடுத்த வாரம் கருணா குழுவினரின் ஆயுதக் களைவு" நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 09:52 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா படைகளில் நேரடியாக துணைப்படை கருணாவின் நபர்கள் இணைவதற்கு ஏற்ப எதிர்வரும் வாரம் ஆயுதக் களைவு "நிகழ்வுகளை" நடத்த உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. துணைப்படையின் கருணா, பிள்ளையான் இடையே உச்சகட்ட உள்மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் துணைப்படையினரின் ஆயுதக் களைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு நடத்த உள்ளது. ஆயுதங்களைக் களையும் துணைப்படையினரை சிறிலங்கா பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதினம்

  16. யாழிலுள்ள ஞானம் விடுதியின் பாதுக்காப்பை பலப்படுத்துமாறு இந்தியா ஆலோசனை திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ்ப்பாணம் ஞானம் உல்லாச விடுதியில் பாதுகாப்பைப் படையினர் இந்திய விமானப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு இணங்க பலப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு ஈடுகொள்ளும் வகையில் பாரிய பதுங்குகுழி பங்களா போன்று இங்கு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பலாலியில் வைத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இவ் ஆலோசனையை வழங்கினாராம். கடந்த வாரம் இரு இந்திய விமானப்படையினர் பலாலிக்குச் சென்று ஆலோசனைகளை நடத்தியிருந்தது தெரிந்ததே. சங்கதி

  17. வெளியே தெரியாமல் மறைக்கப்படும் கிழக்கு மாகாண ஆட்கடத்தல்கள்! ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 23:27 மணி தமிழீழம் [செய்தியாளர் சிவநடேசன் ] கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ கெடுபிடிகள் எப்போது அகற்றப்படும், மக்கள் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் தினமும் சுற்றிவளைப்பு தேடுதல், கைது என மக்களின் அன்றாட வாழக்கை மிகவும் இறுக்கமடைந்து கொண்டுவருகின்றன. விடுதலை புலிகளின் ஊடுருவல் என தெரிவித்துக் கொண்டு அப்பாவி மக்களையே படையினரும் ஆயுததாரிகளுனம் கசக்கிப் பிழிகின்றனர். இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற படுவான்கரை பகுதிகளில் தினமும் ஒருவர் ஆயுததாரிகளினாலும், படைத்தரப்புகளினாலும் கடத்தப்படுகின்றார்கள ஆனால் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியில் வருவதில்லை அவ்வ…

  18. தேசிய இனத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் - தமிழீழ அங்கீகார மாநாட்டில் தீர்மானம் வீரகேசரி நாளேடு 12/28/2008 7:58:24 PM - தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க இந்திய அரசும், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, அமைந்தகரையில் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் வெள்ளியன்று நடந்த இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாட்டில் மேற்படித் தீர்மானம் நிறைவ…

  19. தேவாலயம் ஒன்றின் அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். - அத தெரண காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் இராணுவச்சீருடை அணிந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவித்துள்ளன. - சக்தி தொலைக்காட்சி வத்தளை கேகிக்த வீதியில் தற்கொலைத் தாக்குதலில் 5 பாதுகாப்பு தரப்பினர் கொல்லப்பட்டுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர். - அத தெரண. மக்கள் பாதுகாப்புபடை (Civil Defence Force) முகாம் ஒன்றினுள் இடம்பெற்ற இச்சம்பத்தில் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - சக்தி தொலைக்காட்சி

  20. கொழும்பில் வெடிக்கும் குண்டுகள் கிழக்கிலிருந்தே இயக்கப்படுகின்றன சிறிலங்கா புலனாய்வுத்துறை ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 23:15 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற பல குண்டுத் தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து இயக்கப்பட்டுள்ளதாகத் புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் கடந்த 19ம் திகதி மஹரகம - குருணாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த கிருஸ்காந்தனிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் இது தெரியவந்தள்ளதாகவும் இவர் கடந்த மூன்று ஆணடுகளுக்கு கொ…

  21. விமானங்கள் இல்லாமையே யுத்த களத்தில் காயமடையும் படையினர் உயிரிழக்க காரணம் - ரணில் வீரகேசரி நாளேடு 12/28/2008 10:45:30 PM - யுத்தக் களத்தில் காயமடையும் படை வீரர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான விமானங்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்காமையினாலேயே படையினர் பெருமளவில் உயிரிழக்கின்றனர். படையினருக்காக விமானங்களைக் கொள்வனவு செய்யப் பணமில்லையெனக் கூறும் அரசாங்கம், ஒரு மணித்தியாலத்திற்கு 3000 அமெரிக்க டொலரை செலுத்தி மிஹின் எயாருக்காக விமானத்தை குத்தகைக்கு பெற்றுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு …

  22. பணிவான வேண்டுகோள் அனைத்து யாழ் கள நண்பர்களுக்கும், தயவு செய்து எல்லோரும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் கீற்று இணையத்தில் வந்த காங்கிரஸ் பற்றிய செய்தியை (http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php) மீள் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுங்கள். அத்தோடு கீற்று இணையத்துக்கும் உங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். சில தமிழ் நாடு ஊடகங்களுக்கான மின் அஞ்சல் தொடர்புகள் : Ananda Vikatan, Nakkeeran, Kumudam, Viduthalai av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com மக்கள் தொலைக்காட்சி news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makka…

    • 0 replies
    • 1.7k views
  23. புரட்சிகர தொழிலாளர் முன்னணி , புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் தூத்துக்குடியில் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக பேசியதற்காக இயக்குநர் சீமான், தா.செ.மணி , பெ.மணியரசன் , ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக் கைதை கண்டித்து போராடிய ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் தமிழக போலீஸ் கைது செய்தது. இக்கைதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் அம்பலப்ப…

  24. கொழும்பு நகருக்கு மேற்கே ஹெகிதாவில் வத்தளை பகுதியில் செயின்ட் ஆன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது. இன்று காலை அந்த சர்ச் அருகே பயங்கர சத்தத்துடன் மனித வெடிகுண்டு வெடித்தது. அந்த பகுதியே இந்த குண்டு வெடிப்பில் குலுங்கியது. இந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் கொழும்பு மற்றும் ரகமா ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடித்த இடத்தை இப்போது ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சியில் கடும் சண்டை நடந்து வரும் இந்த சமயத்தில் நடந்துள்ள இந்த தற்கொலை படை தாக்குதல் இலங்கையில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. …

    • 2 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.