Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: T. SARANYA 25 APR, 2023 | 12:54 PM வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் பொலிஸாரும், வன இலாகாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவுக்கு சொந்தமான காட்டுப்பகுதி 12 ஏக்கர் கடந்த சில நாட்களாக அழிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அரச அதிகாரிகள் பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மக்கள் முறையிட்டும் குறித்த காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழ…

  2. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 02:27 PM ஹப்புத்தளை பகுதியில் பெய்த அடை மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் அதிர்ச்சியடைந்த தம்பேதன்ன மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஹப்புத்தளை பங்கெட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும் வீட்டிலிருந்தபோதே மின்னல் தாக்கியதில் அதிர்ச்சியடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 42, 21 மற்றும் 17 வயதுடைய மூவரே மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/153716

  3. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அனுமதியுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/250630

  4. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:49 AM இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று திங்கட்கிழமை (24) தெரிவித்தன. அவர் ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந…

  5. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட குழுவினரை கைது செய்தனர். …

  6. Published By: VISHNU 24 APR, 2023 | 06:02 PM (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கத்தினால் வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரத்தையே 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தளை பகுதியில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சேதன பச…

  7. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8% ஆக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது. குறிப்பாக காசல்ரீ, கொத்மலை மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களில் மிகக் குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13% ஆகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் முறையே 13.3% மற்றும் 15% கொள்ளளவாகவும் உள்ளது. இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34% ஆகவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 84% ஆகவும், சமன் வெவ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 38% …

  8. 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ல் அனர்த்தம் தொடர்பில் இழப்பீடு கோரி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் இலங்கை நாளை சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார். வழக்கை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளபோதும், வழக்கின் பிரதிவாதிகள், கப்பலின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர், நடத்துநர் மற்றும் முகாமையாளர்கள் உட்பட வணிக இருப்பு சிங்கப்பூராக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே பேரழிவு தொடர்பான உரிமைகோரல் நடவடிக்கையை நிறுவுவதற்கு சிங்கப்பூர் பொருத்தமான இடமாக இருக்கும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் துகள்களால் இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழலுக்க…

  9. உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஒரு நாடு கடனை வாங்கும் போது, வாங்கிய கடனை கையாளும் முறைகள், கடனை செலுத்தும் முறை ஆகியவற்றை முறையாக கையாள வேண்டும் எனவும், அப்போதுதான் அந்த நாடு உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டை உலகத்தின் முன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு பயங்கரவாத…

  10. மருதானை துணை மின்நிலைய மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பல பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மருதானை துணை மின்நிலையத்தில் கேபிள் வெடித்ததனால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் உள்ள 132 KV துணை மின்நிலையத்திலும் கேபிள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பு 4, 5 மற்றும் 7 ஆகிய இடங்களில் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/250528

  11. 2023 முதல் காலாண்டில் அரச வரி வருவாய் 216% அதிகரித்து 316 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்கான வரி வருவாயின் விபரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வருமான வரி மற்றும் பெறுமதி சேர் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. https://thinakkural.lk/article/250526

  12. பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகளை பரிசளிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்குவதற்கு இலங்கை உறுதியளித்துள்ளதாக இரண்டு பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இரண்டு யானைகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை இரண்டு யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது – ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றைய யானை லாகூருக்கும் அனுப்படவுள்ளன. https://thinakkural.lk/article/250458

  13. தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு!! தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்துக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்…

  14. Published By: DIGITAL DESK 5 24 APR, 2023 | 12:33 PM கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) காலை தெருநாய்கள் சுற்றித் திரிந்ததமை அவதானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த நாய்கள் சிரமப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருந்தன. இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, விமான நிலைய முனைய கட்டிடத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இந்த நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர். இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதையிலோ அல்லது விமானக் கட்டடத்திலோ நுழைந்தால், கடுமையான விபத்துகள் ஏற்பட வாய…

  15. Published By: T. SARANYA 24 APR, 2023 | 01:48 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்…

  16. ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இன்று (24) காலை ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதனால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (புவியியல்) கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ இது குறித்து கருத்து தெரிவிகையில் :- . “இந்த பூகம்பத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இத்தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. பதுளை, கண்டி மற்றும் மாவனல்லையிலும் உணரப்பட்டுள்ளது. ப…

  17. வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழக்கு விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Published By: Digital Desk 5 11 Apr, 2023 | 09:02 AM வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் திங்கட்கிழமை (10) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்…

  18. வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது : ஜனாதிபதி! வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்த…

    • 3 replies
    • 738 views
  19. மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா விற்பனை : யாழில் இளைஞன் கைது யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். . கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தலா 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரெழு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனையே கைது செய்துள்ளதாகவும், குறித்த நபர் யாழில் மாணவர்களை இலக்கு வைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்…

  20. யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தம் கொண்ட யானையான ‘தல கொட்டா’ உயிரிழந்தது. 40 வயதுடைய குறித்த யானை நீண்ட நாட்களாக நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை அளித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. யால தேசிய சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த மிருகமாக இந்த யானை காணப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/250392

  21. Published By: VISHNU 23 APR, 2023 | 09:08 PM (எம்.மனோசித்ரா) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் மியாவ் ஜியான்மின் உள்ளிட்ட குழுவினர் 22 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். இதன் போதே ஜனாதிபதியிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய முதலீட்டு முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ள…

  22. கொழும்பு துறைமுக நகரம் இன்னும் முதலீடுகளை ஈர்க்கவில்லை! சீனாவின் முதலீட்டிலான போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம் இன்னும் முதலீட்டை ஈர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பொறுத்தவரையில் பூஜ்ஜிய நிலையே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகங்கள் மற்றும் முயற்சிகளுக்கு வழங்கப்படவேண்டிய சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் விலக்குகளை அரசாங்கம் இன்னும் வர்த்தமானியில் வெளியிடாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் கடைசியாக பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், 2021ஆம் ஆண்டு டிசம்பரில், நிலம் ஒன்றின் 99 வருட குத்தகைக்காக 114 மில்லியன் அமெரிக்க டொலர்கள…

    • 1 reply
    • 452 views
  23. இரு அமைச்சுக்களை ஒன்றாக்கியது இதற்குத்தான்! ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  24. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் மக்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருப்பார்கள்: இராமலிங்கம் சந்திரசேகர் (Video) மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குகின்ற சட்டமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விளங்குகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் இன்று(23.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது மக்களின் பேச்சு சுதந்திரத்தை மறுதலிக்கின்ற மூர்க்கத்தனமான சட்டமாக பார்க்கப்படுகின்றது. இந்த சட்டமானது கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற காவாலித்தனமான சட்டமாக காணப்படுகின்றது. …

    • 0 replies
    • 322 views
  25. அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.