ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சஜின் டி வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்ப…
-
- 21 replies
- 780 views
-
-
அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கை சமர்ப்பிப்பு தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு …
-
- 0 replies
- 124 views
-
-
கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு – சரத் வீரசேகர தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் என்பதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல…
-
- 2 replies
- 469 views
-
-
வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம்;நாமல் உறுதி பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கஸ்பாவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் தொடர்பில் நல்லதொரு மனப்பான்மை காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் நன்னிலையிலிருந்த முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே…
-
- 2 replies
- 449 views
-
-
இலங்கையிலும் வாக்னர் குழு? Published By: VISHNU 02 JUL, 2023 | 06:02 PM (ஹரிகரன்) கடந்த வாரத்தில், வாக்னர் குழு தலைவரான ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார். உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், தீர்க்கமான பங்கை வகித்து வந்தது, வாக்னர் குழு. இது ஒரு தனியார் இராணுவ அமைப்பு. உலகின் பல நாடுகளில் கூலிப்படைகளாகச் செயற்படும் ஒரு இராணுவம். உக்ரேன் இராணுவத்துக்கு எதிராக போரிட்டு வந்த வாக்னர் குழு, திடீரென கடந்த வாரம் ரஷ்ய எல்லைக்குள் திரும்பி, நகரம் ஒன்றையும், ரஷ்யாவின் தென்பகுதி பாதுகாப்பு தலைமையகத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரஷ்ய பாதுகாப்…
-
- 17 replies
- 1.5k views
-
-
( எம்.நியூட்டன்) வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது. வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் முகமாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பிலிருந்து ஆரம்பித்த பேரணியானது விகாரைவரை சென்று பிரதான வாசலில் போராட்டம் இடம்பெற்றது இதில் கலந்து கொண…
-
- 32 replies
- 2k views
- 1 follower
-
-
மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ (UNESCO), தமது சர்வதேச நினைவகத்தில் பாதுகாத்துவரும் ஆவணப் பொருட்களின் பட்டியலில் மகாவம்சத்தினையும் இணைத்துள்ளது. கி.பி 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சத்தின் நம்பகத்தன்மை இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. மேலும் மகாவம்சம் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்…
-
- 58 replies
- 4.4k views
-
-
யாழ் – இரத்மலான விமானசேவை ஆரம்பம்! இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும் இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு வழிக்கட்டணமாக 22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக 41500 அறவிடப்படும் என்றும் இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் அருண ராஜபக்ஷ தெரிவித்த…
-
- 0 replies
- 289 views
-
-
பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எதுவும் தெரியாது – மைத்திரி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில…
-
- 0 replies
- 353 views
-
-
02 JUL, 2023 | 12:21 PM சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் சட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, அது சட்ட விரோத வாகனம் என்று நிரூபிக்கப்பட்டால் சுங்கத்தின் பொறு…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப தயாராகும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இவ்வார இறுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கடிதத்தினை ஏனைய தரப்புக்களான இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் கூட்டிணைந்து அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பௌத்த மதத்தின் பெயராலும் தொல்பொருளின் பெயராலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய வரலாற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமையும் …
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் : 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சற்றுமுன்னர் இடம்பெற்ற குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். இதேநேரம் ஏ.எல்.எம். அதாவுல்லா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கு.திலீபன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். https://athavannews.com/2023/1337155
-
- 0 replies
- 289 views
-
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் : சாணக்கியன் சீற்றம் பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், பொறுப்புக்கூறல் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்ட விதத்தை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். இதேநேரம் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என தகவல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ். காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் கப்பல் சேவைக்காக, தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா மேலும் கால அவகாசத்தை கோ…
-
- 0 replies
- 180 views
-
-
01 JUL, 2023 | 07:00 PM கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுயநல சந்தர்ப்பவாதிகளின் கூக்குரல் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சனிக்கிழமை (01.07.2023) நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, ஏ…
-
- 3 replies
- 327 views
- 1 follower
-
-
01 JUL, 2023 | 01:23 PM யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சனிக்கிழமை (01) போராட்டமொன்றில் ஈடுபட்டனர் . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது . குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது. குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர் . போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் ஈடுப்படுத்தப்பட்ட…
-
- 2 replies
- 345 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார். மேலும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுடன் யாழ் மாவட்ட…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழக்கடை அமைந்துள்ள பகுதியில் நேற்றைய தினம்(30) ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பழக்கடை வியாபாரியின் முறைப்பாட்டிற்கு அமைய, யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில், நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதான நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் …
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
“மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும்” ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சனிக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது. குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர். போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு…
-
- 1 reply
- 295 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 04:12 PM (எம்.நியூட்டன்) தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைத் தொடர்பு கோபுரம் இவ்விடத்தில் அமைக்க வேண்டாம். ஏழாலை தெற்கு புளியங் கிணற்றடி வீதியில் சனநெருக்கம் அதிகமாக உள்ள இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதை நாம் விரும்பவில்லை. இந்தச் செயற்பாடானது எமது பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போத…
-
- 2 replies
- 843 views
- 1 follower
-
-
டெங்கு தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இவர்களில் 24,402 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிக ஆபத்துள்ள வலயங்களாக 61 பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1337076
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல் 01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதன…
-
- 0 replies
- 208 views
-
-
இலங்கையின் நெருக்கடிகளுக்கு பூச்செண்டுகளாக சர்வதேச உதவிகள் அழித்து விட வேண்டாம் - அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் 01 JUL, 2023 | 09:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார நெருக்களை தீர்க்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புகள் பூச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை பயன்படுத்தி நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதா அல்லது அழிவுக்கு வழிவிடுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவ…
-
- 0 replies
- 183 views
-
-
01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் …
-
- 1 reply
- 180 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 01 JUL, 2023 | 06:28 AM கொழும்பு வடக்கு போதனா வைத்தியாசாலையில் ( ராகம) அன்டிபயோட்டிக் ஊசி மருந்து ஏற்றப்பட்ட 23 வயது யுவதி உயிரிழந்துள்ளார். 27ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வாய்மூலம் பயன்படுத்துவதற்கான மருந்து வழங்கப்பட்டதாகவும், ஆனால் அது பலளனிக்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதே மருந்தினை ஊசி மூலம் மருத்துவர் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த யுவதி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓவ்வாமையினால் பாதிக்கப்பட்ட யுவதியை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாக ராகம வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். எட்டு மணித்தியாலங்க…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-