Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தின் ஏகோபித்த கருத்தை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு? [14 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 8:50 மு.ப இலங்கை] தருணம் பார்த்து ஏகமனதாகக் காய் நகர்த்தியிருக்கின்றது தமிழக சட்டசபை. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியே முன்னின்று இந்தக் காய் நகர்த்தலை மேற்கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அடித்திருக்கின்றார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக - ஈழத் தமிழர் தாயகத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு எதிராக - தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வெழுச்சியை, உடனே ஆரவாரமாக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, உச்சத்துக்குக் கொண்டு வந்த கலைஞர், பின்னர் அதையொட்டி எழுப்பப்பட்ட நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாகக் கைவிட்டு, அவ்விடயத்தைப் போட்டடித்து விட்டார், குத்துக்கரணம் அடி…

  2. ஸ்கந்தபுரம் கோணாவில் பகுதியினூடாக சிறீலங்கா படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிப்பின் போது 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் மேலும் அறிவித்துள்ளதாவது, கோணாவில் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் பெருமளவிலான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி செறிவான எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை நடத்தியபடி முன்னேறினர். படையினர் மேற்கொண்ட இந்த முன்னகர்வுத் தாக்குதல்களுக்கு எதிராக உக்கிர எதிர்த்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டன. இந்த எதிர்த்தாக்குதல்கள் சுமார் இரண்டரை மணித…

  3. போர் நடவடிக்கையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் "அகதிகளாக" அடைக்கலம் [வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 08:32 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கையால் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்ககை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 7,164 குடும்பங்களைச் சேர்ந்த 27,619 பேரும் முல்லைத்தீவில் இருந்து 3,689 குடும்பங்களைச் சேர்ந்த 13,791 பேரும் மன்னாரில் இருந்து 4,587 குடும்பங்களைச் சேர்ந்த 17,894 பேரும் திருகோணமலையில் இருந்து 215 குடும்பங்களைச் சேர்ந்த 753 பேரும் மட்டக்களப்பில் இருந்து 136 குடும்பங்களைச் சேர்ந்த …

    • 0 replies
    • 574 views
  4. திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி வியாழன், 13 நவம்பர் 2008, 19:49 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமகன்] அமெரிக்காவின் தெற்காசிய வணிகத்துறையின் துணைப் பிரதிநிதி மைக்கல் டெலினி திருகோணமலை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார். அவருடன் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவவர் ரொபேட் ஓ பிளாக்கும் உடன் பயணித்துள்ளார். இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்குச் சென்ற இவர்கள் அங்க வணிக முதலீகள் குறித்து ஆராய்வதற்கம் அவதானிப்புகளை மேற்கொள்ளவும் இவர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சிறீலங்காக் கடற்படைப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனையு அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பதிவு

  5. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கையசைத்தால் தான் நாட்டில் நிம்மதி ஏற்படுமெனவும், அவர் பச்சைக் கொடி காட்டினால் தான் நாடு பாதுகாப்பாக இருக்குமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சொலமன் சூ.சிறில் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது என்பது வரலாற்றிலேயே சாத்தியமற்றதொன்று எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே சொலமன் சூ.சிறில் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; அமெரிக்காவில் சிறுபான்மை கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இனத்துவ சமத்துவத்தின் அடையாளமா…

    • 2 replies
    • 1.5k views
  6. போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:56 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு ஹிட்லராக உருவாகிக்கொண…

    • 7 replies
    • 1.9k views
  7. சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா http://tamilnet.com/art.html?catid=79&artid=27430

  8. மன்னார் - யாழ்ப்பாணம் ஏ 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் திறக்கப்படவுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 5:23:54 PM - இருபது வருடங்களுக்குப் பின்னர் மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஏ - 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் முதல்முறையாகத் திறக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் …

  9. என்னதான் நடக்கிறது வன்னியில் - நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி வல்லூறுகளைப் போல வட்டமிட்டு குண்டுவீசும் போர் விமானங்கள், இன்னொரு பக்கம் எறிகணை, ஏவுகணை வீச்சு என்று எக்கச்சக்கப் பீதியில் கிடக்கிறது ஈழத்தின் வன்னிப்பகுதி. அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்குச் சூழ்ந்து கிடக்கிறது போர்மேகம். இந்த நிலையில், இருட்டைக்கிழிக்கும் ஒரு வெளிச்சக் கீற்றாய், வன்னிப் பகுதியில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய, தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்கு சென்று திரும்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி. கொழும்பு திரும்பியுள்ள அவரிடம் நாம் தொலைபேசி மூலம் பேசினோம்... கடும்போர் நடந்து…

  10. அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இதேநேரம், அக்கராயன் கோ…

  11. தமிழ் இளையோர் அமைப்பினரால் சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள உண்மைக்காய் எழுவோம் நிகழ்விற்காக தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்கள் தந்த நேர்காணல்… http://www.tamilseythi.com/tamilar/pathmin...2008-11-13.html

  12. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற பிளாஸ்ரிக் மற்றும் றபர் தன்மை கொண்ட விரிப்புகள் ஆகியனவற்றை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  13. தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் விடயங்களில் குரல் கொடுத்து வரும் மனோ கணேசனின் மேலக மக்கள் முன்னணி கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 638 views
  14. ஓமந்தை சோதனைச் சாவடியை மூடியதால் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்துகிறது சிறிலங்கா அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியை கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படைத்தரப்பு மூடியிருப்பதால் வன்னிப் பெருநிலப்பரப்பில் பாரிய மனித அவலவத்தை சிறிலங்கா ஏற்படுத்துகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக "புதினம்" இணையத்தளத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து: ஓமந்தை சோதனைச் சாவடி கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினரால் மூடப்பட்டுள்ளது. இதனால் வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழும் மக்களுக்கான உணவு- மர…

  15. தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவெறியன் கொலைகாரன் இராஜபக்சே! பெரியார் திரவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம இளங்கோவன் தலைமையில் இன்று காலை [13.10.2008] 10 மணியளவில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே, கொலைகாரன் சிங்களவெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து "இராஜபக்சே" வை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர். சங்கு ஊதிக் கொண்டும், செகண்டி அடித்துக் கொண்டும், மேளம் அடித்துக் கொண்டும் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் வி.எஸ்.பி தியேட்டர் முன்பாக புறப்பட்டு வந்தனர். விரிவான செய்தி மற்றும் படங்கள் உள்ளே...... http://www.tamilseythi.com/

  16. சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மலேசியாவில் சிறிலங்கா தூதரகத்தின் முன் நாளை வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 593 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு குற்றவாளி அல்ல- பதுங்கு குழியில் உள்ள தலைவரும் அல்ல- ஒரு தேசிய விடுதலைப் போரின் தலைவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 843 views
  18. பிரான்சில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்ச் சமூக செயற்பாட்டாளர் அருளானந்தம் சத்தியரூபன் தலைமையிலானோர் நாளை வெள்ளிக்கிழமை சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 447 views
  19. அக்கராயன் களமுனையில் இன்றும் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயன் கோணாவில் பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்ட்டுள்ளன. கோணாவில் பகுதியில் மும்முனைகளில் செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கான முறியடிப்புத் தாக்குதல் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ளது. இதில் படையினர் பலத்தை இழப்புக்களுடன் பின்வாங்கினர். புதினம்

    • 0 replies
    • 704 views
  20. சிறிலங்காவின் பொய் வரலாற்றுப் பரப்புரைக்கு தமிழ் வரலாற்றாசிரியர்கள் தக்க பதிலளிக்க வேண்டும்: வெ.இளங்குமரன் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 08:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழனுக்கு தனது நிலத்தில் உரிமை இல்லை என்று தெரிவிக்கும் சிறிலங்காவின் பொய் வரலாற்றுப் பரப்புரைக்கு தமிழ் வரலாற்றாசிரியர்கள் தக்க பதிலைக்கொடுக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு உரியது. தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ உரித்தானதோ அல்ல. அந்த உரிமையை அவர்கள் கேட்க முடியாது என்று பௌத்த பிக்குகள், சிறிலங்கா படைத்தளபதி, அரசியல்வாதிகள், சிங்கள வரலாற்றாசிரியர்கள் ப…

    • 0 replies
    • 784 views
  21. தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்புக்களே மக்களை காக்கின்றன: வாமன் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 07:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்புக்கள் மருத்துவ ரீதியில் மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் முழுமையான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றன என்று தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளர் வாமன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் திட்டமிட்ட போர் நடவடிக்கை காரணமாக மக்களை அழிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றது. பல லட்சகணக்கான மக்கள் இடம்பெயர்ந்து மிகக்குறுகிய இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கான சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகிறன்றது. இதில் குறிப்…

    • 0 replies
    • 700 views
  22. http://www.keetru.com/literature/essays/ponnila.php குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும் நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம். எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர். எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது. நான் வானத்தைப் பார்த்தேன்... அது எனது கண்களை வசியம் செயதது... நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்... எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது.. (ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்) ‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’ ‘‘இன்னும் ரெண்டு கில…

  23. தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 08:36 பி.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழக கல்லூரி மாணவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகின்றார் என்பது உண்மை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குமுதம் குழுமத்தின் வெளியிடான குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த கருத்துக்கணிப்பு விவரம்: 1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா? சரி - 53.1% (1000 பேர்) தவறு - 46.9% (833 பேர்) 2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? மன்னிக்கலாம் - 35.46%…

    • 15 replies
    • 2.3k views
  24. கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கண்டி வீதிக்கு மேற்காக இருந்து கண்டி வீதியை வல்வளைக்கும் நோக்கில் பணிக்கன்குளம், கிழவன்குள…

  25. கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, சிங்கள நடிகர்கள் நாளை கொழும்புவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, கடந்த மாதம் 19 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்கள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். இதனையடுத்து, தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர், நடிகையர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இதேபோல, சின்னத்திரை கலைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, இலங்கையில், அந்நாட்டு நடிகர், நடிகையர் போட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொழும்பு நகரில் உள்ள சுதந்திர தின மைதாணத்தில் இந்தப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.