-
Tell a friend
-
Topics
-
6
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:56 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக்குவதற்காக இருதரப்பிலும் உள்ள முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று குறித்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக உரையாடப்பட்டது. எனினும், இருதரப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாரில்லாத நிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் தொடர்ச்சியாக இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை நீடித்தமையால் தொடர்ந்து அந்த விடயத்தினை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவ்விதமான பேச்சுக்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகளே ஏற்பட்டள்ளது. ஆகவே, அப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பயனில்லை. எனவே அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது” என்றார். இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாசவிடத்தில், ஜனாதிபதி ரணிலுடன் மீண்டும் இணைவு பற்றி கேள்வி எழுப்பபட்டது. அப்போது அவர் “ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் பாதுகாவலனாக உள்ளார். அத்துடன் அவர் புதிய லிபரல் வாதத்தினைப் பின்பற்றுகிறார். அது தனவந்தர்களை போசிப்பதாகும். ஆகவே அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டுள்ளவருடன் எப்படி ‘டீல்’ போட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186170 -
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:34 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றார்கள் என்றால் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை தமது விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் எமது மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/186169 -
By ஏராளன் · பதியப்பட்டது
16 JUN, 2024 | 07:26 AM ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் காலை 10மணிக்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா தலைமை தாங்கவுள்ளதோடு, தமிழரசுக்கட்சி முகங்கொடுத்த வழக்கின் சமகால நிலைமைரூபவ் தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் கட்சியின் பவள விழா சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186168 -
ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதை ஏற்கமுடியாது – அமைச்சர் டக்ளஸ் 15 JUN, 2024 | 09:27 PM நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்தகைய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய ஊடகவியலாளரான பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. கடந்த காலங்களில் நாட்டில் எத்தனை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் கொலைகள் எல்லாம் நடந்திருந்தது என உங்களுக்கு தெரியும். அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது. இதுதான் கடந்த காலங்களில் நடந்தது. அதேபோன்றுதான் இன்றைக்கும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் துரதிஸ்ரவசமாகவோ அதிர்ஷ்டவசமாகவோ ஈ.பி.டிபியின் பெயர் இன்று அத்தகைய செயற்பாடுகளில் பயன்படுத்துவது இல்லாது போய்விட்டது. அது உணர்வினுடைய வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது அந்த வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் இன்று அடியோடு இல்லாமையாகவும் இருக்கலாம். கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றிக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாமல் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில அழிக்க முற்பட்டார்கள். குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மற்றது ஈ.பி.டிபியுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள். அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன். அந்தவகையில் எல்லாரும் விழிப்பாக இருந்து உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல்செய்யலாம் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடததக்கது. https://www.virakesari.lk/article/186151
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.