ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
16 JUN, 2023 | 05:30 PM ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவெல பிரதேசத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவன் தூக்கில் தொங்குவதை அதிகாலையில் கண்ட சக மாணவர்கள் அவரின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்…
-
- 5 replies
- 705 views
- 2 followers
-
-
சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பது பற்றி அங்கு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து சிறு தானிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன், உலர் தானிய வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன், தானியங்களின் ஊடாக கிடைக்கும் போஷாக்கு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கண்காட்சியும் நடத்தப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு…
-
- 2 replies
- 399 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 16 JUN, 2023 | 12:29 PM யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞனை மறித்துள்ளனர். இவ்வாறு மறித்த பொலிஸார் அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் திறப்பினை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சோதனை சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டனர். இதன்போது, குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் அனைத்தும் தன்னிட…
-
- 7 replies
- 954 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 16 JUN, 2023 | 10:34 AM வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது. விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உடல் …
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 JUN, 2023 | 10:13 PM (நா.தனுஜா) அண்மையகாலங்களில் நாட்டின் பல்வேறு பாகங்களில் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச்சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, தமது பணியை உரியவாறு நிறைவேற்றுவதற்குத் தவறுகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், கடுமையான தண்டனைகளை வழங்குமாறும் அச்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சட்டத்தின் ஆட்சியின்கீழ் இயங்கும் சமூகமொன்றில் நிகழக்கூடிய குற்றச்செயல்களில் மிகமோசம…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது. கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. கூட்டத்தொடரில் ஐ.நாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணதிலக்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்வைக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கைக்கு அமைய, இலங்கை சார்பில் பதி…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 JUN, 2023 | 09:57 PM (நா.தனுஜா) தம்மில் இருந்து மாறுபட்டு சிந்திப்பவர்களை துரோகிகளாகவோ அல்லது அரசாங்க அணியில் பயணிப்பவராகவோ அடையாளப்படுத்துகின்ற பண்பு ஏதோவொரு வழியில் எமது தமிழ் அரசியல்வாதிகளிடம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது எமது தரப்பிலுள்ள பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீங்கள் ஏன் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்தீர்கள்? ஏனைய தமிழ்த்தேசிய கட்சி…
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
காங்கேசன்துறை துறைமுக கட்டடங்கள் திறப்பு! written by adminJune 16, 2023 காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு என்பவை துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சர் சிறிபால டீசில்வா தலைமையிலான குழு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் , கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். https://globaltamilnews.net/2023/191913/
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 JUN, 2023 | 03:45 PM (இராஜதுரை ஹஷான்) தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் க…
-
- 10 replies
- 652 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2023 | 02:51 PM சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரும் கடற்படை சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், சம்பூர் பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/157777
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 JUN, 2023 | 05:08 PM ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/157799 என்னப்பா எல்லாரும் காணாமல் போகினம்?!
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்கும் யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் கீழ் நிறுவப்பட்ட தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மருந்து விலை நிர்ணயம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பாகும். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு மருந்துகளி…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
இந்தியாவில் இருந்து யாழிற்கு கப்பல் சேவை! இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது. குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1334889
-
- 0 replies
- 318 views
-
-
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழ…
-
- 0 replies
- 500 views
-
-
தொல்பொருள் பின்னணியுடன் தொடர்புடைய அமைச்சரை பதவிவிலக்க வேண்டும்: இரா.சாணக்கியன் தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி வழங்கி இராணுவ தளபதிகளை கொண்டு செயற்பட்ட மூல காரணமான அமைச்சர் விதுர விக்கரம நாயக்காவை பதவியில் இருந்து ஜனாதிபதி விலக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக மையத்தில் நேற்று (14.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் என்ற பெயரிலே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். அபிவிருத்தி என்ற பெயரிலே கடந்த 3 வருடங்களாக இந்த மாவட்டத்திலே எந்தொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை நடக்கின்ற கூ…
-
- 0 replies
- 206 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி தவறான கருத்துத் தெரிவித்திருக்கிறார் - மெடகொட அபயதிஸ்ஸ தேரை அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரை, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையாகச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தமிழர் தாயகத்தில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பை விகாரை கட்டுமாணங்களுக்காக ஒதுக்கவேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் தலைவர் கூறியபோது, ரணில் அவரைக் கடுமையாகச் சாடியதுடன், சரித்திரம் பற்றி எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம், தேவையென்றால் நான் உங்களுக்குப் பாடம் எடுக்கிறேன் என்று கூறியிருந்தார். பெள…
-
- 18 replies
- 910 views
-
-
Published By: VISHNU 14 JUN, 2023 | 08:51 PM மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திடீரென ஏற்படும் விபத்து மற்றும் சில நோய் காரணமாக மூளை சாவடைந்து இறந்தவர்களின் இதயம் சில மணி நேரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது சிறுநீரகத்தினை அறுவைச் சிகிச்சை மூலமாக தேவைப்படும் ஒருவருக்க…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 JUN, 2023 | 08:41 PM மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்கக் கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (14) காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் கறிற்றாஸ் - வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு முன் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது இளைஞர்,யுவதிகள்,சூழல் பாதுகாப்பு குழுவினர்,மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர் களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு …
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 14 JUN, 2023 | 08:40 PM கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த கோரி எதிர்ப்புப் பேரணியொன்று புதன்கிழமை (14) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கணவனால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை மாற்றப்பட்டு, நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, கிளிநொச்சி, கோனாவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் அதிகளவில் காணப்படுவதை கருத…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 JUN, 2023 | 07:39 PM வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழையபேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (14) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பழைய பேருந்துநிலையம்வரை உள்ளூர் பேருந்துசேவைகளை நடாத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வர்த்தகர்சங்கத்தினரால் கோரிக்கைவிடுக்கப்பட்டது. குறிப்பாக அந்தபகுதியில் அத…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 14 JUN, 2023 | 04:52 PM யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் இன்று வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் இன்று (14) அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து, 9 மணித்தியாலங்களில், பிற்பகல் 1 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தோடு, மீண்டும் தமது பயணத்தினை தொடர்ந்தனர். இரட்டையரான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்ற…
-
- 3 replies
- 366 views
- 1 follower
-
-
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது : டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்! டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கதை’ எனும் கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ கலந்து கொண்டிருந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நிகழ்காலம் பற்றிய தெரிவு மற்றும் எதிர்காலம் பற்றிய நோக்கு என்பவை இல்லாமையே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாகும் என்று சுட்டிக…
-
- 3 replies
- 400 views
-
-
அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் 10இற்கும் மேற்பட்டவை முழுமையாக செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 3 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் தற்போது 43 CT ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே செயற்பாட்டில் இருக்கின்றன. திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கராப்பிட்டிய, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருக்கும் CT ஸ்கேன் இயந்திரங்களே இவ்வாறு செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவிலுள்ள CT…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில், கடுமையான இலஞ்சம் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்து, உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன. பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பின்னர், முன்வைக்கப்படும் இழப்பீட்டு கோரிக்கையை மையப்படுத்தி, இலஞ்சம் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர்கள் சுமத்தியுள்ளனர். அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கோரிக்கையைச் சூழவுள்ள தலையீடு மற்றும் வெளிப்புற அழுத்தம் பற்றி மனுதாரர்கள் தரப்புக்கள் தமது மனுவில் சுட்டி…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சி அவசியம்! adminJune 14, 2023 இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை என அமெரி;க்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும்போது முக்கியமான விடயங்களிற்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறுமாதங்களில் தாங்கள் பல்வேறு விடயங்களில் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ள திறைசேரி செயலாளர் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் நுண் பொருளாதாரத்திற்கும் ஸ்திரதன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். உரிய…
-
- 1 reply
- 242 views
- 1 follower
-