Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய மருத்துவர்கள் வன்னி செல்வது பற்றி புதுடில்லியில் எதுவுமே பேசப்படவில்லையாம்! - பஸில் ராஜபக்ஷ திடீர் ‘பல்டி’ [31 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 9:55 மு.ப இலங்கை] வன்னியில் உள்ள மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, இந்திய மருத்துவர்களுக்கு அனுமதியளிப்பது குறித்து தனது சமீபத்தைய புதுடில்லி விஜயத்தின் போது ஆராயப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இணையத்தளமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார். வன்னி மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா மருத்துவர்களை அனுப்புகின்றதா என்று கேட்கப்பட்டபோது, "அதற்கு அவசியமில்லை என்று கருதுகிறேன். சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு மருத்துவர்கள் இலங்கையில் உ…

  2. சர்வதேச அவதானிப்புக் குழு இலங்கைக்குத் தந்த சான்றிதழ் [31 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 10:05 மு.ப இலங்கை]/td> இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை, படுகொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், தொந்தரவுகள் போன்றவை மேலும் மோசமாகத் தொடர்கின்றன என சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான தூதுக்குழு தெரிவித்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம், சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பு, சர்வதேச செய்திப் பாதுகாப்பு நிறுவனம், சர்வதேச ஊடக நிறுவனம், எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு ஆகிய ஐந்து பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகளே இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு ஐந்து நாட்கள் தங்கி நிலைமைகளை அவதானித்த பின்னர், தமது விஜயத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு இல…

  3. கிழக்கு மகாணச சபை முதலமைச்சர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீரகேசரி இணையம் 10/31/2008 9:22:19 AM - கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சென்ற வாகனம் கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி சென்ற வேளை இன்று காலை 9.00 மணியளவில் .விபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தவாகனம் லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.எனினும் முதலமைச்சரிற்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

  4. விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன – ராமன் : ஒக்.28ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளின் வான்படைப்பிரிவு வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் வான்படைப்பிரிவு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் ஒக்.28 வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒக்.28ஆம் திகதி விடுதலைப்புலிகளி…

    • 10 replies
    • 3.3k views
  5. தமிழ் இனப்படுகொலைகளை நிராகரித்து பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இந்தியாவின் ஜனதாக் கட்சித் தலைவன் சுப்பிரமணிய சுவாமியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்புக்கான சட்டதரணி புரூஸ் பெய்ன் சவால் விடுத்துள்ளார். புரூஸ் பெய்னனின் சவால் அறிவிப்பு தொலைநகல் மற்றும் கடுகதி தபால் மூலமாக சுவாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தச்சவாலை சுவாமி ஏற்றுக் கொண்டால் விவாதத்தை நடத்த இடமளிக்க பிரிடிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பி.பி.சி) ஆர்வமாக இருக்கின்றதா? என்பதுகுறித்து அறிய பி.பி.சி யுடன் இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது. சுவாமி தன்னுடன் இது தொடர்பாக தொடர்பு கொள்ள முடியும் என்று புரூஸ் பெயன்…

    • 7 replies
    • 2.3k views
  6. வீரகேசரி நாளேடு - இலங்கை ஜனாதிபதி முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள அழைப்பே தமிழர்களுக்கு அவர் ஆற்றியுள்ள நற்பணிக்கு ஆதாரம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பொது மக்கள் மீதல்ல என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பதைப் போன்றதாகும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழ்ப் பகுதிகள் மீது விமானப் படை விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது. இதன் விளைவாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள். மாதா கோவில்கள், இந்துக் கோவில்கள் என்று பொது நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளும் பலத்த உ…

    • 1 reply
    • 1.6k views
  7. இராணுவத்திலிருந்த தப்பியோடுவோரின் எணணிக்கை அதிகரித்து வருவதால் இலங்கை இராணுவம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது என் ஐ.எஸ்.எம். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் பின்வருமாறு : 'களமுனை அதிhந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், சடலங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. அது ஒரு பயங்கரமான நிகழ்வு' என்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் வன்னிப் பகுதியில் நிகழந்த மொதல்கள் குறித்து தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் இலங்கை இராணுவத்தின் 12 வது கஜபா றெஜிமென்ட் படையணியைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர். அவரின் தலையின் பின்புறம் தாக்கிய ஒரு துப்பாக்கிச் சன்னம் மேல் தோளில் தங்கிவிட்டது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நில…

  8. இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து திரையுலகினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இயக்குனர்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கடந்த 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டனர். அதில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து நடிகர் சங்கத்தில் நாளை மறுநாள் (1-ந்தேதி) நடத்த உள்ள உண்ணாவிரதம் பரபரப்படைந்துள்ளது. ராமேஸ்வரத்துக்கு நடிகர் - நடிகைகள் செல்லசிரமங்கள் இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் வகையில் சென்னையில் போராட்டம் நடத்தலாம் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதை ஏற்காமல் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தி காட்டி உள்ளனர். …

  9. நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்..... - தமிழ்நாட்டிலிருந்து பொன்னிலா - இன்றைய அறிக்கை நாளைய ஆவணம். தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக்கூடும். முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது. வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் வாழ்க்கை தலைவர்களை புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மகாத்மாக்களா? ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த அம்மணமான அவம…

  10. சர்வதேச நாணயங்களுக்கு எதிராக ரூபாவை மிதக்க விடுவதற்கு தீர்மானம் - இலங்கை மந்திய வங்கி அறிவிப்பு வீரகேசரி நாளேடு 10/30/2008 10:38:39 PM - இலங்கை மத்திய வங்கி ரூபாயின் நாணயப் பெறுமதியினை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப்பபோவதாக இன்று அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையின் நாணயமான ரூபாவின் பெறுமதி சர்வதேச நாணய மாற்று வீதங்களுக்கு எதிராக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வந்த இலங்கை மத்திய வங்கி தற்போது ரூபாவின் நாணயமாற்றுப் பெறுமதியை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த கொள்கை மாற்றமானது அண்மையில் உலக சந்தையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இலங்கையின் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே மேற்…

    • 1 reply
    • 1.6k views
  11. இலங்கைத் தமிழர் துயர் துடைக்கத் திரட்டப்படும் நிவாரண நிதிக்கு தன் பங்காக ரூ. 5 லட்சத்தை நடிகை நயனதாரா வழங்கியுள்ளார். இந்தத் தொகையை வழங்க முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று காலை நயனதாரா சென்றார். முதல்வரிடம் நிதியை வழங்கிய நயனதாரா, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க திரையுலகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடக்கும் உண்ணாவிரதத்தில் தான் பங்கேற்கவிருப்பதையும் முதல்வரிடம் கூறி ஆசி பெற்றார். இதற்கிடையே இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதிக்கு தமிழ் திரையுலக புள்ளிகள் பலரும் இன்று திரண்டு வந்து நிதி வழங்கினர். நெப்போலியன் 5 லட்சமும், குஷ்பு, சுந்தர் மற்றும் விவேக் தலா ரூ. 1 லட்சமும் இன்று…

  12. வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினரின் இருமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 5 படையினர் பலி [வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 11:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் இருமுனைகளில் விடுதலைப் புலிகளின் முன்னரண்களை கைப்பற்றும் முயற்சியினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:00 மணிவரை நடத்தி படைய…

    • 0 replies
    • 895 views
  13. வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க ரஜனியும் கமலும் ஒரு நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்தில் மைக் வைத்து பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழக அரசும் விதித்துள்ளது. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதல், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்து விட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப்படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிர…

  14. பொதுமக்கள் இலக்குகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் கொலை வெறித் தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு வானூர்திகள் திடீரென வள்ளிபுனம் வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் பிரவேசித்து கரித்தாஸ்-கியூடெக் நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான அகோரக் குண்டுவீச்சுக்களை நடத்தின. இதன்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டும் எட்டுப் பேர் காயமடைந்தும் உள்ளனர். இக்குண்டுவீச்சின் போது அப்பிரதேசத்தில் அமைந…

  15. சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிடத்தயார். தமிழக மருத்துவக்குழு போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல தமிழக முதல்வர் அனுமதி பெற்றுத்தரவேண்டும்.மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உதவிட வேண்டும். இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி. இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்துள்ளது.குறிப்பாக வான்வழித் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்ப டுகின் றனர். கிளிநொச்சி மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவ மனைகளில் …

  16. சிறீலங்கா கடற்படையினருக்கு என ஒரு தனியான வான் பிரிவு அவசியம் - முன்னாள் கடற்படைத் தளபதி வியாழன், 30 அக்டோபர் 2008, 15:46 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா கடற்படையினருக்கு என ஒரு தனியான வான்படையிரை உருவாக்க வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் அனைத்து வழிகளுக்குமான முழுமையான பாதுகாப்பு கொண்டுவரப்படுவது அவசியம். சிறீலங்கா கடற்படையினர் வான்படையினரிடம் தங்கியிருக்கக் கூடாது. கடற்படையினருக்கு என ஒரு தனியான வான் பிரிவு அமைக்கப்பட வேண்டும். அதற்காக நான்…

  17. இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களை காக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மத்திய மாவட்ட பசுமை தாயகம் சார்பில் ஐ.நா. தலைமைக்கும், பிரதமருக்கும் இரத்த கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்கும் போராட்டம் சேலத்தில் இன்று(வியாழன்) காலை நடந்தது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை அமைப்பாளர் மா.குமரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜன் வரவேற்றார். இரத்த கையெழுத்து நிகழ்ச்சியை முன்னாள் எம்எல்ஏ மு.கார்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் இரத்த கையெழுத்து போட்டார். அதன் பிறகு நிர்வாகிகள் அனைவரும் கைகளில் இருந்து இரத்தம் எடுத்து க…

  18. ஆனையிறவைக் கைப்பற்றிய பின்தான் ஏ-9 வீதி திறக்கப்படும் - சிறீலங்கா திகதி: 30.10.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] ஆனையிறவைப் படையினர் கைப்பற்றிய பிறகு தான் ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படும் என சிறீலங்காவின் யாழ்நகரத் தளபதி பிரிகேடியர் மார்க் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள வர்த்தகர்களை நேற்று மாலை தமது படைமுகாமிற்கு அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கிய போதே இவர் இக்கருத்தை வெளியிட்டார். ஆனையிறவை மீட்கும்வரை புலிகளுடன் அரசு பேச்சில் ஈடுபடாது. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு விரைவில் சரணடைந்து விடுவார்கள். அதன் பின்னர் உங்களது வர்த்தக நடவடிக்கையில் நாங்கள் தலையிடமாட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நாங்கள் உங்களை அழைத்து சந்திப்புக்களை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது நட…

    • 6 replies
    • 2.6k views
  19. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களால் 275 மெஹாவட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சேதங்களால் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் மாலை 6 மணிமுதல் 9 மணிவரையான நேரப்பகுதியில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாமெனவும், விடுதலைப் புலிகளின் தாக்குதலால் நாளாந்தம் 24 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் மின்சாரசபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 100 மெஹாவாட்ஸ் மின்சாரத்தை வழங்கும் பெற்றோலிய வாயு மற்றும் நீராவி இயந்திரங்களுள்ள பகுதியை மீளமைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது தேவைப்படும் என…

    • 6 replies
    • 1.7k views
  20. இலங்கை: தமிழகத்தில் நாளை கடை அடைப்பு. சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு தலையிடக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி நாளை (31ம் தேதி) தமிழ் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 25 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மளிகை வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், காய்-கனி, வியாபாரிகள், டீக்கடை, தையல் கலைஞர்கள் உள்பட பலதரப்பட்ட வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு க…

  21. வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் அவருக்கு தந்திகளை அனுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர், தமிழக அரசு திரட்டி வரும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக முதல்வரை நேரில் சந்தித்து தனது ஒரு மாத சம்பளத்தை அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் டெர்ம்ஸ் சரியில்லை என்பது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் நன்கு தெரிந்த ஒன்று. சமீபத்தில் நடந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களுக்கு சேகர் அழைக்கப்படவில்லை. அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார் எனவும் செய்திகள் கிளம்பின. அவரே …

    • 1 reply
    • 2.1k views
  22. DONATION FOR SRILANKAN PEOPLE இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,வணக்கம், இலங்கையில் வாழும் நமது தமிழ்ச் சொந்தங்கள் படும்துயரம் நாமறிவோம். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். குமுதம் இணைய தள நேயர்களாகிய நீங்களும் நிதி வழங்கி உதவலாமே... நீங்கள் அனுப்பும் நிதி, உரிய பட்டியலோடு தமிழக முதல்வரிடம் சேர்ப்பிக்கப்படும். அதற்கான ரசீது மற்றும் வரிச்சலுகைப் படிவம் உங்களுக்கு வந்து சேரும். நன்கொடை வழங்கியோரின் பெயர்களும் குமுதம் இணைய தளத்தில் வெளியிடப்படும். தாமதிக்காமல், இந்த நிமிடமே உங்கள் உதவித் தொகையை அனுப்பி வையுங்கள். நிதியுதவி செய்திட விரும்புவோர் "sri lankan tamils relief fund" எனும் தலைப்பில் காசோலைகளையும் (cheques), வரைவுக…

    • 5 replies
    • 1.6k views
  23. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: மாணவன் படுகொலை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வள்ளிபுனத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு நுழைந்த சிறிலங்கா வான்படையின் இரண்டு மிக்-27 ரக வானூர்திகள் வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் மாணவன் ஒருவர் உடல் சிதறிய நிலையில் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வராசா சதீஸ்கரன் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார். …

  24. இலங்கையின் வடக்கே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு செல்வதற்கு தேவையான ஒழுங்குகளை செய்து தருமாறு சென்னை சமூக சமத்துவத்திற்கான வைத்தியர்கள் சங்கம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடமும் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=7873

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.