ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
புத்தளம் கற்பிட்டி பகுதியில் விடுதலைப்புலிகளின் இலகு ரக விமானம் ஒன்று இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டதாக பரவிய தகவலினால், கற்பிட்டிப் பகுதியில் பதற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் கற்பிட்டிப் பகுதியில் தரையிறங்கியதாகவே தகவல்கள் பரவியிருந்தன. இதனையடுத்து கடற்படையினரும் கற்பிட்டிக் காவற்துறையினரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்ட போதிலும் எதனையும் கண்டறியவில்லை. கொழும்பில் அண்மையில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் விமானம் கற்பிட்டிக் குடாவுக்கு மேலாக பறந்து சென்றதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது. உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது. ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டமாக இது உள்ளது. இதில் எனது முயற்சி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு எ…
-
- 12 replies
- 3.8k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நேற்று சுவிஸ் பேர்ன் நாடாளுமன்றத்தின் முன்பாக நடாத்திய "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வில், விடுதலைப்புலிகளின் உறுப்பினர், அல்பேர்ட் அவர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில், தமிழர் தலைநகரம் திருமலையில் தமிழீழத் தேசியக் கொடி நிச்சயம் ஏற்றபடும். 43 ஆயிரம் இராணுவமும் ஓடுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் பாதையே A32. பேரங்களுக்குச் சோரம் போகாத தலைவன் பிரபாகரன் எனக் குறிப்பிட்டார்.உரையின் முழுமையான ஒளிப்பதிவினை இங்கே காணலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 1 reply
- 2k views
-
-
வன்னிக்களமுனை பயணிக்கப்போகும் பாதை என்ன? - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 16 நவம்பர் 2008, 06:00 மணி தமிழீழம் [] தற்போது கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் எதிர்பார்ப்புக்களையும், ஏக்கங்களையும் தமிழ் மக்களின் மனங்களில் விட்டுச்செல்லும் நாட்களாகவே இருக்கின்றன.வன்னிக்களமுனை ஒருபுறம் பல மாற்றங்களுடன் நகர்ந்து செல்கையில் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் பல வாதப்பிரதிவாதங்களை தென்னிலங்கையிலும், அரசியல் வட்டாரங்களிலும் தோற்றுவித்து வருகின்றது. இலங்கை அரசை போரை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முனைப்பு பெற்றுவரும் நிலையில் அரசு மட்டும் முடிவெடுத்து போரை நிறுத்தமுடியுமா என்ற வாதத்தை தமிழ் மக்களுக்கு எதிரான சில சக்திகள் முன்வைத்திருந்தன. எனவே வ…
-
- 2 replies
- 2.2k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 11/16/2008 10:35:27 AM - யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதை ஒருசில தினங்களில் உத்தியோக பூர்வமாகத் திறந்துவிடப்படும் என்ற படைத்துறைப் பேச்சாளரின் கூற்றும், புலிகளை அழித்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரசுத்தலைவரின் போக்கும், வட போர் அரங்கில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கருத வைக்கின்றன. கடந்த வாரம் வட போர்அரங்கில் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலிகள் மேற்கொண்ட எதிர்த் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருந்ததோடு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்த போதிலும் படைத்தரப்பு இந்த இழப்புக்களையும் தாண்டி முன்னேறுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. இதன் விளைவுதான…
-
- 0 replies
- 2.1k views
-
-
அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நான்கு தினங்களுக்கு முன்னர் நந்தகோபன் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். எனினும், பிள்ளையானிடம் அவர் இந்தியா செல்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட நந்தகோபன் என்ன காரணத்திற்காக இரகசியமாக மலேசியா சென்றார் அவர் அங்கு யாரை சந்தித்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நந்தகோபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என கருணா தரப்பு குற்றம் சாட்டியிருந…
-
- 1 reply
- 2.3k views
-
-
""தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளை வைத்தே, நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என அண்மைய நேர்காணலொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா.நடேசன் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிடப்பட்ட விடயம், வன்னி மேற்கு மீதான இராணுவ நடவடிக்கைக்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள், ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே, அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்கிற அரசின் பிரகடனத்திற்குப் பதில் அறிக்கையாகவும் இதனைக் கொள்ளலாம்.அதேவேளை புலிகளுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும் அரச தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. வடக்கிற்கு வசந்தத்தை அழைத்து வர, புலி அழிப்புப் பாதையில் ப…
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழ் முகமாலைப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்த படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று சனிக்கிழமை காலை 6.30 முதல் வலிந்த தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மிக் மற்றும் எம்.ஜ 24 வானூர்திகளிலிருந்து தாக்குதல்களைப் படையினர் நடத்தியுள்ளனர். படையினரின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 3 மணி நேரம் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது படையினருக்க பலத்த ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. pathivu.com -------------- By Iqbal Athas There are strong indications that the Tiger guerrillas are com…
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் அவலத்தையும், அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் சிறிலங்கா அரசால் வெளியேற்றப்பட்டதனை கண்டித்தும் தமிழ் மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தை அனைத்துலக சமூகத்துக்கு உரத்துக்கூறும் முகமாகவும் பிரான்சில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-
-
Mangala Samaraweera revealed in parliament, that the government has unloaded 14.4 million kilogrammes of bombs in the Wanni. 14.4 million kilogrammes of today's military grade explosive is equivalent to the explosive force of over 18 kilotonnes of TNT. The nuclear weapon dropped by the United States on distant Hiroshima had an estimated yield of between 13 to 18 kilotonnes of TNT. http://www.thesundayleader.lk/20081116/spotlight-1.htm [தமிழ் மொழி பெயர்ப்பு] இதுவரையில் வன்னி மீது மொத்தம் 14.4 மில்லியன் கிலோகிராம் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவை மேற்கோள் காட்டி, மங்கள சமரவீர இலங்கை பாராளுமன்றத்தில் தெ…
-
- 10 replies
- 3.1k views
-
-
சென்னை, நவ. 16: இலங்கை தமிழர் பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் நடத்துகிறது. இலங்கை தமிழர் பிரச்னைக்காக தமிழகத்தில் அரசு சார்பில் கடந்த மாதம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு மத்திய அரசு தலையிட வேண்டுமென்றும், 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின், மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் கடந்த 12ம் தேதி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந…
-
- 0 replies
- 989 views
-
-
நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - மாவை சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரால் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடருந்து முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது:- இலங்கைப் போரியல் வரலாற்றில் சிறீலங்காப் படையினர் நிலங்களைக் கைப்பற்றுவதும், அதனை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்றுவதும் மாறி மாறி நடைபெறும் சாதாரண நிகழ்வுகள். இதனை எடுத்துக் கொண்டு நாம் வெற்றி பெற்றுவிட்டாக பெருமை கொள்ளக்கூடாது. பூநகரியைக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாநில துணை செயலாளர் செங்கோலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிட்டு , மாவட்ட நிதிச்செயலாளர் பாலன், மாவட்ட துணை செயலாளர்கள் மெய்யன், தமிழ்செல்வன், இடிமுழக்கம், காட்டுராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கட்டமைப்பபை …
-
- 1 reply
- 1.4k views
-
-
சுவிஸ் நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில்14.11.2008 வெள்ளிக்கிழமை இரவு 21.00மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்து ஆலயங்களிலும் இறைவனை வேண்டிஅமைதிப் பிராத்தனை நடைபெற்றது. தாயகத்தில் அல்லலுறும் எம்முறவுகளின் அமைதிவேண்டியும், போரின் பிடியில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழவும், தமிழீழத் தாயகம் விரைவில் எமதாகவும் எல்லாம் வல்லபரம்பொருளை வேண்டி, இப்பிராத்தனை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க... (படங்கள் உள்ளே) http://www.tamilseythi.com/tamilar/swiss-t...2008-11-16.html மன்னிக்கவும் கறுப்பி.... படங்களை இணைக்க மறந்து விட்டேன்!
-
- 2 replies
- 671 views
-
-
இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரசு போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களும் மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 580 views
-
-
பூநகரி கைப்பற்றப்பட்டதனை நாடாளுமன்றத்தில் அறிவித்த விமல் [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 10:59 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதனை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு-செலவு திட்ட விவாதத்தில் அமைச்சர் சரத் அமுனுகம உரையாற்றிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச, பூநகரி பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை சபாநாயகருக்கு அறிவித்தார். இதனையடுத்து அமைச்சர்கள், ஜே.வி.பி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி படையினருக்கு வாழ…
-
- 0 replies
- 1.4k views
-
-
பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 11:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவ…
-
- 15 replies
- 3k views
-
-
சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 4 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 900 views
-
-
சென்னை இலங்கை தமிழர் பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து விவாதிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வருகிற நவம்பர் 17 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய, இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடந்த மாதம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவ்வாறு வலியுறுத்த தவறினால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு வேண்டுமானால் நிவாரண பொருட்கள் அனுப்பலாம் எனக் கூறி மத்திய அரசு சமாதானப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரகு படுகொலையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – பிள்ளையான் - மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால்: கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலளார் குமாரசுவாமி நந்தகோபன் எனப்படும் ரகுவின் படுகொலையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடபில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதி அத்துருகிரியவில் வைத்து பிள்ளையானின் செயலாளர் ரகு மற்றும் அசாத் மௌலானாவின் சாரதி ஆகியோர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால் - சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் அஞ்சலிப்பு வைப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தலைவர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோப…
-
- 8 replies
- 3.1k views
-
-
சிறீலங்காப் படையினரால்.. பூநகரி வன்வளைப்புச் செய்யப்பட்ட செய்தி சிறீலங்கா பாராளுமன்றத்தில்.. மகிந்தவின் சர்ச்சைக்குரிய பட்ஜட் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு எதுவித இடர்களும் இன்றி நிறைவேற்ற உதவியுள்ளதுடன்.. பாராளுமன்றில் வெற்றிச் செய்தி சிங்கக் கொடிகள் அசைத்தும்.. சிறீலங்கா படையினருக்கு வாழ்த்துச் சுலோகங்கள் தாங்கிய அட்டைகள் காட்டியும் பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. Placards, National flag raised in parliament Government MPs raised placards and the National flag in parliament in support of troops after passing the second reading of the budget 127-85 டெயிலிமிரர்.
-
- 0 replies
- 2.6k views
-
-
மாவீரர் நாளை நினைவுகொள்ள மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு திகதி: 15.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] வரும் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகொள்வதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் கண்டாவளைக் கோட்டத்தில் இடம்பெற்றது. கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.சீராளன் மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பான செயற்திட்டங்களையும் முன்னெடுப்புக்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கிக்கூறினார். இக்கலந்துரையாடலில் மாவீரர்பெற்றோர் மதிப்பளித்தல், துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல், இறுதிநாளில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது…
-
- 0 replies
- 1.6k views
-
-
தை சோதனை நிலையத்தை ஒட்டுசுட்டானுக்கு மாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை [ சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 09:35.32 AM GMT +05:30 ] வன்னிக்கான ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தை ஒட்டுசுட்டான் பகுதிக்கு மாற்றுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி.) பாதுகாப்பு அமைச்சு கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.சி.ஆர்.சி.யிடம் இந்தக் கோரிக்கையை தாங்கள் உத்தியோகபூர்வமாகக் கேட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அரச தரப்பு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஓமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் எதுவும் இல்லையென்பதால் வன்னிக்கான நுழைவுப் பாதையை அங்கு தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லையெனத் தாங்கள் கருதுவதாக ஐ.சி…
-
- 0 replies
- 4.1k views
-
-
நடிகர்களான சூர்யா,பிரகாஷ்ராஜ், ஜ.டி.பொறியியளார்கள் மற்றும் மணவர்கள் இணைந்து டைடல் பார்க்கில் 17.11.2008 அன்று இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து எடுத்துரைக்கும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
-
- 0 replies
- 632 views
-