Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று இரவு 11- 11 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் இருந்தே இந்தக் குண்டு வெடித்துள்ளது. இதில்; 3 பேருந்துகள் மட்டுமே சேதங்களுக்கு உள்ளானதாகவும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் காவற்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 7 replies
    • 1.7k views
  2. மனம் இருந்தால் மார்க்கமுண்டு... ராமேஸ்வரத்தில் நடக்கும் திரையுலக பேரணிக்கு தார்மீக ஆதரவுதான் என்று வெளிப்படையாக கூறிவிட்டது நடிகர் சங்கம். நவம்பர் 1 ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம். தினசரி மூன்று காட்சிகள் என்பது போல, இந்த விஷயமும் அரங்கு நிறைந்த இரண்டு காட்சிகள் போலிருக்கிறது. ராமேஸ்வரத்தில் ஒரு காட்சி. சென்னையில் இன்னொரு காட்சி. நெய்வேலி போராட்டத்தின்போது மறுநாளே சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ரஜினிக்கும் ஆதரவு தெரிவித்து ‘இரட்டை’ சந்தோஷத்தை அனுபவித்த நடிகர்கள், மக்களுக்கு வழங்கப் போகும் மற்றுமொரு ஷோதான் இது. ராமேஸ்வரத்தில் நடக்கும் பேரணியில் ஏன் கலந்து கொள்ளவில்லை? வேறென்ன..., நடைமுறை சிக்கல்கள்தானாம். “30 வது மாடியில் இருந்து குதித்த…

    • 0 replies
    • 1.5k views
  3. சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிப் படையெடுப்புக் குறித்து பிரகடனம் செய்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நாட்கணக்கில் காலம் குறித்த சிறிலங்காப் படைத்தரப்பின் தற்போதைய பேச்சு சற்றுக் குறைந்த ஸ்தாயிலே ஒலிப்பதாகவே கருதவேண்டியுள்ளது. கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சிக்கு நாலரைக் கிலோ மீற்றரில் உள்ளோம், மூன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம். இறுதியாக ஒன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம் எனக் கூறிக் கொண்டாலும் களமுனையில் குறிப்பிடத்தக்க தான மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அவ்வாறு ஏதும் நிகழ்ந்திருக்குமானால், கிளிநொச்சி நோக்கியதான படைநகர்வு தீவிரம் பெற்றத…

  4. சிங்களர்கள் துணையோடு சேது திட்டத்தை எதிர்க்கும் தலைவர்கள்-கருணாநிதி திங்கள்கிழமை, அக்டோபர் 20, 2008 சென்னை: தமிழகம் வளம் பெருவதை விரும்பாத சிங்களவர்கள், தமிழகத்திலே உள்ள சிலரை வளைத்துப் போட்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை போட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை விமான நிலையம் எதிரே ரூ.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில், பல அமைச்சர்களுக்கு இந்த துறைக்கு இவர் தான் அமைச்சர் என்று அழைக்கப்படுகின்ற பட்டம் உண்டு. நம்முடைய அமைச்சர் தம்பி பாலு அந்தப் பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல. அந்தத் துறையைப் பற்றி ஆதியோடு அந்தமாக அனைத்தையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து வைத்திருக்…

  5. ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரம சிங்கவை வேட்பாளராகவும் பொதுசன ஐக்கிய முன்னணி மகிந்த ராஜபக்சவை வேட்பாளராகவும் நிறுத்தியபோது, சந்திரிகா பண்டாரநாயக்க தமது ஆதரவை தமது கட்சி வேட்பாளரான ராஜபக்சவிற்கு வழங்காது, ரணில் விக்கிரமசிங்கவிற்கே வழங்கினார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறுபான்மையோரின் ஆதரவு இருப்பதால், இவரே சனாதிபதியாகத் தெரிவாவார் எனவும் ரணில் சனாதிபதியானால், தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்து இந்நாட்டின் அரசியல் பங்காளியாக இந்தியாவில் சோனியாவைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கலாம் என எண்ணியே செயற்பட்டார். சனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிக்காது பகிஸ்கரிப்புச் செய்ததால், மகிந்த ராஜபக்ச சனாதிபதிய…

  6. புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது – மன்மோகனிடம் மகிந்த: இலங்கையில் இடம் பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள நிலையில் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அனுப்பவுள்ளார். உயர்மட்டத்தூதுக்குழு ஒன்று புதுடில்லி செல்லவுள்ளது. ஆனால் அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவில்லையென வெளிவிவகார செயலாளர் பாலிதகோகண தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரது இளைய சகோதரருமான பசில் ராஜபக்ஷவின் பெயரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் பெயரும் ஊடகங்களில் வெளியானது. ஆனால் யார் யார் செல்வது என்பது பற்றியோ எப்போ…

    • 0 replies
    • 1.1k views
  7. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுவது தொடர்பாக புதுடில்லி மீது எதிர்ப்பலைகளை உருவாக்கும் விதத்தில் நாடாளவிய ரீதியில் பிரசாரங்ளை முடுக்கிவிட இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இலங்கை நிலைமைகள் குறித்து இந்தியா தொடர்ச்சியாக கடும் கவலை தெரிவித்து, அதனைச் சீர் செய்யுமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்காகாக இலங்கை அரசு இப்படியொரு தந்திரோபாயத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது காணப்படும் நிலைமை குறித்தும் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டுமென்பது பற்றியும் அரச தரப்பு பல சுற்று இரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றது. பஷில் ராஜபக்ஷ் தலைமையில் புதுடில்லக்கு பிரதிநிதிகள் குழுவொன்று செல்லும் அதேவேளை, இலங்கையில் …

  8. ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச்சி என்று காட்டி, அதனை அடக்குவதற்குக் கங்கணம் கட்டிப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது. மறுபுறத்தில், தென்னிலங்கை பௌத்த-ச…

  9. தேசிய இனபிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இல்லையேல் அதன் விளைவுகள் இரண்டு நாடுகளுக்குமே மிகவும் பாரதூரமானதாக அமைந்து விடும். என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நியாயமான அணுகுமுறைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமைய ஆகியன இந்நாட்டை விட்டே ஓரங்கட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினை விடயத்;தில் இந்தியாவின் தலையீடு குறித்து கேட்டபோNது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவா மேலும் கூறுகையில், இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகள் என்ற பெயரில் காலங்கள் கடத்தபட்டுகின்றனவே தவிர நியாயமான தீ…

  10. ஈழத் தமிழர்களுக்காக நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அணி திரள்வோம் என்று ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் கூறியிருக்கின்றார். மேலும் அவரது அறிக்கையில் : முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒக்டோபர் 14ம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் மத்திய அரசு அவரின் குரலுக்கு செவிசாய்திருக்கிறது. குற்றுயிரும், குறை உயிருமாகக் கிடக்கின்ற ஈழத்தமிழருக்கு நிரந்தர விடியலை காணுகின்ற வகையில் கருணாநிதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவையொட்டி, ஒக்.21ம் திகதி மனிதச் சங்கிலி அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்ததுள்ளார். இந்த அணிவகுப்பில் 16 கோடி கைகளும் ஒரே நேரத்தில் 21ம் திகதி மாலை 3 மணிக்கு உயரட்டும். இ…

  11. சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகள் புலிகளால் முறியடிப்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளனர். இதில் படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (17.10.08) தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை வரை சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர். வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள், கிபீர், மிக்-27 ரக வானூர்திகள், வெ…

    • 0 replies
    • 1.1k views
  12. கடந்த ஒரு மாதமாக தமிழத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை, அ.தி.மு.க.வுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது, என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் : இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம் இருந்தது. இப்பிரச்சினையில், அரசியல் முக்கித்துவத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டம், எம்.பி.க்களின் ராஜினாமா மிரட்டல், பிரதமர் கருத்து என ஈழத்தமிழர் பிரச்சினை சூடுபிடித்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் முரண்பட்ட கூட்டணிகள் இதில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலம் முதல் விடுதலைப் புலிகளின் இந்திய சட்டத்தரணியாக …

  13. தேவைப்படும் ஏற்படும் போது தங்களது பதவிகளை துறக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயார் - இரா சம்பந்தன்: இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழகத்தில் திமுக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை…

    • 1 reply
    • 1.1k views
  14. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்: கவியரசு வைரமுத்து சூளுரை [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 04:56 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று பிரபல பாடலாசிரியர் கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது: இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆ…

    • 0 replies
    • 745 views
  15. கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு: ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று இந்தியா பயணமாகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், பசில், மற்றும் கோத்தபாய ஆகியோர் புதுடெல்லி செல்கின…

  16. மாவீரர்கள் காலத்தால் அழிக்க முடியாதவர்கள்

    • 0 replies
    • 1.4k views
  17. புதுடில்லிக்கு செல்லும் உயர்மட்ட தூதுக்குழுவில் பசில், லலித் வீரதுங்க: பாலித கோகன்ன [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 01:41 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] இலங்கையில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலையை சிறிலங்காவிடம் வெளியிட்டுள்ள நிலையில், உயர்மட்ட தூதுக்குழுவொன்றை புதுடில்லிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுப்பவுள்ளார். புதுடில்லிக்கு உயர்மட்ட தூதுக்குழுவொன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பான விபரங்கள் குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால், அரச தலைவரின் ஆலோசகரும் இளை…

    • 0 replies
    • 650 views
  18. நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு: நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊட…

    • 2 replies
    • 1.2k views
  19. 'அதிகாரம் மிகவும் அசௌக்கியமான காரியங்களை எவ்வித கணக்கு வழக்குகளும் இன்றி செய்ய முனைகிறது", 'தண்டணையற்ற அதிகார துஸ்பிரயோகம், வனத்தின் சட்டமாகும்", 'ஆக்கிரமிப்பு யுத்தமே பிரதான சர்வதேச குற்றமாகும்". -- ராம்சி கிளாக், (முன்னாள் அமெரிக்கா சட்ட மா அதிபர்) பாரிஸ் - 23 செப்டம்பர் 2005 சட்டங்கள் சமூதயத்தை காப்பாற்றவும், சமத்துவம் நீதியின் தாயாகவும் உள்ளது. அதிகாரம் ஒரு போதும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. இவை ஜனநாயத்திற்கும் நீதிக்குமான சில முக்கிய விதிகள். இவ் விதிகள் சிறிலங்காவை பொறுத்த வரையில் எவ்வித நிலையில் உள்ளன? நாம் சிறிலங்காவினுடைய மனித உரிமைக்கான புள்ளி விபரங்களையும், பல விதப்பட்ட அறிக்கைகளையும் ஆராய்வோமானால் - ஐக்கிய நாடுகள் சபையின் வேறு பிரிவுக…

    • 2 replies
    • 1.2k views
  20. டெல்லி: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்துப் பேசவும், நிலைமையை நேரில் கண்டறியவும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கை பிரச்சனைக்கு சமரச தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டதோடு, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். இதுகுறித்து நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம். …

  21. சென்னையில் வரும் 21-ந்தேதி ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ மக்களையும் சென்னைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழர்களின் பலத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என அவர் அறிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2008-10-19.html நிருபர்:இறைவன்

    • 0 replies
    • 1.4k views
  22. இலங்கை இனப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும் வரையில், கறுப்பு பட்டி அணிந்து தமிழர்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்துமாறு தமது கட்சியாளர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இலங்கை தமிழர்களுக்கும் தமக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது .இதனை மையமாகக்கொண்டு இலங்கையில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்படும் வரையில் தமது கட்சியாளர்கள் இந்த கறுப்பு பட்டிகளை அணிந்திருக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, த…

  23. ஆதித் தமிழன் தோன்றிய பூர்வீக மண் இலங்கை கவிபேரரசு வைரமுத்து முழக்கம் வீரகேசரி நாளேடு 10/19/2008 9:20:23 PM - ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிர…

    • 0 replies
    • 1.7k views
  24. ஹிட்லரது படைக்கு எதிராக ரஸ்யர்கள் போராடியதைப்போல புலிகள் தாக்குதலை நடாத்தக்கூடும் - ஹரிஹரன் [ வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 07:02.27 AM GMT +05:30 ] ஹிட்லரது படையினால் 872 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ரஸ்ய போராளிகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றி கண்டதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் அதிர்ச்சித் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியான வெற்றி கொண்டதன் பின்னர் அரசியல் ரீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவாதத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியு…

    • 9 replies
    • 2.8k views
  25. தமிழக யுத்த எதிர்ப்புக்கள் - இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை – படைத்துறைப் பேச்சாளர்கள்: இந்தியாவில் விசேடமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள யுத்த எதிர்ப்பு நடவடிக்கைள் தமது இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை என விமானப் படையின் பேச்சாளர் வின்கமாண்டர் ஜனக்க நாணயக்கார மற்றும் கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டன. இவற்றில் எந்த மாற்றமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் விமானப் படையின் பேச்சாளர் கூறியுள்ளார். அதேவேளை ஒரு விமானத் தாக்குதல் கூட நடத்தாமல் இருந்த வாராங்களும் உண்டு, இந்த நிலையில் ஓரிரு நாள் வான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.